சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் தறித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள், மகள் பூங்கொடி ஆகியோர் ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில் மாரியம்மாளின் தாய் வீடு சேலம் உத்தமசோழபுரம் அருகே புத்தூர் பகுதியில் உள்ளது. அங்கு மூவரும் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது உத்தமசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருசக்கர வாகனம் மூலமாக சாலையை கடக்க முயன்ற போது, அதிவேகமாக வருகை தந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வெங்கடாஜலம், அவரது மனைவி மாரியம்மாள், மகள் பூங்கொடி ஆகிய மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் விபத்தில் மூவரையும் 50 மீட்டர் தூரத்திற்கு கார் இழுத்துச் சென்றது. 


இந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மாரியம்மாள் மற்றும் அவரது மகள் பூங்கொடி இருவரும் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் வெங்கடாசலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விபத்தை ஏற்படுத்திய காருடன் ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்து கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண