Mettur Dam: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: டெல்டா மாவட்டங்களில் பாதிப்பா? நீர்மட்டம், நீர் இருப்பு நிலவரம்!
சேலம்: மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 30,000 கன அடியாக கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக சரிந்துள்ளது, அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிவு
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் மூலமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி என டெல்டா உள்பட 11 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பல மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை விளங்கி வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பின. இதனால் காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணை நடப்பாண்டில் 4 முறை நிரம்பியது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டது. கர்நாடக அணைகளின் உபரி நீர் திறப்பு குறைப்பு காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது நேற்று வினாடிக்கு 40,500 கன அடியாக சரிந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 40,500 கன அடியாக நீடிக்கிறது.
இதையடுத்து அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 30,000 கன அடியாக குறைக்கப்பட்டது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 12,000 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகு வழியாக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து வினாடிக்கு, 28,000 கன அடியாக சரிந்தது
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 28,000 கன அடியாக சரிந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பி உள்ளதால், அங்கு அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே காவிரியாற்றில் திறக்கப்படுகிறது. தற்போது மழை குறைந்துள்ளதால், நீர்திறப்பும் குறைக்கப்பட்ட நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 57,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 28,000 கன அடியானது.
தொடர்ந்து, 5வது நாளாக, காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடையை நீடித்துள்ளது. சுற்றுலா வாகனங்கள் மடம் சோதனைச்சாவடியிலேயே போலீசார், திருப்பி அனுப்புவதால், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினர். கடந்த வாரத்தில் அதிக நீர்வரத்தின்போது, மெயின் பால்ஸ், சினி பால்ஸ் பகுதிகளில் இருந்த இரும்பி கம்பிகள் சேதமடைந்துள்ளன.





















