Mettur Dam: மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு! காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கர்நாடகா அணைகள் நிரம்பி உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 42,250 கன அடியாக உயர்ந்துள்ளது.

சேலம் : Mettur dam காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கர்நாடகா அணைகள் நிரம்பி உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டதால், மேட்டூர் நீர் திறப்பு 42,250 கனஅடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 42,250 கன அடியாக உயர்வு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த நாட்களாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் மேட்டூர் அணையால் இருந்து நீர் வெளியேற்றம் ஆனது அதிகரிக்கப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 42,250 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடி; நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. டெல்டா பாசனத்துக்கு 22,100 கனஅடி, 16 கண் மதகு வழியாக 12,900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 250 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 43,000 கனஅடியாக நீடித்தது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 43,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமையும் 43,000 கனஅடியாக நீடித்தது. தொடா்ந்து அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட நிா்வாகம் 15வது நாளாக நீட்டித்துள்ளது.





















