<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>salem</title><atom:link href="https://tamil.abplive.com/salem/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 12 Aug 2026 04:10:07 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/salem-omalur-mecheri-railway-subway-traffic-congestion-permanent-solution-underpass-costing-20-crore-270730</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/salem-omalur-mecheri-railway-subway-traffic-congestion-permanent-solution-underpass-costing-20-crore-270730#respond</comments><pubDate>Mon, 10 Aug 2026 22:06:35 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/salem-omalur-mecheri-railway-subway-traffic-congestion-permanent-solution-underpass-costing-20-crore-270730</guid><description><![CDATA[&lt;p&gt;சேலம் / ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் - மேச்சேரி சாலையில் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வந்த கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில்வே சுரங்கப்பாதை (Limited Use Subway - LUS) அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் விரிவாகத் தொடங்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;நீண்ட நாள் கோரிக்கையும் தற்போதைய தீர்வும்:&lt;/h2&gt;
&lt;p&gt;ஓமலூர் - மேச்சேரி சாலையில் உள்ள ரயில்வே கேட் எண் 10 (LC-10) பகுதி, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் மிக முக்கியமான இணைப்புச் சாலையாகத் திகழ்கிறது. இப்பகுதியில் ஏராளமான பள்ளி, கல்லூரிகள், தொழிற்பேட்டைகள் மற்றும் புகழ்பெற்ற மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் போன்றவை அமைந்திருப்பதால், தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பக்தர்கள் சென்று வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இருப்பினும், இப் பாதையில் அடிக்கடி ரயில்களின் போக்குவரத்து காரணமாக ரயில்வே கேட் மூடப்பட்டு வந்தது. இதனால் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகள் நீண்ட நேரம் காத்து நிற்கும் சூழல் ஏற்பட்டு, அப்பகுதியில் பல மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண ரயில்வே கேட்டை அகற்றிவிட்டு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;திட்ட விவரங்கள் மற்றும் நிதியொதுக்கீடு:&lt;/h2&gt;
&lt;p&gt;பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசும் தென்னக ரயில்வேயும் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;மொத்த திட்ட மதிப்பு: ரூ. 20 கோடி.&lt;/p&gt;
&lt;p&gt;செயலாக்கக் காலம்: பணிகள் தொடங்கும் நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் (1 ஆண்டிற்குள்) அனைத்துப் பணிகளையும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;பங்குப் பகிர்வு:&lt;/h2&gt;
&lt;p&gt;சுரங்கப்பாதைக்கான பிரதான கான்கிரீட் பாக்ஸ் (RCC Box Structure) அமைக்கும் பணிகளை தென்னக ரயில்வே மேற்கொள்ளும். சுரங்கப்பாதையை இணைக்கும் இருபுற அணுகுசாலைகள் (Approach Roads) மற்றும் வடிகால் வசதிகளை மாநில நெடுஞ்சாலைத் துறை அமைக்கும். மேலும், தமிழ்நாடு சாலைத் துறை திட்டத்தின் (TNRSP) இரண்டாம் கட்டத்தின் கீழ், இச்சாலையில் விடுபட்டிருந்த 1 கி.மீ தொலைவிலான பாதையை அகலப்படுத்தும் பணிகளும் இத்துடன் சேர்த்து மேற்கொள்ளப்படவுள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;சுரங்கப்பாதை கட்டுமானத்தால் போக்குவரத்து மாற்றம்:&lt;/h2&gt;
&lt;p&gt;சுரங்கப்பாதை கட்டும் பணிகள் தடையின்றி நடைபெற ஏதுவாக, ஓமலூர் - மேச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படும் வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;ஓமலூரில் இருந்து மேச்சேரி செல்லும் வாகனங்கள்:&lt;/h2&gt;
&lt;p&gt;அம்மன் கோவில்பட்டி, அமரகுந்தி, எம். செட்டிப்பட்டி-பாலிக்காடை சாலை வழியாக மாநில நெடுஞ்சாலை 222 (SH 222) -ஐ அடைந்து மேச்சேரி பகுதிக்குச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மேச்சேரியிலிருந்து ஓமலூர் நோக்கி வரும் வாகனங்கள்:&lt;/h2&gt;
&lt;p&gt;எம். செட்டிப்பட்டி-பாலிக்காடை சாலை, சின்ன திருப்பதி மற்றும் ஜோடு குழி சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலை 44 (NH 44) -ஐ அடைந்து ஓமலூர் நகருக்குள் வரலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;இப்புதிய சுரங்கப்பாதை பணிகள் விரைந்து நிறைவடையும் பட்சத்தில், ஓமலூர் - மேச்சேரி இடைப்பட்ட பயண நேரம் பெருமளவில் குறைவதுடன், அப்பகுதி மக்களின் பல ஆண்டுகாலப் போக்குவரத்துப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/10/5dee62639daa5bcb0748cc05706902b41786379552827194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA["ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்]]></title><link>https://tamil.abplive.com/news/salem/director-gauthaman-questioned-why-cm-vijay-did-not-insist-on-rahul-gandhi-speaking-on-the-mekedatu-dam-issue-270615</link><comments>https://tamil.abplive.com/news/salem/director-gauthaman-questioned-why-cm-vijay-did-not-insist-on-rahul-gandhi-speaking-on-the-mekedatu-dam-issue-270615#respond</comments><pubDate>Sun, 9 Aug 2026 16:43:47 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/director-gauthaman-questioned-why-cm-vijay-did-not-insist-on-rahul-gandhi-speaking-on-the-mekedatu-dam-issue-270615</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;br /&gt;மேகதாது அணை விவகாரத்தில் ராகுல் காந்தி பேசுவதற்கு முதல்வர் விஜய் ஏன் வலியுறுத்தவில்லை? &amp;nbsp;என்று இயக்குநர் வ.கெளதமன் கேள்வி எழுப்பியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தப்போது அவர் கூறுக்கையில், &amp;ldquo;மேகதாது அணை கட்டுவதை தடுப்பதற்கான செயல் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் முன்னெடுப்பது மிக முக்கியமானது. அதோடு பாராளுமன்ற தொகுதி மறுவறையை அதையும் தடுத்து நிறுத்த முன்னெடுப்பு என்பது முக்கியமானது. ஆனால் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் சந்தேகம் என்னவென்றால் மேகதாது அணை கட்டுவதை தவிர்ப்பதற்கான முன்னெடுப்பை எதுவும் எடுக்காமல். அதைத் தவிர்த்து விட்டு பாராளுமன்ற மறு சீரமைப்பை தடுத்து நிறுத்த முயற்சி செய்வது நியாயமற்றது. நீட் தேர்வுக்கு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வலியுறுத்தியிருந்தோம். &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; அரசு அதைத் தவிர்த்து விட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/CHPRxJHVl2g?si=PZVeQsOPms89X5r9&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;ராகுலை ஏன் வலியுறுத்தவில்லை?&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு முதல்வர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; ஏன் வலியுறுத்தவில்லை?. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசிடமும் எதுவும் பேசவில்லை. தமிழகத்தில் ஆண்ட ஒவ்வொரு அரசும் வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, வந்த பிறகு ஒரு பேச்சு எனப் பேசி வருகிறார்கள். இது நேர்மையற்றது. நீங்கள் யாரையெல்லாம் தீய சக்தி எனக் கூறினீர்களோ அதே செயல்பாடு தான் நீங்களும் செய்கிறீர்கள்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;காவிரி பிரச்சனைகள் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால், தமிழ்நாட்டில் வாழும் கன்னடர்களுக்கு நாங்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்க வேண்டுமா?. வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட வெறியர்கள் தமிழர்களை கொடூரமாக தாக்குதல் நடத்தி கொலை செய்தபோது கூட இங்கு தமிழகத்தில் கன்னடர்களை நாங்கள் பாதுகாத்தோம். ஜல்லிக்கட்டுக்கு வெகுந்து எழுந்த கூட்டம் இந்த முறை கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டால் வெகுந்து எழும். நாளையும் நாங்கள் கர்நாடகாவை சார்ந்தவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து பாதுகாக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் தமிழ் சமூகம் வேடிக்கை பார்க்கும் என்று நினைத்து அங்குள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினால் நாங்கள் விடமாட்டோம். நாம் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம், நடுவன் ஆணையம், மத்திய அரசு, சட்டம் சொல்கிறது. எங்களுக்கு உண்டான தண்ணீரை சட்டப்படி நீதிபடி தரவேண்டும்&amp;rdquo; என்று கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/when-does-car-consume-more-petrol-reasons-and-tips-269893&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/09/8ce53628bb8c1f8251565d4689c8590d1786273804092113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!]]></title><link>https://tamil.abplive.com/spiritual/salem-gugai-mariamman-adi-thiruvizha-vandi-vedikkai-american-youth-enjoyed-270405</link><comments>https://tamil.abplive.com/spiritual/salem-gugai-mariamman-adi-thiruvizha-vandi-vedikkai-american-youth-enjoyed-270405#respond</comments><pubDate>Fri, 7 Aug 2026 15:25:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/salem-gugai-mariamman-adi-thiruvizha-vandi-vedikkai-american-youth-enjoyed-270405</guid><description><![CDATA[&lt;p&gt;ஆடி திருவிழாவை முன்னிட்டு சேலம் குகை மாரியம்மன் திருக்கோயில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில், அமெரிக்க இளைஞர் ஒருவர் பொதுமக்களை ஈர்த்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;சேலத்தில் ஆண்டுக்கு ஒரு முறை 22 நாட்கள் நடக்கும் ஆடித்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோட்டை மாரியம்மன் திருக்கோயிலை மையமாக வைத்து அதனை சுற்றி உள்ள 18 பட்டி கிராமத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் ஆடித்திருவிழா &amp;nbsp;களைக்கட்ட தொடங்கும். திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வருவர். இந்த விழாவில் உருளு தண்டம், தீமிதி விழா மற்றும் வண்டி வேடிக்கை பிரசித்தி பெற்றதாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/LDxPhCwS-yU?si=cy40ahKtNh8g_nfe&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;அந்த வகையில் சேலம் குகை மாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு வண்டி வேடிக்கை மிகவும் சிறப்பு பெற்றது. &amp;nbsp;இதற்காக 15 நாட்களுக்கு மேலாக கடுமையாக விரதம் மேற்கொண்ட பக்தர்கள் கடவுள் உருவத்தில் வேடம் தரித்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது முக்கிய நிகழ்வாக அமையும். இதன்படி ஆடி திருவிழாவை முன்னிட்டு சேலம் குகை பகுதியில் இருந்து புராண நிகழ்வுகளை உணர்த்தும் வகையில் கடவுள்கள் போல வேடம் தரித்து மின்விளக்குகளால் ஜொலிக்கும் அலங்கார வண்டிகளில் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். இந்த வண்டி வேடிக்கையை காண சேலம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/07/d4645f60b8408869dbf04605910b506b1786096120035113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் கடவுள் வேடம் தரித்தவர்கள் மக்கள் கூட்டத்தில் வலம் வந்து அவர்களைப் பார்த்து கையை அசைத்து ஆசி வழங்கினர். 15க்கும் மேற்பட்ட வண்டிகளில் &amp;nbsp;சிவன், பார்வதி, முருகன் ஆகிய தெய்வங்களும் மற்றும் புராண நிகழ்வுகளை உணர்த்தும் வகையில் ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளில் வரும் பாத்திரங்களை தத்துருபமாக காட்சிப்படுத்தப்பட்டு பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. குகைப் பகுதியில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பக்தர்களுக்கு &amp;nbsp;ஆசி வழங்கியபடி வந்து மாரியம்மன் கோயிலை சுற்றி வலம் வந்து நிறைவு பெற்றது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;குறிப்பாக, அமெரிக்காவிலிருந்து வருகை தந்த இளைஞர் டோனி கிளார் கூறுகையில், &amp;ldquo;நான் பல நாடுகள் சுற்றிப் பார்த்துள்ளேன். எந்த ஒரு நாட்டிலும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடந்ததில்லை. தமிழ்நாடு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. சேலம் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. நான் விஜய் ரசிகன், அதனால்தான் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; டீ சர்ட் அணிந்து வந்துள்ளேன். நாளை முதல்வர் விஜயை சந்திக்க சென்னை செல்கிறேன்&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/which-is-most-expensive-tesla-car-price-specs-270384&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/07/8687de75fb3aec9077bcd8cebd91d6561786096185371113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!]]></title><link>https://tamil.abplive.com/news/salem/mettur-dam-water-inflow-increased-18905-cusecs-270205</link><comments>https://tamil.abplive.com/news/salem/mettur-dam-water-inflow-increased-18905-cusecs-270205#respond</comments><pubDate>Wed, 5 Aug 2026 16:52:59 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/mettur-dam-water-inflow-increased-18905-cusecs-270205</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,905 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 11,988&amp;nbsp; கனஅடியில் இருந்து தற்போது அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;நேற்று இரவு &amp;nbsp;8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,923 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 11,988 கன அடியாக அதிகரித்த நிலையில் தற்போது 18,905 கன அடியாக மேலும் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/knmpfO5Gcm8?si=72uzkC1a1EeHsyzC&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;மேட்டூர் அணை:&lt;/strong&gt; 05-08-2026 மாலை 04:00 மணி நிலவரம்&lt;br /&gt;&lt;strong&gt;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மேட்டூர் அணையின் நீர்மட்டம்:&lt;/strong&gt; 74.01 அடியிலிருந்து 74.55 அடியாக உயர்ந்தது&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;நீர் இருப்பு:&lt;/strong&gt; 36.74 டிஎம்சி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;நீர் வரத்து:&lt;/strong&gt; வினாடிக்கு 11,988 கன அடியிலிருந்து, 18,905 கன அடியாக அதிகரித்துள்ளது&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;நீர் வெளியேற்றம்:&lt;/strong&gt; வினாடிக்கு &amp;nbsp;1,500 கன அடி காவிரியில் (குடிநீர் தேவைக்காக) திறக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;div class=&quot;article-footer&quot;&gt;
&lt;div class=&quot;article-footer-left &quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/04/d9a67be830619b49fceafb1cfd9bbaed_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்]]></title><link>https://tamil.abplive.com/news/salem/sowmya-anbumani-press-meet-for-karantaka-cauvery-isseu-269705</link><comments>https://tamil.abplive.com/news/salem/sowmya-anbumani-press-meet-for-karantaka-cauvery-isseu-269705#respond</comments><pubDate>Fri, 31 Jul 2026 19:18:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/sowmya-anbumani-press-meet-for-karantaka-cauvery-isseu-269705</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;br /&gt;எந்த ஒரு நதி நீர் படுகையிலும் கட்டுமான பணியோ, அணையோ கட்டும்போது கடைமடை மாநிலத்தின் அனுமதி இன்றி கட்டக் கூடாது என்று தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேகதாது அணை குறித்த கேள்விக்கு பதில் அளித்த சௌமியா, &amp;ldquo;மேகதாரா அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் காவிரி படுகையில் எந்த வித கட்டுமானமும் செய்யக்கூடாது என தீர்மானம் போடப்பட்டுள்ளது என்று அனைவரும் இணைந்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். பாராளுமன்றம் நடந்து கொண்டிருக்கின்றது&amp;zwnj;. மேகதாது குறித்த முக்கிய கேள்விகள் அங்கு கேட்கப்பட்டுள்ளது. அந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் சொல்லி உள்ளனர். கடைமடை மாநிலங்களும், முதல் மடை மாநிலங்கள் &amp;nbsp;கட்ட வேண்டும் என்றால் காவிரி &amp;nbsp;கடைமடை மாநிலங்களில் கருத்து கேட்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/4wcjBL3654g?si=X0raD5aMs2mUaxaC&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கடைமடை மாநிலங்களில் அனுமதி தேவை இல்லை என ஒரு அமைச்சர் பதில் சொல்லியுள்ளார். இது சட்டத்திற்கு புறம்பானது. எந்த ஒரு நதி நீர் படுகையிலும் கட்டுமான பணியோ, அணையோ கட்டும்போது கடைமடை மாநிலத்தின் அனுமதி இன்றி கட்டக் கூடாது. இன்றைக்கு மதியம் மருத்துவர் அன்புமணி முக்கியமான கேள்வி எழுப்பி உள்ளார். மேகதாது &amp;nbsp;அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை கொடுப்பதற்கு அனுமதி இருக்கிறதா? கர்நாடக அரசுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். காவிரி நதி நீர் ஆணையம் அனுமதி தரவில்லை எனக் கூறியுள்ளது. மத்திய அரசும் விரிவான விரிவான அறிக்கையில் அனுமதி தரவில்லை என கூறியுள்ளனர். மேகதாது அணை குறித்து பேச வேண்டிய தேவை இல்லை. கர்நாடக அரசு ஏற்கனவே நான்கைந்து &amp;nbsp;அணைகளை கட்டியுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;750 டி.எம்.சி தண்ணீர் காவிரியில் வருகிறது என்றால் தமிழ்நாட்டுக்கு உரிமையான தண்ணீர் 404 டிஎம்சி ஆகும். ஆனால் அது குறைந்து தற்போது 172 டிஎம்சி தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. &amp;nbsp;12 மாதத்திற்கு தண்ணீரை பிரித்து தர வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பையோ மத்திய அரசின் தீர்ப்பையோ காவிரி நடுவர் தீர்ப்பையோ கர்நாடக அரசு மதிப்பதே இல்லை. தண்ணீர் நிரம்பிய பின்னரே உபரிநீராக வெளியேற்றுகின்றனர். உபரி நீரை நமக்கு தருகிறார்கள். நமது உரிமைக்கான நீரை அவர்கள் தரவில்லை. வெள்ள &amp;nbsp;உபரி நீரை மட்டுமே அவர்கள் தருகிறார்கள். அப்படித்தான் இதுவரை நடந்துள்ளது. எங்களுக்கு உரிமையான நீரை கொடுங்கள் என கேட்கிறோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என அன்புமணி ஏற்கனவே கூறி வருகிறார்&amp;rdquo; என்று சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/31/27f6af92490d96519f49b0338dbf38b01785505590823113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...!  இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/new-6-lane-highway-between-chennai-and-trichy-at-an-estimated-cost-of-20-000-crore-land-acquisition-work-in-full-swing-269688</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/new-6-lane-highway-between-chennai-and-trichy-at-an-estimated-cost-of-20-000-crore-land-acquisition-work-in-full-swing-269688#respond</comments><pubDate>Fri, 31 Jul 2026 18:09:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/new-6-lane-highway-between-chennai-and-trichy-at-an-estimated-cost-of-20-000-crore-land-acquisition-work-in-full-swing-269688</guid><description><![CDATA[&lt;p&gt;சென்னை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குப் பயணிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்குப் மிகப்பெரிய நற்செய்தியாக, சென்னை - திருச்சி இடையே புதிய 6 வழி அதிவேகப் பசுமைவழிச் சாலை (Greenfield Expressway) அமைக்கும் பணிகளை இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) தீவிரப்படுத்தியுள்ளது. சுமார் ரூ.20,000 கோடி பிரம்மாண்ட மதிப்பீட்டில் உருவாக்கப்படவுள்ள இத்திட்டம் முழுமையாக நிறைவடைந்தால், சென்னை &amp;ndash; திருச்சி இடையேயான பயண நேரம் தற்போதைய 5 முதல் 6 மணி நேரத்திலிருந்து வெறும் 3 மணி நேரமாகக் குறையும்.&lt;/p&gt;
&lt;h2&gt;ஜி.எஸ்.டி சாலை நெரிசலுக்கு முற்றுப்புள்ளி&lt;/h2&gt;
&lt;p&gt;தற்போது சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பிரதான வழியான சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை (NH 45 / GST Road) எப்போதும் கடுமையான போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது. குறிப்பாகத் வார இறுதி நாட்கள், பண்டிகைக் காலங்களில் தாம்பரம், பெருங்களத்தூர், செங்கல்பட்டு, விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் பல மணி நேரம் ஸ்தம்பிக்கும் சூழல் நிலவி வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதற்கு நிரந்தரத் தீர்வாக, தற்போதுள்ள சாலை விரிவாக்கத்திற்குப் பதிலாகக் முற்றிலும் புதிய பாதையில் (Greenfield Alignment) இந்த அதிவேகச் சாலையை அமைக்க NHAI முடிவெடுத்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள்:&lt;/h2&gt;
&lt;p&gt;300 கி.மீ நீளப் புதிய பாதை: இப்புதிய அதிவேகச் சாலை சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதி (சென்னை வெளிவட்டச் சாலை இணைப்பு) பகுதியில் தொடங்கி, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர் வழியாகத் திருச்சி வரை சுமார் 300 கிலோமீட்டர் தொலைவிற்கு அமையவுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;120 கி.மீ வேக வரம்பு: முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் (Access-Controlled Expressway) கொண்ட இந்தச் சாலையில் தடுப்புகள் அமைத்து, வாகனங்கள் இடையூறின்றி மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சீராகப் பயணிக்கும் வகையில் வடிவமைப்பு செய்யப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;ஜிபிஎஸ் கட்டண வசூல் (GPS-based Tolling): பரனூர், ஆத்தூர், செங்குறிச்சி போன்ற வழக்கமான டோல்கேட்களில் காத்து நிற்பதைத் தவிர்க்க, இச்சாலையில் தானியங்கி ஜிபிஎஸ் முறை அல்லது செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம்: இத்திட்டத்தின் மிக முக்கியமான பொறியியல் அம்சமாக, திருச்சி அருகே காவிரி ஆற்றின் குறுக்கே அதிநவீனப் புதிய பிரம்மாண்ட மேம்பாலமும் கட்டப்படவுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;விரைவுபடுத்தப்படும் நிலம் கையகப்படுத்தும் பணிகள்&lt;/h2&gt;
&lt;p&gt;இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தத் தமிழக அரசு தரப்பில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திடம் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை (DPR) இறுதி செய்யப்பபட்டு, சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல் மற்றும் பாதைக்கான நிலங்களைக் கையகப்படுத்தும் ஆரம்பக்கட்டப் பணிகளை NHAI முடுக்கிவிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;தென் மாவட்டங்களின் பொருளாதாரப் புரட்சி&lt;/h2&gt;
&lt;p&gt;சென்னை &amp;ndash; பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே திட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் உருவாகும் இரண்டாவது மிகப்பெரிய 'கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வே' திட்டம் இதுவாகும். இச்சாலை பயன்பாட்டிற்கு வரும் போது: சென்னை - திருச்சி இடையிலான பயண நேரமும் எரிபொருள் செலவும் பாதியாகக் குறையும். திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புதிய தொழில் மண்டலங்களும் (Industrial Corridors) வேலைவாய்ப்புகளும் பெருகும். தென் மாவட்டங்களிலிருந்து சென்னை துறைமுகத்திற்குச் செல்லும் சரக்குப் போக்குவரத்து கணிசமாக வேகமெடுக்கும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/31/71fcb610de8bded53e8ad6ecf666f2c61785501348313194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை]]></title><link>https://tamil.abplive.com/news/salem/edappadi-palaniswami-pressmeet-mekedatu-dam-delta-district-cauvery-issue-269671</link><comments>https://tamil.abplive.com/news/salem/edappadi-palaniswami-pressmeet-mekedatu-dam-delta-district-cauvery-issue-269671#respond</comments><pubDate>Fri, 31 Jul 2026 15:34:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/edappadi-palaniswami-pressmeet-mekedatu-dam-delta-district-cauvery-issue-269671</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேகதாது அணை கட்டினா டெல்டா மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும் என்றும் மெளனப் புரட்சி செய்வதில் விஜய் வல்லவராக உள்ளார் என்றும் &amp;nbsp;அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, &amp;ldquo;உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கிய பிறகும் கர்நாடகா அரசு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலங்கள் காவிரியில் தண்ணீர் திறப்பதில்லை. தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவில் வாதாடி போராடிதான் கர்நாடகாவில் இருந்து தண்ணீரை பெற வேண்டிய நிலை இருந்து வருகிறது. &amp;nbsp;தற்போது புதிதாக கர்நாடகாவில் முதல்வராக பொறுப்பேற்று உள்ள முதல்வர், மேகதாதுவில் அணைக்கட்டி தீர வேண்டும் என்ற பத்திரிகையில் தெரிவித்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/rJv7MGAtPzk?si=MZRetEmBIfX4h3xT&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;டெல்டா பாலைவனமாகிவிடும்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேகதாது அணை கட்டி விட்டால் டெல்டா மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும். 20 மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும். கர்நாடக முதல்வர் இப்படி கருத்தை வெளியிடுவது கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்திருக்கிறது. இந்த அரசு மேகதாது தொடர்பாக தனி தீர்மானம் கொண்டு வந்தார்கள். முதல்வர் ஜோசப் விஜய் தனி தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி &lt;a title=&quot;ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;ஸ்டாலின்&lt;/a&gt; பேசியபோது, நடுவன் மன்றம் அமைப்பது குறித்து கூறியிருந்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மூன்றாம் தேதி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பெங்களூருக்கு சென்று அங்கிருக்கும் கர்நாடகா முதல்வரை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனைத் தவிர்க்க வேண்டும். இன்று கர்நாடகா முதல்வர் தமிழக முதல்வரை வரவேற்று அவருக்கு உரிய மரியாதையை கொடுப்போம். ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கர்நாடகாவை சுற்றி பார்த்த பிறகு அவரது கருத்தை தெரிவிக்கலாம் என கூறியிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேகதாது அணை பிரச்சனை என்பது உணர்வுபூர்வமான பிரச்சனை. எனவே அனைத்து கட்சிகள் மற்றும் முக்கிய விவசாய சங்கங்களை அழைத்து இதற்கு தீர்வு காண வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தோம். இதுபோலவே பல கட்சித் தலைவர்களும் கூறி இருக்கிறார்கள். இது விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனை என்று அரசுக்கு தெரிய வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;விவசாய கடனை தள்ளுபடி செய்யுங்கள்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தவெக தேர்தல் அறிக்கை விவசாயிகளின் சிறு, குறு பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என கூறியிருந்தார்கள். தற்போது அதற்கு மாறாத சிறு, குறு நடுத்தர விவசாயிகளுக்கு 75 ஆயிரம் மட்டுமே அதிகபட்சமாக கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அறிவித்துள்ளார்கள்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் உள்ளனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. மழை பொழிவு இல்லாததால் விவசாய பணிகள் செய்ய முடியாமல் தமிழக விவசாயிகள் கடுமையாக வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; கூறியது போல் முழுமையாக விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் விவசாயிகளுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இப்படி அறிவிக்கப்படாமல் விட்டால் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை ஒன்றிணைத்து அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;காவிரி மேலாண்மை கர்நாடக மாநிலத்தில் உள்ள அணையில் இருந்து 15 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 3500 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது. இப்போது உள்ள சூழலில் தண்ணீர் தர மறுக்கிறார்கள். மேகதாதுவில் அணை கட்டி விட்டால் இது மேலும் பாதிக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;1986 ஆவது ஆண்டு முதல் 2019 வரை வாதம் நடத்தி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடுவர் மன்ற இருப்பின்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது 15 ஆண்டுகளுக்கு செல்லும். கர்நாடகாவில் யார் முதல்வராக வந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பது கண்டனத்துக்குரியது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மெளன புரட்சி செய்யும் விஜய்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மௌன புரட்சி செய்வதில் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; வல்லவராக உள்ளார். அவர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். எட்டு கோடி தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கூடிய பொறுப்பு முதல்வருக்கு உள்ளது. இது போன்ற வறட்சி காலத்தை செயல் கட்சி தலைவர்கள் கருத்துக்களை உள்வாங்கி செயல்படுவதே ஒரு நல்ல அரசு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சட்டமன்றத்தில் அதிமுகவின் நிலை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தமிழக முதல்வர் கர்நாடகா வரவேண்டும் என அங்குள்ள முதல்வர் கூறியுள்ளார். உணர்வுபூர்வமான பிரச்சனைகள் வரும்போது அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தி தான் தீர்வு காண வேண்டும். ஆனால் இந்த அரசு அதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தினால்தான் நாங்கள் வலியுறுத்த முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மருத்துவ படிப்பிற்கு 151 இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. இந்த அரசாங்கம் கையில் ஆகாத அரசாங்கம் என்பதற்கு இதுதான் சாட்சி&amp;rdquo; என்று கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/tvs-scooty-ntorq-125-how-many-kilometers-per-liter-266815&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/20/31fd0171f5eb6ba3049d146399068df1_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?]]></title><link>https://tamil.abplive.com/news/salem/edappadi-palaniswami-aiadmk-general-secretary-tasmac-mekedatu-assembly-remarks-269454</link><comments>https://tamil.abplive.com/news/salem/edappadi-palaniswami-aiadmk-general-secretary-tasmac-mekedatu-assembly-remarks-269454#respond</comments><pubDate>Wed, 29 Jul 2026 16:29:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/edappadi-palaniswami-aiadmk-general-secretary-tasmac-mekedatu-assembly-remarks-269454</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;எடப்பாடியில் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பேச உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள ஆய்வு மாளிகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி &amp;nbsp;பழனிசாமி, தனது சொந்த தொகுதியில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். கட்சியின் அமைப்பு பணிகளை மேலும் வலுப்படுத்துவது, உறுப்பினர் சேர்க்கை, வரவிருக்கும் அரசியல் நிகழ்வுகள், தொகுதி வளர்ச்சி மற்றும் மக்கள் தொடர்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/yQ00ijIR0v4?si=8ukzJSd2l6652sOS&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேலும், தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், பொதுமக்களின் கோரிக்கைகள், கட்சியின் அடுத்தக்கட்ட செயல்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்டறிந்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதனைத் தொடர்ந்து, ஆய்வு மாளிகையில் இருந்து வெளியே வந்த எடப்பாடி &amp;nbsp;பழனிசாமியிடம் செய்தியாளர்கள் பல்வேறு அரசியல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, &amp;nbsp;பதிலளித்த அவர், &amp;ldquo;மேகதாது தொடர்பாக நான் ஏற்கனவே விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளேன் மேலும்,டாஸ்மாக் தொடர்பான கேள்விக்கு &amp;nbsp;இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் விரிவாக பேச உள்ளேன்&amp;rdquo; என்று சுருக்கமாக பதிலளித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/what-do-wealthy-people-eat-for-breakfast-269385&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/29/82913ca8b9e967f0ebc896b24a75f45c1785322509112113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-news-attur-women-cheated-tonsure-15000-rupees-new-disease-269324</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-news-attur-women-cheated-tonsure-15000-rupees-new-disease-269324#respond</comments><pubDate>Tue, 28 Jul 2026 15:16:11 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-news-attur-women-cheated-tonsure-15000-rupees-new-disease-269324</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;சேலம்:&lt;/strong&gt; ஆத்தூர் அருகே மர்ம நபர் புதுவித நோய் பரவுவதாக பெண்களுக்கு மொட்டை அடித்து பணத்தை ஆட்டையைப் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புது கொத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர் தாலுகா அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், கொரோனா போன்று புதுவிதமான நோய் பரவி வருவதாகவும் இந்த நோய் தலைமுடி வழியாக பரவுவதால் வெளிநாடுகளில் இருந்து மொட்டை அடித்துக் கொண்டு நோயிலிருந்து தப்பித்துள்ளனர் என்றும் மேலும் மொட்டை அடித்தால் ஊக்க தொகையாக &amp;nbsp;15000 ரூபாய் தருவதாகவும், &amp;nbsp;ஆண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/4unfr-0swhA?si=YV0sNWraNTEWFwtG&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேலும், நம்பிக்கை இல்லை என்றால் ஏற்கனவே இது போல் மொட்டை அடித்து பணம் பெற்ற சில போட்டோகளை அனுப்பி உள்ளனர். தொடர்ந்து போனில் பேசிய மர்ம ஆசாமியின் பேச்சை நம்பி அதே பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள் ஆகியோர் மொட்டை அடித்துள்ளனர். மேலும் சிலர் மொட்டை அடிக்க தயாராக இருந்த நிலையில் பணம் தருவதாக கூறிய நபரை தொடர்பு கொண்டபோது அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் தான் மொட்டை அடிக்கச் சொல்லி ஏமாற்றியுள்ளது தெரிய வந்தது. மற்ற நபர்கள் மொட்டை அடித்ததை தவிர்த்து உள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தெரியாத நபர்களிடம் இருந்து வரும் செல்போன் அழைப்புகளில் கவனமாக இருக்க வேண்டும் என்று பல விழிப்புணர்வுகளை அரசு சார்பில் கொடுக்கப்பட்டு வருகிறது. பணத்தை பறிப்பதுபோல பேசுபவர்களிடம் ஏமாற வேண்டாம் என்று பல அறிவுறுத்தல்களை காவல்துறையின் சார்பிலும் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே, நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/28/c3dfdf7d3dae003895ab509b760a976c1785231593757113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?]]></title><link>https://tamil.abplive.com/crime/salem-crime-news-husband-killed-wife-police-investigation-268621</link><comments>https://tamil.abplive.com/crime/salem-crime-news-husband-killed-wife-police-investigation-268621#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 16:55:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/salem-crime-news-husband-killed-wife-police-investigation-268621</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;சேலம்:&lt;/strong&gt; திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக சந்தேகமடைந்த கணவன், மனைவியை நைலான் கயிறால் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;சேலம் மாநகர் களரம்பட்டி அடுத்துள்ள சலவையாளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். அவரது மனைவி ஜெயந்தி (40). திருமணமாகி இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இருவரும் இணைந்து குகைப் பகுதியில் சமோசா கடை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/ahRaO6f5iEo?si=A-fygA9CkCulr_qE&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இந்தநிலையில், இன்று காலை 10:30 மணிக்கு மகேந்திரன் மற்றும் ஜெயந்தி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மகேந்திரன் வீட்டிலிருந்த நைலான் கயிறை எடுத்து ஜெயந்தி கழுத்தில் சுற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். ஜெயந்தியின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஜெயந்தியை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் உயிரிழந்துள்ளார். உடனடியாக கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த விசாரணையில், ஜெயந்தி திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக சந்தேகத்தில் மகேந்திரன் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள மகேந்திரனை கிச்சிப்பாளையம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/why-push-the-brake-pedal-to-start-a-car-auto-news-268451&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/00efbe28cdc2e67fac0d075801bc99a51784719465186113_original.jpg" width="220"/></item></channel></rss>