<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>salem</title><atom:link href="https://tamil.abplive.com/salem/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 17 Sep 2026 07:10:10 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[சிஎம் கோப்பையில் களேபரம்! மாணவிகள் சண்டையால் மோதிக்கொண்ட பெற்றோர்கள் - நடந்தது என்ன?]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-sports-hostel-students-parents-clash-chief-minister-trophy-274668</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-sports-hostel-students-parents-clash-chief-minister-trophy-274668#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 08:53:36 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-sports-hostel-students-parents-clash-chief-minister-trophy-274668</guid><description><![CDATA[&lt;p&gt;சேலத்தில் மாணவிகளுக்கு இடையேயான மோதலில் பெற்றோர்கள் தாக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகின்றனர். குறிப்பாக, தடகளம், பேட்மிட்டன், குத்துச்சண்டை, வாலிபால், பேஸ்கட் பால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பயிற்சி எடுத்து வருகின்றனர். இங்கு பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்களுக்கான விடுதி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்படுத்தித் தந்துள்ளது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/PUMglk36yww?si=60zH2JW6pUgjdnph&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில், நேற்று முதல்வர் கோப்பைக்கான தடகள விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அப்போது, பெண்கள் விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வரும் சேலம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த மாணவி மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்த மாணவிக்கும் இடையே முன்விரோதம் காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, விடுதியில் மேலாளர் கோகிலா 2 மாணவிகளின் பெற்றோர்களையும் அழைத்து பேசினார். அப்போது, மாணவிகளின் பெற்றோர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. உடனடியாக சக வீரர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் காந்தி விளையாட்டு மைதானத்திற்கு வந்த சேலம் அஸ்தம்பட்டி காவல்துறையினர் இரண்டு மாணவிகளின் பெற்றோர்களையும் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இது குறித்து சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த மாணவியின் பெற்றோர் கூறுகையில், &quot;முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் எனது மகள் விளையாடுவதை பார்ப்பதற்கு வந்திருந்தேன். அப்போது எனது மகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என விடுதி மேலாளர் அறைக்கு மைதானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அழைத்துச் சென்றனர். என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்காக நானும் உடன் சென்றேன். அப்போது பெரம்பலூரை சேர்ந்த மற்றொரு மாணவியின் பெற்றோர் எனது மகளை தாக்கினர். மேலும், அந்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் என் மகளிடம் தவறாக நடந்து கொண்டனர். என்னையும் தாக்கினர். இதற்கு விடுதி மேலாளர் உடந்தையாக செயல்பட்டார். விடுதி மேலாளர் கோகிலா மாணவிகள் அறைக்கு சென்று வீடியோ எடுக்கிறார். எனது மகளின் சேமிப்பு உண்டியலை திருடி வைத்துள்ளார். இதற்காக கடந்த மாதம் சென்னைக்கு சென்று விளையாட்டுத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்து வந்திருந்தேன்&quot; என்று கூறினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இதைத்தொடர்ந்து விடுதி மேலாளர் கோகிலா கூறுகையில், &amp;ldquo;அவர்கள் கூறுவது போல எந்த ஒரு நிகழ்வும் இங்கு நடக்கவில்லை. இரண்டு மாணவிகளுக்கு ஏற்பட்ட சிறிய சண்டை இது. பேச்சுவார்த்தைக்காக தான் பெற்றோர்களை அழைத்திருந்தேன். இவர்கள் கூறுவது அனைத்தும் பொய். அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை&quot; எனத் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/food/make-this-tasty-breakfast-with-leftover-rice-274564&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/88e3f7abde12cfef26f76ff67c87f7e51789528600502113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[kallakurichi : பேய் என்ற பெயரில் மாணவிக்கு கொடூர சித்ரவதை! கற்பூரம், துடைப்பத்தால் தாக்கிய சக மாணவிகள்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/kallakurichi-chinnasalem-student-hostel-torture-camphor-broom-ghost-possession-274557</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/kallakurichi-chinnasalem-student-hostel-torture-camphor-broom-ghost-possession-274557#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 09:48:02 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/kallakurichi-chinnasalem-student-hostel-torture-camphor-broom-ghost-possession-274557</guid><description><![CDATA[&lt;p&gt;கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் மகளிர் பொறியியல் கல்லூரி விடுதியில், மாணவிக்கு பேய் பிடித்ததாக கூறி கையில் கற்பூரம் ஏற்றி, துடைப்பத்தால் அடித்து துன்புறுத்தியதாக சக மாணவிகள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;விடுதியில் தங்கியிருந்த மாணவி&lt;/h2&gt;
&lt;p&gt;கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் மகளிர் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் வாணாபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி முதலாம் ஆண்டு சி.எஸ்.இ. படித்து வருகிறார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி அவர் படித்து வந்துள்ளார். அதே விடுதியில் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு பொறியியல் மாணவி, வாணாபுரம் பகுதியைச் சேர்ந்த பி.டெக் முதலாம் ஆண்டு மாணவி, சி.எஸ்.இ. முதலாம் ஆண்டு படிக்கும் மேலும் 2 மாணவிகள் மற்றும் கடலூர் பகுதியைச் சேர்ந்த பி.டெக் முதலாம் ஆண்டு மாணவி ஆகியோரும் தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;பேய் பிடித்ததாக கூறி கொடுமை&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த நிலையில், வாணாபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவிக்கு பேய் பிடித்திருப்பதாக அவரது சக மாணவிகள் சிலர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அவருடன் விடுதியில் தங்கியிருந்த 4 சக மாணவிகள் சேர்ந்து, அந்த மாணவியை விசித்திரமான முறையில் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.&lt;br /&gt;குறிப்பாக, மாணவியின் கையில் கற்பூரத்தை ஏற்றி வைத்ததுடன், துடைப்பத்தால் அவரை அடித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டல்&lt;/h2&gt;
&lt;p&gt;மேலும், விடுதியில் நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும், இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் சக மாணவிகள் மிரட்டியதாக கூறப்படுகிறது. சக மாணவிகளின் தொடர் துன்புறுத்தலை பொறுத்துக்கொள்ள முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, இந்த சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசில் புகார் அளித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;4 மாணவிகள் மீது வழக்குப்பதிவு&lt;/h2&gt;
&lt;p&gt;மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், அவருடன் விடுதியில் தங்கியிருந்த 4 சக மாணவிகள் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவியை கற்பூரம் ஏற்றி துன்புறுத்தியது, துடைப்பத்தால் அடித்தது மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;br /&gt;கல்லூரி விடுதியில் மாணவிகளுக்கு இடையே நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் புகாரின் அடிப்படையில் சம்பவத்தின் முழு பின்னணி, மாணவியை துன்புறுத்தியதற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/bf40c7fad4847142a20eef828e42fee61789445641517194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[300 சீர்வரிசைகளா? சேலத்தில் விநாயகர் சதுர்த்திக்கு நடந்த பிரம்மாண்ட வழிபாடு!]]></title><link>https://tamil.abplive.com/spiritual/vinayagar-chathurthi-2026-salem-sevvapetsiddhi-buddhi-kalyana-kolam-seervarisai-vinayagar-statue-274472</link><comments>https://tamil.abplive.com/spiritual/vinayagar-chathurthi-2026-salem-sevvapetsiddhi-buddhi-kalyana-kolam-seervarisai-vinayagar-statue-274472#respond</comments><pubDate>Mon, 14 Sep 2026 11:50:54 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/vinayagar-chathurthi-2026-salem-sevvapetsiddhi-buddhi-kalyana-kolam-seervarisai-vinayagar-statue-274472</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள 300 வகையான சீர்வரிசைகளுடன் கூடிய சித்தி புத்தி விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/HO4ckVSV_C8?si=1zcZBG2201MwwHhk&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதன் ஒரு பகுதியாக, &lt;a title=&quot;விநாயகர் சதுர்த்தி&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vinayagar-chaturthi-2026&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விநாயகர் சதுர்த்தி&lt;/a&gt;யை முன்னிட்டு சேலம் மாநகர் செவ்வாய்பேட்டையில் எலைட் நண்பர்கள் குழு சார்பில் 46வது ஆண்டு படைப்பாக வைக்கப்பட்டுள்ள சித்தி புத்தியுடன் கல்யாண கோலத்தில் காட்சியளிக்கும் விநாயகரின் திரு உருவம் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. திருமண நிகழ்வை குறிக்கும் வகையில் 300 வகையான சீர்வரிசைகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ள காட்சி பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எல்.இ.டி டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், பட்டு சேலைகள், நகைகள், பட்டு வேட்டிகள், மளிகை பொருட்கள் என திருமண சீர்வரிசையின் போது அளிக்கப்படும் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/spiritual/vinayaka-chavithi-2026-wishes-quotes-greetings-messages-images-in-tamil-274297&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/14/e467c6b5af965fea3cc4245f4387ccb11789366358345113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[விஜய் மீது திருச்சி சிவா ஆவேசம்: மிசா பேச்சால் நாடே கண் கலங்கியது!]]></title><link>https://tamil.abplive.com/news/salem/dmk-protest-against-cm-joseph-vijay-controversy-speech-mk-stalin-274324</link><comments>https://tamil.abplive.com/news/salem/dmk-protest-against-cm-joseph-vijay-controversy-speech-mk-stalin-274324#respond</comments><pubDate>Sat, 12 Sep 2026 16:39:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/dmk-protest-against-cm-joseph-vijay-controversy-speech-mk-stalin-274324</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;br /&gt;&amp;ldquo;மிசா பற்றி நமது தலைவர் காணொளி காட்சி மூலம் விளக்கமாக தெரிவித்து இருந்தார். இதனைப் பார்த்து நாடே கண் கலங்கியது&amp;rdquo; என்று எம்பி திருச்சி சிவா பேசியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழக சட்டமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து பேசிய தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யை கண்டித்து திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன் பகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா கலந்த கொண்டார். திமுக மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரமான ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்.பிக்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் ஜோசப் விஜய்க்கு எதிராகவும், &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; அரசுக்கு எதிராகவும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/zrXoRrH8z0Q?si=wwddrYSepnOLb_e4&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய &amp;nbsp;எம்.பி., திருச்சி சிவா, &amp;ldquo;தமிழ்நாடு முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;க்கு ஏன் வாக்களித்தோம் என பொதுமக்கள் இப்போது நினைக்கிறார்கள். சட்டமன்றத்தை நாடக மன்றமாக அவர் மாற்றி உள்ளார். சட்டமன்றத்தில் அவதூறாக பொய்யான தகவல்களை கூறுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் மீது எல்லை மீறி பேசி வருவதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. போலீஸ் மானிய கோரிக்கை மீது குறித்து விவாதிக்காமல் மிசா பற்றி பேசுகிறார். மிசா பற்றி நமது தலைவர் காணொளி காட்சி மூலம் விளக்கமாக தெரிவித்து இருந்தார். இதனைப் பார்த்து நாடே கண் கலங்கியது' என்று பேசினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/good-food-in-hair-health-problem-274304&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/12/550825d7b117258e152c3037c4a5e4f51789211111755113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சேலம் மக்களுக்கு நற்செய்தி: மலிவு விலையில் முழு உடல் பரிசோதனை மையம் - அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-mohan-kumaramangalam-hospital-full-body-checkup-center-opened-by-minister-arunraj-274201</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-mohan-kumaramangalam-hospital-full-body-checkup-center-opened-by-minister-arunraj-274201#respond</comments><pubDate>Fri, 11 Sep 2026 12:13:39 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-mohan-kumaramangalam-hospital-full-body-checkup-center-opened-by-minister-arunraj-274201</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&quot;மக்களின் வரிப்பணம் கரப்ஷன், கமிஷன் இல்லாமல் முழுமையாக மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே எங்களது நோக்கம்&quot; என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ரூ. 6.12 கோடி மதிப்பிலான புதிதாக அமைக்கப்பட்டுள்ள முழு உடல் பரிசோதனை மையத்தை அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; தமிழன் பார்த்திபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். முழு உடல் பரிசோதனை நான்கு வகையான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், கோல்ட் திட்டத்தில் ரூபாய் 1,000 செலுத்தி ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படுகிறது. டைமண்ட் என்ற திட்டத்தில் ரூபாய் 2,000 மதிப்பில் மின் ஒலி இதய வரைவு பரிசோதனை, தைராய்டு பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படுகிறது. பிளாட்டினம் திட்டத்தில் ரூபாய் 3000 மதிப்பில் டிஜிட்டல் மார்பக நுண்கதிர் பரிசோதனை, எலும்பு பரிசோதனை செய்யப்படுகிறது. பிளாட்டினம் பிளஸ் திட்டத்தில் ரூபாய் 4000 மதிப்பில் கண் பரிசோதனை, பார்வை குறைபாடு பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் என நான்கு வகையான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விழாவில் மருத்துவமனை முதல்வர் தேவி மீனால், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி ஆணையாளர் லலித் ஆதித்யா நீலம், சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/DimCRx-XNjg?si=N_lrM5stIOBkocG2&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், &amp;ldquo;பூர்வீகம் திருச்செங்கோடு ஆக இருந்தாலும் சேலத்தில்தான் பள்ளி படிப்பை படித்தேன். பலமுறை அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையை சைக்கிளில் கடந்து செல்லும்போது, நானும் ஒரு மருத்துவராக ஆக வேண்டும் என நினைத்தேன். சென்னையில் மருத்துவ படிப்பு முடித்தேன். அது வாழ்நாளில் மிகச் சிறப்பான தருணமாக இருந்தது. அதன்பின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த தருணம் சிறப்பாக அமைந்தது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அரசு அலுவலர்கள், அரசியல் தலைவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வார்கள். அதேபோல சேலம் அரசு மருத்துவமனை திகழும் என எண்ணுகிறேன். அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை தனியார் மருத்துவமனைகள் கட்டணத்தைவிட ஐந்து மடங்கு குறைவாக இருக்கும். தனியார் மருத்துவமனையை விட அரசு மருத்துவமனையில் தரமாக பரிசோதனை செய்யப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சட்டமன்றத்தில் 115 திட்டங்களை பட்ஜெட்டில் நான் அறிவித்தேன். 110 விதிகளின் கீழ் முதல்வர் ஒரு பத்து அறிவிப்பை அறிவித்தார். மருத்துவத்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் திட்டங்கள் அறிவித்துள்ளோம். சுதந்திரத்திற்கு பிறகு நோய் வந்தபின்தான் அதற்கான மருத்துவர்கள், செவிலியர்கள் அதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறோம். ஆனால் தற்போது நோய் வருவதற்கு முன்பே உடல்நலத்தை பாதுகாக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மருத்துவர் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு மாஸ்டர் பிளான் ஒன்றை உருவாக்க போகிறோம். அடுத்த 30 ஆண்டுகளுக்கு தேவையான மருத்துவ கட்டமைப்பை உருவாக்க மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ் மருத்துவமனைகள் அமைக்கப்படும். கருத்திருத்தல் மையம் 31 அரசு மருத்துவமனை மற்றும் 6 மாவட்ட மருத்துவமனைகளில் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள மக்களுக்கு வீட்டிலிருந்தபடி பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த அரசு முழுக்க முழுக்க மக்கள் சார்ந்த அரசு. மக்களின் வரிப்பணம் கரப்ஷன், கமிஷன் இல்லாமல் முழுமையாக மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதை எங்களது நோக்கம். இது தூய்மையான அரசு&amp;rdquo; என்று கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/best-age-to-give-phone-to-child-274002&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/11/c583092cc23e066e18146890820f87551789108372781113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தமிழகத்திலும் லாரி டீசல் திருட்டு: வட மாநிலம் போல் பரவும் அவலம்! - லாரி உரிமையாளர்கள் வேதனை]]></title><link>https://tamil.abplive.com/news/salem/tamil-nadu-diesel-goods-theft-salem-lorry-owners-auto-nagar-274039</link><comments>https://tamil.abplive.com/news/salem/tamil-nadu-diesel-goods-theft-salem-lorry-owners-auto-nagar-274039#respond</comments><pubDate>Wed, 9 Sep 2026 16:45:55 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/tamil-nadu-diesel-goods-theft-salem-lorry-owners-auto-nagar-274039</guid><description><![CDATA[&lt;p&gt;வட மாநிலத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் டீசல் மற்றும் லாரியில் உள்ள பொருட்கள் திருட்டு நடக்க தொடங்கியுள்ளதாக சேலம் மாவட்டம் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;சேலம் குரங்குசாவடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க மகாசபை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவரும், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவருமான தன்ராஜ் தலைமை வகித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சேலத்தில் லாரி நிலையம் ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்து தரவேண்டும். சட்டமன்ற கூட்டத்தொடரில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கையின்போது ஒருங்கிணைந்த ஆட்டோ நகர் அமைக்கப்படும் என அறிவித்த தமிழக முதலமைச்சருக்கும், போக்குவரத்து துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சேலம் கருப்பூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்பது உட்பட எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/pRnZI0CCxuU?si=o0b_lYyyilHOx_kg&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;ஆட்டோ நகருக்கு நன்றி&lt;/h2&gt;
&lt;p&gt;பின்னர் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவரும், சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவருமான தனராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சேலத்தில் ஒருங்கிணைந்த ஆட்டோ நகர் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். தற்போது நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ஆட்டோ நகர் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.&lt;/p&gt;
&lt;h2&gt;தமிழ்நாட்டிலும் டீசல் திருட்டு&lt;/h2&gt;
&lt;p&gt;வட மாநிலத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் டீசல் மற்றும் லாரியில் உள்ள பொருட்கள் திருட்டு நடக்க தொடங்கியுள்ளது. சிறிது நாட்களுக்கு முன்பு காரிமங்கலம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட ஊர்களில் இரவு நேரங்களில் லாரிகளில் உள்ள தார்பாய் வெட்டி பொருட்கள் திருடு போகிறது. இதனை தடுக்க நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை கூடுதலாக செல்ல வழிவகை செய்ய வேண்டும். காவல் நிலையங்களில் புகார் கொடுக்கச் சென்றால் லாரி ஓட்டுனர்களை காவல்துறையினர் அலைக்கழிக்கிறார்கள். எனவே புகார் கொடுத்தால் உடனே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/these-are-the-benefits-of-consuming-spinach-273882&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/09/15db15eb989813c5ebec4ca2688298551788952379782113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தமிழகத்தில் 13,000 பெண் குழந்தைகள் மாயம்! எங்கே போனார்கள்? - பொன் மாணிக்கவேல் சொன்ன அதிர்ச்சி தகவல்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/pon-manickavel-says-z-plus-security-maternity-wards-prevent-child-abduction-273560</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/pon-manickavel-says-z-plus-security-maternity-wards-prevent-child-abduction-273560#respond</comments><pubDate>Fri, 4 Sep 2026 19:33:07 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/pon-manickavel-says-z-plus-security-maternity-wards-prevent-child-abduction-273560</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை 9 ஆண்டுகளில் மாயமான குழந்தைகளில் சுமார் 13,000 மேற்பட்ட பெண் குழந்தைகளை இதுவரை கண்டுபிடிக்கவில்லை என முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;திருவிழாக்களில் கடத்தல்&lt;/h2&gt;
&lt;p&gt;சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், &amp;ldquo;மனித குலத்தின் ஆணிவேரையே அழிக்கும் வகையில் குழந்தை திருட்டு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. திருடப்படும் பெரும்பாலான பெண் குழந்தைகள் பிச்சை எடுக்கவும், விபசாரத்திற்கும் ஒரு கும்பலால் ஈடுபடுத்தப்படுகிறது.&amp;nbsp;&lt;br /&gt;மூன்று நாள் ஒரு இடத்தில் பிச்சை எடுக்கும் குழந்தை அதன் பிறகு அந்த அந்த இடத்தில் பிச்சை எடுக்க வைக்கப்படுவதில்லை. 12 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் போதைப் பொருள்களுக்கு அடிமையாக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் வைத்தியசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் திருவிழாக்களில் கடத்தப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/04/5297dccdb6fc56b9d0257001bbe8d9a31788529930740113_original.jpeg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;13,000 பெண் குழந்தைகளை கண்டுபிடிக்கவில்லை&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை 9 ஆண்டுகளில் மாயமான குழந்தைகளில் சுமார் 13,000 மேற்பட்ட பெண் குழந்தைகளை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்த குழந்தைகள் பெரும்பாலும் கை கால்களை ஊனமாக்கி பிச்சை எடுக்க பயன்படுத்தப்படுகின்றன. இதில் 11 வயதிற்கு மேலான குழந்தைகள் பெரும்பாலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால் இதில் போலீஸ் அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுப்பதில்லை. குழந்தைகள் காணாமல் போனால் மாயம் என்று வழக்கு பதிவு செய்துடன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இது தொடர்பாக &amp;nbsp;நீதிமன்றங்கள் பலமுறை உத்தரவிட்டும் அதனை போலீசார் கண்டு கொள்வதில்லை. ஏழை எளிய மக்களின் குழந்தைகள் தான் அடிக்கடி காணாமல் போகிறது. ஆனால், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் குழந்தைகள் இதுவரை மாயமானதாகவும் கடத்தப்பட்டதாகவும் &amp;nbsp;புகார்கள் &amp;nbsp;இல்லை.&lt;/p&gt;
&lt;h2&gt;தினமும் 12 குழந்தைகள் கடத்தப்படுகிறது&lt;/h2&gt;
&lt;p&gt;போலீஸ் துறையில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. மாறாக தகுதி இல்லாதவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. முதலமைச்சர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தேவையில்லை. அதற்கு பதிலாக மருத்துவமனை &amp;nbsp;மற்றும் மகப்பேறு வார்டுகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவ்வாறு &amp;nbsp;கொடுக்கும் போது குழந்தை கடத்தலை தடுக்க முடியும். குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு15 நாட்களில் தண்டனை வழங்க வேண்டும். தமிழகத்தில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் என மொத்தம் தினசரி 12 குழந்தைகள் கடத்தப்படுகிறது. இதனை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்&amp;rdquo; என்று கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/astrology/what-happens-if-a-cat-crosses-your-path-273523&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/04/bcda363e1ffd1261f2f5ff3bca17e7851788529823614113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA["வெளியே வர பயமா இருக்கு!" - சேலத்தை அலறவிடும் சிறுத்தை... உச்சகட்ட அச்சத்தில் மேட்டூர் மக்கள்!]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-news-mettur-kolathur-leopard-attack-goats-death-273446</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-news-mettur-kolathur-leopard-attack-goats-death-273446#respond</comments><pubDate>Thu, 3 Sep 2026 19:40:28 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-news-mettur-kolathur-leopard-attack-goats-death-273446</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சிறுத்தை தாக்கியதில் 5 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேட்டூர் அருகே கொளத்தூர் அடுத்த பாலமலை, கண்ணாமூச்சி, காவலண்டியூர், கொசவன்கரடு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த பகுதியில கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடு, ஆடு உள்ளிட்டவற்றை சிறுத்தை வேட்டையாடிக் கொன்றது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஊருக்குள் அடிக்கடி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறுத்தை நடமாட்டத்தை வீடியோ எடுத்து வனத்துறையினருக்கு அனுப்பி வைத்தனர். சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/A3Jr07Fpr0w?si=Kju0BLJ8H-HJjAYB&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;br /&gt;இந்நிலையில், கண்ணாமூச்சி அடுத்த செ.காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சரோஜா(60), என்பவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வந்த பிறகு பட்டியில் அடைத்து வைத்திருந்தார். இதனிடையே, நேற்று காலை எழுந்து வந்த பார்த்த போது சிறுத்தை தாக்கியதில் பட்டியில் இருந்து 5 வெள்ளாடுகள் உயிரிழந்து கிடந்தன. ஒரு ஆட்டை சிறுத்தை தூக்கி சென்ற நிலையில், 2 ஆடுகள் பலத்த காயமடைந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், &amp;nbsp;சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்கு பிறகு அடக்கம் செய்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/03/e59df6491317f1eb18623f3fc88632431788443545099113_original.jpeg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேட்டூர் வட்டாசியர் செந்தில்குமார், வனச்சரக அலுவலர் செங்கோட்டையன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கொளத்தூர் காவல் ஆய்வாளர் மஞ்சுநாதன் மூதாட்டி சரோஜாவுக்கு ரூ 10,00 நிதியுதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதுகுறித்து &amp;nbsp;விவசாயிகள் கூறுகையில், &amp;ldquo;இப்பகுதியில் சிறுத்தை கால்நடைகளை வேட்டையாடி வரும் சம்பவம் தொடர்கையாகி வருகிறது. விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் நஷ்டம் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து இறந்து போன ஆடுகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும், சிறுத்தை மனிதர்களை தாக்கும் முன்பு வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சிறுத்தை கண்டுபிடித்து ஊருக்குள் புகாதவாறு &amp;nbsp;நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்&amp;rdquo; என்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/gk/why-do-dogs-howl-at-night-273389&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/03/af3a9dffa36d4d245bbf88883c065e761788443451937113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சேலத்தில் தொடரும் பயங்கர கொலைகள்.. கர்ப்பிணிப் பெண் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்பு: பெரும் அதிர்ச்சி]]></title><link>https://tamil.abplive.com/crime/salem-news-edappadi-pregnant-woman-body-found-agricultural-well-police-investigation-273442</link><comments>https://tamil.abplive.com/crime/salem-news-edappadi-pregnant-woman-body-found-agricultural-well-police-investigation-273442#respond</comments><pubDate>Thu, 3 Sep 2026 18:39:36 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/salem-news-edappadi-pregnant-woman-body-found-agricultural-well-police-investigation-273442</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;சேலம்:&lt;/strong&gt; எடப்பாடி அருகே கர்ப்பிணிப் பெண் சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில் விவசாய கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்திற்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம் கோண சமுத்திரம் கிராமம் கருங்குள்ளன் பகுதியைச் சேர்ந்த பேராக்கவுண்டர் மகள் கோகிலா (23). இவர், படித்துவிட்டு திருமணம் ஆகாமல் வீட்டிலிருந்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி வயிறு வலிப்பதாக கூறியதால் பெற்றோர் சமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/qUnn-qTFxfM?si=fHCt0ZEfMqGSmbNs&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இது தொடர்பாக சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கர்ப்பத்திற்கு காரணமான கன்னியாம்பட்டியைச் சேர்ந்த மாரி என்பவரின் மகன் அம்மாசியை சங்ககிரி மகளிர் காவல் நிலையம் வரவைத்து விசாரணை மேற்கொண்டு அம்மாசியோடு கோகிலாவையும் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி காலை கோகிலா காணாமல் போய்விட்டதாக அவரது தந்தை பேராக் கவுண்டரிடம் அம்மாசி கூறியதை தொடர்ந்து பேராக் கவுண்டர் தனது மகள் கோகிலா காணவில்லை என கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இதனிடையே, வெள்ளாளபுரம் கிராமம் தானக்குட்டி வளவைச் சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து கிணற்றை பார்த்தபோது வெள்ளை நிற சாக்குப்பையில் கட்டிய நிலையில் மூட்டை மிதந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கொங்கணாபுரம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் எடப்பாடி தீயணைப்பு துறை வீரர்கள் உதவியோடு விவசாய கிணற்றில் கிடந்த மூட்டையை வெளியே எடுத்து பார்த்தபோது பெண் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;அதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட பெண் கோகிலவாக இருக்குமோ? என்று அவரது உறவினர்களை வரவழைத்து பார்த்தபோது திருமணமாகாமலேயே 7 மாத கர்ப்பிணியான பெண் கோகிலா என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து &amp;nbsp;கோகிலாவின் இறப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்தச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/gk/why-do-dogs-howl-at-night-273389&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/03/49ffda21b40707169681cce1a76119151788440793640113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சேலம் கொடூரம்: கணவனை வெட்டிக்கொன்று 'ட்ராமா' போட்ட மனைவி... கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-businessman-boopathy-murder-wife-sujithashree-illicit-affair-273432</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-businessman-boopathy-murder-wife-sujithashree-illicit-affair-273432#respond</comments><pubDate>Thu, 3 Sep 2026 17:33:32 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-businessman-boopathy-murder-wife-sujithashree-illicit-affair-273432</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலத்தில் பிரபல வியாபாரி மரணத்தில் மனைவியே கொன்று நாடகமாடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் மாவட்டம் ஓமலூர் - சங்ககிரி சாலையில், காரில் ரத்த வெள்ளத்தில் பிளை ஆஸ் பிரிக்ஸ் அதிபர் பூபதி பிணமாக கிடந்த காட்சி, அப்பகுதியையே உலுக்கியது. காரை மறித்த 3 பேர் கொண்ட கும்பல் கணவரை கொன்று, 12 பவுன் நகையைப் பறித்து சென்றுவிட்டது என பூபதியின் மனைவி சுஜிதாஸ்ரீ கதறி அழுதார்.&lt;br /&gt;ஆனால், பூபதியின் குடும்பத்தினர் தெரிவித்த சந்தேகத்தின் பேரில் களமிறங்கிய ஓமலூர் போலீஸார் சுஜிதாஸ்ரீயின் கண்ணீருக்கு பின்னால் மறைந்திருந்த அந்த அதிர்ச்சி உண்மையை கண்டுபிடித்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/03/9eb5848fd92ed21ce6cd2f2ff331325f1788436858811113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சொத்து பிரச்சனையில் அடிக்கடி ஏற்பட்ட குடும்பத் தகராறு, கணவரின் தினமொரு கொடுமை மற்றும் கள்ளக்காதல் விவகாரத்தால் கணவனை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளார் சுஜிதாஸ்ரீ. நள்ளிரவில் கள்ளக்காதலன் சந்தோஷ்ராஜ் மற்றும் தனது 13 வயது மகனுடன் சேர்ந்து, கணவன் பூபதியை வீட்டிலேயே கொடூரமாக வெட்டி கொன்றுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/qUnn-qTFxfM?si=fHCt0ZEfMqGSmbNs&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பின்னர், உடலை காரில் ஏற்றி சென்று வழிப்பறி கும்பல் கொன்றதாக சினிமா பாணியில் கதையளந்தது விசாரணையில் அம்பலமானது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதையடுத்து சுஜிதாஸ்ரீ, கள்ளக்காதலன் சந்தோஷ்ராஜ் மற்றும் 13 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். சுஜிதாஸ்ரீ சேலம் மத்திய மகளிர் சிறையிலும், சந்தோஷ்ராஜ் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். சிறுவன் சேலம் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். சேலத்தையே பரபரப்பில் ஆழ்த்திய இந்த கொடூர கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/03/7626382e7c2d3d38fd79d9ace2cb45291788436920246113_original.png" width="220"/></item></channel></rss>