<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>salem</title><atom:link href="https://tamil.abplive.com/salem/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 22 Jul 2026 15:55:37 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?]]></title><link>https://tamil.abplive.com/news/salem/yercaud-village-student-nivetha-clears-neet-first-time-seeks-govt-help-for-medical-studies-268477</link><comments>https://tamil.abplive.com/news/salem/yercaud-village-student-nivetha-clears-neet-first-time-seeks-govt-help-for-medical-studies-268477#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 18:02:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/yercaud-village-student-nivetha-clears-neet-first-time-seeks-govt-help-for-medical-studies-268477</guid><description><![CDATA[&lt;p&gt;ஏற்காடு மலைவாழ் கிராமங்களில் இருந்து முதல்முறையாக நீட் தேர்வில் குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி நிவேதா தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;சேலம் மாவட்டம் ஏற்காடு மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த மாணவி நிவேதா. சேலம் மாவட்ட சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 65 மலை கிராமங்கள் உள்ளன. ஏற்காடு பிரதான பகுதியில் இருந்து 7 கிலோமீட்டர் பள்ளத்தாக்கில் உள்ளது எழில் கொஞ்சும் குண்டூர் கிராமம். சுற்றுலாப் பயணிகளின் கண்ணைக் கவரும் பசுமைப் போர்வை போர்த்தி நிற்கும் இந்த மலை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/zNrlJNjsdbY?si=3AHBGNcWjxVUgIIX&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பெரிய தொழில்வாய்ப்பு இல்லாத நிலையில், காபி தோட்டத் தொழிலுக்கும் கூலி வேலைக்கும் செல்வதால் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்தும் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு 5-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கூடம் உள்ளது. &amp;nbsp;6-ம் வகுப்பு முதல் கல்வி கற்க 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஏற்காட்டிற்கு நடந்து சென்றுதான் படிக்க வேண்டும் என்பதால் பெண் குழந்தைகளின் கல்வி பயணம் சிறுவயதிலேயே முடிவுக்கு வந்து விடுகிறது. இதுபோன்ற பல தடைகளைத் தாண்டி ஏழுமலை-மணிமேகலை தம்பதியின் மகள் நிவேதா நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார். நீட் தேர்வு நடைமுறை தொடங்கப்பட்ட பின்னர் ஏற்காடு மலைவாழ் கிராமங்களில் இதுவரை யாரும் தேர்ச்சி பெறாத நிலையில், 245 மதிப்பெண்கள் பெற்றும் மாணவி நிவேதா முதல்முறையாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் கூறுகையில், &amp;lsquo;மாணவி நிவேதா 10-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு உதவி பெறும் பள்ளியிலும் பயின்றுள்ளார். இதனால் அரசுப்பள்ளி மாணவியருக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவில் மாணவி நிவேதா இடம் பெறவில்லை. அரசு கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தாலும் கூலித் தொழிலாளர்களான தங்களால் மருத்துவக் கல்வி பயில வைக்கும் அளவிற்கு பொருளாதார சூழல் இல்லாததால் அரசு உதவி செய்ய வேண்டும்&amp;rsquo; என கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/fc9c5afc801ae760e1f295b9a1dce7951784636802797113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மாணவி நிவேதா கூறுகையில், &amp;ldquo;மழையின்போது ஒழுகாத வீடில்லை. அகலமான சாலையில் வீட்டிற்கு வாகனத்தில் போய் இறங்கக் கூடிய வாய்ப்பில்லை. நினைத்ததை நொடிப்பொழுதில் பதிவிறக்கம் செய்யக் கூடிய இணையதள வசதியில்லை. நிறைய இல்லைதான். ஆனால் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவராக வேண்டும் என்ற இலக்கு&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/tvs-scooty-ntorq-125-how-many-kilometers-per-liter-266815&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/176b0feb0e9f8672f4cf5aff436014e51784636630850113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title><link>https://tamil.abplive.com/news/salem/minister-madanraja-says-tn-government-is-working-with-a-vision-to-transform-tamil-nadu-into-a-1-5-trillion-economy-by-2036-268303</link><comments>https://tamil.abplive.com/news/salem/minister-madanraja-says-tn-government-is-working-with-a-vision-to-transform-tamil-nadu-into-a-1-5-trillion-economy-by-2036-268303#respond</comments><pubDate>Mon, 20 Jul 2026 17:37:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/minister-madanraja-says-tn-government-is-working-with-a-vision-to-transform-tamil-nadu-into-a-1-5-trillion-economy-by-2036-268303</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாட்டை 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தி மையத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா நேரில் ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு தொழில் நிறுவனங்களை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறிப்பாக ரூ.24.5 கோடியில் கட்டப்பட்டுள்ள வெள்ளி கொலுசு உற்பத்தி மையம், 16 மாதங்கள் ஆன நிலையில், மானியம் கிடைக்காததால், பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/enLwyKzQDhE?si=S49yIXCDegXpSF_z&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்த நிலையில், இன்று வெள்ளி கொலுசு உற்பத்தி மையத்தில் அமைச்சர் பெ.மதன்ராஜா ஆய்வு செய்தார். அப்போது, வெள்ளி கொலுசு உற்பத்தி மையத்தில் கடை ஒதுக்கீட்டில் நிலவும் நடைமுறை சிக்கல்கள் குறித்து வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆனந்தராஜன் அமைச்சரிடம் எடுத்துரைத்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இது தொடர்பாக அமைச்சர் பெ.மதன்ராஜாவிடம் ஆனந்தராஜன் மனு ஒன்றையும் அளித்தார். அதில், வெள்ளி கொலுசு மையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை 50 சதவீதம் மானியம் அல்லது 5 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் தவணை முறையில் கட்டும் வகையில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இந்த மையத்தில் சுகாதாரமான குடிநீர், மின்சாரம், சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தொடர்ந்து, மல்லூரில் ரூ.2.37 கோடி மதிப்பில், ரூ.53.57 லட்சம் மானியத்துடன் பயனாளி சுந்தரத்தின் விமானம் மற்றும் விண்வெளி உதரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததுடன், உற்பத்தி செய்யப்பட்டு வரும் உதரிபாகங்கள். உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள். ஏற்றுமதி உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில், &amp;ldquo;நாட்டின் ஜிடிபி-இல் தமிழ்நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை 30 சதவீத பங்களிப்பினை வழங்கி இந்திய அளவில் இரண்டாம் இடம் வகிக்கிறது. தமிழ்நாட்டை 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது&amp;rdquo; என்றார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ரவிக்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/tvs-apache-rtr-160-4v-special-edition-mileage-price-and-advanced-technological-features-267328&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/20/3f8d1004672945a0854e7203a49724211784549184945113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[“எஃகு கோட்டையில் ஓட்டை போட்டுட்டோம்” - சேலத்தில் மாஸ் காட்டிய விஜய் கட்சி]]></title><link>https://tamil.abplive.com/news/salem/minister-vijay-thamizhan-parthiban-says-tomorrow-salem-will-become-the-fortress-of-tvk-268282</link><comments>https://tamil.abplive.com/news/salem/minister-vijay-thamizhan-parthiban-says-tomorrow-salem-will-become-the-fortress-of-tvk-268282#respond</comments><pubDate>Mon, 20 Jul 2026 15:15:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/minister-vijay-thamizhan-parthiban-says-tomorrow-salem-will-become-the-fortress-of-tvk-268282</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;ldquo;ஒரு சிலர் சேலம் மாவட்டத்தை எக்கு கோட்டை என்று சொல்லி வந்தார்கள். அந்த எக்குக்கோட்டையில் நாம் ஓட்டை போட்டுள்ளோம். நாளை சேலம் தவெகவின் கோட்டையாக மாறும்&amp;rdquo; என்று அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் சூளுரைத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திமுக, அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த 10,000 உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகத்தின் இணையும் விழா சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மைதானத்தில் நடைபெற்றது. வீரபாண்டி தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.செல்வம் தலைமையில் நடைபெற்ற இணைப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் கலந்து கொண்டு மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களை தவெகவில் இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், பத்திரபதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/3KnbtX_4OXg?si=5Bijrtcam4nt4bzk&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்த நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்துதுறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், &amp;ldquo;கடந்த 30 ஆண்டு காலமாக எத்தனையோ சோதனைகளையும் சவால்களையும் சந்தித்து நமது இயக்கம் வளர்ந்துள்ளது. இனி எத்தனை தேர்தல் வந்தாலும் தவெகதான் வெற்றிபெறும். சாதி மத மொழி பணத்தை கடந்து மக்கள் தவெகவிற்கு வாக்களித்துள்ளனர். ஒரு சிலர் சேலம் மாவட்டத்தை எக்கு கோட்டை என்று சொல்லி வந்தார்கள். அந்த எக்குக்கோட்டையில் நாம் ஓட்டை போட்டுள்ளோம். நாளை சேலம் தவெகவின் கோட்டையாக மாறும்' என்று கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/20/d9c4bc1f3eecad125b2e6fc125507a611784540511867113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதன்பின்னர் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், &amp;ldquo;எத்தனையோ தலைவர்கள் தமிழகத்தில் ஆட்சி செய்து உள்ளார்கள். மக்கள் இதயங்களில் அமர்ந்து, மக்கள் வலியை உணர்ந்து ஆட்சி செய்பவர் தான் நமது முதலமைச்சர் ஜோசப் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;. 60 ஆண்டுகாலத்திற்கு மேலாக நிலவிய லஞ்சம், ஊழலுக்கு இந்த தேர்தல் மூலம் மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர். தனது தொகுதிகள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூழ்ச்சி செய்துதான் வெற்றி பெற்றார். தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என மார்தட்டிக் கொள்கிறார். சூழ்ச்சியும் துரோகமும் நிறைந்தது தான் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணம். மக்கள் நமக்கு கொடுத்தது பதவி மட்டுமல்ல கண்ணியமிக்க பொறுப்பையும் வழங்கி உள்ளனர். கடினமான சேலம் இரும்பிலும் கூட செல்லலாம். ஆனால் &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; எனும் பேரியக்கத்தில் எந்த கீரலும் விழாது&amp;rdquo; என்று பேசினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/tvs-apache-rtr-160-4v-special-edition-mileage-price-and-advanced-technological-features-267328&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/20/fa407857a34d48d3da2dc0c527df51981784540577949113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!]]></title><link>https://tamil.abplive.com/news/salem/armstrong-murder-case-to-be-transferred-to-cbi-investigation-soon-says-senior-advocate-p-p-mohan-268045</link><comments>https://tamil.abplive.com/news/salem/armstrong-murder-case-to-be-transferred-to-cbi-investigation-soon-says-senior-advocate-p-p-mohan-268045#respond</comments><pubDate>Sat, 18 Jul 2026 17:01:46 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/armstrong-murder-case-to-be-transferred-to-cbi-investigation-soon-says-senior-advocate-p-p-mohan-268045</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திமுக ஆட்சியில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான ஆதாரங்கள் 100% அழிக்கப்பட்டதாக மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலத்தில் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், &amp;ldquo;ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்றம் நோக்கில் செயல்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார். 400 மீட்டரில் காவல் நிலையம் இருந்தும் காவல்துறையினர் சரியாக இந்த வழக்கில் செயல்படவில்லை. 8 பேர் மட்டுமே கொலையில் ஈடுபட்டவர்கள். அவர்களுக்கு பின்னால் மிகப்பெரிய சக்தி இருப்பதாக அப்போது காவல்துறையிடம் கூறினோம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/361kyu35l_0?si=69as15LozKDVG4ob&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல முக்கிய புள்ளிகள் தொடர்பு உள்ளதாக தெரிவித்தோம். பலமுறை பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் முறையான விசாரணை வேண்டும் என அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து புகார் அளித்தார். ஆனால், காவல்துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் இரண்டு பேர் தலித் அல்லாதவர்கள். எனவே அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் போட வேண்டும் என வலியுறுத்தினோம் அதையும் காவல்துறை செய்யவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு முக்கிய தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்களை பிடிப்பதற்கு தமிழ்நாடு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சிபிஐக்கு விசாரணையை மாற்ற வேண்டுமென நீதிமன்றத்தில் வலியுறுத்தினோம். அதற்கு எதிராக திமுக தரப்பில் தமிழ்நாடு காவல்துறையை விசாரிக்கும் என எதிர் வழக்கு போட்டது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;60 லட்சம் ரூபாய் பணம், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் எங்கிருந்து வந்தது என இதுவரை காவல்துறைக்கு தெரியவில்லை. திமுக சமூகநீதி பேசினாலும் திமுக ஆட்சி காலத்தில் தலித்துகள் மீதான தாக்குதல்கள் நடந்து கொண்டேதான் இருந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 27 பேரில் பலர் வெளியே வந்து விட்டார்கள். இவர்களால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் இருந்தது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;முதல்வர் விஜய்க்கு நன்றி&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்த நிலையில், கடந்த 15/07/2025 அன்று உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசின் சார்பில் சிபிஐ விசாரணைக்கு தடை வாங்கியதற்கு எதிராக போடப்பட்ட வழக்கில் தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விரைவில் சிபிஐக்கு மாற்றப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை உதவியுடன் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்தது. இந்த வழக்கு தொடர்பாக எங்கு போய் பார்த்தாலும் இறுதியில் அமைச்சர் சேகர்பாபு, காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உட்பட சில முக்கிய புள்ளிகளிடம் செல்கிறது. ஆனால் அதற்கு மேல் காவல்துறை செல்லவில்லை. இது ஒரு அரசியல் படுகொலை. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கு மறுப்பு தெரிவிக்காத முதல்வர் ஜோசப் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;சேகர்பாபுவிடம் விசாரணை நடத்த வேண்டும்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேலும், திமுக ஆட்சியில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான ஆதாரங்கள் 100% அழிக்கப்பட்டது. கொலை நடந்த அன்று நாங்கள் விசாரணை நடத்தி காவல்துறைக்கு அதைப்பற்றி கூறினோம். அதன் பின்னரும் கூட காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும். அவர்கள் மட்டும் குற்றவாளி என சொல்லவில்லை. இன்னும் பலரும் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அரசின் மீது நம்பிக்கை உள்ளது. சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகிறோம்&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/18/d329f8290ce6384bce8ca91cf02fd4571784373802294113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[செம வாசம்! சேலத்தில் ஆடிப் பிறப்பையொட்டி தேங்காய் சுட்ட மக்கள்! இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-aadi-pirappu-coconut-burning-festival-vinayagar-poojai-celebration-267892</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-aadi-pirappu-coconut-burning-festival-vinayagar-poojai-celebration-267892#respond</comments><pubDate>Fri, 17 Jul 2026 14:00:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-aadi-pirappu-coconut-burning-festival-vinayagar-poojai-celebration-267892</guid><description><![CDATA[&lt;p&gt;ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு சேலத்தில் பொதுமக்கள் வீடுகளில் தேங்காய் சுட்டு, விநாயகருக்கு படையலிட்டு வழிபட்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் ஆடி மாதம் பிறந்துவிட்டாலே கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள கோயில்களிலும் வீடுகளிலும் தேங்காய் சுடும் திருவிழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். குறிப்பாக, ஆடி மாதம் முதல் நாளில் இந்த வழக்கம் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் ஈரோடு ஆகிய கொங்கு மாவட்டங்களில் மிக விசேஷமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;சேலத்திலும் ஆடி மாதப் பிறப்பினை பொதுமக்கள் தேங்காய் சுட்டு கொண்டாடுவது வழக்கம். மகாபாரத யுத்தம் தொடங்கிய நாளான ஆடி 1ஆம் தேதி தர்மம் வென்றிட வேண்டி, விநாயகர் மற்றும் குலதெய்வங்களுக்கு தேங்காய் சுட்டு படையலிட்டு வழிபாடு நடத்துகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/ng1V-mzrKqU?si=mVeIC41MfYeQdREm&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;அந்த வகையில், சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் உள்ள பொதுமக்கள் கவுன்சிலர் தெய்வலிங்கம் முன்னிலையில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தேங்காய் சுட்டு கொண்டாடினர்கள். இதில் புதிய தேங்காயை எடுத்து அதன் மேல் உள்ள நார்களை அகற்றிவிட்டு ஓடு மெலிதாகும் அளவுக்கு அதை தரையில் தேய்த்து, அதன் ஒரு கண்ணில் துளையிட்டு உள்ளே இருந்த தேங்காய் தண்ணீரை வெளியேற்றி, துளையின் வழியாக பச்சரிசி, பாசி பருப்பு, நாட்டு சர்க்கரை, அவல், எள், ஏலக்காய் கலந்த கலவையை இட்டு, முனை கூராக சீவப்பட்ட நீண்ட அழிஞ்சி மரக்குச்சியில் தேங்காயை செருகி, குச்சி, தேங்காய் மீது மஞ்சளை பூசி தீயிலிட்டு சுட்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/17/b33fd2811afe14f424d946e8f11785ad1784276978665113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பின்னர் சுடப்பட்ட தேங்காய்யை குச்சியுடன் எடுத்து சென்று விநாயகருக்கு முன்பு நிறுத்தி, உலகில் நன்மைகள் செழித்தோங்கவும், தீமைகள் அழிந்திட வேண்டும் எனவும் வழிபாடு நடத்தினர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/education/common-mistakes-upsc-aspirants-should-avoid-267858&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/17/a1307a86747d9cadac6094d7f2c0f5fb1784276896064113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamils-lived-with-steel-swords-3-600-years-ago-discovery-in-telanganaur-excavations-267634</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamils-lived-with-steel-swords-3-600-years-ago-discovery-in-telanganaur-excavations-267634#respond</comments><pubDate>Wed, 15 Jul 2026 16:31:30 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamils-lived-with-steel-swords-3-600-years-ago-discovery-in-telanganaur-excavations-267634</guid><description><![CDATA[&lt;p&gt;சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியான தெலுங்கனூரில் தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வரும் அகழாய்வில், சுமார் 3,600 ஆண்டுகள் பழமையான மனித புதைகுழிகள் மற்றும் அரிய வரலாற்று ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தமிழக தொல்லியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;அடர்ந்த காடு முதல் அகழாய்வு களம் வரை:&lt;/h2&gt;
&lt;p&gt;மேட்டூர் அருகே காவிரி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள தெலுங்கனூர் பகுதி, கடந்த 1990-ஆம் ஆண்டு வரை அடர்ந்த வனப்பகுதியாகவே இருந்தது. அதன்பின்னர் காலப்போக்கில் காடுகள் அழிந்து, அப்பகுதியில் மக்கள் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையும் காலங்களில், இந்த ஆற்றோரப் பகுதியில் ஏராளமான புதைகுழிகள் மற்றும் வரலாற்றுச் சுவடுகள் வெளியே தெரிவது வழக்கமாக இருந்துள்ளது. குறிப்பாக, தெலுங்கனூரைச் சுற்றி அதிகளவில் 'கல் வட்டங்கள்' காணப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;h2&gt;உள்ளூர் மக்களின் 'பாண்டியன் திட்டுகள்':&lt;/h2&gt;
&lt;p&gt;தொன்மைக்கால மனிதர்களின் ஈமச்சின்னங்களான இந்த கல் வட்டங்களை, உள்ளூர் மக்கள் தங்களின் வாய்மொழி மரபாக &amp;lsquo;பாண்டியன் திட்டுகள்&amp;rsquo; என்று அழைத்து வருகின்றனர். இப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்த தொல்லியல் துறையினர் ஆரம்பக்கட்ட ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதில் பண்டைய காலத்து வாள், அம்பு, முதுமக்கள் தாழிகள் மற்றும் பல அளவிலான மண்பானைகள், கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து, தொல்லியல் துறையினர் விரிவான கள ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசிற்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அரசின் முறையான அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீட்டின்படி, தற்போது இப்பகுதியில் விரிவான அகழாய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.&lt;/p&gt;
&lt;h2&gt;அகழாய்வில் கிடைத்த அரிய பொக்கிஷங்கள்:&lt;/h2&gt;
&lt;p&gt;தற்போது தெலுங்கனூர் மற்றும் அதன் அருகிலுள்ள மாங்காடு காவிரி கரையோரப் பகுதிகளில் நடைபெற்று வரும் முறையான அகழாய்வில் பல அதிரடி கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன:&lt;/p&gt;
&lt;p&gt;முழுமையான எலும்புக்கூடுகள்: சுமார் 3,600 ஆண்டுகள் பழமையான, சிதையாத முழுமையான நிலையில் இருக்கும் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;ஹை கார்பன் எஃகு வாள்: புதைக்கப்பட்ட மனிதர்களுடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்ட, உயர் ரக கார்பன் எஃகு உலோகத்தால் (High Carbon Steel) செய்யப்பட்ட தற்காப்பு வாள்கள் கிடைத்துள்ளன. இது அன்றைய மனிதர்களின் உலோகத் தொழில்நுட்ப அறிவை பறைசாற்றுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;ஈமப் பொருட்கள்: மனித உடல்களோடு வைக்கப்பட்ட தாலிகள், சுண்ணாம்பு மணிகள், சிறிய மற்றும் பெரிய அளவிலான மண்பானைகள் உள்ளிட்ட பல்வேறு ஈமப் பொருட்கள் பூமிக்கு அடியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;&quot;இங்கு கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருட்களை ஆய்வு செய்ததில், இப்பகுதியில் புதிய கற்கால மனிதர்களும் (Neolithic), அதைத் தொடர்ந்து இரும்புக்கால மனிதர்களும் (Iron Age) வாழ்ந்துள்ளது உறுதியாகியுள்ளது. அவர்கள் பயன்படுத்திய அரிய வாழ்வியல் பொருட்கள் தான் தற்போது கிடைத்துள்ளன என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;வரலாற்று முக்கியத்துவம்:&lt;/h2&gt;
&lt;p&gt;காவிரி நதிக்கரையில் நாகரிகம் செழித்தோங்கியதற்கான மிக முக்கியமான சான்றாக இந்த தெலுங்கனூர் அகழாய்வு மாறியுள்ளது. 3,600 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த மனிதர்கள் இரும்பு மற்றும் எஃகு ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதும், அவர்களின் தனித்துவமான ஈமச் சடங்கு முறைகளும் இந்த ஆய்வின் மூலம் உலகிற்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளன. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த அகழாய்வில் மேலும் பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/15/77d2c1c15dfaa6a12f4e34af5935f47c1784113204614194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பாமகவில் மீண்டும் பூகம்பம்; ராமதாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - போட்டுடைத்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-pmk-arul-ramadoss-anbumani-supporters-meeting-decision-267613</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-pmk-arul-ramadoss-anbumani-supporters-meeting-decision-267613#respond</comments><pubDate>Wed, 15 Jul 2026 13:37:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-pmk-arul-ramadoss-anbumani-supporters-meeting-decision-267613</guid><description><![CDATA[&lt;p&gt;தந்தையும், மகனும் பிரியவே கூடாது என்று கூறியதாகவும், இதனால் பாதிப்பு ஏற்படும் என்று அனைவரும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தும், தேர்தலுக்கு முன்பு பிரிந்து விட்டு, தேர்தலுக்குப் பிறகு இணைந்துவிட்டார்கள் என்று பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;சேலத்தில் பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:&lt;/p&gt;
&lt;p&gt;ராமதாசுடன் இருந்த ஆதரவாளர்கள் அடுத்த கட்டம் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து தமிழகம் முழுவதும் இருந்து&amp;nbsp;&lt;br /&gt;முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறினர். தமிழகம் முழுவதும் இருந்து கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வருவார்கள்; அவர்கள் ஆலோசனை கூறுவார்கள் அதன் அடிப்படையில் முடிவெடுப்போம்;&lt;br /&gt;சிலரை தவிர அனைவரும் ஒன்றாக இருப்பதாக கூறினார்.&amp;nbsp;யார் யார் வருகிறார்களோ அவர்களுடன் இணைந்து கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதாக கூறினார். சில முக்கிய நபர்களை அழைத்திருப்பதாகவும், அவர்கள் கூறும் &amp;nbsp;கருத்துக்கள் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/lAkTuLue6TA?si=iz5cGRtaDTw4qfYK&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தொடர்ந்து பேசிய அவர், &amp;ldquo;தந்தையும், மகனும் பிரியவே கூடாது என்று கூறியதாகவும், இதனால் பாதிப்பு ஏற்படும் என்று அனைவரும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தும், தேர்தலுக்கு முன்பு பிரிந்து விட்டு, தேர்தலுக்குப் பிறகு இணைந்துவிட்டார்கள். என்ன செய்யலாம், எங்கு செல்லலாம் என்பது குறித்து நாளை வரும் பொறுப்பாளர்கள் கூறும் முடிவின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.&amp;nbsp;நாளை கலந்து கொள்ளும் நிர்வாகிகள் அனைவரிடமும் பேப்பர் கொடுப்போம்; அதில் வரும் நிர்வாகிகள் கருத்துக்கள் எழுதிக் கொடுப்பார்கள். அதன் அடிப்படையில் ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;நேற்றும், இன்றும், நாளையும் என ராமதாஸ் அய்யா எங்களுக்கு எப்பொழுதும் கடவுள்தான். என்னவென்று வழிசொல்லாமல் கதவை சாத்திக்கொண்டார்; அவரே சாத்தி கொண்டாரா? அல்லது சாத்தப்பட்டதா? என்று தெரியவில்லை. வரும் பொறுப்பாளர்கள் என்ன சொல்கிறாரோ அதையும் தான் செய்வோம்&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழகத்தில் உள்ள பாமக நிர்வாகிகள் ராமதாஸ் அய்யா பிரிந்தபோது அவருடன் இருந்தது; நாங்கள் செய்த பாவமா? எனவும் கேள்வி எழுப்பினர். &amp;ldquo;நாங்கள் கொலையா செய்துவிட்டோம்; &amp;nbsp;அன்புமணி ஏற்றுக் கொள்பவரா? இல்லையா? கேள்வி கேட்பதற்கு, தைலாபுரம் தோட்டத்தில் இருந்து ஐயா பேப்பரில் எழுதி கொடுத்ததை தான் படித்தேன். 10 பாயிண்டுகள் கூறினால், அதில் இரண்டு மட்டுமே சொல்வேன். அந்த அளவிற்கு ராமதாஸ் அய்யா என்னை அன்புமணியை திட்ட சொல்வார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/15/007a87ba7dff2a4f309567d6b32292b81784102703361113_original.jpg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;எங்கள் தரப்பில் இருந்து ஆட்களை அனுப்பி விட்டோம்; இரண்டு மணி நேரம் காக்க வைத்து ராமதாஸ் அய்யா பார்க்கவில்லை. யாருமே பார்க்க அனுமதி இல்லை என்று குறிப்பிட்டார்கள். ராமதாஸ் அய்யா யாருடைய கண்ட்ரோலுக்காவது சென்று விட்டாரா என்பது குறித்து நீங்கள் தான் கண்டுபிடித்து சொல்ல வேண்டும். ராமதாஸ் அய்யா கூறிய கருத்துக்களை நாளை கூட்டத்தில் தெரிவிக்கிறோம்&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;பாதுகாப்பு &amp;nbsp;கேட்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, ஆளை வைத்து அடித்தாரே அன்புமணி.. அதை வைத்து அதனால் பாதுகாப்பு என்ற கேள்வி கேட்கிறீர்களா என்று கூறிவிட்டு, அன்புமணி எங்கள் அண்ணன் என்று சிரித்துக்கொண்டே கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், &amp;ldquo;அன்புமணியுடன் செல்பவர்கள் எல்லாம் போய்விட்டார்கள். இப்பொழுது போகாமல் இருப்பவர்கள் அவர் தலைமை பிடிக்காமல் &amp;nbsp;போகாமல் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. நாளைய தினம் முடிவு தெரியும். பாமக அலுவலகத்திற்கு வரும்படி நிறைய &amp;nbsp;நபர்களுக்கு அழைப்பு வந்தது. ஆனால் போகவில்லை. இதற்கான முடிவை கடிதத்தில் உள்ள கருத்துக்களை பிரித்து பார்த்து ஒரு வாரத்துக்குள் நாட்களுக்குள் தெரிவிப்போம்&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/15/5010ae4ecd0d693516611743ec84cc651784102407582113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA['இஎஸ்ஐ, பிஎஃப் கேட்கக்கூடாது’  ரூ.100 பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்ளும் கொத்தடிமை முறை - தூய்மை பணியாளர்களுக்கு நடக்கும் கொடுமை]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-news-attur-municipality-sanitation-workers-bonded-labor-system-private-contract-company-267501</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-news-attur-municipality-sanitation-workers-bonded-labor-system-private-contract-company-267501#respond</comments><pubDate>Tue, 14 Jul 2026 17:02:27 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-news-attur-municipality-sanitation-workers-bonded-labor-system-private-contract-company-267501</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;சேலம்:&lt;/strong&gt; ஆத்தூரில் நகராட்சி தூய்மை பணிகளுக்கு 100 ரூபாய் பத்திரத்தில் தொழிலாளர்களிடம் எழுதி வாங்கிக் கொள்ளும் கொத்தடிமை முறையை தனியார் நிறுவனம் புதிதாக அரங்கேற்றியுள்ளது. இந்தப் பிரச்சனையில் அரசு முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு துறையூர் பகுதியை சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. தூய்மை பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் அந்த நிறுவனம் கொத்தடிமைகளை போல பத்திரத்தில் எழுதி வாங்கும் வினோதம் அரங்கேறி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/qzqy2bvUflA?si=18YRONd6c6tqioYI&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தனியார் நிறுவனத்தை சேர்ந்த கண்காணிப்பாளராக உள்ள அருண் என்பவர் 100 ரூபாய் பத்திரத்தில் தூய்மை பணி செய்ய வரும் பணியாளர் அரசின் எந்த சலுகையும் கேட்கக் கூடாது. குறிப்பாக நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் இஎஸ்ஐ, பிஎப் போன்றவற்றை கேட்கக்கூடாது. பணியாளர்கள் சங்கங்கள் சார்பில் பணி நிரந்தரம் கேட்டு போராட்டம் நடத்தக்கூடாது. போராட்டம் நடத்தினால் நிர்வாகம் எடுக்கும் முடிவிற்கே கட்டுப்பட்டு பணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என 100 ரூபாய் பத்திரத்தில் தொழிலாளர்களிடம் கையெழுத்து வாங்கி கொத்தடிமைகளைப் போல் மாற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/14/59400f979762465985b410afc54ee28a1784028684572113_original.jpeg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;குறிப்பிட்ட காலம் பணியாற்றினால் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் சங்கங்கள் மூலம் அரசுக்கு எடுத்துரைக்கப்பட்டு அதன் பிறகு தீர்வு காணப்பட்டு வரும் நடைமுறையை மாற்றி மீண்டும் பழைய கொத்தடிமை முறையை இந்த நிறுவனம் புகுத்தி தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனது. வேறு வழி இல்லாமல் சில பணியாளர்கள் 100 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்திட்டு செல்லும் நிலையும் உள்ளது. எனவே, தமிழக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை முழுமையாக கண்டறிந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/tvs-scooty-ntorq-125-how-many-kilometers-per-liter-266815&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/14/1d81c81d2e8473e02d9cea1835cf72461784028625543113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பெண்களுக்கு குட் நியூஸ் வருமா? தனியார் பஸ்களிலும் இலவச பயணம் வேணும்! வலுக்கும் புதிய கோரிக்கை]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-private-bus-owners-association-free-bus-scheme-women-267365</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-private-bus-owners-association-free-bus-scheme-women-267365#respond</comments><pubDate>Mon, 13 Jul 2026 17:36:47 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-private-bus-owners-association-free-bus-scheme-women-267365</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழக அரசின் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை வரவேற்பதாக தெரிவித்த சேலம் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், அந்தத் திட்டத்தில் தனியார் பேருந்துகளையும் இணைக்க வேண்டும் என்றும் ரேஷன் கார்டு போல மகளிருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கி இலவச பயணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் சொர்ணபுரி பகுதியில் தனியார் பஸ் உரிமையாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஈரான்&amp;ndash;அமெரிக்கா போர் உள்ளிட்ட சர்வதேச சூழ்நிலையால் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், 2018-ஆம் ஆண்டு லிட்டருக்கு ரூ.64 இருந்த டீசல் தற்போது ரூ.102 ஆக உயர்ந்துள்ளது என்றார். மேலும், அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் விலை உயர்வுக்கு மானியம் வழங்கப்படுவதாகவும், ஆனால் தனியார் பேருந்துகளுக்கு அதுபோன்ற சலுகை இல்லை என்றும் குற்றம்சாட்டினர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/Qnhf1Wmn-Pk?si=YmhSD-_hhlJ3pUod&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழகத்தின் பல பகுதிகளில் பேருந்து கட்டணம் ரூ.2 வரை உயர்த்தப்பட்டாலும், சேலத்தில் இதுவரை கட்டண உயர்வு செய்யவில்லை என்றும் தமிழகம் முழுவதும் சுமார் 4,500 தனியார் பேருந்துகளும், 22 ஆயிரம் அரசு பேருந்துகளும் இயக்கப்படுவதாகவும், சேலம் மாவட்டத்தில் மட்டும் 60 பேருந்து உரிமையாளர்கள் சேவையை நிறுத்தியுள்ளதாகவும், மேலும் 40 பேர் பேருந்துகளை இயக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்த அவர் தற்போது ஒரு கிலோமீட்டருக்கு ரூ.1.10 ஆக உள்ள கட்டணத்தை ரூ.1.20 ஆக உயர்த்த அனுமதி கோரி அரசிடம் மனு அளித்துள்ளதாகவும், இதுகுறித்து அரசு விரைவில் முடிவு எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேலும், பெண்களுக்கான இலவச பயணத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு பெண்களின் பேருந்து பயணம் 34 சதவீதத்தில் இருந்து 64 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்தத் திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தினால் 24 மணி நேரமும் பேருந்துகளை இயக்க தயாராக இருக்கிறோம் என்றார்,&lt;br /&gt;மேலும், மின்சார பேருந்துகள் வாங்க தனியார் நிறுவனங்களுக்கும் அரசு மானியம் வழங்க வேண்டும், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை ஆண்டுக்கு இருமுறை மறுஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு சுங்கக் கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். மேலும், போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபனை சந்தித்து கோரிக்கை மனு வழங்கியுள்ளதாகவும், அதை பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/tvs-scooty-ntorq-125-how-many-kilometers-per-liter-266815&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/13/51780c728459f92b077ea87c65eedcde1783944330352113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தமிழ்நாட்டு தண்ணீரை பிரெஞ்சு கம்பெனிக்கு கொடுப்பதா?  - விஜய் அரசை வெளுத்து வாங்கிய சீமான்! பின்னணி என்ன?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/seeman-condemened-salem-water-privatization-suez-france-international-company-267064</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/seeman-condemened-salem-water-privatization-suez-france-international-company-267064#respond</comments><pubDate>Sat, 11 Jul 2026 13:41:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/seeman-condemened-salem-water-privatization-suez-france-international-company-267064</guid><description><![CDATA[&lt;div class=&quot;css-175oi2r r-xoduu5&quot; style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் மாநகராட்சி நீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கிய தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;
&lt;div class=&quot;css-175oi2r r-xoduu5&quot; style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;p&gt;இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:&lt;/p&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;css-175oi2r r-xoduu5&quot; style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும்.&lt;/div&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/GFWXYbxLUG4?si=sdIbKaVcmLGRLo-q&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;div class=&quot;css-175oi2r r-xoduu5&quot; style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div class=&quot;css-175oi2r r-xoduu5&quot; style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div class=&quot;css-175oi2r r-xoduu5&quot; style=&quot;text-align: left;&quot;&gt;புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத சனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக் கடமையுமாகும். கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.&lt;/div&gt;
&lt;div class=&quot;css-175oi2r r-xoduu5&quot; style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div class=&quot;css-175oi2r r-xoduu5&quot; style=&quot;text-align: left;&quot;&gt;நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;&amp;nbsp; குடிநீர் வழங்குவதைத் தனியாருக்குத் தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் இலாபத் தேவைக்குத்தான் வேலைசெய்வார்களே ஒழிய, மக்கள் சேவைக்கு ஒருநாளும் வேலை செய்ய மாட்டார்கள் எனும் அடிப்படைப் புரியாதா? நீர்வளத்தையும், நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளித்தால், நீர் இறையாண்மை முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அவர்கள் சொல்கிற விலைக்குக் குடிநீரை மக்கள் வாங்க வேண்டியப் பேராபத்துமிக்க சூழல் நாளை உருவாகும். இது வருங்காலத் தலைமுறையின் நலவாழ்வினைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அடமானம் வைக்கும் பேரபாயம்.&lt;/div&gt;
&lt;div class=&quot;css-175oi2r r-xoduu5&quot; style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div class=&quot;css-175oi2r r-xoduu5&quot; style=&quot;text-align: left;&quot;&gt;அர்ஜென்டினாவிலும், பொலிவியாவிலும் சூயஸ் நிறுவனம் செய்த மானுடகுலக் கொடுமைகள் வரலாறாக விரிகையில், கண்முன்னே சாட்சியாக இருக்கையில், அந்நிறுவனத்திடமே சேலம் மாநகரத்தின் நீர்விநியோகத்தை வழங்குவது மக்கள் விரோதப்போக்கின் உச்சமாகும். ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.&lt;/div&gt;
&lt;div class=&quot;css-175oi2r r-xoduu5&quot; style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/tvs-scooty-ntorq-125-how-many-kilometers-per-liter-266815&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;css-175oi2r r-xoduu5&quot; style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/26/9d976c8cd7da502954260175e227d5f21693019396702184_original.jpeg" width="220"/></item></channel></rss>