<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>salem</title><atom:link href="https://tamil.abplive.com/salem/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 11 Jun 2026 16:34:22 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[தலைகால் புரியாமல் ஆடுவதா? பதவி வந்ததும் பணிவு வரணும்- முதல்வர் விஜயை வெளுத்தெடுத்த ஈபிஎஸ்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/edappadi-palanisamy-salem-slams-cm-vijay-tvk-govt-262982</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/edappadi-palanisamy-salem-slams-cm-vijay-tvk-govt-262982#respond</comments><pubDate>Sun, 7 Jun 2026 12:27:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/edappadi-palanisamy-salem-slams-cm-vijay-tvk-govt-262982</guid><description><![CDATA[&lt;p&gt;பதவி வந்தவுடன் தலைகால் தெரியாமல் ஆடுகின்றனர். பதவி வரும் போது பணிவு வரவேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேசும்போது கூறியதாவது:&lt;/p&gt;
&lt;p&gt;&amp;rsquo;&amp;rsquo;சேலம் மாவட்டத்தில் 7 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் அதிக இடங்களில் அதிமுக வெற்றி பெற்ற மாவட்டம் சேலம். சேலம் அதிமுகவின் கோட்டை என நிரூபித்துள்ளோம். அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றோம். இதற்கு காரணமாக வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;வெற்றி தோல்வி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப அமையும். அதிமுக கூட்டணி ஒரு கோடியே 45 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. 1996-ல் வெறும் நான்கு இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இப்போது 47 இடங்களில் வென்றிருக்கிறோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம். 2021-ல் 75 இடங்களில் வென்றோம். 2 லட்சம் வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று திமுக ஆட்சியமைத்தது. இடைத் தேர்தலாக இருந்தாலும், பொதுத் தேர்தலாக இருந்தாலும் அதிமுக மீண்டும் வென்று ஆட்சியமைக்கும்.&lt;/p&gt;
&lt;h2 class=&quot;ng-star-inserted&quot; style=&quot;line-height: 15.75pt; background: white;&quot;&gt;&lt;strong&gt; சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இதை நாம் சொல்லவில்லை. முதலமைச்சராக ஆவதற்கு உதவிய கூட்டணி கட்சித் தலைவர்கள் இதை சொல்லுகிறார்கள். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி மோசமாக இருக்கிறதோ அதைப்போலவே தவெக ஆட்சியிலும் தொடர்கிறது. அதை தடுத்து நிறுத்த தவெக அரசால் முடியவில்லை. திருச்சி கிழக்கு தொகுதியில் நன்றி சொன்னபோது, முதலமைச்சர் தீர்ந்து போன கட்சி என பேசியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;அதிமுக நாட்டு மக்களின் கோரிக்கைகளை தீர்த்து வைத்த கட்சி என முதலமைச்சர் உணர வேண்டும். பதவி வந்தவுடன் தலைகால் தெரியாமல் ஆடுகின்றனர். பதவி வரும் போது பணிவு வரவேண்டும். அதிமுக 31 ஆண்டு காலம் ஆட்சி புரிந்துள்ளது. பொன்விழா கண்ட கட்சி. இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ அதிமுக ஆட்சி நடைபெற்றதே காரணம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/wZ2VIBmfAFY?si=CAIP7B82f7TAA6C-&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;திரைப்படத்தில் நடித்ததால் வெற்றி&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கட்சி ஆரம்பித்து 3 வருடத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள்.&amp;nbsp; எந்த இடத்தில் வாக்குகளை கேட்டாலும், அங்கு அதிமுக ஆட்சியில் என்ன செய்திருக்கிறோம் என சொல்லி வாக்கு கேட்டோம்.&amp;nbsp;&lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; திரைப்படத்தில் நடித்ததால் வெற்றி பெற்றிருக்கிறார். சேவை செய்ததால் அல்ல. திமுக கிடப்பில் போட்டுள்ள மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை தவெக அரசு நிறைவேற்றித் தர வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;தவெக அமைச்சரவையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் பேசுகிறார். அவர் பல கட்சியில் இருந்தவர். திமுக,&amp;nbsp; விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt;வில் இருக்கிறார். அடுத்து வேறு எந்த கட்சியில் இருப்பார் எனத் தெரியவில்லை. ஆனால், நான் அதிமுகவில் தொடர்ந்து 51 ஆண்டுகளாக இருக்கிறேன். மக்களுக்காக பணியாற்றி வருகிறேன். இதை மனதில் வைத்துக் கொண்டு பேச வேண்டும்&amp;rsquo;&amp;rsquo;.&lt;/p&gt;
&lt;p&gt;இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/how-many-children-can-a-woman-have-at-most-262912&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/07/46709935161379cb7ab6b9c267de191e1780815403776332_original.png" width="220"/></item><item><title><![CDATA[1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/1-lakh-pills-seized-drug-trafficking-79-people-arrested-under-the-goondas-act-in-salem-262929</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/1-lakh-pills-seized-drug-trafficking-79-people-arrested-under-the-goondas-act-in-salem-262929#respond</comments><pubDate>Sat, 6 Jun 2026 19:26:29 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/1-lakh-pills-seized-drug-trafficking-79-people-arrested-under-the-goondas-act-in-salem-262929</guid><description><![CDATA[&lt;p&gt;கடந்த ஓராண்டில் சேலம் மாநகரப் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த 79 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை மாநகரக் காவல் துறை ஆணையாளர் அனில் குமார் கிரி தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt; ஒரு லட்சம் போதை மாத்திரைகள், மருந்துகள் பறிமுதல்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சேலம் மாவட்டம், தாதகாப்பட்டியில் போதை மாத்திரைகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை மாநகரக் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு லட்சம் போதை மாத்திரைகள், மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;இது தொடர்பாக மாநகரக் காவல் துறை ஆணையாளர் அனில் குமார் கிரி சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;சேலம் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இளைஞர்கள் அவ்வப்போது அந்த வீட்டுக்குச் சென்று மாத்திரைகளை வாங்கிச் செல்வதாகவும் அன்னதானப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மேகலா, கணவர் கைது&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த மேகலாவிடம் (48) போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், அவர் போதை மாத்திரைகளை வீட்டில் பதுக்கி வைத்து இளைஞர்களுக்கு விற்கப்படுவது தெரிய வந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், அவரது கணவர் கண்ணன் (50) கடந்த 21ஆம் தேதி தாரமங்கலம் பகுதியில் போலீஸார் நடத்திய சோதனையின்போது, போதை மாத்திரைகளை விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/si4xE8G7rYo?si=zvI6Q5GL-zMsVSGX&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து, மேகலாவைக் கைது செய்த போலீஸார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு லட்சத்துக்கும் மேலான போதை மாத் திரைகள், மருந்துகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 6.82 லட்சமாகும். இதில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா&amp;nbsp; என தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஆணையாளர் அனில் குமார் கிரி செய்தியாளரிடம் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;போதைப் பொருள் உபயோகம் குறித்து கெடுதல்களை விளக்கிடும் வகையில் கல்லூரி மாணவ மாணவியர் இடையே மாநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த அவர், உணவுப் பொருள் பாதுகாப்பு துறை, மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்த கடைகள் கண்டறியப்பட்டு அவை சீல் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt; 250 கிலோ கஞ்சா பறிமுதல்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கடந்த 6 மாதத்தில் சேலம் மாநகரக் காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 79 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் சேலம் மாநகர காவல் துறை ஆணையாளர் அனில் குமார் கிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/how-many-kilometers-will-the-classic-350-run-if-the-tank-is-completely-filled-262911&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/06/f712e274f70b6e4e863b1ea7aeafad341780750284348332_original.png" width="220"/></item><item><title><![CDATA[சேலத்தில் கோலாகல கலைத்திருவிழா; காத்திருக்கும் பரதம், ஓவியம், சிற்ப நிகழ்ச்சி - எப்போது? எங்கே?]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-cultural-festival-june-28th-2026-bharata-natyam-drawing-262904</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-cultural-festival-june-28th-2026-bharata-natyam-drawing-262904#respond</comments><pubDate>Sat, 6 Jun 2026 14:15:59 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சதீஷ் குமார் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-cultural-festival-june-28th-2026-bharata-natyam-drawing-262904</guid><description><![CDATA[&lt;p&gt;சேலம் மண்டல கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் அரசு இசைப்பள்ளியில் &amp;nbsp;தவில், மிருதங்கம், வயிலின், வாய்ப்பாட்டு, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை கற்க முழுநேர வகுப்புகளில் சேர மாணவ மாணவியர் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாரம்பரிய கலைகளை மேலும் பரவலாக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சேலத்தில் பரத நாட்டிய நிகழ்ச்சி:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;நடப்பாண்டு தொடக்கத்திலேயே பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக கலைப்பண்பாட்டுத் துறை சேலம் மண்டல உதவி இயக்குநர் சங்கரராமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜூன் 28 ஆம் தேதியன்று நடைபெறும் பரத நாட்டிய நிகழ்வில் சேலம் அரசு இசைப்பள்ளியில் பயிற்சி பெற்ற முன்னாள் கலைஞர்கள் உள்பட ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். அதேநாளில், சிறந்த ஓவியம் மற்றும் சிற்பங்கள் கலைக்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் படைப்புகளை காட்சிப்படுத்த விரும்பும் கலைஞர்கள் 15 ஆம் தேதிக்குள் படைப்புகளை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இது குறித்து சேலம் தளவாப்பட்டியில் உள்ள அரசு இசைப் பள்ளியில் சேலம் மண்டல கலைப்பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் &amp;nbsp;சங்கரராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;எங்கே நடக்கிறது?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சேலத்தில் முதல் முறையாக இசைப்பள்ளியில் பயின்ற பாரதநாட்டிய துறை மாணவர்கள் ஒன்றிணைந்து, நட்டுவாங்கம் செய்யும் பிரம்மாண்ட பாரதநாட்டிய நிகழ்ச்சி வரும் 28 ஆம் தேதி ஓமலூர் பத்மவாணி மகளிர் கலை மற்றும் &amp;nbsp;அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இதே போல், 2025-2026 ஆம் ஆண்டிற்கான இசை விழா வரும் 13 ஆம் தேதி ஸ்ரீ பக்த வரபிரசாத ஆஞ்சநேயர் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற உள்ளது. விழாவில் புகழ்பெற்ற கலைஞர்கள் சிறப்பு தமிழிசை மற்றும் சிறப்பு புல்லாங்குழல் இசை நிகழ்ச்சிகளை &amp;nbsp;வழங்க உள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இதே போல், கலை பண்பாட்டு துறை சார்பில் நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் வகையில், மண்டல கலை பண்பாட்டு மைய வளாகத்தில் அரசு பகுதிநேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் தப்பாட்டம் சிவப்பாட்டம் கோக்கால் ஆட்ட நாடகம் ஆகிய நாட்டுபுறக் கலைப் பிரிவுகளில் ஓராண்டு பயிற்சியுடன் சான்றிதழ் வழக்கப்படுகிறது பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறவுள்ள உள்ளதாக கூறினார்.&amp;nbsp;இந்த சந்திப்பின் போது, இசை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்கள் உடனிருந்தனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/06/f4a1443e613f0c4ffa630b30fa47c99b1780735513752102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[வாக்காளர்களுக்கு ரூ.2000 கொடுத்ததை ஒப்புக்கொண்ட தவெக வேட்பாளர் - வீடியோ ஆதாரத்தால் அதிர்ச்சியான தவெகவினர்]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-west-tvk-candidate-admits-rs-2000-cash-distribution-to-voters-video-sparks-controversy-262678</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-west-tvk-candidate-admits-rs-2000-cash-distribution-to-voters-video-sparks-controversy-262678#respond</comments><pubDate>Thu, 4 Jun 2026 13:24:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-west-tvk-candidate-admits-rs-2000-cash-distribution-to-voters-video-sparks-controversy-262678</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் மேற்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டவர் வாக்காளர்களுக்கு 2000 ரூபாய் பணம் கொடுத்தார் என்பதை ஓமலூர் தொகுதி தவெக வேட்பாளர் ஒப்பு கொண்டு பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமது தோல்விக்கு காரணமும் அது தான் என்று தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வில்லை என்று திருச்சியில் விஜய் பேசிய நிலையில் அவரது வேட்பாளரே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக ஒப்பு கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் அதியமான். இவர் சமீபத்தில் ஓமலூர் தொகுதியில் பணியாற்றிய தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அப்போது அவர் பேசும் போது, ஓமலூர் தொகுதியில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம், ஓமலூர் தொகுதிக்கு அருகில் உள்ள மேற்கு சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட நபர் ( லட்சுமணன் ) வாக்காளர்கள் அனைவருக்கும் 2000 ரூபாய் கொடுத்தது தான் என்றும், இது நமது ஓமலூர் தொகுதியில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் இதனால் 6 ஆயிரம் முதல் 10 வாக்குகள் வரை நம்மை விட்டு சென்றதாக பேசியது சர்ச்சையாகி உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/hHHb6oXMUx4?si=VfCoH8191cuIqy2c&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தவெக கட்சியில் பணம் கொடுக்காமல் ஜெயித்ததாக திருச்சியில் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; பேசிய நிலையில் தவெக கட்சியை சேர்ந்த வேட்பாளரே வாக்குக்கு பணம் கொடுத்ததை ஒப்பு கொண்ட வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;a href=&quot;https://tamil.abplive.com/news/tamil-nadu/biggest-changes-came-in-tiruchendur-murugan-temple-after-tn-hrce-minister-ramesh-inspection-full-details-here-262638&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;Also Read| திருச்செந்தூரில் நிம்மதியான தரிசனம்.. அமைச்சர் ஆய்வுக்குப் பின் நடந்த மாற்றம்.. வீடியோ வெளியீடு!&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சம்பந்தபட்ட வேட்பாளர் கூறிய மேற்கு தொகுதி வேட்பாளர் லட்சுமணன், தேர்தலில் சுமார் 66 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது. &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; வேட்பாளர் ஒருவரே தனது கட்சி வேட்பாளர் வாக்களிக்க பணம் கொடுத்தார் என்பதை ஒப்பு கொண்டதால் இது குறித்து தேர்தல் ஆணையம் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;குற்றம் சாட்டபட்ட மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், தம் மீது உள்ள வழக்கை மறைத்து உள்ளதாக ஆளுநரிடம் ஏற்கனவே புகார் அளிக்கபட்டு இருப்பது குறிப்பிடதக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/best-cheap-high-mileage-bikes-for-daily-commuting-india-price-comparison-262562&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/04/b230e11e44775eeb33dfaf5dffd015111780559472969113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[அப்பாடா.. ஒருவழியாகத் திறந்தாச்சு - சேலத்தை அதிரவைத்த மதுபிரியர்களின் மெகா கியூ வரிசை]]></title><link>https://tamil.abplive.com/news/salem/tasmac-stores-opened-in-salem-today-after-three-days-261996</link><comments>https://tamil.abplive.com/news/salem/tasmac-stores-opened-in-salem-today-after-three-days-261996#respond</comments><pubDate>Fri, 29 May 2026 18:56:27 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/tasmac-stores-opened-in-salem-today-after-three-days-261996</guid><description><![CDATA[&lt;p&gt;சேலத்தில் டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டதால் மதுக்கடைகள் முன்பு ஏராளமான மது பிரியர்கள் குவிந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;காலி மது பாட்டில்களை வெளி முகமை மூலம் திரும்பப்பெற &amp;nbsp;வேண்டும், மதுபான கடைகளில் உடைகின்ற பாட்டில்களுக்கு இழப்பீட்டினை நிர்வாகமே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்கள் கடந்த மூன்று நாட்களாக கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். &amp;nbsp;இதனால் வாடிக்கையாளர்கள் மற்றும் மது பிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/MA5GLTpigVI?si=ETgr8o5ipBw9eB1g&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில், அமைச்சர் மற்றும் மாவட்ட மேலாளர் வேண்டுகோளுக்கிணங்க போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று கடைகள் திறக்கப்பட்டது. இதனால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடைகள் திறந்த உடனே மது பிரியர்கள் கடை முன் குவிய தொடங்கினர். குறிப்பாக சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மது பாட்டில்களை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். கடந்த மூன்று நாட்களாக மதுக்கடைகள் திறக்கப்படாததால் தாங்கள் அவதிக்குள்ளானதாகவும், மது பிரியர்கள் மது இல்லாமல் தூங்க முடிவதில்லை, கூடுதலாக பத்து ரூபாய் தற்போது வாங்குவதில்லை எம்ஆர்பி விலைக்கு மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவதாகவும் ஒருவேளை கூடுதலாக பணம் கேட்டாலும் நாங்கள் தர தயாராக இருக்கிறோம் ஆனால் மது கடையை மட்டும் மூட வேண்டாம் என மது பிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;முன்னதாக, டாஸ்மாக் கடைகள் அடைப்பு எதிரொலியால் சேலத்தில் நேற்று தனியார் பார்களில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. மது பிரியர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.&amp;nbsp; சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் (மனமகிழ் மன்றம்) பாரில் திரளான மது பிரியர்கள் வந்து கியூ வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். வழக்கமாக சேலத்தில் உள்ள பல்வேறு 11 &amp;nbsp;டூ 11 பார்களிலும் மது வகைகள் விற்கப்பட்டு வருகிறது. இந்த 11 டூ 11 பார்கள் பகல் 11 மணிக்கு திறந்து இரவு 11 மணிக்கு மூடப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாக டாஸ்மாக் மதுபான கடைகள் சேலம் முழுவதும் மூடப்பட்டுள்ளதால் தற்போது தனியார் பார்களிலும் மற்றும் 11 டூ 11 பார்களிலும் அதிகம் கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/tvs-jupiter-mileage-53-kmpl-full-tank-fuel-capacity-distance-covered-261797&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/29/183cf5b37652880df47a0708b20cb2481780061091170113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இணையத்தில் டிரெண்டாகும் சேலம் 'கியூ' வீடியோ - டாஸ்மாக் மூடியதால் தனியார் பார்களில் முண்டியடித்த கூட்டம்]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-tasmac-shops-closed-alcohol-sales-in-private-bars-261901</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-tasmac-shops-closed-alcohol-sales-in-private-bars-261901#respond</comments><pubDate>Thu, 28 May 2026 18:46:04 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-tasmac-shops-closed-alcohol-sales-in-private-bars-261901</guid><description><![CDATA[&lt;p&gt;சேலத்தில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் முறையைக் கைவிடக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் மூன்று நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மனமகிழ் மன்றத்தில் மதுவை வாங்க மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் முறையைக் கைவிட வேண்டும் மற்றும் கடைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சேலம் மாவட்டத்தில் 174 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தால், மதுபிரியர்கள் மதுவை வாங்க மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/2x4Cq2QlHKA?si=AzyMiI4nLf10rGm-&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில், டாஸ்மாக் கடைகள் அடைப்பு எதிரொலியால் சேலத்தில் இன்று தனியார் பார்களில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. மது பிரியர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/28/52b6814162494aa53166863e53e2ed661779973916846113_original.jpg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் (மனமகிழ் மன்றம்) பாரில் இன்று காலை திரளான மது பிரியர்கள் வந்து கியூ வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். வழக்கமாக சேலத்தில் உள்ள பல்வேறு 11 &amp;nbsp;டூ 11 பார்களிலும் மது வகைகள் விற்கப்பட்டு வருகிறது. இந்த 11 டூ 11 பார்கள் பகல் 11 மணிக்கு திறந்து இரவு 11 மணிக்கு மூடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக டாஸ்மாக் மதுபான கடைகள் சேலம் முழுவதும் மூடப்பட்டுள்ளதால் தற்போது தனியார் பார்களிலும் மற்றும் 11 டூ 11 பார்களிலும் அதிகம் கூட்டம் கூட தொடங்கி இருக்கிறது. ஆனால், மனமகிழ் மன்றத்தில் உறுப்பினர்களுக்கு மட்டுமே மதுவை விற்பனை செய்ய வேண்டும் என்ற நிலையில் வெளியாட்களும் மது வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;முதலமைச்சர் விஜய்க்கு மனு அளித்த டாஸ்மாக் ஊழியர்கள்&lt;/h2&gt;
&lt;p&gt;சில தினங்களுக்கு முன்பு, தமிழகத்தில் அண்மையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த பணியாளர்கள் அனைவருக்கும் அரசின் பிற துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் பணி அமர்த்த வலியுறுத்தி சேலம் மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி இருந்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;இதையும் படிங்க: &quot; href=&quot;https://tamil.abplive.com/news/tamil-nadu/edappaadi-palanisamu-says-children-are-not-safe-under-the-tvk-govt-261877&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படிங்க: &quot;கொஞ்சி வாக்கு கேட்டீங்களே.. அந்த குழந்தைகளுக்கு இன்று பாதுகாப்பில்லை - முதல்வர் விஜய்யை உலுக்கிய இபிஎஸ்&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாடு முழுவதும் வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் கல்விக் கூடங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை தமிழ்நாடு அரசு மூடிய நிலையில் மூடப்பட்ட மதுபான கடைகளில் பணிபுரிந்து வந்த பணியாளர்கள் அனைவருக்கும் அரசின் பிற துறைகளில் உள்ள காலி பணியிடங்களில் பணியமர்த்த வேண்டும் என டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர். மேலும் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தினை தனியார் முகமை ஏற்படுத்தி அதன் மூலம் செயல்படுத்த வேண்டும், மதுபான கடைகளை இரவு 10 மணிக்கு மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் விற்பனை கணக்குகளை சரி பார்த்து வெளியே செல்ல பணியாளர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;க்கு மனு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/royal-enfield-classic-350-highway-mileage-distance-in-5-liters-petrol-261796&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/28/4386b716e83c975ba139ea1bca6efba61779973769638113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA['என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-corporation-council-meeting-dmk-councilors-argument-with-salem-north-mla-261782</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-corporation-council-meeting-dmk-councilors-argument-with-salem-north-mla-261782#respond</comments><pubDate>Wed, 27 May 2026 17:27:59 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-corporation-council-meeting-dmk-councilors-argument-with-salem-north-mla-261782</guid><description><![CDATA[&lt;p&gt;சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு சட்டமன்ற உறுப்பினர், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள வார்டுகளில் மாமன்ற உறுப்பினர் பணிகள் மேற்கொள்ளவில்லை, வரவில்லை என்று குற்றச்சாட்டை&amp;nbsp; முன்வைத்தார். இதனால், திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், தன்னைப் பேசவிடவில்லை என்று கூறி தவெக சட்டமன்ற உறுப்பினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/CINOUBJWbak?si=FDXY0TavsuamlbMU&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மாமன்ற இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கூட்டம் துவங்கியதுமே அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் சேலம் மாநகராட்சியில் குடிநீரை தனியார் மயமாக்கும் முடிவை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் குடிநீர் தனியார் மயமாக்கும் கைவிட வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன் மேயர் இருக்கை முன்பாக அமர்ந்து கூட்டம் முடியும் வரை தர்ணாவில் அமர்ந்திருந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/27/334a52f6cf58a38476cfd6e9c96722441779881989449113_original.jpg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இதனிடையே சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் மாமன்ற கூட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், பணிகளை செய்யுமாறு அரசு அதிகாரிகளை நிர்பந்திப்பதும், ஆய்வு செய்வது உள்ளிட்ட &amp;nbsp;பணிகளில் ஈடுபடுவதை, தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர். அப்போது &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; வடக்கு சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் &amp;nbsp;மாமன்ற உறுப்பினர்கள் முறையாக பணிகளை மேற்கொள்வதில்லை; வார்டுகளுக்கு செல்வதில்லை என்று மக்கள் குற்றச்சாட்டை முன் வைப்பதாக தெரிவித்தார். குறிப்பாக 33வது வார்டு பணிகள் நடைபெறவில்லை என்று மக்கள் நேரடியாகவே குற்றச்சாட்டை வைத்ததாகவும் கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/27/027b3fc069d38e960590d0467afb00ae1779882565505113_original.png&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;அப்போது அனைத்து மாமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர் சிவகுமாரிடம் விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தன்னை &amp;nbsp;பேசவிடவில்லை என்று கூறி, மாமன்ற கூட்டத்திலிருந்து சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் வெளியேறினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/can-you-eat-mutton-in-summer-is-it-good-or-bad-261752&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/27/334a52f6cf58a38476cfd6e9c96722441779881989449113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் முதலமைச்சரே! இல்லனா.., - தவெக அரசுக்கு விவசாயிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?]]></title><link>https://tamil.abplive.com/agriculture/tamil-nadu-farmers-association-warned-crop-loans-must-be-completely-waived-off-otherwise-farmers-will-engage-in-protests-261651</link><comments>https://tamil.abplive.com/agriculture/tamil-nadu-farmers-association-warned-crop-loans-must-be-completely-waived-off-otherwise-farmers-will-engage-in-protests-261651#respond</comments><pubDate>Tue, 26 May 2026 17:10:39 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ விவசாயம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/agriculture/tamil-nadu-farmers-association-warned-crop-loans-must-be-completely-waived-off-otherwise-farmers-will-engage-in-protests-261651</guid><description><![CDATA[&lt;p&gt;பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், இல்லையெனில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழக விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பெரியண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, &amp;ldquo;தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தபோது விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், ஐந்து ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு முழுமையான பயிர் கடன் தள்ளுபடியும், ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்துள்ளவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலை விவசாயிகளுக்கு செய்யப்படும் துரோகமாக உள்ளது. எனவே தேர்தல் வாக்குறுதிப்படி பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய அரசு முன்வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே விவசாயிகளின் ஆதரவு கிடைக்கும். இல்லையெனில் வருங்காலங்களில் மிகப்பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/ODlP-1hbkqs?si=kE00EEn81az1Vlty&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;சொல்வது ஒன்று, செய்வது ஒன்று&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த ஆண்டே பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். இல்லையெனில் அடுத்த ஐந்து ஆண்டுகளும் அதனை செய்ய தேவையில்லை. ஏற்கனவே தமிழக அரசுக்கு ரூ.12 லட்சம் கோடி கடன் இருப்பதாக கூறப்படும் நிலையில், அதை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். சொல்வது ஒன்று, செய்வது ஒன்று, &amp;nbsp;என்ற நிலைப்பாட்டில் அரசு செயல்படுகிறது. கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படாததால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது கூட பயிர் கடன்களை தள்ளுபடி செய்யாவிட்டால் விரைவில் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும். விவசாய பொருட்களுக்கு உரிய விற்பனை விலை கிடைப்பதில்லை. விவசாய வேலைகளுக்கு தொழிலாளர்களும் கிடைப்பதில்லை. விவசாயம் அழியாமல் பாதுகாக்க வேண்டுமெனில் தொழிலாளர்கள் மீண்டும் விவசாயத் துறைக்கு வர வழிவகை செய்ய வேண்டும்.&lt;/p&gt;
&lt;h2&gt;பஞ்சம் ஏற்படும் அபாயம்&lt;/h2&gt;
&lt;p&gt;ஜூன் 12-ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படாவிட்டால் பஞ்ச நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. டெல்டா மாவட்டங்களில் போதிய மழை பெய்யாததால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது. மேலும், கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அமைச்சர்களுக்கு அனுபவத்தை விட புத்திசாலித்தனமும், அதிகாரிகளின் சரியான வழிகாட்டுதலும் அவசியம். கடந்த ஆட்சிகளில் விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால் தற்போதைய அரசு விவசாயிகளை முழுமையாக வஞ்சித்து வருகிறது&amp;rdquo; என்று தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/this-is-a-simple-way-to-check-if-an-egg-is-spoiled-261512&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/26/c4966bd07dd9757a54d4e9bd2a0d40891779795397091113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஆட்டோமேட்டிக் லாக் உயிரைப் பறித்ததா? - சேலம் கார் விபத்தில் கணவன், மனைவி பலியான அதிர்ச்சிப் பின்னணி]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-accident-husband-and-wife-death-drown-in-car-in-omalur-salem-261484</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-accident-husband-and-wife-death-drown-in-car-in-omalur-salem-261484#respond</comments><pubDate>Mon, 25 May 2026 15:50:07 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-accident-husband-and-wife-death-drown-in-car-in-omalur-salem-261484</guid><description><![CDATA[&lt;p&gt;சேலம் மாவட்டம் ஓமலூர் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் காருடன் மூழ்கி தம்பதி உயிரிழந்தனர். மழைநீரில் கார் மிதப்பதை பார்த்து கிராம மக்கள் மீட்டுள்ளனர். உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;சேலம் சின்னத்திருப்பதியை சேர்ந்தவர்கள் வெங்கடாசலம், ராதா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். அரசு போக்குவரத்து கழகத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவரின் மகன் அமெரிக்காவிலும், மகள் கோவையிலும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கணவன் மனைவி மட்டும் சேலம் சின்னத்திருப்பதி இல்லத்தில் வாழ்ந்து வந்தனர். நேற்று இரவு முதல் ஓமலூர் வட்டாரத்தில் பலத்த மழை பெய்தது. இந்த மழைநீர் ஓமலூர் அருகே செம்மாண்டப்பட்டி ஏனாதி கிராமத்தில் வழியாக செல்லும் ரயில்வே சுரங்கபாதையில் ஆறு போல மழைநீர் தேங்கியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/2iKmtEev9M8?si=iIlbCYHh0JHEIKrR&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில், இன்று ஓமலூர் சின்னதிருப்பதியில் நடைபெறும் உறவினர் இல்ல திருமணத்திற்காக வெங்கடாசலமும், அவரது மனைவி ராதாவும், அதிகாலை 5 மணியளவில் காரில் வந்துள்ளனர். அப்போது செம்மாண்டபட்டி ஏனாதி ரயில்வே பாலத்தில் தேங்கியுள்ள மழைநீர் குளத்தில் காரை விட்டுள்ளார். கார் லாக் ஆகி இருந்ததால், குளம்போல தேங்கியுள்ள நீரில் மழைநீரில் கார் முழுமையாக மூழ்கியது. வயதானவர்கள் என்பதால் உடனடியாக அவர்களால் வெளியே வர முடியாமல் காருடன் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காலையில் அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், நீரில் மூழ்கி கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தொடரும் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு கானவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/disadvantages-of-cleaning-your-ears-with-matchstick-261377&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/25/c6429557f01380e443137da77fcf96a51779703947770113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Salem power shutdown: சேலத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை... லிஸ்டில உங்க பகுதியும் இருக்கா ?]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-power-cut-26-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-tnn-261470</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-power-cut-26-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-tnn-261470#respond</comments><pubDate>Mon, 25 May 2026 14:28:48 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-power-cut-26-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-tnn-261470</guid><description><![CDATA[&lt;p&gt;சேலம்: சேலம் மாவட்டத்தின் முக்கியத் துணை மின் நிலையங்களில் நாளை (26.05.2026) அவசரக் காலப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) அறிவித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;1. வேம்படித்தாளம் துணை மின் நிலையம்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மின்தடை பகுதிகள்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;சுமங்கலி நகர்&lt;/li&gt;
&lt;li&gt;சித்தேஸ்வரா நகர்&lt;/li&gt;
&lt;li&gt;சந்தைப் பேட்டை&lt;/li&gt;
&lt;li&gt;பூங்கா நகர்&lt;/li&gt;
&lt;li&gt;பாப்பாபட்டி&lt;/li&gt;
&lt;li&gt;இடங்கணசாலை&lt;/li&gt;
&lt;li&gt;கே.கே.நகர்&lt;/li&gt;
&lt;li&gt;சுண்டெலி பெருமாள் கோவில்&lt;/li&gt;
&lt;li&gt;வேம்படித்தாளம்&lt;/li&gt;
&lt;li&gt;கோட்டை புதூர்&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;h2&gt;2. அஸ்தம்பட்டி துணை மின் நிலையம்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மின்தடை பகுதிகள்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;டி.ஐ.ஜி., அலுவலகம்&lt;/li&gt;
&lt;li&gt;லட்சுமி சுந்தர் நகர்&lt;/li&gt;
&lt;li&gt;சிறைச்சாலை பின்புறம்&lt;/li&gt;
&lt;li&gt;எஸ்.பி.ஐ., காலனி&lt;/li&gt;
&lt;li&gt;அம்மா உணவகம்&lt;/li&gt;
&lt;li&gt;பிரிட்ஜ் ரோடு&lt;/li&gt;
&lt;li&gt;செரி ரோடு&lt;/li&gt;
&lt;li&gt;அஸ்தம்பட்டி ரவுண்டானா&lt;/li&gt;
&lt;li&gt;ஜான்சன்பேட்டை&lt;/li&gt;
&lt;li&gt;இட்டேரி சாலை&lt;/li&gt;
&lt;li&gt;பிரபு நகர்&lt;/li&gt;
&lt;li&gt;அம்மன் நகர்&lt;/li&gt;
&lt;li&gt;காந்தி சாலை&lt;/li&gt;
&lt;li&gt;லட்சுமிபுரம்&lt;/li&gt;
&lt;li&gt;விஜயராகவாச்சாரி யார் நகர்&lt;/li&gt;
&lt;li&gt;மரவனேரி&lt;/li&gt;
&lt;li&gt;வின்சென்ட்&lt;/li&gt;
&lt;li&gt;ஏ.ஆர்.லைன்&lt;/li&gt;
&lt;li&gt;கோர்ட் ரோடு&lt;/li&gt;
&lt;li&gt;சங்கர் நகர்&lt;/li&gt;
&lt;li&gt;சகாதேவபுரம்&lt;/li&gt;
&lt;li&gt;ஆர்.ஆர்.முனியப்பன் கோவில் நகர்&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;h2&gt;3. உடையாப்பட்டி துணை மின் நிலையம்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மின்தடை பகுதிகள்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;மாசிநாயக்கன்பட்டி&lt;/li&gt;
&lt;li&gt;சக்தி நகர்&lt;/li&gt;
&lt;li&gt;காசி நகர்&lt;/li&gt;
&lt;li&gt;மீனங்காடு&lt;/li&gt;
&lt;li&gt;வரகம்பாடி&lt;/li&gt;
&lt;li&gt;இந்திரா நகர்&lt;/li&gt;
&lt;li&gt;சிந்தாமணி நகர்&lt;/li&gt;
&lt;li&gt;நொச்சிப்பட்டி&lt;/li&gt;
&lt;li&gt;ராம் நகர்&lt;/li&gt;
&lt;li&gt;ஏரிக்காடு&lt;/li&gt;
&lt;li&gt;பாறைக்காடு&lt;/li&gt;
&lt;li&gt;குண்டுக்கல்லுூர்&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;h2&gt;4. கருப்பூர் துணை மின் நிலையம்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மின்தடை பகுதிகள்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;ஆணைகவுண்டம்பட்டி&lt;/li&gt;
&lt;li&gt;கோட்டகவுண்டம்பட்டி&lt;/li&gt;
&lt;li&gt;சாமிநாயக்கன்பட்டி&lt;/li&gt;
&lt;li&gt;செல்லபிள்ளை குட்டை&lt;/li&gt;
&lt;li&gt;புளியம்பட்டி&lt;/li&gt;
&lt;li&gt;பெருமாள் கோவில்&lt;/li&gt;
&lt;li&gt;மாங்குப்பை&lt;/li&gt;
&lt;li&gt;கிளாக்காடு&lt;/li&gt;
&lt;li&gt;5 ரோடு&lt;/li&gt;
&lt;li&gt;குரங்குச்சாவடி&lt;/li&gt;
&lt;li&gt;நரசோதிப்பட்டி&lt;/li&gt;
&lt;li&gt;பாரதி நகர்&lt;/li&gt;
&lt;li&gt;சிவாய நகர்&lt;/li&gt;
&lt;li&gt;கே.வி.எஸ்., நகர்&lt;/li&gt;
&lt;li&gt;நகரமலை அடிவாரம்&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;h2&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/11/08/47b0c3363142e02338ce4a7968c0f7ef1762601227241240_original.png" width="220"/></item></channel></rss>