TN Advocate General: கல்லூரி சீனியரை தமிழ்நாட்டின் அட்வகேட் ஜெனரலாக நியமித்த CM விஜய் - யார் இந்த விஜய் நாராயண்?
TN Advocate General Vijay Narayan: தமிழ்நாட்டின் தலைமை வழக்கறிஞராக முதலமைச்சர் விஜய் மூலம் நியமிக்கப்பட்டுள்ள விஜய் நாராயண் யார் என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

TN Advocate General Vijay Narayan: தமிழ்நாட்டின் அட்வகேட் ஜெனரலாக முதலமைச்சர் விஜய் மூலம் நியமிக்கப்பட்டுள்ள விஜய் நாராயணின் பணி விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
புதிய தலைமை வழக்கறிஞரை நியமித்த தமிழக அரசு
தமிழ்நாட்டின் புதிய அட்வகேட் ஜெனரல் அதாவது தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணை நியமித்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மாநில அரசின் தலைமை சட்ட ஆலோசகரான இவர், அரசாங்கத்திற்கு சட்ட விவகாரங்களில் ஆலோசனை வழங்குவார். உயர் நீதிமன்றங்கள்/உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசை பிரதிநிதித்துவப்படுத்துவார். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜய் நாராயண் யார்? அவரது பணி அனுபவம் என்ன? என்பது தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
யார் இந்த விஜய் நாராயண்?
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வந்த பி.எஸ். ராமன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்த பதவிக்கு விஜய் நாராயண நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த அதிமுக ஆட்சியின் போதும் 2017ம் ஆண்டு தொடங்கி 2021ம் ஆண்டு வரை, தலைமை வழக்கறிஞராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இரண்டு வெவ்வேறு அரசுகளுக்கு தலைமை வழக்கறிஞராக பணியாற்றியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், சபாநாயகர் ஜே.சி.டி, பிரபாகர், முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஆகியோர் பயின்ற அதே லயோலோ கல்லூரியில் தான், விஜய் நாராயணும் தனது இளஞகலை பட்டத்தை முடித்துள்ளார். தொடர்ந்து, 1982ம் ஆண்டு மெட்ராஸ் சட்ட கல்லூரியில் தனது சட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார். தொடர்ந்து மூத்த வழக்கறிஞரான ப.சிதம்பரத்தின் சேம்பரில் இணைந்து பணியை தொடங்கியுள்ளார்.
ALSO READ | TVK MLA Ravisankar : ‘டாஸ்மாக் பாரில் மதுபோதையில் துறையூர் TVK MLA?’ ரவிசங்கர் சொன்னது என்ன?
பாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்:
இந்தியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலின் மருமகனும், மூத்த வழக்கறிஞர் எம்.கே. நம்பபியாரின் பேரனுமான விஜய் நாராயணை, கடந்த 2004ம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்தது. வரலாற்றாசிரியரும் பத்திரிகையாளருமான சர்தார் கே.எம். பணிக்கர் அவரது தாய்வழி தாத்தா ஆவார். விஜய் நாராயண், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தொழிலாளர் சட்டம், அரசியலமைப்புச் சட்டம், நிர்வாகச் சட்டம் மற்றும் வணிகச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு பன்முகத் தன்மை கொண்ட அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர் ஆவார்.

விஜய் நாராயண் - பணி அனுபவங்கள்:
விஜய் நாராயண் பல்வேறு விதமான வழக்குகளுக்காக ஆஜராகி நீதிமன்றங்களில் வாதாடியுள்ளார். அதில், சேவைச் சட்டம், தொழிலாளர் சட்டம், அரசியலமைப்புச் சட்டம், நிர்வாகச் சட்டம் மற்றும் வணிகச் சட்டம் ஆகியவவை பிரதானமானதாகும். அவர் உச்ச நீதிமன்றத்திலும், மேலும் பல உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகளை நடத்தியுள்ளார். தமிழ்நாடு அரசின் நியமனத்தை தொடர்ந்து விஜய் நாராயணும் தனது போர்ச்சுகல் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு, புதன்கிழமை அன்று நாட்டிற்குத் திரும்பி அப்பதவியை ஏற்றுக்கொண்டார்.
விஜய் வழக்கில் ஆஜரான நாராயண்
இதனிடையே, ரோல்ஸ்-ராய்ஸ் நுழைவு வரி விலக்கு கோரியது தொடர்பான வழக்கில் நடிகர் விஜய்க்காக ஜூலை 2021 மற்றும் மீண்டும் அக்டோபர் 2021 -ல் விஜய் நாராயண் வாதிட்டார் . னி நீதிபதியால் கூறப்பட்ட "தேசவிரோத" மற்றும் "திரை நாயகன்" போன்ற கருத்துக்களை நீக்க அவர் வாதிட்டதன் விளைவாக, ஜூலை 2021-ல் அந்தக் கருத்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டு, ஜனவரி 2022-ல் அவை முற்றிலுமாக நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலமாக கிடைத்த நம்பகத்தன்மையையும், விஜய் நாராயணுக்கு இந்த முக்கியப் பதவியை வழங்க ஒரு காரணமாக கூறப்படுகிறது.
Before You Go
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
ட்ரெண்டிங் செய்திகள்






















