Tvk Vijay: பனையூருக்கு வராதீங்க.. ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக முடித்துவிட்ட நண்பா.. நண்பீஸ்- கதறும் விஜய்
Tvk Vijay: சட்டமன்ற தேர்தலுக்கான விருப்பமனு தவெக சார்பில் வழங்கப்பட்ட நிலையில், பல ஆயிரம் பேர் பனையூர் கட்சி அலுவலகத்தில் குவிந்தால் அப்பகுதி மக்களுக்கும் தவெகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து தவெகவினருக்கு முக்கிய உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணியை தொடங்கிய தவெக
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் விருப்பமனுக்களை பெற்று வேட்பாளர்களிடம் நேர்காணலை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு களம் இறங்கியுள்ளது தவெக. அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே தவெகவினருக்கு அடி மேல் அடி விழுந்து வருகிறது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழப்பால் கட்சியானது சுமார் 2 மாதங்கள் சைலண்ட் மோடிற்கு சென்றது.
அடுத்தடுத்து சிக்கலில் விஜய்
அடுத்தாக கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் விஜய் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அஜராகவேண்டிய நிலை ஏற்பட்டது. விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் வெளியிட முடியாமலும் தவித்தும் வருகிறது. இந்த நிலையில் தான் சட்டமன்ற தேர்தலுக்கான விருப்பமனு மூலம் மீண்டும் விஜய்க்கு சிக்கல் உருவாகியுள்ளது. அந்த வகையில் தவெக சார்பாக நேற்று முதல் விருப்ப மனுக்கள் பெறும் பணியானது தொடங்கப்பட்டது. ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் அப்பகுதியில் உள்ள பலரின் வீடுகளுக்கு முன்பாக கார்களை நிறுத்தப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ளவர்கள் கூன தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அதேநேரம் அப்பகுதி மக்களிடமும் தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தான் யாரும் பனையூர் பக்கம் வரவேண்டாம் என கட்சி தலைமை தங்களது தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
விருப்ப மனு வாங்க குவிந்த தவெகவினர்
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்,சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள், கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கழகத் தலைமை நிலையச் செயலகம் இருக்கும் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இட நெருக்கடியும் ஏற்படக் கூடாது என்பதை முழுமையாகக் கவனத்தில் கொண்டுள்ளோம்.
பனையூருக்கு யாரும் வர வேண்டாம்
எனவே, மக்கள் மீது அதிக அக்கறை கொண்ட நம் வெற்றித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, விருப்ப மனுக்களைப் பெறுவதற்காகக் கழகத் தோழர்கள் யாரும் தலைமை நிலையச் செயலகத்திற்கு வர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். எனவே, விருப்ப மனு பெற விரும்பும் கழகத் தோழர்கள், பின்வரும் இணைப்பைப் பயன்படுத்திப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
https://drive.google.com/file/d/1Y9PfGCXvzVTbJ6B6S128PKJZE7laWgiK
இந்த இணைப்பின் வாயிலாக விருப்ப மனுவைப் பதிவிறக்கம் செய்யலாம். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். இவற்றை ஏற்கெனவே குறிப்பிட்ட தேதியான பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் நேரிலோ, கொரியர் அல்லது தபால் மூலமோ அனுப்பலாம் என்று கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி கேட்டுகொள்வதாக என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.























