ஒருவழியாக ஆதரவை அறிவித்த விசிக; அரியணை ஏறும் விஜய்- ’’ஆசான் திருமா’’ ஆதவ் அர்ஜூனா பேட்டி!
தவெக ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ளதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

தவெக ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ளதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகம் காக்கப்படும் என்றும் வெற்றி வெற்றி என்றும் ஆதவ் தெரிவித்துள்ளார்.
தனிப்பெரும் கட்சியான தவெக
தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. முதல் தேர்தலிலேயே 108 இடங்களைக் கைப்பற்றியது. எனினும் பெரும்பான்மைக்குத் தேவையான 117 இடங்கள் தேவைப்பட்டதால், திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை தவெக கோரியது.
முதல் கட்சியாக காங்கிரஸ் 5 உறுப்பினர்களுடன் ஆதரவு கொடுத்த நிலையில், அடுத்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 2 உறுப்பினர்களுடன் நேற்று ஆதரவு அளித்தன. தொடர்ந்து விசிக இன்று இரு சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆதரவைக் கொடுத்துள்ளது. இதன் மூலம் 118 உறுப்பினர்களுடன் தவெக தலைவர் விஜய், முதல் அமைச்சர் ஆக உள்ளார்.
நிபந்தனை அற்ற ஆதரவு அளித்த விசிக
முன்னதாக தவெக தேர்தல் வியூக மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆதரவுக் கடிதத்தைப் பெற்றார். தவெகவுக்கு, நிபந்தனை அற்ற ஆதரவை அளிப்பதாக விசிக தெரிவித்துள்ளது. பெரும்பான்மை கிடைத்துவிட்டாலும் ஆட்சி அமைக்க ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. முன்னதாக, ஆட்சி அமைக்க தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஆளுநரிடமே நேரடியாகச் சென்று குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார்.
இதனால் இந்த விவகாரத்தில் ஆளுநர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.
Before You Go
Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
ட்ரெண்டிங் செய்திகள்























