Thiruma: ”பொய் எல்லாம் இல்லை, விஜயை தடுக்க திமுக-அதிமுக கூட்டணி பேசுனாங்க” உண்மையை போட்டுடைத்த திருமா
Thirumavalavan TVK Vijay: தவெக ஆட்சி அமைப்பதை தடுக்கும் விதமாக திமுக- அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை தான் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Thirumavalavan TVK Vijay: அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைப்பது திமுகவிற்கே மிகப்பெரிய பின்னடைவாக போய்விடும் என எச்சரித்ததாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்:
விசிக தலைவர் திருமாவளவன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து பரவும் பல்வேறு தகவல்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “கூட்டணி கட்சிகள் இணைந்து வலுவான எதிரணியாக செயல்படலாம் என திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 5ம் தேதி வலியுறுத்தினார். 7ம் தேதி விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தனித்தனியாக ஒரு அழைப்பு வந்தது. ஸ்டாலின் எங்களை பார்க்க விரும்புவதாக ஒரு அழைப்பு வந்தது. தொடர்ந்து நாங்கள் நேரில் சென்றோம். அப்போது திமுக மற்றும் அதிமுக கூட்டணியே இணைந்து ஆட்சி அமைக்கும் முடியும் என ஒரு பரிந்துரை வந்துள்ளது. இதுபற்றிய உங்கள் கருத்து என்னவென கேட்டனர். இது திமுகவிற்கே சூனியமாக மாறிவிடும், எதிர்காலமே கேள்விக்குறியாகலாம் என நான் கூறினேன். கம்யூனிஸ்டுகளும் கிட்டத்தட்ட அதே மாதிரியான கருத்துகளையே முன்வைத்தனர். பின்பு நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். பின்பு எங்களிடையே தொலைபேசி உரையாடல்கள் மட்டுமே இருந்தன” என திருமாவளவன் பேசியுள்ளார்.
இல்லவே இல்லை என பேசிய திமுக - அதிமுக
தவெக தனிப்பெரும்பான்மை பெறமுடியாத நிலையில், ஆதரவு கேட்டு பல்வேறு கட்சிகளை நாடியது. அந்த நேரத்தில் புதியதாக வந்தவரை ஆட்சி அமைக்க விடுவது தங்களது எதிர்காலத்திற்கே கேள்விகுறியாகலாம் என, பரம எதிரிகளான திராவிட கட்சிகள் கூட்டணி அமைக்க ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை திமுக மற்றும் அதிமுக கடுமையாக மறுத்தன. தவெகவினர் திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்புவதாக குற்றம்சாட்டினர். இதே குற்றச்சாட்டை சி.வி,. சண்முகம் முன்வைத்தபோது கூட, அமைச்சரவையில் இடம்பெறுவதற்காக பொய் சொல்வதாக அதிமுக மற்றும் திமுக தரப்பினர் விமர்சித்தனர். ஆனால். விஜய் ஆட்சி அமைக்காமல் தடுக்க திமுக மற்றும் அதிமுக கூட்டணி முயற்சிகள் உண்மையிலேயே நடந்ததாக, திருமாவளவன் உறுதிப்படுத்தியுள்ளார்.
திருமாவளவனுக்கு முதலமைச்சர் ஆஃபர்
பேட்டியில் தொடர்ந்து பேசுகையில், “கடந்த 8ம் தேதி இரவு ஸ்டாலினை சந்தித்து பேசியபோது, கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவினை பின்பற்றி நிலைப்பாடை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். எனவே, நீங்கள் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு அளியுங்கள் என ஸ்டாலின் கூறினார். பின்பு அங்கிருந்து அவர் செல்லவே, அங்கிருந்தவர்கள் மத்தியில் ஒரு கருத்து வருகிறது. ஒரு சிறிய முன்னேற்றம் ஏற்பட்ட, உங்களை ஒரு பொது முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உங்களுடன் எடப்பாடி உள்ளிட்ட இருவர் துணை முதலமைச்சராக பொறுப்பேற்பார்கள் என அதிமுக தரப்பில் பேசுவதாக திமுகவில் இருந்து தகவல் வந்தது. அப்படி ஒரு நிலை வந்தால் வெளியில் இருந்து நாங்கள் ஆதரவளிப்போம். அட்சி அதிகாரத்தில் வரமாட்டோம் என்று தெரிவித்தனர். அதற்கும், இதெல்லாம் நடக்குற கதையா? தமிழ்நாட்டில் அப்படி நடக்குமா? என கேள்வி எழுப்பினேன். இல்லை தீவிரமாகவே இதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டுள்ளன என்றனர்” என திருமாவளவன் பேசியுள்ளார்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்






















