திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
"திமுக காங்கிரஸ் கூட்டணி பிரிந்து செல்லும், ஃபெவிகால் போட்டு ஒட்ட பார்ப்பதாக வைகைச் செல்வன் காஞ்சிபுரத்தை செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்"

தூய்மை பணியாளர்கள் விசில் அடிக்க கூடாது, பல்வேறு இடங்களில் விசில் தடை செய்யப்பட்டு இருப்பது திமுகவின் அச்சத்தின் வெளிபாடாக உள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணியை ஃபெவிக்கால் போட்டு ஓட்ட பார்க்கிறார்கள், நிச்சயம் திமுக காங்கிரஸ் கூட்டணி பிரிந்து செல்லும் என வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தலைமையில் பாஜக, அமமுக, பாமக, தமாகா அள்ளிய பல்வேறு கட்சியினர் ஒன்றினைந்து உள்ளதால் இந்த கட்சியின் முதல் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் மற்றும் தேஜக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
திமுக காங்கிரஸ் கூட்டணி பிரிந்து செல்லும்
மேடையில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பேசும்போது திமுக நீட் தேர்வு ரத்து செய்வார்கள் என கூறிவிட்டு டிஎன்பிசி தேர்வு ரத்து செய்தது திமுக அரசு என வைகைச்செல்வன் பேசினார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகைச் செல்வன் பேசுகையில், திமுக காங்கிரஸ் கூட்டணி இழுபறி நீடிக்கிறது, இதனை ஃபெவிகால் போட்டு ஓட்ட பார்க்கிறார்கள், நிச்சயம் திமுக காங்கிரஸ் கூட்டணி பிரிந்து செல்லும். கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கலாம் என்ற குழப்பத்தில் திமுக உள்ளது, கூட்டணி நீடிக்குமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
எடப்பாடி சொல்வது போல திமுக விளம்பர அரசு என்பத நிரூபித்து கொண்டிருக்கிறது அனைத்து விளம்பரமாகவே செய்கிறது. 520 வாக்குறுதி கொடுத்துவிட்டு 420 நிறைவேற்றிவிட்டு 420 ஆக திமுக அரசு உள்ளது. தூய்மை பணியாளர்கள் விசில் அடிக்க கூடாது, பல்வேறு இடங்களில் விசில் தடை செய்யப்பட்டு இருப்பது திமுகவின் அச்சத்தின் வெளிபாடாக உள்ளது என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் அதிமுக முன்னாள் அமைச்சரும் செய்தி தொடர்பாளருமான வைகைச் செல்வன் தெரிவித்தார்.























