ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு அமெரிக்கா சற்றும் தயாராக இல்லாத நிலையில் வளர்ந்ததாகவும் இருந்தாலும் இந்தியாவுக்காக அமெரிக்கா எப்போதும் உடனிருக்கும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ் தெரிவித்துள்ளார். 


மேலும் அவர் கூறுகையில் ஒவ்வொரு நாட்டுக்கும் ரஷ்யாவுடன் வரலாற்று ரீதியான உறவு உள்ளது. அதற்கு இந்தியா விதிவிலக்கல்ல. அத்தனை நாடுகளும் தற்போது ரஷ்யாவுடனான தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு வருகின்றன அதுபோல இந்தியாவும் காலப்போக்கில் தன் உறவு நிலையை மாற்றிக்கொள்ளும் இந்த சூழலில் நாங்கள் எப்போதும் இந்தியாவுக்கு உடன் இருப்போம் என்றார்.


 


முன்னதாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை அடுத்து சர்வதேச நாடுகள் பல வகைகளில் மாஸ்கோ மீது தங்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன.




ரஷ்யா - உக்ரைன் போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டே செல்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில், உக்ரைனில் உள்ள மருத்துவமனை, குடியிருப்புகள் உள்ளிட்டவை உருகுலைந்து காணப்படுகின்றன. உக்ரைனை சுற்றி வளைத்திருக்கும் ரஷ்யா தற்போது தலைநகர் கீவை நெருங்கி இருக்கிறது. தலைநகரை சுற்றியுள்ள பல பகுதிகளில் தாக்குதல் கடுமையாக உள்ள நிலையில் அங்குள்ள மக்கள் பிற நாடுகளில் தஞ்சம் புகுந்து உள்ளனர். பலர் பதுகிடங்களில் பாதுக்காப்புக்காக தங்கியுள்ளனர்.









 


இதனிடையே ரஷ்ய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. உக்ரைன் தரப்பில் அன்டன் கோரினெவிச் பேசும் போது, “ உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று கூறினார். ட்ட விரோத தாக்குதல்களை முன்வைத்து வரும் ரஷ்யா, போர் விதிகளை மீறி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றம் சாட்டியிருந்தது. இந்த வழக்கில் இன்று சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவை போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. 


இது குறித்து உக்ரைன் அதிபர் கூறியதாவது: -


சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிரான வழக்கில் ரஷ்யா முழுமையான வெற்றியை பெற்றிருக்கிறது. ரஷ்யா உக்ரைன் மீதான தனது படையெடுப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தவிட்டிருக்கிறது. இந்த உத்தரவு சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டது. ரஷ்யா உடனடியாக இணங்க வேண்டும். உத்தரவை புறக்கணித்தால் ரஷ்யா மேலும் தனிமைப்படுத்தப்படும்” என்று அவர் கூறியிருக்கிறார்.