TVK Vijay Speech: தேர்தல் வரப்போகுது.! உடனே இதை செய்யுங்க... குட்டீஸ்களுக்கு திடீர் கட்டளையிட்ட விஜய்
TVK Salem Meeting: அடுத்தவங்க ஆரம்பித்த அரசியல் கட்சியை வைத்து கொண்டு தேர்தல் செய்யுறாங்க, தனியாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவிகித வாங்குகிற தைரியம் உள்ளதா.? திராணி இருக்கிறதா.? என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் கூட்டத்தில் விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக, அதிமுகவிற்கு போட்டியாக களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், இந்த நிலையில் மக்களை சந்திக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சேலம் சீலநாயக்கன்பட்டியில் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய விஜய், ஏய் விஜய் வீட்டை விட்டு வெளியே வா.. பனையூரை விட்டு வெளியே வா என கூறுகிறார்கள். முதலில் என் வீடு எது தெரியுமா.? என் வீடு எங்கிருக்கு தெரியுமா.? என கேள்வி எழுப்பியவர், என்னை கேளி கிண்டல் செய்கிறாங்க, தமிழ்நாடு தான் என் வீடு, என் வீட்டில் மொத்தம் எத்தனை பேர் தெரியுமா.? 8 கோடி பேர் இருக்காங்க, ஒட்டுமொத்த தமிழகம் என் மக்கள், உன் உறவு, என் சொந்தம் என கூறினார்.
நான் என்ன தப்பு செய்தேன்.? விஜய்
மக்களுக்கு நீதி கேட்டு தான் அரசியலுக்கு வந்தேன். இப்போது எனக்கு நீதி கேட்கிறேன். என்ன தப்பு செய்தான் இந்த விஜய், எல்லாத்தையும் ஒதுக்கி தள்ளிவிட்டு மக்களுக்காக அரசியலுக்கு வந்தது ஒரு தப்பா.? எங்கள் கட்சி சார்பாக மாநாடு நடத்த, கூட்டம் நடத்த ஒரு ஹால், பங்ஷன் நடத்த இடம் கொடுக்க விட மாட்டுறாங்க, இது என்ன நியாயம். மற்றவர்களுக்கு இடமோ பாதுகாப்பு கொடுப்பாங்க, எனக்கு மட்டும் கொடுக்க மாட்டங்கா,
தற்போது தமிழகத்தில் செல்ப் எடுக்காத கூட்டணி உள்ளது. ஒரு பக்கம் காசு கொடுத்து ஓட்டு வாங்கிடலாம் என நினைக்கிறார்கள். அது நடக்கவே நடக்காது. பணத்தை வண்டி வண்டியாக கொண்டு வருவாங்க, 5ஆயிரம் கொடுப்பாங்க, வாங்கிக்கோங்க, சந்ததோஷமாக வாங்கிக்கோங்க, வாங்கிட்டு அவங்க காதிலே விசிலை ஊதி அனுப்புங்க, பணத்தை கொடுத்து ஏமாத்துற கலாச்சாரம் ஒழியனும்.
குட்டீஸ்களுக்கு கோரிக்கை விடுத்த விஜய்
குட்டி நண்பா நண்பீஸ், உங்களுடைய பியூச்சர் மனதில் வைத்து அரசியலுக்கு வந்துள்ளேன். யாருக்கு ஓட்டு என பேட்டி எடுக்கும் போது பின்னாடி நிற்கும் சிறுவர்கள் விஜய், விஜய் என சொல்கிறார்கள். கியூட்டாக சொல்லுறாங்க, எனவே வீட்டில் உள்ள பெரியப்பா, சித்தி, அண்ணன் என அனைவருக்கும் விசில் சின்னத்திற்கு ஓட்டு போட சொல்லுங்கு, விசில் சின்னததிற்கு மட்டும் போட சொல்லுங்க
நாங்க அரசியல் செய்ய அரசியலுக்கு வரவில்லை, அனுபவம் இல்லாதவர்கள் என கூறுகிறார்கள். அவர்களின் அனுபவம் கொள்ளையடித்தை தவிர வேறு எந்த அனுபவம் உள்ளது. அடுத்தவங்க ஆரம்பித்த அரசியல் கட்சியை வைத்து கொண்டு தேர்தல் செய்யுறாங்க, தனியாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவிகித வாங்குகிற தைரியம் உள்ளதா.? திராணி இருக்கிறதா.? கூட்டணி கட்சிகளை மட்டுமே நம்பி தேர்தலை எதிர்கொள்வதாக விஜய் சவால் விடுத்தார். .























