TVK Meeting Death: மீண்டுமா? விஜய்யின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர் மரணம் - சேலத்தில் நடந்தது என்ன?
சேலத்தில் விஜய்யின் தவெக கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர் மயக்கம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று சேலத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
விஜய் பரப்புரையில் ஒருவர் மரணம்:
இந்த பரப்புரைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சூரஜ் என்ற இளைஞர் பங்கேற்றார். சேலத்தில் உள்ள வெள்ளிப்பட்டறையில் பணியாற்றி வரும் அவருக்கு, இந்த கூட்டத்தின்போது வலிப்பு ஏற்பட்டுள்ளது. வலிப்பு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை தவெக-வினருக்கும், தமிழக மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு விஜய் கரூரில் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு குறைவாகவே இருப்பதால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சியினரும் மக்கள் மத்தியில் தங்கள் பரப்புரையை தீவிரமாக மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்:
தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் அனைவரது மத்தியிலும் அதிகளவு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கட்சி தவெக. கரூர் சம்பவத்திற்கு பிறகு தனது ஒவ்வொரு அரசியல் நடவடிக்கைகளையும் கவனமாக மேற்கொண்டு வரும் விஜய், மீண்டும் தனது தீவிர பரப்புரையை மேற்கொள்ளத் தாெடங்கியுள்ளார்.
இதனால், இன்று சேலம் சீலநாயக்கன்பட்டியில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்தினார். விஜய் சேலம் வருவதை முன்னிட்டு மாநாடு நடைபெறும் இடத்தில் காலை முதலே குவியத் தொடங்கினார். 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி என்று அரசு நிபந்தனை விதித்திருந்தாலும், அதிகளவில் தவெக தொண்டர்களும், ரசிகர்களும் குவியத் தொடங்கினார்.
அசம்பாவிதம்:
இந்த கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களுக்காக நாற்காலிகள் போடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சூரஜிற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்பின்னரே, இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்த சுராஜ் மகாராஷ்ட்ராவைப் பூர்வீகமாக கொண்டவர். 35 வயதான அவருக்கு மகனும், மகளும் உள்ளனர். அவர் 20 ஆண்டுகளாக வெள்ளிப்பட்டறையில் பணியாற்றி வருகிறார்.
விஜய்யின் அரசியல் வாழ்வில் மிகப்பெரிய கரும்புள்ளியாக கரூர் துயர சம்பவம் உள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு, சுமார் 2 மாதங்களுக்கு பொதுவெளியில் வராமல் இருந்த விஜய் பின்னர் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனே பொதுக்கூட்டம், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி வருகிறார்.
வட மாநில இளைஞர்:
இந்த நிலையில், இன்று சேலத்தில் நடந்துள்ள இந்த உயிரிழப்பு சம்பவம் மீண்டும் தவெக நிர்வாகிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சுமார் அரைமணி நேரம் பேசினாலும், அவர் பேசுவதை பார்ப்பதற்காக சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொண்டர்கள், ரசிகர்கள் காத்திருந்தனர். சூரஜ் மயக்கம் அடைந்து உயிரிழந்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.























