Senthil Balaji : ’அச்சடிச்ச மாதிரி ஒரே விண்ணப்பம்’ 400 கோடி ஊழலை செந்தில் பாலாஜி செய்தது எப்படி?
’விசாரணைக்கு சிபிஐ அழைக்கும் நேரத்தில் செந்தில்பாலாஜி கைது செய்யப்படக் கூட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது’

திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் அப்போதே எழுந்தன. அதிலும் அதிமுக ஆட்சியில் அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் இருந்தார். இதனையடுத்து, அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவருக்கு மீண்டும் மின்சாரத்துறையை அன்றைய திமுக அரசு கொடுத்து அமைச்சர் ஆக்கியது. இந்நிலையில், அவர் அமைச்சராக இருந்தபோது மின்சாரத்துறையில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் புதிய வழக்கு பதிவு செய்திருக்கிறது சிபிஐ.
அறப்போர் புகாரில் ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழலில் CBI FIR பதிவு
— Jayaram Venkatesan (@JayaramArappor) June 8, 2026
அறப்போர் புகார் கடந்து வந்த பாதை என்ன?. இந்த புகாரை மூட திமுக அரசில் லஞ்ச ஒழிப்பு துறை செய்த மோசடி என்ன ? அதை உயர்நீதிமன்றத்தில் நம் வாதங்கள் மூலம் வெளிக்கொண்டு வந்தது எப்படி ? pic.twitter.com/aOqxryIhRm
என்ன ஊழல்? எப்படி செய்தார் செந்தில்பாலாஜி ?
டிரான்ஸ்பார்மர் எனப்படும் மின்மாற்றிகளை கொள்முதல் செய்வதில் செந்தில்பாலாஜி 400 கோடி வரை ஊழல் செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்திருக்கிறது சிபிஐ. பொதுவாக ஒரு அரசிடமிருந்து ஒரு டெண்டரை நிறுவனங்கள் எடுக்க வேண்டுமென்றால் அவர்கள் தனித் தனியாக அந்த டெண்டருக்கான தொகையை குறிப்பிட்டு விண்ணப்பம் செய்வார்கள். ஒருவர் 5 ஆயிரம் குறிப்பிட்டிருந்தால் ஒருவர் 4,999 குறிப்பிட்டிருப்பார். அதில் யார் குறைந்த அளவில் விண்ணப்பம் செய்திருக்கிறார்களோ அவர்களுக்கு அந்த டெண்டர் தரப்படும். ஆனால், செந்தில்பாலாஜி செய்திருக்கும் இந்த ஊழலில் டெண்டர் அப்ளிகேஷனிலேயே முறைகேடு நடைபெற்றிருக்கிறது. குறிப்பாக, இந்த டிரான்ஸ்பார்மர் டெண்டர் எடுக்க போட்டியிட்ட 34 பேரும் ஒரே தொகையை விண்ணப்பத்தில் குறிப்பிட்டு மனு செய்துள்ளனர். அதாவது ஒரு மின்மாற்றி கொள்முதலுக்கு போட்டியிட்ட அத்தனை பேரும் 7 லட்சத்து 51 ஆயிரத்து 660 ரூபாயை ஒரே மாதிரியாக குறிப்பிட்டு விண்ணப்பித்துள்ளனர். வழக்கமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொகையை குறிப்பிட்டு விண்ணப்பம் செய்வதே பழக்கமாகவும் வழக்கமாகவும் இருந்து வரும் நிலையில், போட்டியாளர்கள் அனைவரும் இந்த முறை ஒரே மாதிரியான தொகையை குறிப்பிட்டு விண்ணப்பம் செய்திருந்தது செந்தில்பாலாஜியின் திட்டமிட்ட செட்டிங் என்கிறது அறப்போர் இயக்கம்.
4 லட்ச ரூபாய் டிரான்ஸ்ஃபார்மரை 7 லட்சத்திற்கு கொள்முதல் செய்த செந்தில்பாலாஜி
விண்ணப்பத்தின் அடிப்படையில் அதில் ஒரு நிறுவனம் செந்தில்பாலாஜியால் தேர்வு செய்யப்பட்டு, ஒரு மின்மாற்றியை கொள்முதல் செய்ய 7 லட்சத்து 29 ஆயிரம் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், அந்த மின்மாற்றியின் சந்தை விலை என்னவோ 4 லட்சத்து 20 ஆயிரம் மட்டுமே. ஆக, ஒரு டிரான்ஸ்பார்மரை கொள்முதல் செய்வதில் மட்டுமே கிட்டத்தட்ட 3 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. டிரான்ஸ்பார்மரின் பவரின் அடிப்படையில் கோரப்பட்ட வெவ்வேறு டெண்டர்களிலும் அச்சடித்த மாதிரி ஒரே விலையை அத்தனை போட்டியாளர்களும் விண்ணப்பித்து கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் மட்டுமே செந்தில்பாலாஜி ஊழல் செய்திருப்பதாக அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த புதிய வழக்கை சிபிஐ பதிவு செய்திருக்கிறது.
வலுவான ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் வெளிக் கொண்டு வந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தின் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் புகாரின் அடிப்படையில், டெண்டர் அதிகாரிகள் மீது CBI இன்று FIR பதிவு செய்துள்ளது.
— Jayaram Venkatesan (@JayaramArappor) June 8, 2026
இந்த ஊழலில் முன்னாள் திமுக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் இதில்… pic.twitter.com/D4UFAsQ8Kd
சிக்கலில் மீண்டும் செந்தில்பாலாஜி
இந்த வழக்கில் விரைவில் சிபிஐ செந்தில்பாலாஜிக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடவிருக்கிறது. அதோடு, மின்சாரத்துறையில் மின்மாற்றி விவகாரம் மட்டுமின்றி வேறு எந்தெந்த வகையில் செந்தில்பாலாஜி ஊழல் செய்திருக்கிறார் என்பதையும் சிபிஐ தனியாக விசாரிக்க திட்டமிட்டிருக்கிறது. இதனால், செந்தில்பாலாஜிக்கு மீண்டும் சிக்கல் எழுந்திருக்கிறது. விசாரணைக்கு சிபிஐ அழைக்கும் நேரத்தில் அவர் கைது செய்யப்படக் கூட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
Before You Go
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
ட்ரெண்டிங் செய்திகள்






















