VCK Thiruma: 25 வருட காத்திருப்பு..! புறக்கணித்த (அ)திமுக - விசிகவை அமைச்சரவையில் இணைத்த CM விஜய்
VCK Thiruma TN Cabinet: விசிக சார்பில் வன்னியரசு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இணைய உள்ளதாக, திருமாவளவன் அறிவித்துள்ளார்.

VCK Thiruma TN Cabinet: தமிழ்நாடு அமைச்சரவை வரலாற்றில் முதன்முறையாக விசிக அங்கம் வகிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் அமைச்சரவையில் விசிக:
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விசிகவும் இடம்பெற வேண்டும் என, ஆளுங்கட்சியான தவெக சார்பில் வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனையில் திருமாவளன ஈடுபட்டார். அதன் முடிவில் பெரும்பாலான நிர்வாகிகளின் விருப்பத்தின் பேரில், தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற உள்ளதாக திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி, அக்கட்சி சார்பில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வான நிலையில், வன்னியரசு அமைச்சரவையில் இடம்பெறுவார் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம், தமிழ்நாடு அமைச்சரவை வரலாற்றில் முதன்முறையாக விசிக அங்கம் வகிக்க உள்ளது. தொடர்ந்து, நாளை நடைபெறும் என கூறப்படும் பதவியேற்பு விழாவில், அமைச்சரவையில் காலியாக உள்ள ஆதிதிராவிடர் நலன்துறை விசிகவிற்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
25 வருட காத்திருப்பு முடிந்தது..
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது விசிகவின் முழக்கமாக உள்ளது. ஆனால், கடந்த 2001ம் ஆண்டு சட்டமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றாலும் இதுவரை ஒருமுறை கூட விசிகவால் அமைச்சரவையில் இடம்பெற முடியவில்லை. திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் கூட்டணியில் மாறி மாறி அங்கம் வகித்தாலும், அமைச்சரவையில்கூட்டணி கட்சிகளுக்கான அங்கீகாரம் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தவெகவின் முதல் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்களிக்கப்படும் என அறிவித்தார். அப்போது அதனை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் அதனை உண்மையாக்கி தவெக உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி, ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடமளிப்பதை விஜய் உறுதி செய்துள்ளார்.
நாளை 2 அமைச்சர்கள் பதவியேற்பு:
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் கடந்த 10ம் தேதி 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். தொடர்ந்து இன்று தவெக தரப்பில் இருந்து 21 பேர், காங்கிரஸ் சார்பில் 2 பேர் என மொத்தம் 23 அமைச்சர்கள் புதியதாக பதவியேற்றனர். இதன் மூலம் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது. இந்நிலையில் விசிக சார்பில் வன்னியரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ஷாஜகான் ஆகியோர் நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்பார்கள் என கூறப்படுகிறது. அவர்களுக்கு முறையே ஆதிதிராவிடர் நலன் மற்றும் சிறுபான்மை நலன் இலாகாக்கள் ஒதுக்கப்பட உள்ளன. இதன் மூலம் தமிழ்நாடு அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர உள்ளது. மேலும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பட்டியலினத்தவரின் எண்ணிக்கை 8 ஆக உயர உள்ளது.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்






















