CM Vijay: நாளை டெல்லி செல்கிறார் சிஎம் விஜய் - மேகதாது டூ கல்வி நிதி - நீளும் பட்டியல், தீர்வு கிடைக்குமா?
CM Vijay: தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்திக்க, விஜய் நாளை டெல்லி செல்ல உள்ளார்.

CM Vijay: டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய் அங்கு புதியதாக நிறுவப்பட்டுள்ள பாரதியார் சிலையை திறந்து வைக்க உள்ளார்.
நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார். புதியதாக அமையும் மாநில அரசு டெல்லிக்கு சென்று, பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து மாநில அரசின் கோரிக்கைகளை வலியுறுத்துவதும், இணைந்து செயல்பட தயாராக இருப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நாளை டெல்லி செல்லும் விஜய், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, பல்வேறு மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்க உள்ளாரா. இதுபோக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் நிதியுதவியுடன் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையும் திறக்கப்பட உள்ளது. குறைந்தது இரண்டு நாட்கள் இந்த பயணம் நீடிக்குமாம்.
நேரம் ஒதுக்கீடு..
நாளை காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து முதலமைச்சர் விஜய் டெல்லி செல்கிறார். தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நீளும் கோரிக்கை பட்டியல்:
பிரதமர் மோடியை சந்திக்க உள்ள முதலமைச்சர் விஜய் மாநில உரிமைகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை எழுப்ப உள்ளாராம். அதில் நீண்ட நாட்களாக உள்ள கல்வி நிதி, மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், நிதி விடுவிப்பு தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட வாய்ப்புள்ளதாம். ஜி.எஸ்.டி. பங்கீட்டை தாமதமின்றி விரைந்து வழங்குவது, மத்திய மாநில அரசுகள் இணைந்து முன்னெடுக்கும் திட்டங்களுக்கான நிதியை வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது. இதுபோக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுப்பது குறித்தும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரையும் சந்திக்க வாய்ப்புள்ளதாம்.
காங்கிரஸ் தலைவர்கள் உடன் சந்திப்பு
மத்திய அரசு தரப்பினர் உடனான சந்திப்பை தொடர்ந்து,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கார்கே உள்ளிட்டோரையும் சந்திக்க உள்ளார். சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தவெக -காங்கிரஸ் இடையே கூட்டணி அமைந்தது. இது உள்ளாட்சி, நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களவை தேர்தலிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நடைபெற உள்ள இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதன் பிறகு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் நிதியுதவியுடன் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையும் திறக்கப்பட உள்ளது. இதற்காக நாளை காலை டெல்லி செல்ல உள்ள முதலமைச்சர் விஜயின் பயணத்திற்கான ஏற்பாடுகளை உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னெடுத்து கவனித்து வருகின்றனர்.
Before You Go
Iran US War: அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்! குறையும் பெட்ரோல் டீசல் விலை?ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
ட்ரெண்டிங் செய்திகள்























