தமிழ்நாட்டிற்கு எப்போது தேர்தல்? - எந்த தேதியில் நடக்கும்? பாஜக தலைவர் சொன்ன முக்கிய தகவல்
Tamil Nadu Assembly Election 2026: தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தகவல்
தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் வாரத்திலேயே சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால் நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் என்று பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் பாஜக அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் நிர்வாகிகளுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல்
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் 65 நாட்கள்தான் இருப்பதாகவும், ஏப்ரல் 15ஆம் தேதி அளவில் தமிழகத்திற்கு தேர்தல் நடைபெறக்கூடும் என்றும் கூறினார். மேலும், தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற்றாலும் தயாராக வேண்டும் என்று கூறிய அவர், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று நிர்வாகிகள் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் வாரத்திலேயே
— ABP Nadu (@abpnadu) February 9, 2026
பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதால் நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் - பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் #BJP #TamilNadu #Election2026 #abpnadu pic.twitter.com/A0fyC6kj7k
சீனியர் லீடர்களுக்கும் அறிவுறுத்தல்
சீனியர் லீடர்கள் தங்களை மட்டுமே முதன்மைப்படுத்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும். சீனியர் லீடர்கள் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பதிலேயே கவனம் செலுத்தக் கூடாது. தொகுதிகளுக்கு செல்லும்பொழுது சீனியர் லீடர்கள் அந்த தொகுதி சார்ந்தவர்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அண்ணாமலை குறித்து விவாதிக்க வேண்டாம்
தொகுதி பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகியது பற்றி கூட்டத்தில் விவாதிக்க வேண்டாம் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்திய பி.எல்.சந்தோஷ், எதிர்பார்த்ததை விட அதிக தொகுதிகள் கிடைக்கும்; அதிமுகவிடம் 20% தொகுதிகளை கேட்டுப்பெறலாம் என்றும் தெரிவித்தார்.























