நெல்லை என் ஜி ஓ காலனியில் பாஜக சார்பில் மாநில அளவிலான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு கூட்டம் பாஜகவின் மூத்த நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், "என் மண் என் மக்கள் யாத்திரை தென் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கிராமங்களிலெல்லாம் எழுச்சியை பார்க்க முடிகிறது. கடை கோடியான கிராமம் வரை மத்திய அரசின் திட்டம் சேர்ந்துள்ளது. இதன் மூலம் மக்களின் வாழ்க்கை மாறியுள்ளது. இதை கண்கூடாக பார்க்க முடிவது தான் யாத்திரையின் மிகப்பெரிய விசேசம். முதற்கட்ட பயணம் இன்றைய தினம் நெல்லை சட்டமன்ற தொகுதியோடு நிறைவு பெறுகிறது. இரண்டாம் கட்ட பயணம் அடுத்த மூன்றாம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடக்கிறது. அந்த பயணத்தில் 36 தொகுதிகளை உள்ளடக்கி யாத்திரை அமைந்திருக்கிறது. 234 தொகுதி 5 கட்டமாக பயணம் வடிவமைக்கப்பட்டு ஜனவரி பதினொன்றாம் தேதி நிறைவு பெறுகிறது. முதல் பகுதி 9 கிலோமீட்டர் தூரம் திட்டமிடப்பட்டது. அடுத்த கட்டமாக நடைபெறும் பயணத்தில் 12 கிலோமீட்டர் தூரம் என மாற்றப்பட்டு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார். 


தொடர்ந்து பேசிய அவர், "திமுக ஆட்சி அமைந்த பிறகு இ பாக்ஸ் லேர்னிங் திட்டத்தை நிறுத்தினார்கள். நீட் பற்றி போலியான கட்டமைப்பை இன்னும் ஆக்ரோசமாக திமுக பேசி வருகிறது. 2021ம் ஆண்டை விட நீட் தேர்வு இந்த ஆண்டு சிறப்பாக மாணவர்களால் எழுதப்பட்டுள்ளது. திமுக, தனது காழ்ப்புணர்ச்சியில் கட்சி கொள்கைகளை அரசு திட்டங்களிலும் திணித்து வருகிறது. இது வருந்தத்தக்க செயல். நீட்டை வைத்து அரசியல் செய்து வரும் திமுக தற்போது இடியாப்ப சிக்கலில் சிக்கி உள்ளது. திமுகவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு சாதாரண மக்கள் யாரும் செல்லவில்லை ஆளுங்கட்சி மாநில அளவில் நடத்தும் போராட்டம் என்றால் மாநிலமே ஸ்தம்பித்திருக்க வேண்டும். மக்கள் அந்தப் போராட்டத்தை புறக்கணித்து விட்டனர். உதயநிதி  ஸ்டாலின் சொல்கிறார், ஆளுநர் பதவியை துறந்து விட்டு ஆர் என் ரவி எங்களோடு தேர்தலில் போட்டியிடட்டும் என்று.  இதே நான் சொல்கிறேன் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பதவியை துறந்துவிட்டு யுபிஎஸ்இ பிரிலிம்ஸ் இல் பாஸ் செய்யட்டும் அண்ணாமலை அரசியலை விட்டே போய் விடுகிறேன். இல்லையென்றால் ஒரு சாதாரணமாக குரூப் 4 பாஸ் செய்யட்டும் பார்ப்போம். ஆளுநரிடம் அமைச்சராக அரசியலமைப்புச் சட்டத்தின் படி உறுதிமொழி எடுத்துக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் மெச்சூரிட்டி இல்லாமல் பேசுகிறார். அரசியல் அமைப்பு சட்டப்படி நீட் விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது, அதில் பல நடைமுறை சிக்கல் உள்ளது. அனைத்து மாநிலத்தையும் ஒப்பிடும்போது தமிழகத்தில் நீட் தேர்வில் மாணவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்.


நீட் தேர்வு தொடர்பாக திமுக செய்யும் செயல் போகாத ஊருக்கு வழி தேடும் செயல்.  எனது அன்பான வேண்டுகோள் திமுகவின் மூத்த  தலைவர்கள் உதய நிதி ஸ்டாலினுக்கு பாடம் எடுக்க வேண்டும்.  அரசியலமைப்பு சட்டம் என்ன  என்பது போன்று பாடம் எடுக்க வேண்டும். தமிழகத்தின் அரசியல் நிலை மாறி வருகிறது. இந்த முறை தமிழகத்தின் அரசியல் நிலை என்பதே வேறு திமுகவின் 36 மாத ஆட்சியும், பாஜகவின் 9 ஆண்டு ஆட்சியும் மக்கள் தராசு தட்டில் வைத்து பார்த்து ஒரு முடிவெடுப்பார்கள். சிஏஜி அறிக்கையில் ஊழல் இருப்பதாக சொல்லவில்லை செலவினங்கள் அதிகரித்திருப்பதாக தான் சொல்லி இருக்கிறார்கள், அதை வைத்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறது.. ரஜினி யோகி காலில் விழுகிறார் என்றால் என்ன தவறு. உன்னை மதிக்கின்றேன். ஆன்மீகத்தை போற்றுகிறேன் என்பதனால் அவர் காலில் விழுந்து வணங்கி அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார், இதற்கு ரஜினியும் விளக்கம் கொடுத்துள்ளார், இதில் வேலையில்லாத சில அரசியல் கட்சிகள் வேலையில்லாத சில தலைவர்கள் தொட்டதெல்லாம் குற்றம் என்றால் அதற்கு முடிவு தான் என்ன?" என்றார்.