Premalatha vs Vijay : முகத்தை மூடிக்கொண்டு முதல்வர் வீட்டிற்கு வந்தவர் யார்.? விஜய்யை விடாமல் மீண்டும் துரத்தும் பிரேமலதா
Premalatha vs Vijay : அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்களும் தங்களின் ஆதரவை எந்த நிபந்தனையும் இல்லாமல் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போது தான் குதிரைப் பேரம் நடைபெறவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தவெக ஆட்சி
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை இழந்துள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைத்துள்ளது. முன்னதாக தவெக ஆட்சி அமைக்க பெரும்மான்மைக்கு தேவையான இடங்களை பெற முடியாத நிலை உருவானது. இதனையடுத்து திமுக கூட்டணி கட்சிகளா இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் உதவியோடு ஆட்சி அமைத்தது.
மேலும் அதிமுக- பாஜக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில் தவெக ஆட்சி அமைப்பதற்காக குதிரை பேரம் நடைபெற்றதாகவும், முதலமைச்சர் விஜய் வீட்டிற்கு முகத்தை மறைத்துக்கொண்டு காரில் சென்ற நபர் யார் என சட்டமன்றத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கேள்வி எழுப்பியிருந்தார்.
தவெக ஆட்சியில் குதிரை பேரம்.?
ஆனால் முதலமைச்சர் விஜய், குதிரை பேரம் நடைபெறவில்லையெனவும், இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைமுக அரசியல் அல்ல, வெளிப்படையான ஆதரவே மக்களின் நம்பிக்கை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழக அரசில் எந்தவித குதிரைப் பேர அரசியலும் இல்லை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி சேர்ந்தவர்கள் எவ்வாறு நிபந்தனை இல்லாத ஆதரவு' என்று வெளிப்படையாக தெரிவித்தார்களோ, அதேபோல் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்களும் தங்களின் ஆதரவை எந்த நிபந்தனையும் இல்லாமல் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
முகத்தை மூடி வந்தவர் யார்.?
அப்போது தான் குதிரைப் பேரம் நடைபெறவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள். மேலும், 'முகத்தை மூடிக்கொண்டு வந்தவர் யார்? என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்துவதோடு, அதற்கு பின்பு எந்தவிதமான குதிரை பேரமும் ' நடக்கவில்லை என்பதையும் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் பிரேமலதா குறிப்பிட்டுள்ளார்.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்





















