ராஜ குருவிற்கு அரசு பதவி ஏன்.? சட்டசபையில் குதிரை பேரம்- விஜய் அரசுக்கு எதிராக சீறிய பிரேமலதா
Chief Minister Vijay's astrologer Radhan Pandit : யாரும் முகத்தை மூடி செல்ல வேண்டிய அவசியம் இல்லையென என முதலமைச்சர் விஜய் கூறினார். ஆனால் முதலமைச்சரை சந்திக்க யார் முகத்தை மூடிக்கொண்டு சென்றார் என்பதை முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என பிரேமலதா கேட்டுக்கொண்டுள்ளார்.

விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு
தமிழக சட்டடமன்றத்தில் இன்று தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான தீர்மானத்தை கொண்டு வந்தார். இதனையடுத்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பேசினர். இதில் தேமுதிக சார்பாக பேசிய பிரேமலதா விஜயகாந்த், கோயில்கள், பள்ளி வளாகங்களில் இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டுள்ளது. பெண்கள் பாதுக்காப்பு நடவடிக்கை இதையெல்லாம் வரவேற்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வெளிப்படையான ஆட்சியாக இருக்கும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.
முகத்தை மூடி சென்றது யார்.?
வரலாற்று சிறப்பு மிக்க இந்த அவையில் முதல் முறையாக மன வேதனையாக சொல்கிறேன். குதிரை பேரம் நடந்ததாக எதிர்கட்சிகள் சொல்லும் போது, இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் நடக்காத விஷயம் ஏற்பட்டது மன வேதனை அடைகிறேன். இங்கு யாரும் முகத்தை மூடி செல்ல வேண்டிய அவசியம் இல்லையென என முதலமைச்சர் கூறினார். ஆனால் முதலமைச்சரை சந்திக்க யார் முகத்தை மூடிக்கொண்டு சென்றார் என்பதை முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும். அதற்கு காரணம் குதிரை பேரம் என்றால் அதற்கு மேல் தலைக்குனிவு இல்லை. முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்
ஜோதிடருக்கு அரசு பதவியா.?
தொடர்ந்து பேசிய பிரேமலதா, அரச குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லையென என்று முதலமைச்சர் சொன்ன போது அனைவரும் வரவேற்றனர். ஆனால் இன்று அவருடைய ராஜகுருவாக உள்ளவரை ரத்தன் பண்டிட் அரசு சிறப்பு அதிகாரியாக அரசு வேலையாக நியமித்ததை வண்மையாக கண்டிக்கிறேன். ராஜ குருவாக இருந்தால் தனிப்பட்ட முறையில் வைத்து கொள்ளுங்கள். அரசு உயர் பதவியில் கொண்டு வந்ததை இளைஞர்கள் உங்களை நம்பி வாக்களித்துள்ளார்கள். இளைஞர்களுக்கும், எதிர்காலத்தில் நிச்சயம் தெளிவுபடுத்தவேண்டும்.
ஜனநாயகத்தை நம்பி இளைஞர் கையில் ஆட்சியை கொடுத்துள்ளார்கள். வரும் காலத்திற்கும், இளைஞர்களுக்கும் உதாரணமாக இருக்க வேண்டும். இந்த ஆட்சி மக்களுக்கு மக்களுக்கான நேர்மையான ஆட்சியாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்த ஆட்சி நல்ல ஆட்சியாக இருக்க வேண்டும் என பிரேமலதா தெரிவித்தார்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















