மேலும் அறிய
திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்க உரிமை உள்ளது - அண்ணாமலை கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு பதில்.

நிர்மல் குமார்
Source : whatsapp
திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் கடந்த 2 முதல் 10 வருடத்திற்கு முன்பாக எந்த சூழல் உள்ளதோ அதையேதான் தொடர வேண்டும் அரசின் கொள்கை இதில் எந்த மாற்றும் கருத்தும் கிடையாது - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி.
விதிமீறுபவர்கள் மீது கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்படும்.
மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது...," மதுரை மாநகராட்சி பகுதிகளில் சில இடங்களில் கழிவுநீரை வெளியேற்றுவதற்கான தற்காலிக திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினோம். மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து மாவட்ட ஆட்சியரும், ஆணையாளரும் இணைந்து மதீப்பீடு செய்யும் பணிகளையும் செய்து அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியில் எவ்வளவு பெரிய முறைகேடு அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து மதிப்பீடு செய்து மாவட்ட ஆட்சியரும் ஆணையாளர் இணைந்து தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும். மாநகராட்சியில் எங்கெங்கு தவறு இழைக்கப்பட்டது என கண்டறிந்து அதற்கான வழக்குகளும் பதிவு செய்யப்படும். அனைத்து இடத்திலும் ஊழல்கள் எங்கு இருக்கிறதோ அதனை விரைவில் அடையாளம் கண்டுபிடித்து அனைத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டு யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அடைக்கப்பட்ட டாஸ்மார்க் கடைகளில் பார்கள் சட்டவிரோதமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - விதிமீறுபவர்கள் மீது கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்படும்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்த கேள்விக்கு?
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தெளிவாக கூறியிருக்கிறோம் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் ; இரண்டு வருடத்திற்கு முன்பாக எந்த சூழல் உள்ளது அதையே தான் தொடர வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். மக்கள் அமைதியைத்தான் விரும்புகிறார்கள் ; இதுதான் அரசின் கொள்கையும் எந்த மாற்றும் கருத்தும் கிடையாது. பெரும்பாலான மக்கள் இரண்டு 2 வருஷத்துக்கு முன்பாக என்ன இருந்தததோ அமைதியான சூழல்தான் வேண்டும் என நினைக்கிறார்கள் அதுவே தொடர வேண்டும் என அரசு நினைக்கிறது. இதைதான் இரண்டு வருஷத்துக்கு பத்து வருஷத்துக்கு முன்பாக சூழல் இருந்ததோ அதே நிலை தொடர வேண்டும் அனைவரும் நினைக்கிறோம். எந்த மதவாத சக்திகளும் உள்ளே வந்து அரசியல் செய்ய 100% அனுமதிக்க மாட்டோம்.
முதலமைச்சர் ஏன் செய்தியாளர்களை சந்திக்க மறுப்பது ஏன்
செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என நடைமுறையே கிடையாது. சொந்த விளம்பரத்திற்காக இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக கடந்தகாலங்களில் தினசரி செய்தியாளர்களை சந்தித்து வந்தார்கள். எங்கள் முதல்வர் மக்களை தினசரி சந்திக்கிறார். செய்தியாளர்களை சந்தித்ததால் அரசியல் நடத்த வேண்டும் என்று இல்லை. மக்களுக்கு என்னென்ன தெளிவு படுத்த வேண்டுமோ அதனை அந்தந்த காலத்தில் தெளிவுபடுத்தி வருகிறார். செய்தியாளர்களுக்கு மக்களுக்கு என்ன தெரிவிக்க வேண்டுமோ அதனை தெரிவித்து வருகிறோம். நாங்கள் யாரும் புறந்தள்ளவில்லை குறைத்து சொல்லவில்லை. செய்தியாளர்களை சந்தித்ததில் இருக்கணும் என்று அடையாளத்தை நீங்களாக ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டீர்கள்.
ஹார்ட் டிஸ்க் திருட்டு தொடர்பான கேள்விக்கு
ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகரத்தில் கண்டிப்பாக விசாரணை நல்லபடியாக முடிய வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறோம். தெளிவாக முடிய வேண்டும் என்னென்ன டேட்டாக்கள் காணாமல் போய்விட்டது. அதற்கான கணக்கீடுகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் காவல்துறை முழு அளவில் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முதல்வர் அதனை தினந்தோறும் கண்காணித்துவருகிறார். என்ன மாதிரியான டேட்டா திருடியிருக்கிறார்கள் என ஃபாலோ போன்றே எந்த இடத்தில் யாரையும் தப்பிக்க விடக்கூடாது ஹார்ட் டிஸ்க் கிடைத்தால் அதனை டேட்டாவை ரெக்கவரி செய்யும் பிராசஸ் நடந்து கொண்டிருக்கிறது எந்த டேட்ட காணாமல் போனது என்பது குறித்து அறிவிப்போம். உதஹார்ட் டிஸ்க் திருடு போச்சு என்றவுடன் யாரும் பேசாமல் இருக்கும் போது உத்தமர் செந்தில் பாலாஜி மற்றும் டக்குனு ஏன் வந்தார் என தெரியவில்லை. செந்தில் பாலாஜி திருடினார் என யாராவது சொன்னார்களா செந்தில் பாலாஜி சொல்லி தான் நடந்தது என யாராவது சொன்னார்களா. காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள் தான் என கூறினேன் உடனடியாக செந்தில் பாலாஜி திசை ஏன் ஆஜர் ஆனார் தெரியவில்லை உத்தமர் செந்தில் பாலாஜிக்கு என்ன நடந்துச்சு என்ன விசாரணை முடியட்டும் விசாரணை முடிந்த பிறகு தெரியும்
செந்தில் பாலாஜி ஆஜராவது எல்லாருக்கும் சந்தேகம் வருகிறது. திடீர்னு ஏன் செந்தில் பாலாஜி இந்த விவகாரத்தில் ஆஜராகி சொல்கிறார் என தெரியவில்லை. செந்தில் பாலாஜி ஏன் பிரஸ்மீட்டில் பேச வேண்டிய கட்டாயம் என்ன பயம் அவருக்கு? ஹார்ட் டிஸ்க் தொலைந்தவுடன் முதல் நாளாக செந்தில் பாலாஜி ஏன் இதை தொடர்பாக பேச வேண்டியது உள்ளது.
இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பீர்களா? என்ற கேள்விக்கு
அது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்
அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கிய தொடர்பான கேள்விக்கு ?
யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். அதற்கான முழு சுதந்திரம் உள்ளது. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் அதற்கு100% இடம் இருக்குது சுதந்திரம் இருக்கிறது
த.வெ.க கட்சியில் அனைத்து ஒத்துழைப்பும் உள்ளதா?
அனைவரது முதல் முழு ஒத்துழைப்பு உள்ளது அனைவரும் இணைந்து தான் செயல்படுகிறோம். அனைவரும் ஒரே கட்சியாக ஒன்றாக தான் செயல்படுகிறோம். அமைச்சர்களும் அனைத்து அமைச்சர்களும் கலந்தாலோசித்து சேர்ந்து தான் முழு அளவிலான வித்தியாசமான அரசாக அமைச்சரவையாக இருக்கும். இப்படி ஒரு அரசாங்கம் இப்படி ஒரு அமைச்சரவை இப்படி யாரும் பார்த்ததில்லை என மக்கள் வித்தியாசமான நிர்வாகத்தை பார்ப்பீர்கள்.
Before You Go
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















