தவெகவில் செங்கோட்டையன்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 முதல் 4 மாத காலமே உள்ள நிலையில், தேர்தலுக்கான பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு நிர்வாகிகளை இழுத்து வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் மூத்த நிர்வாகியாக இருந்த செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், திமுக அல்லது பாஜகவில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் ட்விஸ்ட்டாக நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்து அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளார் செங்கோட்டையன்,

Continues below advertisement

இந்த நிலையில் தவெகவில் செங்கோட்டையன் இணைந்திருப்பது பாஜகவின் அசைன்மென்ட் என தமிழக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு  அமைச்சர் ரகுபதி மோதிரம் வழங்கினார். 

பாஜகவின் ஸ்லீப்பர் செல் செங்கோட்டையன்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாரை வைத்தும் யாரும் எந்த அரசியலும் செய்தாலும் மக்களுக்கு செய்கின்ற களப்பணி இதுதான் மக்கள் மனதில் நிற்கும். தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த நாலரை ஆண்டு காலமாக செய்கின்ற களப்பணிகள் திமுக கூட்டணி வெற்றிக்குத் துணை நிற்கும் என தெரிவித்தார்.  திமுகவும் அதிமுகவும் இணைந்து தான் செயல்படுகிறார்கள் என செங்கோட்டையன் கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், நேற்று வரை செங்கோட்டையனுக்கு புத்தி எங்கே போனது என கேள்வி எழுப்பினார். தற்போதும் தமிழகத்தில் புனிதமான ஆட்சி தான் நடைபெறுகிறது.எதிர்காலத்திலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் புனிதமான ஆட்சி தான் நடைபெறும். செங்கோட்டையன் பாஜக உடைய ஸ்லீப்பர் செல்லாக பார்க்கிறேன். அது உண்மையா இல்லையா என்பது மிக விரைவில் தெரியவரும் என கூறினார். 

Continues below advertisement

அமித்ஷா அழைப்பிற்காக காத்திருக்கும் செங்கோட்டையன்

பாஜக செங்கோட்டையனை ஏமாற்றி இருந்தால் தவெகவிக்கு சென்றிருக்க மாட்டார் அவர் பாஜகவின் ஸ்லீப்பர்செல். அமித்ஷா அழைக்க மாட்டாரா என்று இன்றைக்கும் காத்துக் கொண்டிருப்பவர். தவெகவை பாஜகவுக்கு இழுத்துக் கொண்டு வருவதற்காகத்தான் அந்த அசைன்மென்டிற்கு தான் செங்கோட்டையன் அனுப்பப்பட்டிருக்கிறார் என்பதுதான் எங்களுடைய கருத்தாக உள்ளதாக தெரிவித்தார். திமுகவில் இணைய செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், யாருமே ஒரு கட்சியில் இருந்து வெளிவரும் பொழுது அவர்களை மற்றொரு கட்சிக்கு அழைப்பது இயற்கை. எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்கின்ற முடிவுக்கு வந்த பிறகு அமைச்சர் சேகர்பாபு நட்புரீதியில் கூட அழைத்து இருக்கலாம். அவர் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக இருப்பதால்தான் அவர் திமுகவிற்கு வரவில்லை என கூறினார்.

 

பல குழப்பங்களை செய்த செங்கோட்டையன்

அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி  செங்கோட்டையனை வெறுத்து தான் விரட்டிவிட்டார். அவருக்கும் செங்கோட்டையனுக்கும் நல்ல புரிதல் கிடையாது. அதே நேரத்தில் பாஜக வோடு செங்கோட்டையனுக்கு நல்ல புரிதல் உள்ளது. எந்த பொறுப்பிலும் இல்லாமல் அமித்ஷாவை போய் டெல்லியில் சந்தித்து விட்டு அதற்குப் பிறகு அவர் ஒரு முடிவு எடுக்கிறார். ஓபிஎஸ், தினகரன் , சசிகலாவை செங்கோட்டையன் சந்திக்கிறார். இப்படி பல்வேறு குழப்பங்களை எல்லாம் செய்துவிட்டு கடைசியாக பாஜகவுடைய ஸ்லீப்பர் செல்லாக  தவெகவுடன் சென்று இருக்கிறார் என ரகுபதி விமர்சித்துள்ளார்.