என்ன மேடையில் யாரையுமே காணோம் அப்செட் ஆன அமைச்சர் நிர்மல்குமார் - மேடையில் கூட அமராமல் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு.

 
மலர் வெளியீட்டு விழா
 
மதுரை அரசு ஆய்வக நுட்புனர் சங்கம் சார்பில் வெள்ளி விழா ஆண்டு மலர் வெளியீட்டு விழா மதுரை மருத்துவகல்லூரி ஹாலில் காலை 10 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் மற்றும்  சட்டமன்ற உறுப்பினர்கள் கல்லாணை மற்றும் கோபிசன் ஆகியோர் பங்கேற்பதாக அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருந்தது. காலை 10:00 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் நிர்மல்குமாருக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்க இருந்ததால் காலை  9.50 மணிக்கு அமைச்சர் நிர்மல் குமார் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்தார்.
 
யாருமே இல்லாததை பார்த்து அப்செட் ஆகினார்
 
10 நிமிடத்திற்கு முன்னதாகவே வருகை தந்த நிலையில் எம்எல்ஏக்களும், சங்க நிர்வாகிகளும் வருகை தராத நிலையில் தவெக கட்சி பாடல்கள் பிண்ணனியில் ஒலித்தபடி வேகவேகமாக நடந்துவந்து மேடையில் ஏறிய அடுத்தநொடியே அங்கு யாருமே இல்லாததை பார்த்து அப்செட் ஆகினார். இதனால் இருக்கையில் கூட அமராமல் நின்றுகொண்டிருந்த அமைச்சரிடம் சில நிமிடங்களில் MLA உள்ளிட்ட அனைவரும் வந்துவிடுவர் என விழா ஏற்பாட்டாளர்கள் கூறியதால் மீண்டும் அப்செட் ஆன அமைச்சர் கட்சி நிர்வாகிகளிடம் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் உள்ளது புறப்படுவோமா என கூறியபடி  நிகழ்ச்சியில் மேடைக்கு கீழ் இருக்கையில் அமர்ந்தவர்களுக்கு கைகொடுத்து வணங்கிவிட்டு அவசர அவசரமாக புறப்பட்டுசென்றார்.
 
குத்துவிளக்கு கூட ஏற்றாமல் புறப்பட்டதால் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அதிருப்தியடைந்தனர்.
 
மேடைக்கு வந்த அமைச்சர் நிர்மல்குமார் மேடையில் கூட அமராமல் குத்துவிளக்கு கூட ஏற்றாமல் புறப்பட்டதால் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அதிருப்தியடைந்தனர். அமைச்சர் நிர்மல்குமாருக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்த நிலையில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு தாமதமாகும் என்பதால் அமைச்சர் விழா ஏற்பாட்டளர்களிடம் சொல்லிவிட்டு புறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.