மேலும் அறிய

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தானும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற பெரும் கனவில் இருந்தார் - வி.ஜி.கே. செந்தில்நாதன்

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகக்கூடாது என ஓ.எஸ். மணியன் சதி செய்வதாகக் கூறி முன்னாள் மாவட்ட செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் டெல்டாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்ட அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று மாவட்ட அவைத்தலைவர் பி.வி. பாரதி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று முன்னாள் மாவட்ட செயலாளரும், தற்போதைய குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளருமான வி.ஜி.கே. செந்தில்நாதன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தொடரும் ராஜினாமாக்கள் அதிர்ச்சியில் தலைமை

மயிலாடுதுறை மாவட்ட அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே அதிருப்தி அலை வீசி வருகிறது. நேற்று மாவட்ட அவைத்தலைவர் பி.வி. பாரதி தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தது கட்சித் தலைமைக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி விலகும் முன்பே, இன்று மாவட்டத்தின் முக்கிய முகங்களில் ஒருவரான வி.ஜி.கே. செந்தில்நாதன் செய்தியாளர்களைச் சந்தித்து தனது அதிருப்தியைப் பதிவு செய்ததோடு, ஒன்றிய செயலாளர் பதவியையும் துறந்துள்ளார்.

35 ஆண்டு கால விசுவாசம் புறக்கணிப்பா?

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திற்கு உட்பட்ட வழுவூர் கிராமத்தைச் சேர்ந்த வி.ஜி.கே. செந்தில்நாதன், ஒரு பாரம்பரிய அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை 1972-ல் அதிமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே கட்சியில் விசுவாசமாகப் பணியாற்றியவர். தந்தையின் வழியில், தனது 18-வது வயதில் கிளைக் கழகச் செயலாளராகப் பயணத்தைத் தொடங்கிய செந்தில்நாதன், கடந்த 35 ஆண்டுகளாகக் கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

குறிப்பாக, 2021-ஆம் ஆண்டு மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டபோது, அதன் முதல் மாவட்ட செயலாளராகச் செந்தில்நாதன் நியமிக்கப்பட்டார். எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், வெறும் ஆறு மாதங்களில் அவர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களிடையே நீண்டகாலமாக ஆறாத வடுவாக இருந்து வந்தது.

முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் மீது சாடல்

செய்தியாளர் சந்திப்பில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிய செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் மற்றும் தற்போதைய மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

"35 ஆண்டுகாலமாக ரத்தமும் சதையுமாக அதிமுகவிற்காக உழைத்த எனக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் மற்றும் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஆகிய இருவரும் இணைந்து என்னைப் பழிவாங்கும் நோக்கத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்களின் தன்னிச்சையான போக்கினால் கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஓரங்கட்டப்பட்டு விட்டனர்."

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சதி?

மேலும், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையிலான ஒரு தகவலையும் அவர் பகிர்ந்தார். "முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தானும் ஒருமுறை முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற பெரும் கனவில் இருந்தார். அவரது எண்ணம் நிறைவேறாத நிலையில், தற்போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீண்டும் முதலமைச்சர் ஆகிவிடக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே டெல்டா மாவட்டங்களில் வேண்டுமென்றே தோல்வியடையக்கூடிய வேட்பாளர்களை அவர் தேர்வு செய்துள்ளார்" என்று அதிரடி புகாரை வாசித்தார்.

ராஜினாமா பின்னணி: கூட்டணி ஒதுக்கீடும் காரணமா?

மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, கட்சியில் தமக்குத் தொடர்ந்து அவமரியாதை இழைக்கப்பட்டதாகக் கூறி வந்த செந்தில்நாதனுக்கு, வரும் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர் (MLA) சீட்டு வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி மீண்டும் குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பதவி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மயிலாடுதுறை தொகுதி கூட்டணி கட்சியான பாமகவிற்கு ஒதுக்கப்பட்டது. இதனால் தமக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாலும், மாவட்ட நிர்வாகத்தின் அழுத்தங்களாலும் விரக்தியடைந்த அவர், தனது ராஜினாமா கடிதத்தைப் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தொண்டராகத் தொடர்வேன்

"அதிமுகவின் ரத்தம் உடம்பில் ஓடும் என்னைப் போன்றவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்காமல் அவமரியாதை செய்வதைப் பொதுச் செயலாளருக்குத் தெரியப்படுத்தவே இந்த ராஜினாமா முடிவை எடுத்துள்ளேன். பதவியில் இல்லாவிட்டாலும், கட்சியின் அடிப்படைத் தொண்டனாக இருந்து தொடர்ந்து உழைப்பேன்" என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வது தேர்தல் களத்தில் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். டெல்டா மாவட்டங்களில் நிலவும் இந்த உட்கட்சிப் பூசல், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பெரம்பூரில் பணப்பட்டுவாடாவா? நள்ளிரவில் நேரில் சென்ற பாமக வேட்பாளர் திலகபாமா - அடுத்து நடந்தது?
பெரம்பூரில் பணப்பட்டுவாடாவா? நள்ளிரவில் நேரில் சென்ற பாமக வேட்பாளர் திலகபாமா - அடுத்து நடந்தது?
Annamalai: திமுக ஆட்சியில் 39,999 போக்சோ வழக்குகள்! தரவுகளை ரிலீஸ் செய்த அண்ணாமலை!
Annamalai: திமுக ஆட்சியில் 39,999 போக்சோ வழக்குகள்! தரவுகளை ரிலீஸ் செய்த அண்ணாமலை!
Bihar New CM: நிதிஷ் கதை ஓவர்..! பீகாரின் புதிய முதலமைச்சர் யார்? குழாயடி சண்டையில் BJP டிக் அடித்தது யாரை?
Bihar New CM: நிதிஷ் கதை ஓவர்..! பீகாரின் புதிய முதலமைச்சர் யார்? குழாயடி சண்டையில் BJP டிக் அடித்தது யாரை?
TN Election: ஊட்டியில் மீண்டும் கைகட்ட விரும்பாத விஜய் - ரீல் அப்பாக்கள் அட்டாக் - 13 மார்க் போதுமா? என கேள்வி
TN Election: ஊட்டியில் மீண்டும் கைகட்ட விரும்பாத விஜய் - ரீல் அப்பாக்கள் அட்டாக் - 13 மார்க் போதுமா? என கேள்வி
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
Annamalai: திமுக ஆட்சியில் 39,999 போக்சோ வழக்குகள்! தரவுகளை ரிலீஸ் செய்த அண்ணாமலை!
Annamalai: திமுக ஆட்சியில் 39,999 போக்சோ வழக்குகள்! தரவுகளை ரிலீஸ் செய்த அண்ணாமலை!
Anbumani: திமுகவுக்கு வன்னியர்கள், பட்டியலினத்தவர், முஸ்லிம்கள் வெறும் வாக்கு வங்கி மட்டும்தான்; சாடிய அன்புமணி
Anbumani: திமுகவுக்கு வன்னியர்கள், பட்டியலினத்தவர், முஸ்லிம்கள் வெறும் வாக்கு வங்கி மட்டும்தான்; சாடிய அன்புமணி
பெரம்பூரில் பணப்பட்டுவாடாவா? நள்ளிரவில் நேரில் சென்ற பாமக வேட்பாளர் திலகபாமா - அடுத்து நடந்தது?
பெரம்பூரில் பணப்பட்டுவாடாவா? நள்ளிரவில் நேரில் சென்ற பாமக வேட்பாளர் திலகபாமா - அடுத்து நடந்தது?
Australia's 1st Woman Army Chief: அசத்தும் ஆஸ்திரேலியா.! முதல் பெண் ராணுவத் தளபதி நியமனம்; யார் இந்த சூசன் கோய்ல்.?
அசத்தும் ஆஸ்திரேலியா.! முதல் பெண் ராணுவத் தளபதி நியமனம்; யார் இந்த சூசன் கோய்ல்.?
GOLD SILVER RATE: தமிழ் புத்தாண்டு அன்று அதிர்ச்சி கொடுத்த தங்கம்; விலை இப்படி எகிறிடுச்சே.! வெள்ளியும் இப்படியா.?!
தமிழ் புத்தாண்டு அன்று அதிர்ச்சி கொடுத்த தங்கம்; விலை இப்படி எகிறிடுச்சே.! வெள்ளியும் இப்படியா.?!
IPL 2026: சிக்கி சின்னாபின்னமாகும் ஆண்டைகள் ? ஸ்டார் சிக்கல், இளசுகளின் டவுட்? MI, CSK ஏன் வொர்க் ஆகல?
IPL 2026: சிக்கி சின்னாபின்னமாகும் ஆண்டைகள் ? ஸ்டார் சிக்கல், இளசுகளின் டவுட்? MI, CSK ஏன் வொர்க் ஆகல?
Embed widget