மேலும் அறிய

1000 ரூபாய் கொடுக்க முடியாது என கூறிய எடப்பாடி பழனிசாமி 10 ஆயிரம் எப்படி கொடுப்பார்? - காங்கிரஸ் எம்.பி. கேள்வி.

ஆயிரம் ரூபாய் மகளிருக்குக் கொடுக்க முடியாது என்று சட்டமன்றத்தில் கூறிய எடப்பாடி பழனிச்சாமி, இப்போது 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என்று கூறுவது எப்படிச் சாத்தியம்? என எம்பி சுதா கேள்வி எழுப்பியுள்ளார்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பூத் அளவிலான பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பானு சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இந்தக் கூட்டத்தின் வாயிலாக வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. கூட்டத்தின் முடிவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய ஏராளமானோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அவர்களை எம்.பி. சுதா கட்சித் துண்டு அணிவித்து வரவேற்றார்.

சட்டமன்றத் தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணி

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, வரவிருக்கும் தேர்தல் குறித்தும் அரசியல் சூழல் குறித்தும் விரிவாகப் பேசினார். அவர் கூறுகையில்: "வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமை மற்றும் கூட்டணித் தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களின் வெற்றிக்காகக் காங்கிரஸ் தொண்டர்கள் அயராது பாடுபடுவார்கள். ஒருவேளை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிடும் பட்சத்தில், அவரது வெற்றியை உறுதி செய்ய இப்போதே பாக முகவர்கள் களப்பணிகளை முடுக்கிவிட வேண்டும்."

கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "கூட்டணி குறித்து ஊடகங்களில் பேசுவதற்குத் தலைமை தடை விதித்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளைத் தொண்டர்கள் நம்ப வேண்டாம். எத்தனை தொகுதிகள், யார் யாருடன் கூட்டணி என்பதை மாநிலத் தலைமையும், தேசியத் தலைமையும் மட்டுமே முடிவு செய்யும். அந்த முடிவுக்கு நாங்கள் முழுமையாகக் கட்டுப்படுவோம்," என்று தெளிவுபடுத்தினார்.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு

மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த எம்.பி. சுதா, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.

"இந்திய விவசாயிகளின் உரிமைகளை அமெரிக்காவிடம் அடகு வைத்தது குறித்தும், இந்திய எல்லைகளைச் சீனா ஆக்கிரமிப்பு செய்வது குறித்தும் ராகுல் காந்தி கேள்வி எழுப்ப முயன்றார். ஆனால், ஜனநாயகத்தின் குரலை நசுக்கும் வகையில் அவருக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும், காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் பிரதமரைத் தாக்க முயன்றதாகப் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது. நாங்கள் காந்தியின் வழிவந்தவர்கள், அகிம்சையைப் போற்றுபவர்கள். நாடாளுமன்ற சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பொதுமக்களிடம் ஒப்படைத்தால், யார் பொய் சொல்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகும்," என்றார்.

விவசாயிகள் மற்றும் 100 நாள் வேலைத் திட்டம் முடக்கம்

மத்திய அரசின் வர்த்தகக் கொள்கைகளால் இந்திய விவசாயிகள் நசுக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிப்பதும், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதிப்பதையும் பிரதமர் ஏன் தட்டிக்கேட்கவில்லை என வினவினார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) குறித்துப் பேசிய அவர், திட்டத்தின் பெயரை மாற்றியதால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை, 2014-க்குப் பிறகு இத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு படிப்படியாகக் குறைத்துவிட்டது. 100 நாட்கள் வேலை என்பது தற்போது வெறும் பேச்சளவில் மட்டுமே உள்ளது, மக்களுக்கு முழுமையான ஊதியம் கிடைப்பதில்லை.

அதிமுக மற்றும் பாஜக மீதான விமர்சனம்

தமிழக அரசியலைப் பொறுத்தவரை, அதிமுகவின் தற்போதைய நிலையை எண்ணிக் கவலைப்படுவதாகக் கூறினார். "அதிமுகவை பாஜக முழுமையாகக் கபளீகரம் செய்துவிட்டது. அந்தத் தோழர்களின் நிலையை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது," என்றார்.

மேலும், எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் வாக்குறுதிகளை விமர்சித்த அவர், "ஆயிரம் ரூபாய் மகளிருக்குக் கொடுக்க முடியாது என்று சட்டமன்றத்தில் கூறிய எடப்பாடி பழனிச்சாமி, இப்போது 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என்று கூறுவது எப்படிச் சாத்தியம்? மக்களிடம் பொய் சொல்லி ஓட்டு வாங்க நினைக்கிறார்கள்," என்று சாடினார்.

தொழில்நுட்ப மாநாடு மற்றும் ஜனநாயக உரிமை

சமீபத்தில் நடைபெற்ற ஏஐ (AI) மாநாடு குறித்துப் பேசிய சுதா, "சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை இந்தியாவில் தயாரித்தது போலக் காட்டியது மிகப்பெரிய ஏமாற்று வேலை. நமது நாட்டில் உண்மையில் என்ன தயாரித்தோம் என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். போலியான பிம்பங்களை உருவாக்குவதை நிறுத்த வேண்டும்," என்றார்.

இறுதியாக, போராடும் உரிமை குறித்துப் பேசிய அவர், எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தங்களின் உரிமைகளுக்காகப் போராட அடிப்படை உரிமை உண்டு என்றும், காங்கிரஸ் கட்சி எப்போதும் ஜனநாயக முறையிலேயே தனது போராட்டங்களை முன்னெடுக்கும் என்றார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை: சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக அரசுப் பேருந்து - நெகிழ்ச்சியில் கிராம மக்கள்!
மயிலாடுதுறை: சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக அரசுப் பேருந்து - நெகிழ்ச்சியில் கிராம மக்கள்!
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
தேர்தலில் போட்டியில்லை… ஆனால் திமுகக்கு முழு ஆதரவு – பெரியார் கழகம் விளக்கம்
தேர்தலில் போட்டியில்லை… ஆனால் திமுகக்கு முழு ஆதரவு – பெரியார் கழகம் விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
Sanju Samson:
Sanju Samson: "இது ஒரு கனவு!" வலிகளே எனது பலம்.. உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் சஞ்சு சாம்சன் உருக்கம்
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
Embed widget