மேலும் அறிய
திருப்பரங்குன்றம்: ரோப் கார் கனவு நனவாகுமா? திமுக அரசின் மெத்தனப்போக்கு.. ராஜன் செல்லப்பா ஆவேசம்!
எடப்பாடியார் 2000 கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்தவுடன் உடனே அறிவித்து விட்டீர்கள். அண்ணா திமுகவை பின்பற்றும் வகையில் தான் திமுக உள்ளது. - ராஜன் செல்லப்பா.

ராஜன் செல்லப்பா
Source : whatsapp
கரூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மணல் திருட்டை தடுக்க போகிறார் தடுத்தவர் மீது வழக்கு பதிவு போடுகிறார்கள் பொய் வழக்கு போடுவதில் மோசமான அரசு திமுக அரசு- நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ராஜன் செல்லப்பா பேச்சு.
திருப்பரங்குன்றம் பகுதி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
மதுரை திருப்பரங்குன்றம் 16ஆம் கால் மண்டபம் அருகே மதுரை புறநகர் அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் திருப்பரங்குன்றம் பகுதி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைப்பு செயலாளர் திருக்குன்ற சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா பேசும் போது...,” தென் மாவட்டங்களிலே திருப்பரங்குன்றம் மேலூரில் நீங்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து எங்களை சட்டமன்றத்திற்கு அனுப்பினீர்கள். இந்த பகுதியில் பாதாள சாக்கடை வசதி தொடர்ந்து ஏற்பட காரணமாக இருந்தது அண்ணா திமுக அரசு. ஒரு பாலத்தை கட்டி முடிக்க நான்கு வருடம் ஆகி உள்ளது. இன்னும் கோரிப்பாளையம் பாலம் கட்டி முடிக்கவில்லை. எல்லா திட்டங்களையும் தவறு தவறாக யோசித்து நிறைவேற்ற வேண்டியது. இன்றைக்கு ஏமாற்று வேலையை செய்கிறார்கள் ஐந்து வருடமாக உரிமைத்தொகை கொடுக்கவில்லை எடப்பாடியார் 2000 கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்தவுடன் உடனே அறிவித்து விட்டீர்கள். அண்ணா திமுகவை பின்பற்றும் வகையில் தான் திமுக உள்ளது.
அம்மா கொண்டு வந்த திட்டத்தை முடக்கி போட்டு விட்டார்கள்
அம்மா கொண்டு வந்த திட்டத்தை முடக்கி போட்டு விட்டார்கள் மடிக்கணினி முழுமையாக கொடுக்கவில்லை அம்மா மினி கிளினிக் மூடிவிட்டார்கள். மக்கள் எப்படி திமுகவை நம்புவார்கள். பெண்கள் துணிந்து சாலையில் போக முடியுமா கொலை, கொள்ளை, கஞ்சா போதைப்பொருள் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அதனை தடுக்க இந்த அரசு எந்த முயற்சி எடுக்கவில்லை. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசுடன் இணக்கத்தில் இருந்தார். மாநில அரசின் உரிமைகள் என்று சொல்லிக்கொண்டு எந்த நிதியும் கேட்டு பெற முடியவில்லை இந்த அரசால். கல்வித்துறையில் நாட்டமில்லை தொழிற்சாலை வளர்ச்சி இல்லை. எல்லா பத்திரிக்கையிலும் எழுதி விட்டார்கள் திருப்பரங்குன்றம் தொகுதி முன்னணி தொகுதியாக உள்ளது. திமுக தொடர்ந்து ஐந்து வருடத்தில் ஆட்சியில் இருந்ததில்லை கருணாநிதி காலம் முதல், திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவில் ரோப் கார வாசதிக்காக இதுவரை 20 முறை பேசியுள்ளேன். தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் போராட்டம் அண்ணா திமுக ஆட்சியில் கொடுத்த உதவிகளை நிறுத்தி விட்டீர்கள் அதனை திருப்பிக் கொடுங்கள் என்று போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
அடிமையாக வேலை பார்க்கிறார்கள்
இன்றைக்கு காவல்துறை அடிமையாக வேலை பார்க்கிறார்கள் பொய் வழக்கு போடுகிறார்கள் கரூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மணல் திருட்டை தடுக்க போகிறார் தடுத்தவர் மீது வழக்கு பதிவு போடுகிறார்கள். பொய் வழக்கு போடுவதில் மோசமான அரசு திமுக அரசு இவர்களை வெளியேற்றுவது நம்முடைய கடமை. அரசு அதிகாரிகள் ஆசிரியர்கள் முற்றிலும் மாறிவிட்டார்கள் போன முறை ஆசிரியர்கள் திமுகவுக்கு ஓட்டு கேட்டார்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. அதனால் திமுக எப்போது வீட்டுக்கு போவோம் என்று எண்ணுகிறார்கள் நம்முடைய ஆட்சியில் உங்களுடைய அத்தனை உறுதிமொழிகளையும் நிறைவேற்றுவோம் என்றார் பின்னர் எடப்பாடியார் அறிவித்த வாக்குறுதிகளை பொதுக்கூட்டத்தில் பெண்கள் பொது மக்களுக்கு எடுத்துக் கூறினார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























