மேலும் அறிய
Madurai ; பாஜக அரசின் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக இடதுசாரிகள் மற்றும் விசிக கண்டன ஆர்ப்பாட்டம் !
சாதிய ஒடுக்குமுறை, பொருளாதார சுரண்டல், தொழிலாளர் நலன் ஆகியவற்றுக்கு எதிராக இடதுசாரி மற்றும் விசிக இணைந்து தொடர்ந்து போராடும் என்று பேசினார்கள்.

ஆர்ப்பாட்டம்
Source : whatsapp
மத்திய பா.ஜ.க., அரசின் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக மதுரையில் இடதுசாரிகள் மற்றும் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்.
கண்டன ஆர்ப்பாட்டம்
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, மதுரையில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று செல்லூர் - தாகூர் நகர் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே. கே. சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் வடக்கு - 1ஆம் பகுதிக்குழு செயலாளர் வி. கோட்டைச்சாமி துவக்கி வைத்து பேசினார், சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, விசிக நிர்வாகிகள் மணியரசு, வீரசிங்கம், மத்திய மாவட்டச் செயலாளர் ப. ரவிக்குமார், சிபிஎம் மாவட்ட செயலாளர் மா. கணேசன், விசிக மாநில துணை பொதுச் செயலாளர் கனியமுதன் ஆகியோர் கண்டன உரையற்றினார்கள். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் நிறைவு செய்து சிறப்புரையாற்றினார்.
வணிகச் சமையல் எரிவாயு விலை உயர்வு
ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும் வணிகச் சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில், ரயில்வே துறையில் பணியிடங்களைக் குறைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ (எம். எல்) சார்பில் சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் ; தேர்தல் முடிந்த பிறகும் இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் மக்கள் நலப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடும் கட்சிகளாகும். போராட்டம் இவர்களின் நிலையான அரசியல் பாதை. அதை மார்க்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு இணைந்து செயல்பட்டது, மக்களுக்கான அரசியல் உறுதியை காட்டுகிறது. சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. ஒன்றிய பாஜக அரசின் பொருளாதார கொள்கைகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், பொதுமக்களுக்கு எதிராகவும் உள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகள் மேலும் உயரும் அபாயம் உள்ளது. தனியார்மயம் அதிகரிப்பால் பொதுத்துறை நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன குறிப்பாக ரயில்வே துறையில் இது ஆபத்தான வளர்ச்சியாகும். தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களை சுரண்டுகின்றன. வேலைவாய்ப்பு குறைப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து கவலை அளிக்கும் செயலாக உள்ளது.
பெரும்பான்மை நிரூபணம் சட்டமன்றத்தில் மட்டுமே நடக்க வேண்டும்.
தமிழகத்தில் ஒரு கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றால் அது சட்டமன்றத்தில் நிரூபித்தால் போதும் கடந்த காலங்களில் அப்படித்தான் நாடாளுமன்றத்திலும் நடந்துள்ளது. பல மாநிலங்களில் சட்டமன்றத்திலும் நடந்துள்ளது இன்றைக்கு ஆளுநர் என்பவர் அவரும் நிரந்தர ஆளுநர் கிடையாது. அவர் உங்களுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் பட்டியலை கொடுங்கள் என்று கூறுகிறார். ஆளுநரின் செயல்பாடு அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கொண்டு வந்த அரசியல் சட்டத்திற்கு முரணாக உள்ளது. பெரும்பான்மை நிரூபணம் சட்டமன்றத்தில் மட்டுமே நடக்க வேண்டும். பாஜக இன்றைக்கு தமிழகத்தில் தாங்கள் போட்டியிட்ட 27 இடங்களில் ஒரே இடத்தில் மட்டும் வெற்றி பெற்ற நிலையில் தான் கொள்ளை புறம் வழியாக ஆளுநர் மூலமாக அரசியல் தலையீடு செய்கிறது. எனவே இதை இடதுசாரி கட்சிகள் விசிக உள்ளிட்ட கட்சிகள் ஜனநாயக பூர்வமாக கண்டித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது, தமிழ்நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம்.
சாதிய ஒடுக்குமுறை, பொருளாதார சுரண்டல், தொழிலாளர் நலன் ஆகியவற்றுக்கு எதிராக இடதுசாரி மற்றும் விசிக இணைந்து தொடர்ந்து போராடும் என்று பேசினார்கள்.
Before You Go
Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















