விஜயை கைது செய்வது தேவையற்றது - கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி
விஜய் உடன் ராகுல் காந்தி பேசியதில் கூட்டணிக்கும் இதற்கும் என்ன இருக்கிறது என கேள்வி எழுப்பிய அவர் காங்கிரஸ் கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி - கே.எஸ்.அழகிரி

விழுப்புரம்: கரூரில் மக்கள் சந்திப்பு சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததில் விஜய் கைது செய்வதென்பது தேவையற்றது, அவர் கைது செய்யப்பட்டால் தவறான செயல்பாடாகும், நான்கு புறத்திலும் தவறு உள்ளதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் நகர பகுதியான காந்தி சிலை அருகே அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு திருட்டினை தடுக்க தவறிய தேர்தல் ஆணையத்தையும் பாஜக அரசை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி,
மோடி அரசாங்கம் தேர்தல் ஆணையத்தின் உதவியோடு இந்தியாவில் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாகவும், இதன் உண்மை தன்மை தெரிந்து ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். பீகாரில் 55 லட்சம் பேருக்கு வாக்கு இல்லை வாக்கு உரிமை இருந்தும் அவர்களுக்கு வாக்குரிமை இல்லை என்கிறார்கள், இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் உதவியோடு பாஜக அரசு செயல்படுவதாகவும் இதுவரை வாக்காளர்கள் நீக்கபட்டு குறித்து மோடி அரசு பதிலளிக்க வில்லை என கூறினார்.
பீகாரில் பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்கள், இஸ்ஸாமிய வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், வாக்கு திருட்டு குறித்து ராகுல் காந்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர் பிரச்சாரத்தினை பீகாரில் மேற்கொண்டனர். இது இரண்டு கட்சிகளுக்கிடையே உள்ள பிரச்சனை இல்லை என தெரிவித்தார். ஜிஎஸ்டி வரியை குறைத்துவிட்டு தீபாவளியை சிறப்பாக கொண்டாடுங்கள் என மோடி தெரிவிக்கிறார். ஜிஎஸ்டி வரி காங்கிரஸ் கொண்டு வந்தபோது பாஜக எதிர்த்தார்கள்.ஆனால் பாஜக கொண்டுவந்தபோது காங்கிரஸ் எதிர்க்கவில்லை. ஆனால் அவர்கள் கொண்டு வந்த முறை தவறு என்று எடுத்துரைத்ததாகவும், தேர்தலுக்காக ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்துள்ளதாகவும் அம்பானிக்கும் அதானிக்கும் பாஜக உதவி செய்கிறது என குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ் எப்போதுமே சுயமாரியாதையாக செயல்பட்டு வருவதாகவும்,
தனியார் தொலைக்காட்சி அரசு கேபிளில் தடை செய்யப்பட்டுள்ளது கண்டிக்கதக்கது முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் அரசு உடனடியாக அதனை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். கரூரில் மக்கள் சந்திப்பு சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததில் விஜயை கைது செய்வதென்பது தேவையற்றது அவர் கைது செய்யப்பட்டால் தவறான செயல்பாடாகும் நான்கு புறத்திலும் தவறு உள்ளது என்றும் கரூரில் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக கூறுவது தவறானது என கூறினார்.
கரூரில் அதீதமான கூட்டம் என்பதால் விபத்து ஏற்பட்டதாகவும் விஜய் தாமதமாக வந்தார் என்பது சும்மா, கரூர் சம்பவம் மாவட்ட ஆட்சியர், காவல் துறை மீது தவறு உள்ளது என கூறினார். திருமாவளவன் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்துக்கு பதிலளித்த அழகிரி நிதானமாக செயல்படும் முதல்வராக ஸ்டாலின் உள்ளதாகவும் இருப்பினும் இது போன்ற கருத்துக்கள் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். விஜய் உடன் ராகுல் காந்தி பேசியதில் கூட்டணிக்கும் இதற்கும் என்ன இருக்கிறது என கேள்வி எழுப்பிய அவர் காங்கிரஸ் கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி என அழகிரி தெரிவித்துள்ளார்.





















