உதயநிதி சர்ச்சை பேச்சு
தஞ்சையில் நடைபெற்ற திமுக போராடத்தில் திமுக இளைஞர் அணை செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான உதயநிதி பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று காலை உதயநிதி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி விவகாரம் குறித்து 03.08.2026அன்று திமுக சார்பில் தஞ்சையில் நடைபெற்ற கூட்டத்தில் ’ஆட்சேபகரமான – ஆபாசமான’ முறையில் பேசியதாக, த.வெ.க சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தினமும் நூற்றுக்கணக்கான வழக்குகள்
நேரடியாக அவர் எந்தவொரு தனிநபரின் பெயரையும் குறிப்பிட்டுப் பேசாத பொழுது, மறைமுகப் பொருள் கொண்டு உதயநிதி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதோ, கைது செய்வதோ ஏற்புடையதல்ல. எதிர்க்கட்சித் தலைவர்கள் மேடைகளில் பேசக்கூடிய பேச்சுக்களுக்கெல்லாம் வரிக்கு வரி பொருள் கண்டு உள்நோக்கம் கற்பிக்க ஆரம்பித்தால், தினமும் நூற்றுக்கணக்கான வழக்குகளைப் பதிவு செய்துகொண்டே இருக்க நேரிடும். மேலும், தமிழர்களின் வாழ்வாதாரக் காவிரிப் பிரச்சினைக்காகப் போராடும் சமயத்தில், தொண்டர்களின் தேவையற்ற தனிநபர் கோஷங்களை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கண்டித்திருக்க வேண்டும்;
ஒரு வார்த்தைக்காக 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
அதேபோன்று ஆபாசமாகப் பொருள்படும் வார்த்தைகளை அவரும் தவிர்த்திருக்க வேண்டும். உதயநிதி அவர்கள் பேசியதாக ஒளிபரப்பப்படும் பேச்சால் எவரது மனமும் புண்பட்டிருந்தால், அதற்கு அவரை மன்னிப்புக் கேட்க வைக்கவோ அல்லது வருத்தம் தெரிவிக்க வைக்கவோ கோரியிருக்கலாம். அதற்கும் மறுத்தால் மான நஷ்ட வழக்குத் தொடரலாமே தவிர, அதை விட்டுவிட்டு ஒரு வார்த்தைக்காக 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்வது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல; இதுவே தவறான முன்னுதாரணமாகவும் அமைந்துவிடும்.
மேலும், நாளை பட்ஜெட் கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்து சிறையிலடைக்க முயல்வது ஜனநாயக மாண்புகளைச் சிதைக்கும் நடவடிக்கையாகவே கருதப்படும்! எனவே, உதயநிதி ஸ்டாலின் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கிருஷ்ணசாமி வலியுற்றுத்தியுள்ளார்.
