Watch Video: கோவை மக்களை அவதூறாக பேசினாரா தயாநிதி மாறன்? வீடியோ வெளியிட்ட அண்ணாமலை!
கோவை மக்களை அவதூறாக பேசியதாக தயாநிதி மாறன் பேசிய பகிர்ந்துள்ள அண்ணாமலை அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக ஆட்சியைத் தக்க வைப்பதற்காக தங்களது அமைச்சர்கள். எம்பி-க்கள், நிர்வாகிகள் மூலமாக பரப்புரையைத் தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், கரூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற திமுக-வின் ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தயாநிதிமாறன் எம்பி கோவை குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பக்கத்து ஊரைக் கெடுப்பவர்களா கோவை மக்கள்?
அவர் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளதாவது, "திமுக கூட்டத்தில், கோவை மக்கள், பக்கத்து ஊரைக் கெடுப்பவர்கள் என்று அவமரியாதையாகப் பேசுகிறார் திமுக பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன். அதைக் கேட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார் முன்னாள் சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி.
திமுக கூட்டத்தில், கோவை மக்கள், பக்கத்து ஊரைக் கெடுப்பவர்கள் என்று அவமரியாதையாகப் பேசுகிறார் திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன். அதைக் கேட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார் முன்னாள் சாராய அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி.
— K.Annamalai (@annamalai_k) February 17, 2026
கோயம்புத்தூர் மக்கள், பண்பானவர்கள். மரியாதை… pic.twitter.com/tUXaFe0Idb
சுயமரியாதைக்காரர்கள்:
கோயம்புத்தூர் மக்கள், பண்பானவர்கள். மரியாதை மிக்கவர்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களையும் போல, கோயம்புத்தூர் மக்களும், தங்கள் கடின உழைப்பால், தமிழகத்துக்கும், நாட்டிற்கும் தங்கள் பொருளாதார பங்களிப்பை அளித்து வருகின்றனர். திமுகவினர் தவிர மற்ற தமிழக மக்கள் யாருமே, தமிழகத்தைச் சுரண்டிக் கொழுக்க நினைப்பதில்லை.
கோபாலபுரக் குடும்பத்தை அண்டிப் பிழைக்கும் தயாநிதி மாறனுக்கே இத்தனை ஆணவம் இருந்தால், தங்கள் கடும் உழைப்பினால் தமிழகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கோயம்புத்தூர் மக்களுக்கு எவ்வளவு சுயமரியாதை இருக்கும். தனது திமிர்த்தனமான பேச்சுக்கு, தயாநிதி மாறன் உடனடியாக கோயம்புத்தூர் மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்.
திமுகவினரின் இந்த ஆணவத்தால்தான், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதி மக்களும், திமுகவைப் புறக்கணித்து வருகிறார்கள். வரும் தேர்தலில், தமிழகம் முழுவதுமே திமுகவுக்கு அதே நிலைதான் ஏற்படும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
என்ன பேசியுள்ளார்?
அண்ணாமலை பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் அந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பங்கேற்றுள்ளார். அந்த வீடியோவில் தயாநிதி மாறன் எம்பி பேசியிருப்பதாவது, போட்டி போட்டி அந்த மனப்பான்மையிலே இருந்தாங்க. ஆனா, அவங்க கோயம்புத்தூர்காரர்கள். அவங்க ஊரைக் கெடுக்கமாட்டாங்க. பக்கத்து ஊரை எல்லாத்தையும். மாசு என்ற பெயரில். நான் தப்பா சொல்ல. இது தேர்தல் நேரம். மாத்தி அப்படியே. பொருளாதாரத்தில் கோயம்புத்தூர் உயர்ந்துவிட்டது இவ்வாறு அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.























