மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று அடையாளம் தெரியாத நபர்களால்   தாக்குதல் நடத்திய நிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.பி உதயகுமார் கைது செய்யப்பட்டார். அவர் கைதானதை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிச்சாமி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். 

எடப்பாடி அறிக்கை: 

இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை!காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார்?

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை:

இதனையடுத்து, எனது அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் திரு. ஆர்.பி. உதயகுமார் அவர்கள் அக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றபோது, அவர் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனம்.

ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; மக்களைக் காக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை; தற்போது உச்சத்தின் உச்சமாக காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை!

”வெட்கமாக இல்லையா”

நான்காண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இது தான் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா பொம்மை முதல்வரே?

காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை.V. சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

எப்போதும் நான் சொல்வதை மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒருமுறை சொல்லிக்கொள்ள விழைகிறேன்- மக்களே, இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! என்று எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார். 

ஆர்.பி. உதயகுமார் கைது

இந்த நிலையில் காவல் நிலையத்தில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது விசாரிப்பதற்காக திருமங்கலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர்பி உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் சத்திரப்பட்டி நோக்கி சென்ற போது தகவல் அறிந்த போலீசார்முத்துராமலிங்கபுரத்தில் தடுத்து நிறுத்தி சத்திரப்பட்டி செல்ல அனுமதி மறுத்தனர் இதனால் போலீசாருக்கும் முன்னாள் அமைச்சருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது, 

இதனைத் தொடர்ந்து கர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் முன்னாள் அமைச்சர் ஆர் பிஉதயகுமார் அவரது ஆதரவாளர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.