”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்

EPS : சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

Continues below advertisement

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உள்ளான விவகாரத்தில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  காட்டாமாக விமர்சித்துள்ளார். 

Continues below advertisement

பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல்:

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 50 வயதுமிக்க பெண் ஒருவர் பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மர்ம நபர் ஒருவர் சிகிச்சையில் இருந்த அந்த பெண் நோயாளிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் இப்பாடியா? பெண் நோயாளிக்கு பாலியல் சீண்டல்! மர்ம நபர் கைது

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் அந்த நபரை கைது செய்தனர். போலீஸ் நடத்தில் விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவரின் பெயர் சதீஷ் என்பதும் அவர் ராணிப்பேட்டையை சேர்ந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில்  தெரியவந்தது. 

இபிஎஸ் விமர்சனம்: 

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் இந்த சம்பவம் குறித்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ”சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாக காட்டிவிட்டது.

பெண்கள் பாதுகாப்பு பற்றி சட்டமன்றத்தில் வசனம் பேசிய திரு. முக ஸ்டாலின் இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்? #யார்_அந்த_SIR என்று கேட்டாலே எரிச்சல் ஆகும் திரு. ஸ்டாலின் அவர்களே- உங்கள் ஆட்சியில் இதுபோன்ற "சார்"கள் காப்பாற்றப் படுவதால் தான், மேலும் பல "சார்"கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பாலியல் வழக்கில் கைதானவனுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Continues below advertisement