EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?

அவருக்கு உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு கொடுக்க உள்ளதாகவும் இதன் மூலம் செல்வாக்கான தலைவர் என்ற பிம்பத்தை பாஜக ஏற்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

கூட்டணி தொடர்பான டெல்லி பாஜக மேலிட உத்தரவுகளை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நிராகரித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் இபிஎஸ் தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

சூடான அரசியல் களம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு நாளுக்கு  நாள் அதிகரித்து வருகிறது. இபிஎஸ் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது பேசியது.. அவரை தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை அமித்ஷாவை சந்தித்தது...

இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியது என பாஜகவுடன் சேர்த்து அதிமுகவின் அரசியல் களமும் சூடாய் இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணிக்கு ஒப்புக்கொண்டதாக சொல்லப்பட்டாலும் பாஜக வைக்கும் நிபந்தனைகளை அவர் ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது. அதாவது, ஓபிஎஸ், தினகரன், சசிகலவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று டெல்லி பாஜக சொல்வதாகவும் அதற்கான வாய்ப்பே இல்லை என்று இபிஎஸ் முரண்டு பிடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

திமுகவிற்குதான் சாதகம்

ஆனால் டெல்லி பாஜகவே இப்படி நீங்கள் மட்டும் தனியாக இருந்தால் சட்டமன்ற தேர்தலில் நம் கூட்டணி எப்படி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் தினகரன், ஓபிஎஸ் என வாக்குகள் பிரிந்தால் அது திமுகவிற்குதான் சாதகமாக அமையும் என்று பாஜக நினைக்கிறதாம்..

இப்படி எடப்பாடி முரண்டு பிடித்துக்கொண்டே இருந்தால் அதிமுகவில் குழப்பத்தை ஏற்ப்படுத்தி செங்கோட்டையன் பொதுச்செயலாளராக மாற்றும் முயற்சியிலும் பாஜக ஈடுபட்டு வருதாக கூறப்படும் நிலையில்தான், செங்கோட்டையன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார்.  அவருக்கு உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு கொடுக்க உள்ளதாகவும் இதன் மூலம் செல்வாக்கான தலைவர் என்ற பிம்பத்தை பாஜக ஏற்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இபிஎஸ்-க்கு எதிரான வியூகங்கள்

இந்த நிலையில்தான் செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லி விசிட் அடிக்க உள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சந்திப்பின் போது இபிஎஸ்-க்கு எதிரான வியூகங்கள் வகுப்படும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ந்து கூட்டணி தொடர்பாக இபிஎஸ் முரண்டு பிடித்தால் மகாராஷ்டிரா பார்முலாவை இந்த விவகாரத்திலும் பாஜக பயன்படுத்தும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த டெல்லி பயணங்கள் அதிமுகவின் வெடிக்க உள்ள பூகம்பத்திற்கான முன்னோட்டம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Continues below advertisement
Sponsored Links by Taboola