Continues below advertisement

மத்திய பாஜக அரசிடம் அடிமையாக, ஏன் கொத்தடிமையாக திமுக சென்றுவிட்டது என்று பரபரப்பாக பேட்டி அளித்திருக்கிறார் சட்டத்துறை அமைச்சர் CTR நிர்மல்குமார், தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆட்சியில் இருக்கும்போது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த திமுக, இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறது. அந்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டால் அதை எதிர்த்து வாக்களிப்போம் என்று ஏன் அவர்களால் சொல்ல முடியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நேற்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தை இண்டியா கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. ஆனால், திமுக அதில் பங்கேற்றது. திமுக நாடாளூமன்ற குழுத் தலைவர் கனிமொழி அந்த தேநீர் விருந்தில் பங்கேற்றது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையான எதிர்வினையை துவக்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் இதே கேள்வியை எழுப்பியிருக்கிறது.

Continues below advertisement

பாஜகவுடன் நெருக்கம் – மத்திய அமைச்சர் ஆகும் திருச்சி சிவா

இதன் மூலம் பாஜகவுடன் திமுக கூட்டணி சேர்ந்துவிட்டதாகவும் திருச்சி சிவா விரைவில் மத்திய அமைச்சராக ஆவார் என்று அனிதா ராதகிருஷ்ணனே சொல்லியிருக்கிறார் என்றும் சிடிஆர் நிர்மல்குமார் திமுகவை நோக்கி கடுமையான அஸ்திரத்தை ஏவி விட்டிருக்கிறார். இதை திமுக எப்படி தடுத்து ஆடப்போகிறார்கள் என்ற பெரும் எதிர்ப்பார்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில், திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் இருந்து அரசு கஜானாவிற்கு வர வேண்டிய நிதி கட்சி நிதி என்ற பெயரில் திமுகவிற்கு சென்றதாகவும் , அது தற்போது நிறுத்தபப்ட்டு அரசு கஜானாவிற்கு திருப்பி விடுவதால் , அரசுக்கு வருவாய் அதிகரித்து வருவதாகவு அவர் தெரிவித்துள்ளார்.