சிறந்த பேச்சாளரான நாஞ்சில் சம்பத் அரசியல் தொடர்பான கருத்துக்களை எப்போதாவது பதிவிடுவார். அவ்வாறு அவர் பதிவிடும் போது, அது பெரிய அளவில் பேசப்படும். அல்லது விமர்சிக்கப்படும். சில நேரத்தில் கொண்டாடப்படும். அந்த வரிசையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அலுவலகம் மற்றும் அவரது நெருக்கமானவர்களிடத்தில் நடந்த ரெய்டு தொடர்பாக நாஞ்சில் சம்பத் பதிவிட்டுள்ள பதிவு, தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சற்று முன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த பதிவை பதிவு செய்துள்ளார்.


அதில், ‛ஒரு மணியிடமே இத்தனை மணிகளா.. அப்படியானால் மற்ற மணிகளிடமும் சாமிகளிடமும் எத்தனை எத்தனை கோடியோ.! நினைத்தாலே நெஞ்சில் நிலநடுக்கம் ஏற்படுகிறது.!’ என அந்த பதிவில் நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டுள்ளார். 


 






 


நாஞ்சில் சம்பத்தின் இந்த பதிவிற்கு அவரை பின்பற்றுவோரும் கவிதை நயத்தில் பதிலளித்து வருகின்றனர்.










 


இப்படி நாஞ்சில் சம்பத் கருத்திற்கு ஆதரவாக ஒரு தரப்பினர் பதிவிட்டாலும், மற்றொரு தரப்பு அதே பதிவில் நாஞ்சில் சம்பத்தை கிண்டல் செய்தும் பதிவிட்டு வருகின்றனர். அவர் அதிமுகவில் இருந்த போது யுனோவா கார் பெற்றது குறித்தும் அந்த பதிவில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.






 


இதனால் நாஞ்சில் சம்பத் டுவிட்டர் பக்கத்தில் திமுக-அதிமுக ஆதரவாளர்கள் மோதிக்கொண்டிருக்கின்றனர். நாஞ்சில் சம்பத் தெரிவித்த கருத்து, தற்போது இணைய இரு கட்சி ஆதரவாளர்களின் மோதலாக வந்து நிற்பதால், என்ன செய்வது என தெரியாமல் நாஞ்சில் சம்பத் விழித்து வருகிறார்.