CPM SHANMUGAM : "அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
CPM joining TVK alliance : கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. எனவே பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும் என சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தவெக ஆட்சிக்கு திமுக கூட்டணி கட்சி ஆதரவு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் இல்லாத காரணத்தால் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் முதல் ஆளாக தவெகவிற்கு ஓடிச்சென்றது. அடுத்தாக விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக் ஆகியவை ஆதரவு தெரிவித்தது. அதிலும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இடம்பிடித்ததன் மூலம் கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பியாக இருந்த சி.வி.சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அந்த இடத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை எம்பியாக பிரவீன் சக்கரவர்த்தி
அந்த வகையில் தமிழகத்தில் ஆட்சி பிடித்துள்ள தவெக தனது முதல் மாநிலங்களவை எம்பியை பெறும் என எதிர்பார்த்த நிலையில், அந்த ஒரு சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு தவெக ஒதுக்கியது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பாக மாநிலங்களவை வேட்பாளராக ராகுல் காந்தி மற்றும் விஜய்யின் நண்பரான பிரவீன் சக்கரவர்த்தி பெயர் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டிருந்த சமூகவலைதள பதிவில்,“தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினருக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுவதாக தெரிவித்திருந்தார்.
சிபிஎம் சண்முகம் எதிர்ப்பு
இந்த பதிவால் கோவமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தவெக கூட்டணியில் நாங்கள் எப்போது இடம்பெற்றோம், வேட்பாளருக்கு நாங்கள் எப்போது ஆதரவு தெரிவித்தோம் என கேள்வி எழுப்பி பிரவீன் சக்கரவர்த்தியை "அதிக பிரசங்கித்தனம்" என கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக மார்க்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள பதிவில்,
புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
— Shanmugam P (@Shanmugamcpim) June 5, 2026
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட்… pic.twitter.com/mWOp1pxO50
"அதிக பிரசங்கித்தனம்"
புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது. கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது. பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும் என சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்






















