Continues below advertisement

திமுக அரசை விமர்சித்த காங். நிர்வாகி

தமிழகத்தில்சட்டமன்றதேர்தலுக்குஇன்னும் 4 மாதகாலமேஉள்ளநிலையில், திமுகஅரசின்செயல்பாட்டைவிமர்சித்துகாங்கிரஸ்நிர்வாகிபிரவீன்சக்கரவர்த்தி பதிவுஓன்றைவெளியிட்டார். அதில்தமிழகஅரசைவிடஉத்தரபிரதேசஅரசின்செயல்பாடுசிறப்பாகஇருப்பதாககூறியிருந்தார். இதற்குதிமுகவின்கூட்டணிகட்சிகள்கடும்எதிர்ப்புதெரிவித்துள்ளது. இதனையடுத்துராகுல்காந்தியிடமும் வைகோ, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக புகார்செய்யப்பட்டுள்ளதாகதகவல்வெளியானது. இந்தநிலையில்இதுதொடர்பாககாங்கிரஸ்எம்பிமாணிக்கம்தாகூர்வெளியிட்டுள்ளசமூகவலைதளபதிவில், விடுதலைசிறுத்தைகள், மதிமுக, இந்தியகம்யூனிஸ்ட்மற்றும்மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சிகள் இந்தியா எதிர்கட்சி தலைவர் அவர்களிடம் “நடவடிக்கை எடுக்க” கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றி புகார்அளித்துள்ளதாகசெய்தி படித்தேன்,இதன்ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது:

காங்கிரஸ் நிர்வாகி மீது திமுக கூட்டணி கட்சி புகார்

காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது?தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா?தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை,  ரவிக்குமார், துரைவைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகியோரிடம் “உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்” என்று சொன்னால், அவர்கள் அதை சகிப்பார்களா?எனகேள்விஎழுப்பியுள்ளார்.

Continues below advertisement

கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன பொது அழுத்த அரசியலால் அல்ல.ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலம் அல்ல; கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும்.ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது; இது BJP–RSS அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும்.இது கட்சி செயல் வீரர்கள் தன்மான உணர்வை தூண்டும்.

உட்கட்சி பிரச்சனையில் தலையிடுவதா.?

இந்தியகம்யூனிஸ்ட்மற்றும்மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சிகள்தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும் ,கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், அண்ணன் வைகோ, திருமாவளவன்அண்ணனும், கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் “லக்ஷ்மண் ரேகை”யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

ஒற்றுமை என்பதன் அர்த்தம் மௌனம் அல்ல ஆனால் அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது.கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்லஎனமாணிக்கம்தாகூர்தெரிவித்துள்ளார்.