Vijay resigned : எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜய்.! திருச்சி மக்களுக்கு ஷாக் நியூஸ்
Chief Minister Vijay resigned : தமிழக சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆட்சியை கைப்பற்றிய விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்தி தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதில் தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் ஆட்சி அமைக்க 118 என்ற தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ஐயூஎம்எல் உதவியோடு ஆட்சி அமைத்தார். இந்த நிலையில் இன்று பதவியேற்பு விழா முடிவடைந்த நிலையில் தலைமைச்செயலகம் வந்த முதலமைச்சர் விஜய் அரசு அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக கேட்டறிந்தார்.
திருச்சி கிழக்கு தொகுதி ராஜினாமா
இந்த நிலையில் ஒருவர் ஒரு தொகுதியில் தான் எம்எல்ஏ பதவியை வகிக்க முடியும் என்ற சட்ட விதி உள்ளதன் காரணமாக இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். எனவே தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை முதலமைச்சர் விஜய் இன்று ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக சட்டசபை செயலாளருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்தார். இதனையடுத்து தேர்தல் ஆணையத்திற்கு இது தொடர்பான கடிதம் அனுப்பிவைக்கப்பட்ட பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். எனவே இந்த தொகுதியில் இன்னும் 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















