தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை முற்றுகையிட்ட 100க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி மற்றும் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் தாக்கப்பட்டதில் தூத்துக்குடி மாநகராட்சி தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.