CM MK Stalin:”இது தான் ரம்ஜான் பரிசா?” இட ஒதுக்கீடு ரத்து! பாஜகவை பொளந்துகட்டிய முதல்வர்
இஸ்லாமிய மக்களுக்கு #AntiMinorityBJP அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசா?தப்பித் தவறிக் கூட தமிழ்நாட்டுக்குள் NDA வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்

மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கிய பா.ஜ.க, இதைத்தான் இந்தியா முழுவதும் செய்யத் துடிக்கிறார்கள் என தமிழாடு முதல்வர் ஸ்டாலின் கண்டனம், தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீடு ரத்து:
மகாராஷ்டிர அரசு, மாநிலத்தில் முஸ்லிம் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 5% இடஒதுக்கீடு வழங்கும் பழைய உத்தரவை ரத்து செய்துள்ளது. சிறப்பு பிற்படுத்தப்பட்ட பிரிவு-A அல்லது SBC-A உருவாக்கம் மூலம் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்புகள் (SEBC) பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது
.2014 ஆம் ஆண்டு 11 ஆண்டுகளுக்கு முன்பு இடஒதுக்கீடு காலாவதியானதால், இதில் எந்த நன்மையையும் பெறவில்லை என்றாலும், சாதி சரிபார்ப்பு சான்றிதழ்கள் மற்றும் சரிபார்ப்பு சான்றிதழ்களை வழங்கும் செயல்முறை இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது. கூறப்பட்ட சட்ட நிலைப்பாட்டிற்கு ஏற்ப, தற்போது உள்ள அரசு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது.
வெறுப்பில் ஊறிப்போன பா.ஜ.க
அண்மையில் மறைந்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் திரு. அஜித் பவார் அவர்கள் 2014-இல் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கும் முடிவை எடுத்தார்.அவர் மறைந்த துயரம் அனைவரின் மனதில் இருந்தும் அகல்வதற்குள் அவர் எடுத்த முடிவை நீக்கியுள்ளது சிறுபான்மையினர் வெறுப்பில் ஊறிப்போன பா.ஜ.க..
இது தான் ரம்ஜான் பரிசா?
இதுதான் இஸ்லாமிய மக்களுக்கு #AntiMinorityBJP அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசா?தப்பித் தவறிக் கூட தமிழ்நாட்டுக்குள் NDA வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? வந்தால் நம் அனைவரின் இடஒதுக்கீடும் காலி.
மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கிய பா.ஜ.க!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) February 19, 2026
இதைத்தான் இந்தியா முழுவதும் செய்யத் துடிக்கிறார்கள்.
அண்மையில் மறைந்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் திரு. அஜித் பவார் அவர்கள் 2014-இல் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கும் முடிவை… pic.twitter.com/6yIog2jWle
இவர்களுக்கு ஒருநாளும் வளர்ச்சி அரசியல் தெரியாது; தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான்.இத்தகைய வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம்! "தமிழ்நாடா NDA-வா?" எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும் என்று முதல்வர் ஸ்டாலின் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
























