பட்ஜெட் தொடர்பான அனைத்துக் கட்சிகள் கூட்டம் இன்று மதியம் 2 மணியளவில் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக ஓபிஎஸ் மகனான ரவீந்திரநாத் எம்.பிக்கு அழைப்பு விடுத்துள்ளது.


அனைத்துக் கட்சிகள் கூட்டம் இன்று மதியம் 2 மணியளவில் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகனான ரவீந்திரநாத் எம்.பிக்கு  அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பில், அதிமுக மக்களவை குழுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக நடக்கும் பாஜக கூட்டணிக் கட்சி அலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பியை அதிமுக மக்களவைத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பு விடுத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஏற்கனவே 6 மாத காலத்துக்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமி ரவீந்திரநாத்தை அதிமுக மக்களவை உறுப்பினர் என குறிப்பிட வேண்டாம் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.