Inbathurai vs SP Velumani : எஸ்.பி.வேலுமணி அணிக்கு அமைச்சரவையில் இடமா.!! பதவி நீக்கம் உறுதி- விஜய்யை எச்சரிக்கும் இன்பதுரை
Inbathurai vs SP Velumani : கட்சித் தாவல் தடைச் சட்ட புகாருக்கு ஆளாகிய ஒருவரை தகுதி நீக்கம் செய்ய அரசியலமைப்பு சட்டத்தின் 10 வது அட்டவணை சபாநாயகருக்கு அதிகாரம் தருகிறது என முதலமைச்சர் விஜய்யை எச்சரிக்கும் இன்பதுரை

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சியாக இருந்த காங்கிரஸ் தவெக கூட்டணியில் இணைந்தது. அடுத்தாக தவெக ஆட்சி அமைய விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவை தெரிவித்தது. இந்த நிலையில் அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என அதிமுகவில் ஒரு தரப்பு எம்எல்ஏக்கள் விரும்பிய நிலையில், அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார். இருந்த போதும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தவெகவின் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததாக கூறி சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளனர். அதில் 25 எம்எல்ஏக்களின் பதவி கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பறிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.ஆனால் தற்போது வரை சபாநாயகர் எந்த வித முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தவெக அமைச்சரவையில் 5 முதல் 6 அதிமுக எம்எல்ஏக்களுக்கு இடம் அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் அணியை சேர்ந்த அதிமுக மாநிலங்களவை எம்பியும், வழக்கறிஞருமான இன்பதுரை வெளியிட்டுள்ள சமூகவலைதளபதவில், கட்சித் தாவல் தடைச் சட்ட புகாருக்கு ஆளாகிய ஒருவரை தகுதி நீக்கம் செய்ய அரசியலமைப்பு சட்டத்தின் 10 வது அட்டவணை சபாநாயகருக்கு அதிகாரம் தருகிறது. அவ்வாறு புகாருக்கு உள்ளானவரை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கும் முன் Article 163 - ன் படி முதல்வரிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் திருப்தி அடைவது அவசியம்!
விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அதை எதிர் கொள்ளும் நபர் அமைச்சராக இருந்தால் Article 142 வழங்கும் சிறப்பு அதிகாரம் மூலம் உச்ச நீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்யலாம்! மணிப்பூர் மாநில அமைச்சர் Thounaojam Shyamkumar Singh வழக்கில் 2020 ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதற்கு நல்ல உதாரணம்! ஆக எல்லா நிலைகளிலும் அரசியலமைப்பு சட்டமே மேலோங்கி நிற்கும்! இதுதான் நமது அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பாகும்!என இன்பதுரை தெரிவித்துள்ளார்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















