Sengottaiyan: செங்கோட்டையன் தனி ரூட்; நிர்மலா பக்கா ஸ்கெட்ச்- மரண பீதியில் எடப்பாடி?

இபிஎஸ் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில் செங்கோட்டையனும் டெல்லிக்கு சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.

Continues below advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சமீப கால நடவடிக்கைகள் புயலை கிளப்பி வரும் நிலையில், அக்கட்சியின் நிர்வாகிகளே செங்கோட்டையனுக்கு எதிராக பேசத்தொடங்கியுள்ளனர். இதனால் அக்கட்சி இரண்டாக உடையும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

இபிஎஸ்-க்குக் குடைச்சல்

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் சமீப காலமாக பனிப்போர் நிலவுகிறது. இபிஎஸ் நடத்தும் எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து புறக்கணிப்பது, சபாநயகர் அப்பாவுவை தனியாக சந்தித்து பேசியது இபிஎஸ் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களை புறக்கணிப்பது என தொடர்ந்து செங்கோட்டையன் இபிஎஸ்-க்குக் குடைச்சல் கொடுப்பதாக கூறப்படுகிறது.

இச்சூழலில்தான் இபிஎஸ் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில் செங்கோட்டையனும் டெல்லிக்கு சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. ஏறகனவே அதிமுகவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து அக்கட்சி சந்தித்த ஒரு தேர்தலில்கூட வெற்றி பெறவில்லை. இதனை கருத்தில் கொண்டு அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ், தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைத்து அதிமுகவை பலமாக்க வேண்டும் என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவை இணைத்து வலுவான கூட்டணியை அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

வெளிப்படையாகவே விமர்சனம்

இந்த நிலையில்தான் செங்கோட்டையனின் செயல்பாடுகளால் அதிமுக பொதுச்செயலாலர் இபிஎஸ் கடும் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. செங்கோட்டையனை அக்கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாகவே விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டனர். அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனிடம் செங்கோட்டையன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, செல்வாக்கு இல்லாதவர்களைப் பற்றிப் பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என்று கூறினார்.

நேற்று கூட நிர்மலா சீதாரமனை தனியாக சந்தித்து செங்கோட்டையன் பேசியதாக கூறப்பட்ட நிலையில் தனக்கு நெருக்கமானவர்களின் இபிஎஸ் செங்கோட்டையனின் செயல்பாடுகள் குறித்து சொல்லி புலம்பியதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இதனிடையே இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் டாஸ்மக் ஊழலை குறிக்கும் வகையில் “அந்த தியாகி யார்” என்ற கருப்பு பட்டை அணிந்து அதிமுகவினர் கலந்து கொண்டனர். 

பேட்ஜ்ஜையும் கழட்டி வைத்த செங்கோட்டையன்

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை வைத்த நிலையில், இபிஎஸ்-ஐ பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் வெளி நடப்பு செய்த நிலையில் செங்கோட்டையன் மட்டும் அவையில் இருந்து உரையாற்றினார்.  “அந்த தியாகி யார்” என்ற கருப்பு பேட்ஜ்ஜையும் கழட்டி வைத்துவிட்டு உரையாற்றியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது.

இப்படி செங்கோட்டையனின் செயல்பாடுகளால் இபிஎஸ் மட்டும் இன்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பலரும்  கடுப்பாகி இருப்பதால் அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் அபாயம் இருப்பதாக சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Continues below advertisement
Sponsored Links by Taboola