டெல்லியில் சிஜேபி மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து சென்னை எழும்பூரில் பா ரஞ்சித் தலைமையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் பா ரஞ்சித் தவெக அரசு குறித்தும் பட்டியலின அமைச்சர்கள் குறித்தும் கடுமையான விமர்சனம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

பாரதிய ஜனதா கட்சி பாசிச கட்சி. அதனால் அது போராட்டத்தை ஒடுக்கதான் செய்யும். ஆனால் தமிழக அரசு ஏன் மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குகிறது. மாணவர்களை அடிப்பதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? முதலில் தவெக அமைச்சரவையில் இருக்கும் பட்டியலின அமைச்சர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள். ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது இன்று வரை ஏன் எந்த தலித் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க மறுக்கிறார்கள்? முதலில் அமைச்சர் ராஜ்மோகன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தானா என்பதே சந்தேகமாக உள்ளது. அவர் எழும்பூரில் நின்றபோது தான் அது அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது எங்களுக்கு தெரிந்தது.  ஒரு பட்டியலின சமூகத்தை சேர்ந்தவராக இருந்துகொண்டு ஊடகவியலாளராக இருந்துகொண்டு இதுவரை ஒரு தலித் பிரச்சனைக்கு கூட குரல் கொடுத்ததில்லை.

சாதி ரீதியான மத ரீதியான சமரசங்களொடு தான் நீங்கள் ஆட்சி நடத்துவீர்கள் என்று எங்களுக்கு சொல்ல வருகிறீர்களா என்பது தான் எங்களுடைய கேள்வி." என பா ரஞ்சித் பேசினார்.

Continues below advertisement