’மத்திய அரசின் உச்சகட்ட துரோகம்’ - கமலின் காட்டமான ட்வீட்..

தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவி இருக்கிறது இந்திய அரசு

Continues below advertisement

சில தினங்களுக்கு முன்பு அண்டை நாடான இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐக்கிய நாடுகளின் சபையில் நிறைவேறியது. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்களுக்கு, அந்நாட்டு அரசை பொறுப்பேற்க வைக்கும் தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பை இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

அதேபோல பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உலக அளவில் 22 நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளன. டென்மார்க், பிரான்ஸ், ஃபிஜி ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில் ஐ.நா-வில் தற்போது இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது. 

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் ’இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள்’ குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவி இருக்கிறது இந்திய அரசு. தமிழுக்கும் தமிழர்க்கும் மத்தியஅரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சகட்டம் இது.</p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a >March 25, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்நிலையில் ஐ.நா-வில் நடந்த இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது குறித்து பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது கருத்தினை காட்டமாக வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் ’இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள்’ குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவி இருக்கிறது இந்திய அரசு. தமிழுக்கும் தமிழர்களுக்கும் மத்தியஅரசு இதுவரை செய்துவந்த துரோகத்தின் உச்சகட்டம் இது" என்று குறிப்பிட்டுள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola