மேலும் அறிய

சீர்காழி அருகே சோகம்: கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்தது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொண்டல் பகுதியைச் சேர்ந்த அண்ணன், தம்பி மற்றும் அவர்களின் உறவினர் ஒருவர் என மூன்று பேர் ஆற்றில் குளிக்கச் சென்ற நிலையில், இருவர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றில் குளித்த இளைஞர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பனங்காட்டங்குடி கிராமம் வழியாக செல்லும் கொள்ளிடம் ஆற்றில் கொண்டல் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான சிபிராஜ் அவரது தம்பி பரத்ராஜ், மற்றும் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியைச் சேர்ந்த அவர்களது உறவினர் 21 வயதான அருண் சங்கர் ஆகிய மூன்று இளைஞர்களும் நண்பர்களுடன் இணைந்து கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

தற்போது மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் ஆற்றில் செல்லும் நிலையில், ஆற்றின் ஆழம் சில இடங்களில் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்துள்ளது, இருந்தபோதிலும் வழக்கமாக குளிக்கும் இடம் என்பதால், அவர்கள் பெரிய எச்சரிக்கையின்றி ஆற்றில் இறங்கியுள்ளனர்.

ஆற்றில் சிக்கிய இளைஞர்கள் 

அப்போது குளித்துக் கொண்டிருந்தபோது, சிபிராஜ் மற்றும் அருண் ராஜ்குமார் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். நீரோட்டத்தின் வேகமும், ஆற்றின் எதிர்பாராத ஆழமும் அவர்கள் சிக்கிக்கொண்டதால், அவர்களால் உடனடியாக வெளியே வர முடியவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்த பரத்ராஜ் அதிர்ச்சியடைந்து, உதவி கோரி சத்தமிட்டுள்ளார். மேலும் தனது அண்ணனும், உறவினரும் நீரில் மூழ்கி தத்தளிப்பதைப் பார்த்த அவர், உடனடியாக கிராம மக்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

மீட்புப் பணி மற்றும் சோக முடிவு

பரத்ராஜின் அலறல் சத்தம் கேட்டு, பனங்காட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நேரம் ஒரு வினாடி கூட வீணடிக்காமல், கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நீரில் மூழ்கிய சிபிராஜ் மற்றும் அருண் ராஜ்குமார் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தீவிர தேடுதல் பணிக்குப் பிறகு, தண்ணீரில் மூழ்கிய இரண்டு இளைஞர்களையும் கிராம மக்கள் மீட்டனர்.

மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக ஆற்றுப் படுகைக்குக் கொண்டுவரப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி தீயணைப்புத் துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவருக்கும் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும், அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. சிபிராஜ் மற்றும் அருண் ராஜ்குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. மருத்துவக் குழுவினர் அவர்களை பரிசோதித்துப் பார்த்து, இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.

காவல்துறையின் விசாரணை

இந்தத் தகவலையடுத்து, கொள்ளிடம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்த சிபிராஜ் மற்றும் அருண் ராஜ்குமார் ஆகியோரின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொள்ளிடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான சரியான காரணங்கள் மற்றும் வேறு ஏதேனும் அம்சங்கள் உள்ளனவா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளிக்கச் சென்றபோது ஆழம் தெரியாமல் நீரில் மூழ்கினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல்

இந்தச் சோக நிகழ்வு குறித்து தகவல் அறிந்த சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார். உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை இழந்த துயரத்தில் மூழ்கியிருந்த குடும்பத்தினருக்கு அவர் தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். இத்தகைய சோகமான நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முதலமைச்சர் அறிவிப்பு 

மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் வட்டம், பட்டமங்கல ஆராய தெருவைச் சேர்ந்த அருண்சங்கர் (வயது 22) மற்றும் சீர்காழி வட்டம், கொண்டல் கிராமம், குடியான தெருவைச் சேர்ந்த சிபிராஜ் (வயது 21) ஆகிய இருவரும் சீர்காழி வட்டம், அகரஎலத்தூர் கிராமம், பனங்காட்டங்குடி பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும் இச்சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget