Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (28.01.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
மின்நிறுத்த நேரம்
பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
கிடாரங்கொண்டான் துணை மின்நிலையம்
அந்த வகையில் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட 110/11 KV கிடாரங்கொண்டான், துணைமின்நிலையத்தில் இருந்து செல்லும் 11KV பூம்புகார் மின்பாதையில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 11 KV பூம்புகார் மின்பாதையில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான கருவி, சாவடி, மேலபெரும்பள்ளம், கரைமேடு, குரங்குபுத்தூர், தலைச்சங்காடு, மாமாகுடி, கிடங்கல், மருதம்பள்ளம், சின்னங்குடி மற்றும் 33/11 KV மேமாத்தூர் துணைமின்நிலையத்தில் இருந்து செல்லும் 11 KV ஆறுபாதி மின்பாதையில் மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதை அடுத்து 11 KV ஆறுபாதி மின்பாதையில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான ஆறுபாதி, விளநகர், கீழபரசலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 28.01.2025 காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செம்பனார்கோயில் உதவி செயற்பொறியாளர் சரவணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மணல்மேடு துணை மின் நிலையம்
அந்த வகையில் எதிர்வரும் 28-01-2025 செவ்வாய்கிழமை அன்று மணல்மேடு துணை மின் நிலையத்தில் இருந்து மின்னோட்டம் பெறும் 11.கி.வோ பந்தநல்லூர் உயரழுத்த மின்பாதைகள் மற்றும் 11.கி.வோ முடிகண்டநல்லூர் உயரழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வரும் நாளைய தினம் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை மேற்கண்ட மின்பாதைகளில் இருந்து மின் வினியோகம் பெறும் அகரமணல்மேடு, ராஜசூரியன் பேட்டை, வக்காரமாரி, முடிகண்டநல்லூர், கடலங்குடி, பூதங்குடி, திருச்சிற்றம்பலம், குமாரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மணல்மேடு உதவி செயற்பொறியாளர் இளையராஜா விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடமணல் துணைமின் நிலையம்
சீர்காழி கோட்டத்தில் 28-01-2025 செவ்வாய்கிழமை அன்று எடமணல் துணைமின் நிலையத்தில் உள்ள 11 KV திருகருக்காவூர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 11 KV திருகருக்காவூர் உயரழுத்த மின்பாதையில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என சீர்காழி தெற்கு உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி தெரிவித்துள்ளார்.
மின்நிறுத்த பகுதிகள்
திருகருக்காவூர், எடமணல், திருநகரி , மாத்தாம்பட்டிணம், கோணையாம்பட்டிணம், கீழமூவர்கரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
மாறுதலுக்கு உட்பட்டது
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.