மாதாந்திர மின் பராமரிப்பு பணி : தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

Continues below advertisement

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 3 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகரம் மற்றும் குத்தாலம் வட்டாரப் பகுதிகளில் நாளை மே 26 -ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து மயிலாடுதுறை பராமரிப்பு பிரிவு உதவி செயற்பொறியாளர் அப்துல் வஹாப் மரைக்காயர் மற்றும் குத்தாலம் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவு உதவி செயற்பொறியாளர் அருள்செல்வன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

Continues below advertisement

மயிலாடுதுறை துணை மின் நிலையம்

மயிலாடுதுறை 110/33-11 கிவோ தொகுப்பு துணை மின் நிலையத்தில் நாளை (26.05.2026) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

நகரப் பகுதிகள்

* பெசன்ட் நகர்

* மேலவீதி

* மேலமடவிளாகம்

* அய்யாரப்பர் கீழவீதி

* அய்யாரப்பர் தெற்குவீதி

* அய்யாரப்பர் கோவில் தெரு

 முக்கிய சாலைகள்:

* திருவாரூர் சாலை

* கச்சேரி சாலை 

* காமராஜர் சாலை

* பட்டமங்கல தெரு

* பெரியகடைத் தெரு

* மகாதான தெரு

* பாசிகடைத் தெரு

* பூக்கடை தெரு

குடியிருப்புப் பகுதிகள்

* சுப்ரமணியபுரம்

* ஆராயதெரு

* காமராஜர் காலணி

* ஸ்ரீ நகர் காலணி

* புது தெரு (1-5)

* தைக்கால் தெரு

* டபிர் தெரு

* தெற்குவீதி

* அரண்மனை நகர்

* திருவள்ளுவர் நகர்

* அண்ணா வீதி

* மேலஒத்தசரகு

* ஜங்சன் 

* கஸ்தூரி பாய் தெரு

இதர பகுதிகள்:

* தெற்கு சாலிய தெரு

* பெரிய சாலிய தெரு

* வடக்கு சாலிய தெரு

* திருவள்ளுவபுரம்

* அய்யனார் கோயில் தெரு 

* ஹாஜியார் நகர்

* பியர்லஸ் தியேட்டர் பகுதி 

* சின்ன கண்ணார தெரு

* கலைஞர் காலணி

* நீதிமன்ற வளாகம்

* ரேவதி நகர் 

* புனுகீஸ்வரர் கோயில் நான்கு வீதிகள்

* அறுபத்து மூவர்பேட்டை மற்றும் மேம்பாலப் பகுதிகள்.

புறநகர் மற்றும் கிராமங்கள்

* மூவலூர்

* வழுவூர்

* எலந்தங்குடி

* கப்பூர்

* வடகரை 

* அன்னவாசல்

* இளையாளூர்

* அரங்ககுடி

* செறுதியூர்

* குளிச்சார்

* மங்கநல்லூர்

* சீனிவாசபுரம்

* சித்தர்காடு

* அரையபுரம்

* மறையூர் 

மற்றும் கூறைநாடு ஆகிய பகுதிகள்.

குத்தாலம் மற்றும் கடலங்குடி துணை மின் நிலையங்கள்

இதேபோல் குத்தாலம் மற்றும் கடலங்குடி துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குத்தாலம் துணை மின் நிலையம்

* குத்தாலம் டவுன்

* குத்தாலம் தேரடி

* மாதிரிமங்கலம் 

* சேத்திரபாலபுரம்

* அரையபுரம்

* தொழுதாலங்குடி 

மற்றும் கீழவெளி பகுதிகள்.

கடலங்குடி துணை மின் நிலையம்  கடலங்குடி

* வாணாதிராஜபுரம்

* சோழம்பேட்டை

* மாப்படுகை

* கோழிகுத்தி

* முருகமங்கலம்

* திருமணஞ்சேரி

* ஆலங்குடி

மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள்.

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.