Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (17.06.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

Continues below advertisement

மாதாந்திர மின் பராமரிப்பு பணி

தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி அல்லது காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

கிடாரங்கொண்டான் துணை மின் நிலையம் 

சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட 110/11 KV கிடாரங்கொண்டான், துணை மின் நிலையத்தில் வரும் 17.06.2025 (செவ்வாய்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளான கிடாரங்கொண்டான், செம்பனார்கோயில், பரசலூர் மெயின் ரோடு, மேலப்பாதி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கீழையூர், கருவி, ஆக்கூர், செம்பதனிருப்பு, தலைச்சங்காடு, மாமாகுடி, மருதம்பள்ளம், சின்னங்குடி, மடப்புரம், காளகஸ்திநாதபுரம், முடிகண்டநல்லூர், ராதாநல்லூர், ஆலங்காடு, இளையமதுகூடம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செம்பனார்கோயில் உதவிசெயற்பொறியாளர் C.சரவணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

 

கடலங்குடி துணை மின் நிலையம் 

அதேபோன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மயிலாடுதுறை கோட்ட உதவி செயற் பொறியாளர் அருள்செல்வன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கடலங்குடி, துணைமின் நிலையத்தில் 17.06.2025 செவ்வாய்க்கிழமை அன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கடலங்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் திருமணஞ்சேரி, வாணாதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, கோழிகுத்தி, முருகமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.