மயிலாடுதுறை: இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் (EBC), மற்றும் சீர்மரபினர் (DNT) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் உயர்தரக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் முக்கிய திட்டமான PM-YASASVI – Top Class Education in Schools for OBC, EBC & DNT Students திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற, தகுதியுள்ள மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal - NSP) விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement


திட்டத்தின் நோக்கம் மற்றும் பயனாளிகள்


* திட்டத்தின் பெயர்: பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM-YASASVI – Top Class Education in Schools).


*பயனாளிகள்: இதர பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNT), பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் (EBC), மற்றும் சீர்மரபினர் (DNT) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள்.


* கல்வி நிறுவனங்கள்: 2025-26 ஆம் ஆண்டிற்குத் தேசிய கல்வி உதவித்தொகைக்காக மத்திய அரசால் பட்டியலிடப்பட்டுள்ள (Top Class Schools) பள்ளிகளில் பயிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.


* வருமான வரம்பு: இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்க, அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


மாணவர்களின் வசதிக்காக, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட தேதிகள் பின்வருமாறு:


* கடைசி நாள் ; மாணவர்கள் விண்ணப்பிக்க (புதியது மற்றும் புதுப்பித்தல்) 15.11.2025 


* கல்வி நிறுவனங்கள் விண்ணப்பங்களைச் சரிபார்க்க 25.11.2025 


விண்ணப்பிக்கும் முறை: புதியது மற்றும் புதுப்பித்தல்


மாணவர்கள் https://Scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


1. புதுப்பித்தல் (Renewal)


 * கடந்த நிதியாண்டில் (2024-25) இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவ, மாணவியர்கள், அதே இணைப்பில் சென்று OTR (One Time Registration) பதிவு செய்து, 2025-26 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்தல் (Renewal) மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


2. புதிய விண்ணப்பம் (Fresh Application):


* நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள், NSP தளத்தில் தங்களது கைபேசி எண் (Mobile Number) மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.


* விவரங்களை அளித்ததும், OTR Number & Password ஆகியவை பதிவுசெய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரும். இந்த OTR எண்ணைப் பயன்படுத்தி, 2025-26 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்குரிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து, புதிய விண்ணப்பத்தை (Fresh Application) சமர்ப்பிக்க வேண்டும்.


கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள்


மாணவர்கள் இத்திட்டத்தின் பயனை முழுமையாகப் பெற பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்:


* பள்ளிகளின் பட்டியல்: மத்திய அரசால் பட்டியலிடப்பட்டுள்ள (Top Class Schools) பள்ளிகளின் விவரங்களை அறிந்துகொள்ள, தொடர்புடைய முதன்மை கல்வி அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்.


* திட்டம் குறித்த தகவல்கள்: இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள, தேசிய கல்வி உதவித்தொகை (NSP) இணையதளமான https://Scholarship.gov.in-ஐ அணுகி, கல்வி உதவித்தொகையின் பயன்களைப் பெறலாம்.


தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் அனைவரும் கால அவகாசத்தைப் பயன்படுத்தி, நீட்டிக்கப்பட்ட இறுதித் தேதிக்குள் விண்ணப்பித்து மத்திய அரசின் இந்த உயரிய கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.


 


Mayiladuthurai District collector announcement PM-YASASVI scholarship scheme