<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>mayiladuthurai</title><atom:link href="https://tamil.abplive.com/mayiladuthurai/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Fri, 24 Jul 2026 09:25:52 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[200-க்கு 199.50 மதிப்பெண்! மீன்வளப் பல்கலைக்கழகத் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்திய 3 மாணவர்கள்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/nagapattinam-tamilnadu-dr-j-jayalalithaa-fisheries-university-undergraduate-rank-list-tnn-268761</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/nagapattinam-tamilnadu-dr-j-jayalalithaa-fisheries-university-undergraduate-rank-list-tnn-268761#respond</comments><pubDate>Thu, 23 Jul 2026 19:38:54 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/nagapattinam-tamilnadu-dr-j-jayalalithaa-fisheries-university-undergraduate-rank-list-tnn-268761</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நாகப்பட்டினம், ஜூலை 23: &lt;/strong&gt;தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளில் 2026&amp;ndash;27-ஆம் கல்விய ஆண்டிற்கான பல்வேறு இளநிலை மீன்வளப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வுத் தரவரிசைப் பட்டியலை (Rank List) பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் நா. ஃபெலிக்ஸ் &amp;nbsp;23.07.2026 இன்று வெளியிட்டார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கல்லூரிகள் மற்றும் இடங்கள் விவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவிக்கையில், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் 10 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் ஒரு இணைப்புத் தனியார் கல்லூரி என மொத்தம் 11 கல்லூரிகளில் உள்ள 447 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பாடப்பிரிவு வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மீன்வள அறிவியல் (B.F.Sc.):&lt;/strong&gt; 187 இடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மீன்வளப் பொறியியல் (B.Tech. Fisheries Engineering):&lt;/strong&gt; 50 இடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மீன்வள உயிர்த்தொழில்நுட்பம் (B.Tech. Fisheries Biotechnology):&lt;/strong&gt; 43 இடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;உணவுத் தொழில்நுட்பம் (B.Tech. Food Technology):&lt;/strong&gt; 42 இடங்கள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;&lt;strong&gt;இளநிலை வணிக நிர்வாகவியல் (B.B.A.):&lt;/strong&gt; 21 இடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இளநிலை தொழிற்கல்வி (B.Voc.):&lt;/strong&gt; 78 இடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், மீனவர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் சிறப்பு முயற்சியாக, மீன்வள அறிவியல் படிப்பில் 24 இடங்களும், மீன்வளப் பொறியியல் படிப்பில் 2 இடங்களும் தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பங்கள் மற்றும் மாணவிகளின் அதிகப்படியான ஆர்வம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த 15.05.2026 முதல் 14.06.2026 வரை பெறப்பட்டன. பின்னர், விண்ணப்பதாரர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 23.06.2026 வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், விண்ணப்பங்களில் பிழைகளைத் திருத்தம் செய்யும் வகையில் 4 நாட்கள் சிறப்பு திருத்தச் சாளரமும் (Correction Window) திறக்கப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு மொத்தம் 15,585 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. இதில் ஆண்களை விட மாணவிகளே அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மாணவிகள்: &amp;nbsp;&lt;/strong&gt;59% (9,265 விண்ணப்பங்கள்)&lt;br /&gt;&lt;strong&gt;மாணவர்கள்:&lt;/strong&gt; 41% (6,320 விண்ணப்பங்கள்)&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பாடப்பிரிவு வாரியாக பெறப்பட்ட விண்ணப்பங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;1.மீன்வள அறிவியல் (B.F.Sc.): 4,904 விண்ணப்பங்கள்&lt;br /&gt;2. இளநிலை தொழிற்கல்வி (B.Voc.): 3,822 விண்ணப்பங்கள்&lt;br /&gt;3. மீன்வள உயிர்த்தொழில்நுட்பம்: 1,890 விண்ணப்பங்கள்&lt;br /&gt;4.மீன்வளப் பொறியியல்: 1,813 விண்ணப்பங்கள்&lt;br /&gt;5. உணவுத் தொழில்நுட்பம்: 1,796 விண்ணப்பங்கள்&lt;br /&gt;6. இளநிலை வணிக நிர்வாகவியல் (B.B.A.): 1,370 விண்ணப்பங்கள்&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முதலிடம் பிடித்த மாணவர்கள் மற்றும் சிறப்புப் பிரிவு இடஒதுக்கீடு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் செல்வன். எஸ். அனிஷ்குமார், செல்வன். ஜி. சேதுராஜன் மற்றும் செல்வி. டி. பிரியவதனா ஆகிய மூவரும் 200-க்கு 199.50 தகுதி மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து, செல்வி. வி. ஜெ. அக்ஷயா 198.89 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சிறப்புப் பிரிவு விண்ணப்ப விவரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* 7.5% அரசுப் பள்ளி மாணவர்கள் இடஒதுக்கீடு: 1,250 விண்ணப்பங்கள்&lt;br /&gt;* மீனவர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான 5% மற்றும் 15% இடஒதுக்கீடு: 366 விண்ணப்பங்கள்&lt;br /&gt;* விளையாட்டு வீரர்கள் பிரிவு: 116 விண்ணப்பங்கள்&lt;br /&gt;* தொழிற்கல்விப் பிரிவு மாணவர்கள் (5%): 104 விண்ணப்பங்கள்&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகள்: 30 விண்ணப்பங்கள்&lt;br /&gt;&amp;nbsp;* மாற்றுத்திறனாளிகள் (5%): 23 விண்ணப்பங்கள்&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பிழைத் திருத்தம் மற்றும் கலந்தாய்வு அட்டவணை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தரவரிசைப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள மொத்த மதிப்பெண் அல்லது சதவீத மதிப்பெண்களில் ஏதேனும் பிழைகள் அல்லது கோரிக்கைகள் இருப்பின், விண்ணப்பதாரர்கள் வருகின்ற 27.07.2026 அன்று மாலை 5.00 மணிக்குள், &lt;a href=&quot;mailto:admissionug@tnfu.ac.in&quot;&gt;admissionug@tnfu.ac.in&lt;/a&gt; என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவிக்குமாறு துணைவேந்தர் கேட்டுக்கொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நேரடி கலந்தாய்வு குறித்து அவர் கூறுகையில், முதற்கட்டமாக சிறப்புப் பிரிவு மற்றும் கூடுதல் இடஒதுக்கீடுகளுக்கான நேரடி கலந்தாய்வு நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு 2026 ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில், நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில் நேரில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/23/d33e73eaf0b9211beb48e81b321ec6cb1784815648119186_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[ஆடி ஆஷாட நவராத்திரி: காரைமேடு வாராஹி அம்மனுக்கு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-sirkazhi-karaimedu-varahi-amman-aadi-ashada-navaratri-paalkudam-festival-tnn-268733</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-sirkazhi-karaimedu-varahi-amman-aadi-ashada-navaratri-paalkudam-festival-tnn-268733#respond</comments><pubDate>Thu, 23 Jul 2026 16:43:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-sirkazhi-karaimedu-varahi-amman-aadi-ashada-navaratri-paalkudam-festival-tnn-268733</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காரைமேடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மகா திரிசூலம் வாராஹி அம்மன் திருக்கோயிலில், ஆடி மாத ஆஷாட நவராத்திரி விழாவை முன்னிட்டு பால்குடப் பெருவிழா மிக விமர்சையாகவும் ஆன்மீகச் சிறப்புடனும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆலய சிறப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காரைமேடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மகா திரிசூலம் வாராஹி அம்மனிடம் வேண்டிய வரங்கள் அனைத்து நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை, இங்கு எதிரிகள் தொல்லை, சட்ட சிக்கல்கள், திருமண தடை, குழந்தை பாக்கியம் என பக்தர்களின் வேண்டுதல் முழுவதும் நிறைவேறுவதாகவும் அதனால் நாள்தோறும் இங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மங்கள வாத்தியங்களுடன் தொடங்கிய பால்குட ஊர்வலம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆடி மாதத்தில் வரும் ஆஷாட நவராத்திரி என்பது வாராஹி அம்மனுக்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த புண்ணிய திருநாளை முன்னிட்டு, காரைமேடு மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. விழாவின் முக்கிய நிகழ்வாக, அருகிலுள்ள சூரக்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் இருந்து பக்தர்களின் பால்குட ஊர்வலம் புறப்பட்டது. பக்தர்கள் அனைவரும் மஞ்சள் ஆடை அணிந்து, 'ஓம் வாராஹி தாயே போற்றி' என்ற ஆன்மீக முழக்கங்களை எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேளதாளங்கள் அதிர, புறப்பட்ட இந்த ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று, காரைமேடு வாராஹி அம்மன் கோயிலை வந்தடைந்தது. சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் நேர்த்திக்கடனாக பால்குடங்களை ஏந்தி வந்த காட்சி ஆன்மீகச் பரவசத்தை ஏற்படுத்தியது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;16 வகையான திரவியங்களால் மகா அபிஷேகம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட பால்குடங்களைக் கொண்டு, மூலவர் ஸ்ரீ மகா திரிசூலம் வாராஹி அம்மனுக்குப் பாலாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நறுமணப் பொருட்கள்:&lt;/strong&gt;&amp;nbsp;பன்னீர், சந்தனம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அபிஷேக திரவியங்கள்:&lt;/strong&gt; பஞ்சாமிர்தம், தயிர், தேன், திருநீறு, இளநீர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இயற்கைப் பொருட்கள்:&lt;/strong&gt; பல்வேறு வகையான நறுமணப் பூக்கள் மற்றும் கனிவகைகள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆகியவற்றைக் கொண்டு அம்மனுக்கு வரிசையாக மகா அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகத்தின் போது திரண்டிருந்த பக்தர்கள் அனைவரும் பக்திப் பரவசத்துடன் அம்மனை தரிசித்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த வாராஹி அம்மன்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சிறப்பு அபிஷேகங்கள் நிறைவுற்றதும், மகா திரிசூலம் வாராஹி அம்மனுக்கு வண்ணப் பட்டாடைகள் உடுத்தப்பட்டு, பல வண்ண மலர்களால் தொடுக்கப்பட்ட பிரம்மாண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு, திவ்யமான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டபோது கோயில் வளாகமே பக்தி முழக்கங்களால் அதிர்ந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனைத் தரிசித்து பக்தர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சிறப்பு அன்னதானம் மற்றும் ஒருங்கிணைப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, விழாவிற்கு வருகை தந்திருந்த திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் சுவையான மகா அன்னதானம் வழங்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இவ்விழாவிற்கான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும், பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணிகளையும் கோயில் நிர்வாகி ஸ்ரீ சாய் கிரண் சுவாமிகள் மற்றும் காரைமேடு, சூரக்காடு கிராம பொதுமக்கள் இணைந்து மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகள் பகுதி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/23/a41c6efbcc2d540a3edef0fcc624a5811784805146528186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஒரே முகாமில் பல சலுகைகள்: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரின் சூப்பர் பிளான்!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-special-camps-adi-dravidar-tribal-welfare-boards-district-collector-announcement-tnn-268698</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-special-camps-adi-dravidar-tribal-welfare-boards-district-collector-announcement-tnn-268698#respond</comments><pubDate>Thu, 23 Jul 2026 11:47:29 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-special-camps-adi-dravidar-tribal-welfare-boards-district-collector-announcement-tnn-268698</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நாகப்பட்டினம்: &lt;/strong&gt;நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நல வாரியங்களில் உறுப்பினர்களாகப் பதிவு செய்திட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே. ஜே. பிரவீன் குமார், தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சிறப்பு முகாமின் முதன்மை நோக்கம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பல்வேறு நல வாரியங்களில், தகுதியிருந்தும் இதுவரை உறுப்பினர்களாகப் பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள மக்களைக் கண்டறிந்து, அவர்களை உடனுக்குடன் உறுப்பினர்களாகப் சேர்ப்பதே இச்சிறப்பு முகாம்களின் முக்கிய நோக்கமாகும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;இச்சிறப்பு முகாமில் பயனடையவுள்ள நல வாரியங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* பழங்குடியினர் நல வாரியம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* நரிக்குறவர் நல வாரியம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* புதிரை வண்ணார் நல வாரியம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* தூய்மைப் பணியாளர் நல வாரியம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேற்கண்ட வாரியங்களில் இதுவரை தங்களைப் பதிவு செய்யாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சான்றிதழ்கள் பெற இணையவழி விண்ணப்ப வசதி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நல வாரியங்களில் உறுப்பினராகப் பதிவு செய்வதற்குத் தேவையான சாதிச் சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆகியவை இல்லாத தகுதியான பயனாளிகளுக்கு உதவிடும் வகையில், இம்முகாமிலேயே இணையவழி (Online) வாயிலாக விண்ணப்பிக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் மூலம், சான்றிதழ்கள் இல்லாத உறுப்பினர்கள் முகாம் நடைபெறும் இடத்திலேயே நேரடியாக விண்ணப்பித்து, விரைவாகச் சான்றிதழ்களைப் பெற்று நல வாரியங்களில் இணைய முடியும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முகாம் நடைபெறும் நாட்கள் மற்றும் இடங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்கள் அனைவரும் எளிதில் கலந்துகொள்ளும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் முக்கிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் இச்சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;முகாம் நடைபெறும் நாட்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* 25.07.2026 (சனிக்கிழமை)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* 01.08.2026 (சனிக்கிழமை)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* 08.08.2026 (சனிக்கிழமை)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* 16.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;முகாம் நடைபெறும் மையங்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;1. நாகப்பட்டினம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;2. கீழ்வேளூர் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;3. வேதாரண்யம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் நன்மைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, விபத்து நிவாரண நிதியுதவி, இயற்கை மரணத்திற்கான நிதியுதவி, ஈமச்சடங்கு உதவித்தொகை, திருமணம் மற்றும் மகப்பேறு உதவிகள், முதியோர் ஓய்வூதியம் மற்றும் தொழில் தொடங்குவதற்கான கடனுதவிகள் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை முறையான நல வாரியப் பதிவின் மூலமே பெற முடியும். எனவே, இந்த நன்மைகள் அனைத்தும் விளிம்புநிலை மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் இச்சிறப்பு முகாம்கள் திட்டமிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாகப்பட்டினம் மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியினர், நரிக்குறவர், புதிரை வண்ணார் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் இந்த அரிய வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முகாமிற்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களின் புகைப்படங்கள், தற்காலிக முகவரிச் சான்றுகள் மற்றும் கைவசம் உள்ள ஆவணங்களுடன் நேரில் வருகை தந்து, இணையவழி மூலம் விண்ணப்பித்து, நல வாரியங்களில் உறுப்பினர்களாகப் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கே. ஜே. பிரவீன் குமார், கேட்டுக்கொண்டுள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/23/659c0f80981dc8f30a28b35ebe8f482d1784787389672186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஒரே நாளில் 500+ பேருக்கு வேலை! ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!]]></title><link>https://tamil.abplive.com/jobs/nagapattinam-district-collector-announcement-job-fair-tnn-268693</link><comments>https://tamil.abplive.com/jobs/nagapattinam-district-collector-announcement-job-fair-tnn-268693#respond</comments><pubDate>Thu, 23 Jul 2026 11:17:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/nagapattinam-district-collector-announcement-job-fair-tnn-268693</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நாகப்பட்டினம்:&lt;/strong&gt; நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளைய தினம் 24.07.2026 (வெள்ளிக்கிழமை) அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;25-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 24-ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை இம்முகாம் நடைபெறவுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இவ்வேலைவாய்ப்பு முகாமில் நாகப்பட்டினம் மாவட்டம் மட்டுமன்றி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 25-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் நேரில் பங்கேற்கின்றன. அந்நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 500-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களைத் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இம்முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வயது வரம்பு:&lt;/strong&gt; 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்துகொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கல்வித் தகுதி:&lt;/strong&gt; 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டயப்படிப்பு (Diploma), ஐ.டி.ஐ (ITI), பி.இ (B.E.) மற்றும் பிற பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கான பணி வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;இலவச ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேலைவாய்ப்பு மட்டுமன்றி, இம்முகாமில் பங்குபெறும் இளைஞர்களுக்குப் பல்வேறு கூடுதல் வழிகாட்டுதல்களும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் (Skill Development Training) குறித்த தகவல்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* சுயதொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு வங்கிக் கடன் வசதி பெறுவதற்கான ஆலோசனைகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* அயல்நாட்டு வேலைவாய்ப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் தகவல்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்தி, நேரில் கலந்துகொண்டு பயனடையுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், கேட்டுக்கொண்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தேவையான ஆவணங்கள் மற்றும் பதிவு செய்யும் முறை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் தங்களது;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;1. சுயவிவர அறிக்கை (Resume / Bio-data)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;2. கல்விச் சான்றிதழ்களின் நகல்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;3. அடையாளச் சான்று (ஆதார் அட்டை)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;4. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;5. முன்அனுபவம் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆகியவற்றுடன் நேரில் வருகை தர வேண்டும். மேலும், இதில் பங்கேற்க விரும்பும் வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் &lt;a href=&quot;http://www.tnprivatejobs.tn.gov.in&quot;&gt;www.tnprivatejobs.tn.gov.in &lt;/a&gt;என்ற அரசு இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முதலாளிகள் மற்றும் இளைஞர்களுக்கு வேண்டுகோள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களும் இம்முகாமில் கலந்துகொண்டு, தங்களுக்குத் தேவையான உள்ளூர் பணியாளர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாம் குறித்த கூடுதல் தகவல்களுக்குத் தொலைபேசி எண்: 04365-252701 என்ற எண்ணில் நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர் புகொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர் அனைவரும் இந்த மெகா வாய்ப்பினை பயன்படுத்தி பயனடைய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/23/504be8b11471a277c348e2ded17b8eed1784785613670186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Mayiladuthurai Power Shutdown (23.07.2026) : இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? முழு பட்டியல் இதோ..!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-power-shutdown-today-s-23-07-2026-power-cut-outage-areas-affected-details-tnn-268683</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-power-shutdown-today-s-23-07-2026-power-cut-outage-areas-affected-details-tnn-268683#respond</comments><pubDate>Thu, 23 Jul 2026 09:32:06 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-power-shutdown-today-s-23-07-2026-power-cut-outage-areas-affected-details-tnn-268683</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டத்தில் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றைய தினம் பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளதாக உதவி செயற் பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை கோட்டத்திற்கு உட்பட்ட கடலங்குடி மற்றும் குத்தாலம் ஆகிய முக்கிய துணைமின் நிலையங்களில் இன்று (23.07.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, குறிப்பிட்ட துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் முக்கிய ஊர்கள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் குத்தாலம் உதவி செயற் பொறியாளர் பொறிஞர். N. அருள்செல்வன் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்களுக்கு தடங்கலற்ற மற்றும் சீரான மின்சாரத்தை வழங்கும் நோக்கில், மின்வாரியம் சார்பாக ஒவ்வொரு மாதமும் துணைமின் நிலையங்களில் சுழற்சி முறையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பிகள், மின் மாற்றிகள் (ட்ரான்ஸ்ஃபார்மர்கள்), உயர் அழுத்த மின்பாதைகள் மற்றும் துணைமின் நிலைய கருவிகளில் உள்ள பழுதுகள் கண்டறியப்பட்டு சீரமைக்கப்படுகின்றன. மேலும், மரக்கிளைகள் மின் கம்பிகளில் உரசுவதை தவிர்க்கும் வகையில் அவற்றை அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மின் தடை ஏற்படும் முக்கிய பகுதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடலங்குடி மற்றும் குத்தாலம் துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பின்வரும் ஊர்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின் தடை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;nbsp;* கடலங்குடி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;nbsp;* வாணாதிராஜபுரம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;nbsp;* சோழம்பேட்டை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;nbsp;* மாப்படுகை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;nbsp;* கோழிகுத்தி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;nbsp;* முருகமங்கலம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;nbsp;* திருமணஞ்சேரி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;nbsp;* ஆலங்குடி மாதிரிமங்கலம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;nbsp;* தொழுதலாங்குடி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;nbsp;* சேத்திராபாலபுரம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;nbsp;* அஞ்சுவார்தலை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;nbsp;* வில்லியநல்லூர்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்று காலை 9.00 மணிக்கு தொடங்கும் இந்த பராமரிப்பு பணி, மாலை 5.00 மணி வரை இடைவிடாது 8 மணிநேரம் நடைபெறும். பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நிறைவடைந்தவுடன் மாலை 5.00 மணிக்கு மேல் மீண்டும் படிப்படியாக மின் விநியோகம் வழக்கம் போல் சீரமைக்கப்படும். மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மின் தடை காரணமாக பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது அன்றாடப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக, குடிநீர் பயன்பாடு, வணிக வளாக இயக்கங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட பிற அத்தியாவசிய பணிகளை மின் தடையின் நேரத்திற்கு ஏற்ப திட்டமிட்டு செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் மின் கம்பிகளிலோ அல்லது மின் சாதனங்களிலோ பொதுமைகளோ அல்லது திறனற்ற நபர்களோ தொட வேண்டாம் எனவும், மின் தடை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாறுதலுக்கு உட்பட்டது&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/23/097a2f863e3d54b329f5f70277f6e7271784779303878186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-tamilnadu-government-school-part-time-special-teachers-permanent-employment-demand-for-budget-tnn-268655</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-tamilnadu-government-school-part-time-special-teachers-permanent-employment-demand-for-budget-tnn-268655#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 22:27:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-tamilnadu-government-school-part-time-special-teachers-permanent-employment-demand-for-budget-tnn-268655</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;வரவிருக்கும் தமிழ்நாடு அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்), கடந்த 16 ஆண்டுகளாகக் குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இது தொடர்பாகத் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;16 ஆண்டு காலப் பணி அனுபவமும், தற்போதைய நிலையும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் கடந்த 2011-ஆம் கல்வியாண்டில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் மாதம் ரூபாய் 5,000 தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அதிமுக ஆட்சிக் காலம்:&lt;/strong&gt; 2020-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூபாய் 5,000 சம்பள உயர்வு வழங்கப்பட்டு, ஊதியம் 10,000 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;திமுக ஆட்சிக் காலம்:&lt;/strong&gt; அதனைத் தொடர்ந்து வந்த திமுக ஆட்சியில் ரூபாய் 5,000 உதவித்தொகை அறிவிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் மூலம் தற்போது பகுதிநேர ஆசிரியர்களுக்குச் சம்பளமாக ரூபாய் 10,000 மற்றும் உதவித்தொகையாக ரூபாய் 5,000 என மொத்தம் ரூபாய் 15,000 வழங்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கோரிக்கைகளும் ஏமாற்றங்களும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிப்புகள் வெளியிடப்பட்ட போதிலும், கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு அரசுகளுமே பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யவில்லை. மேலும், பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பியபோதும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இக்காலக்கட்டத்தில் மரணம் மற்றும் பணி ஓய்வு காரணமாகச் சுமார் 5,000 காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளன. தற்போது 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் மட்டுமே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வாக்குறுதியை நிறைவேற்றத் தவெக அரசுக்கு வேண்டுகோள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தனது முதலாவது பட்ஜெட்டைச் சமர்ப்பிக்க உள்ளது. &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt;வின் தேர்தல் அறிக்கையில், 5 ஆண்டுகள் தற்காலிகமாகப் பணிபுரிந்த ஆசிரியர்கள் அனைவரும் நிரந்தரமாக்கப்படுவார்கள்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்காலிகமாகப் பணிபுரிந்த காலத்திற்கு நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையான &quot;சம வேலைக்கு சம ஊதியம்&quot; பெற்றுத் தரப்படும். என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. &quot;இந்த பணி நிரந்தர வாக்குறுதிக்கான கோப்பில் முதலமைச்சர் விஜய் கையொப்பமிட்டால், கடந்த 16 ஆண்டுகளாகத் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் 11,773 ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு ஒரு புதிய ஒளிமயமான வாழ்வு கிடைக்கும்.&quot; என பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அடிப்படை வசதிகள் இன்றித் தவிக்கும் ஆசிரியர்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி (PF), உயிரிழந்தோர் குடும்பத்திற்கான நிவாரணம், பணிநிறைவு பணிக்கொடை (Gratuity) போன்ற எந்தவொரு சமூகப் பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல், குறைந்த தொகுப்பூதியத்தில் அன்றாடத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாமல் பகுதிநேர ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாணவர்களின் நலன் கருதி 16 ஆண்டுகளாகக் கல்விப் பணியாற்றி வரும் இவர்களை முதலில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதன் பின்னரே ஏற்படுகின்ற காலிப்பணியிடங்களை உடற்கல்வி, ஓவியம், கணினி உள்ளிட்ட பாடங்களில் நிரப்ப வேண்டும். எனவே, தற்போது 1,328 உடற்கல்வி ஆசிரியர்களைக் காலிப் பணியிடங்களில் நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ள அறிவிப்பைக் கைவிட வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நிதி ஒதுக்கீடு மற்றும் கொள்கை முடிவு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது 11,773 ஆசிரியர்களுக்கான ரூ 15,000 தொகுப்பூதியத்திற்கு அரசுக்கு ஆண்டுக்குச் சுமார் ரூ 200 கோடி செலவாகிறது. இவர்களைக் காலமுறை ஊதியத்தில் (அடிப்படைச் சம்பளம் ரூ 20,600) கொண்டு வர ஆண்டுக்கு கூடுதலாக ரூபாய் 200 கோடி மட்டுமே தேவைப்படும். எனவே, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், அமைச்சரவையின் கொள்கை முடிவாக இதற்கான அறிவிப்பைச் சேர்க்க வேண்டும், காலமுறை சம்பளம் வழங்கத் தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும், பகுதிநேர ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கி, அவர்களைச் சிறப்பாசிரியர்களாக நியமித்து முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/97310f713b35e8d2fae06914e08b63841784739388779186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! இந்த 5 நாட்களில் இதைச் செய்யாவிட்டால் சிக்கலா?]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-ration-card-e-kyc-biometric-authentication-update-tnn-268625</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-ration-card-e-kyc-biometric-authentication-update-tnn-268625#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 17:03:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-ration-card-e-kyc-biometric-authentication-update-tnn-268625</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மின்னணு முறையில் முகவரி மற்றும் உறுப்பினர்களின் விவரங்களைச் சரிபார்க்கும் 'e-KYC' கைரேகைப் புதுப்பித்தல் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொது விநியோகத் திட்ட சேவைகளை எவ்வித தடையுமின்றி பொதுமக்கள் பெறுவதற்கும், தகுதியான பயனாளிகளுக்குச் சீரான முறையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கும் இச்சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் சிறப்பு முகாம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இச்சிறப்பு முகாம்கள் ஜூலை 21, 2026 அன்று தொடங்கி ஜூலை 25, 2026 வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறவுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;முகாம் நடைபெறும் நாட்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* 21.07.2026 (செவ்வாய்க்கிழமை)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* 22.07.2026 (புதன்கிழமை)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* 23.07.2026 (வியாழக்கிழமை)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* 24.07.2026 (வெள்ளிக்கிழமை)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* 25.07.2026 (சனிக்கிழமை)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முகாம் நாட்களில் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு அருகிலுள்ள மையங்களுக்குச் சென்று எவ்வித சிரமமுமின்றி இச்சேவையைப் பெற்றுக்கொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;குடும்ப அட்டையில் உள்ள &amp;lsquo;அனைத்து உறுப்பினர்களுக்கும்&amp;rsquo; கட்டாயம்!&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த e-KYC புதுப்பித்தல் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், குடும்ப அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் (பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட) தவறாமல் நேரில் சென்று தங்களது விரல்ரேகையை (Biometric Authentication) பதிவு செய்து புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொது விநியோகத் திட்டத்தில் போலி உறுப்பினர்களை நீக்குவதற்கும், பயனாளிகளின் துல்லியமான விவரங்களைப் பராமரிப்பதற்கும் இந்த கைரேகைப் பதிவைப் புதுப்பிப்பது மிகவும் அவசியமாகும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முகாம் நடைபெறும் இடங்கள் மற்றும் பகுதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்கள் தங்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாவட்டம் முழுவதும் பல்வேறு மையங்களில் இச்சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;1. அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் (Taluk Offices):&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில் பொதுமக்கள் இச்சேவையைப் பெறலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;2. ஆதார் இ-சேவை மையங்கள் (Aadhaar e-Sevai Centres):&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டத்தின் பின்வரும் முக்கிய வட்டாரங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் ஆதார் இ-சேவை மையங்களிலும் இ முகாம்கள் நடைபெறுகின்றன&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* மயிலாடுதுறை&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* குத்தாலம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* சீர்காழி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* தரங்கம்பாடி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* செம்பனார்கோவில்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* கொள்ளிடம்&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்கள் செய்ய வேண்டியவை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;1. தேவையான ஆவணங்கள்:&lt;/strong&gt; இ-கேஒய்சி (e-KYC) புதுப்பித்தலுக்குச் செல்லும்போது குடும்ப அட்டை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளை எடுத்துச் செல்வது நல்லது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;2. நேரடி வருகை:&lt;/strong&gt; விரல்ரேகைப் பதிவு செய்யப்பட வேண்டுமென்பதால் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் நேரில் வர வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;3.காலக்கெடுவை தவறவிடாதீர்கள்:&lt;/strong&gt; இறுதி நேர நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, ஜூலை 25-ஆம் தேதிக்குள் பொதுமக்கள் உடனடியாகத் தங்களுக்கு அருகிலுள்ள மையங்களுக்குச் சென்று கைரேகைப் புதுப்பித்தல் பணியை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அரசின் இச்சேவையை மயிலாடுதுறை மாவட்டப் பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்தி, தங்களது ரேஷன் கார்டு விவரங்களை உடனுக்குடன் புதுப்பித்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். முன்னதாக ரேஷன் கடைகளில் சென்று கைரேகை பதிவு செய்ய சொல்லி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/00129d966e82a6fbc3824f96d0118e251784720018947186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[அரசு வீடு கிடைக்க ஏற்பாடு... அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி ஆறுதல்: சீர்காழியில் தவெகவினர் நெகிழ்ச்சிப் பணி!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-sirkazhi-home-fire-accident-tvk-relief-essential-goods-tnn-268602</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-sirkazhi-home-fire-accident-tvk-relief-essential-goods-tnn-268602#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 15:30:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-sirkazhi-home-fire-accident-tvk-relief-essential-goods-tnn-268602</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சீர்காழி: &lt;/strong&gt;சீர்காழி அருகே காலிமனையில் உள்ள குப்பைகளுக்கு வைத்த தீ எதிர்பாராதவிதமாக பரவி, அடுத்தடுத்து 3 கூரை வீடுகள் முழுமையாக எரிந்து சாம்பலான சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் சுவர்கள் இடிந்து வீடுகள் தரைமட்டமாகின.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நடந்தது என்ன?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்சாரி (45). இவர் நேற்று மாலை தனக்குச் சொந்தமான காலிமனையில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் மற்றும் குப்பைகளைச் சேகரித்து தீயிட்டு கொளுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அப்போது வீசிய பலத்த காற்றினால், தீ எதிர்பாராதவிதமாக கட்டுக்கடங்காமல் அருகில் இருந்த செங்கேனி என்பவரது கூரை வீட்டிற்குப் பரவியது. தீ சுடச்சுட எரியத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, செங்கேனியின் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளை (கேஸ் சிலிண்டர்) பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;3 வீடுகள் தரைமட்டம் - லட்சக்கணக்கில் இழப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சிலிண்டர் வெடித்த வேகத்தில் தீயின் தாக்கம் மேலும் அதிகரித்து, அதை ஒட்டி இருந்த சந்திரா மற்றும் பக்கிரிசாமி ஆகியோரது கூரை வீடுகளுக்கும் அடுத்தடுத்து பரவியது. இந்த கொடூரத் தீ விபத்தில் மூன்று வீடுகளிலும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெறப்பட்ட ரூ. 5 லட்சம் ரொக்கப் பணம் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. மேலும் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் தங்க நகைகள், ஆடைகள், பாத்திரங்கள் மற்றும் அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் தீக்கிரையாகின. சிலிண்டர் வெடித்த அதிர்வில் கூரை வீடுகளின் பக்கவாட்டுச் சுவர்கள் இடிந்து விழுந்து, 3 வீடுகளும் முற்றிலுமாக தரைமட்டமாகின.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தீயணைப்புத் துறையினர் போராட்டம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தகவல் அறிந்து விரைந்து வந்த சீர்காழி தீயணைப்பு நிலைய வீரர்கள், அப்பகுதி மக்களின் உதவியோடு நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தி அணைத்தனர். இருப்பினும், தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள்ளேயே வீடுகள் அனைத்தும் எரிந்து நாசமாகின. நல்வாய்ப்பாக, வீடுகளில் இருந்தவர்கள் சமயோசிதமாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சீர்காழி காவல் துறையினர், அலட்சியமாக தீ வைத்தது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தவெக சார்பில் உடனடி நிவாரண உதவிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கோபிநாத் உத்தரவின் பேரில், கொள்ளிடம் கிழக்கு ஒன்றியத் துணைச் செயலாளர் பிரேம்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனடியாக களத்தில் இறங்கினர். மாவட்டச் செயலாளர் கோபிநாத் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து தவெக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அத்தியாவசியப் பொருட்களான 25 கிலோ அரிசி, காய்கறிகள், போர்வை, தலையணை மற்றும் பாய்கள் வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தற்காலிகமாகத் தங்குவதற்கு ஏதுவாக, அருகில் தங்குமிடம் ஏற்பாடு செய்ய கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியவர், வீடு எரிந்து பாதிக்கப்பட்ட சாந்தி என்பவரின் மகளின் பிரசவச் செலவிற்காக உடனடி நிதியுதவி வழங்கி உதவினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், &quot;தமிழக அரசின் புதிய வீடு கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டதும், பாதிக்கப்பட்ட இந்த குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் கட்டுவதற்கான ஆணையைப் பெற்றுத்தரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்&quot; என &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; நிர்வாகிகள் உறுதியளித்துச் சென்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காலிமனையில் வைத்த தீயால் 3 குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டிருப்பது அண்ணா நகர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/15e8bb7d9a0c19e1fe92844b8603b87f1784714346766186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-railway-officer-upi-bribe-private-cables-evidence-tnn-268597</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-railway-officer-upi-bribe-private-cables-evidence-tnn-268597#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 14:47:37 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-railway-officer-upi-bribe-private-cables-evidence-tnn-268597</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை ரயில்வே கோட்டத்தில், தகுந்த உரிமம் (License) இன்றி மேம்பாலங்கள் வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்ட தனியார் தொலைத்தொடர்பு கேபிள்களுக்காக ரூ.50,000 வரை லஞ்சம் கோரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான தொலைபேசி உரையாடல் ஆடியோ மற்றும் யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனை ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் ரயில்வே விஜிலன்ஸ் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விதிகளை மீறி செயல்படும் தனியார் நிறுவனங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ரயில்வே இருப்புப் பாதை தண்டவாளங்களை மேம்பாலங்களின் வழியாகவோ அல்லது நிலத்தடி (Underground) பாதைகள் வழியாகவோ கடந்து செல்லும் தனியார் ஃபைபர் மற்றும் தொலைத்தொடர்பு கேபிள் இணைப்புகளுக்கு, ரயில்வே நிர்வாகத்திடம் உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்குரிய கட்டணங்களைச் செலுத்தி, தடையில்லாச் சான்று (NOC) பெற்ற பின்னரே கேபிள் இணைப்புகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது கடுமையான விதியாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆனால், மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் உள்ள சாரங்கபாணி ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பாலங்களின் வழியாக, எந்தவித அனுமதியும் கட்டணமும் இன்றி 15-க்கும் மேற்பட்ட தனியார் கேபிள் இணைப்புகள் முறையற்ற வகையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது தற்செயலாகக் கண்டறியப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ரூ.50,000 லஞ்சம்: அம்பலமான ஆடியோ மற்றும் UPI ஆதாரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முறையான உரிமம் இல்லாமல் கேபிள்களைக் கொண்டு சென்ற தனியார் நிறுவனங்களிடம், அன்றைய காலகட்டத்தில் பணியில் இருந்த ரயில்வே உயர் அதிகாரியான சீனியர் செக்சன் என்ஜினியருக்காக (SSE) லஞ்சம் கேட்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே ட்ராலிமேனாகப் பணிபுரியும் கார்த்தி என்பவர், லஞ்சம் கேட்டு தனியார் கேபிள் நிறுவன உரிமையாளரிடம் பேசிய தொலைபேசி உரையாடல் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆடியோ உரையாடலின் சுருக்கம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;முறையான லைசென்ஸ் இல்லாமல் மேம்பாலம் வழியாகச் செல்லும் கேபிள் இணைப்புகளுக்கு, எனது உயரதிகாரி தலா ரூ.50,000 லஞ்சமாக எதிர்பார்க்கிறார். இதைக் கொடுத்தால் மட்டுமே கேபிள்களை தொடர்ந்து இயக்க முடியும்.&quot; என அந்த உரையாடல் உள்ளது. இந்த ஆடியோவைத் தொடர்ந்து, தனியார் நிறுவன நபர் லஞ்சப் பணத்தின் ஒரு பகுதியை யுபிஐ (UPI) செயலி மூலம் செலுத்திய ஆதாரமும் வெளியாகியுள்ளது. அதில், கடந்த டிசம்பர் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முறையே ரூ.8,000 மற்றும் ரூ.20,000 என மொத்தம் ரூ.28,000 இரண்டு தவணைகளாகச் செலுத்தப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மேலதிகாரிகளின் அலட்சியமும் ஊழியர்களின் கொந்தளிப்பும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ரயில்வே துறைக்கு நேர்மையான முறையில் வர வேண்டிய பல லட்சம் ரூபாய் வருவாய், சில ஊழல் அதிகாரிகளின் சுயநலத்தால் தனிநபர்களின் பைகளுக்குச் சென்றுள்ளது. இது குறித்து நேர்மையான ரயில்வே ஊழியர்கள், தகுந்த ஆதாரங்களுடன் ரயில்வே துறை மேலதிகாரிகளுக்கும், ரயில்வே விஜிலன்ஸ் (Railway Vigilance) அதிகாரிகளுக்கும் ஏற்கனவே பலமுறை புகார் அனுப்பியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இருப்பினும், இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எந்தவித மேல்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தவறு செய்த அதிகாரிகளைக் காப்பாற்றச் சிலர் முயல்வதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அரசுக்குச் சேர வேண்டிய வருவாயைச் சூறையாடி, லஞ்ச வேட்டையில் ஈடுபட்ட உயர் அதிகாரி மற்றும் அவருக்குத் துணையாகச் செயல்பட்ட ட்ராலிமேன் கார்த்தி மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வெளியாகியுள்ள ஆடியோ மற்றும் யுபிஐ பரிவர்த்தனை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, தென்னக ரயில்வே பொதுமேலாளர் மற்றும் விஜிலன்ஸ் துறை உடனடியாகத் தலையிட்டு நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், லஞ்சப் புகாரில் தொடர்புடைய அனைவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் ரயில்வே ஊழியர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/72864a335a13f3c4982fcac307481a4c1784711803093186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Mayiladuthurai Power Shutdown (23.07.2026) :மயிலாடுதுறை மாவட்ட மக்களே அலர்ட்! நாளை இந்த ஊர்களில் 8 மணி நேரம் பவர் கட்! ]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-power-shutdown-tomorrow-23-07-2026-power-cut-outage-areas-affected-details-tnn-268589</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-power-shutdown-tomorrow-23-07-2026-power-cut-outage-areas-affected-details-tnn-268589#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 14:07:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-power-shutdown-tomorrow-23-07-2026-power-cut-outage-areas-affected-details-tnn-268589</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டத்தில் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளதாக உதவி செயற் பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை கோட்டத்திற்கு உட்பட்ட கடலங்குடி மற்றும் குத்தாலம் ஆகிய முக்கிய துணைமின் நிலையங்களில் நாளை (23.07.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, குறிப்பிட்ட துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் முக்கிய ஊர்கள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் குத்தாலம் உதவி செயற் பொறியாளர் பொறிஞர். N. அருள்செல்வன் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்களுக்கு தடங்கலற்ற மற்றும் சீரான மின்சாரத்தை வழங்கும் நோக்கில், மின்வாரியம் சார்பாக ஒவ்வொரு மாதமும் துணைமின் நிலையங்களில் சுழற்சி முறையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பிகள், மின் மாற்றிகள் (ட்ரான்ஸ்ஃபார்மர்கள்), உயர் அழுத்த மின்பாதைகள் மற்றும் துணைமின் நிலைய கருவிகளில் உள்ள பழுதுகள் கண்டறியப்பட்டு சீரமைக்கப்படுகின்றன. மேலும், மரக்கிளைகள் மின் கம்பிகளில் உரசுவதை தவிர்க்கும் வகையில் அவற்றை அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மின் தடை ஏற்படும் முக்கிய பகுதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடலங்குடி மற்றும் குத்தாலம் துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பின்வரும் ஊர்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின் தடை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* கடலங்குடி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* வாணாதிராஜபுரம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* சோழம்பேட்டை&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* மாப்படுகை&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* கோழிகுத்தி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* முருகமங்கலம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* திருமணஞ்சேரி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* ஆலங்குடி மாதிரிமங்கலம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* தொழுதலாங்குடி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* சேத்திராபாலபுரம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* அஞ்சுவார்தலை&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* வில்லியநல்லூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாளை காலை 9.00 மணிக்கு தொடங்கும் இந்த பராமரிப்பு பணி, மாலை 5.00 மணி வரை இடைவிடாது 8 மணிநேரம் நடைபெறும். பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நிறைவடைந்தவுடன் மாலை 5.00 மணிக்கு மேல் மீண்டும் படிப்படியாக மின் விநியோகம் வழக்கம் போல் சீரமைக்கப்படும். மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மின் தடை காரணமாக பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது அன்றாடப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக, குடிநீர் பயன்பாடு, வணிக வளாக இயக்கங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட பிற அத்தியாவசிய பணிகளை மின் தடையின் நேரத்திற்கு ஏற்ப திட்டமிட்டு செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் மின் கம்பிகளிலோ அல்லது மின் சாதனங்களிலோ பொதுமைகளோ அல்லது திறனற்ற நபர்களோ தொட வேண்டாம் எனவும், மின் தடை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாறுதலுக்கு உட்பட்டது&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/694b3028e3058d1160a390b7bdf6dadc1784709387802186_original.jpg" width="220"/></item></channel></rss>