<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>mayiladuthurai</title><atom:link href="https://tamil.abplive.com/mayiladuthurai/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 11 Jun 2026 21:54:25 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[மயிலாடுதுறை: 7,500 ஊழியர்களுக்குப் பணி நிரந்தரம்; நெல் மூட்டைக்கு ₹40 லஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி - அமைச்சர் வேங்கடரமணன் அதிரடி!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-minister-venkatramana-job-permanent-announcement-tnn-263538</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-minister-venkatramana-job-permanent-announcement-tnn-263538#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 18:19:05 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-minister-venkatramana-job-permanent-announcement-tnn-263538</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் 7,500 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சரும், மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான வேங்கடரமணன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாம் நாளாக பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்த தீவிர ஆய்வினை மேற்கொண்ட அமைச்சர், செய்தியாளர்களைச் சந்தித்தபோது இத்தகவலைப் பகிர்ந்து கொண்டார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆதீன மடாதிபதியுடன் சந்திப்பு: நெல் கிடங்குகளுக்கு நிலம் கோரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தனது மாவட்ட ஆய்வின் ஒரு பகுதியாக, அமைச்சர் வேங்கடரமணன் உலகப் புகழ்பெற்ற தருமபுரம் ஆதீன மடத்திற்குச் சென்றார். அங்கு தருமபுரம் ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து, மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல்மணிகளைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப் போதிய கிடங்கு வசதிகள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், புதிய நவீன நெல் கிடங்குகளை அமைப்பதற்குத் தேவையான நிலங்களை வழங்கிட வேண்டும் என்று ஆதீனத்திடம் கோரிக்கை வைத்தார். அமைச்சரின் கோரிக்கையை ஏற்று, தருமபுரம் ஆதீனம் சார்பில் நான்கு முக்கிய இடங்களில் கிடங்குகள் அமைக்க நிலம் வழங்குவதாக மடாதிபதி உறுதியளித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயிகளுடன் நேரடி கலந்துரையாடல்: கோரிக்கைகளும் புகார்களும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனைத் தொடர்ந்து, நத்தம் கிராமத்திற்குச் சென்ற அமைச்சர் வேங்கடரமணன், அங்குள்ள நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்து, உள்ளூர் விவசாயிகளை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது நடப்பு குறுவை சாகுபடி நிலவரங்கள் மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்துக் கேட்டறிந்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அமைச்சரிடம் விவசாயிகள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் வருமாறு;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வாய்க்கால்களைத் தூர்வாருதல்:&lt;/strong&gt; பெருமழைக் காலங்களில் விளைநிலங்களில் தண்ணீர் தேங்காமல், எளிதாக வடிந்து செல்வதற்கு வசதியாக, தூர்ந்து போயுள்ள பழைய வடிகால் வாய்க்கால்களைக் கண்டறிந்து, அவற்றை உடனடியாக மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நெல் மூட்டைகள் விரைவான கொள்முதல்:&lt;/strong&gt; கொள்முதல் நிலையங்களில் தகுந்த பாதுகாப்பு வசதியின்றித் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளைப் பாழாவதற்கு முன்பாக, உடனடியாக அரிசி ஆலைகளுக்கு (அரவைக்கு) அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர், தேங்கிக் கிடக்கும் நெல்மணிகள் வீணாவதைத் தடுக்கப் போர்க்கால அடிப்படையில் தேவையான கிடங்குகள் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;7,500 ஊழியர்கள் பணி நிரந்தரம்: முதலமைச்சரின் கவனத்திற்குச் செல்லும் பட்டியல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேங்கடரமணன், நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்துப் பேசுகையில்;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் செய்யப்படாமல், மிகக் குறைந்த ஊதியத்தில் தற்காலிகப் பணியாளர்களாக 7,500 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இவர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான தகுதிப் பட்டியல் தற்போது தயார் செய்யப்பட்டு எங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியல் குறித்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவர்களைப் பணி நிரந்தரம் செய்யத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ நல்நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்படும்,&quot; என்று உறுதியளித்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மூட்டைக்கு ரூபாய் 40 லஞ்சம்: முற்றுப்புள்ளி வைக்க அமைச்சர் அதிரடி உத்தரவு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து ஒரு மூட்டை நெல்லிற்கு 40 ரூபாய் வரை கட்டாயக் கையூட்டு (லஞ்சம்) பெறப்படுவதாக எழுப்பப்பட்ட காரசாரமான கேள்விக்கு அமைச்சர் நேரடியாகப் பதிலளித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அவர் கூறுகையில், &quot;கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தேவையான குடிநீர், நிழற்குடை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் அரசார்பில் தங்கு தடையின்றிச் செய்து தரப்படும். ஊழியர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் அதே வேளையில், விவசாயிகளைத் துன்புறுத்தும் இத்தகைய முறைகேடுகள் எக்காரணம் கொண்டும் சகித்துக் கொள்ளப்படாது. கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் பெறும் அவலநிலையை முற்றிலுமாகத் தடுக்க அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். முறைகேடுகளை ஒழிக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்&quot; என்று வேண்டுகோள் விடுத்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடைக் காலம் தொடங்கி உள்ளதால் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு, &quot;மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தங்கு தடையின்றி பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்குவதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையைப் போக்க உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் விவசாயிகள் சந்திப்பின் போது, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், உணவுப்பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/0971e8d174a902acbee837bd289c46a41781182118914186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஆக்ஷன் ஓகே...ஆள் எங்கே சிஎம் சார்? - மயிலாடுதுறையில் ‘சிங்கப்பெண்’ படைக்கு விழுந்த முதல் செக்!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-singapen-special-forces-issue-tnn-263514</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-singapen-special-forces-issue-tnn-263514#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 16:00:59 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-singapen-special-forces-issue-tnn-263514</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சராகப் பதவியேற்ற &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; தலைவர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகப் பிரத்யேகமாக &amp;lsquo;சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை&amp;rsquo; (Singappen Special Force) அமைக்கப்படும் என்ற கோப்பில் முதலாவதாகக் கையெழுத்திட்டார். இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் இத்திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (10.06.2026) முதல் இந்த அதிரடிப்படை தனது பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டம், மயிலாடுதுறை மாவட்டத்தின் தற்போதைய கள நிலவரம் மற்றும் புள்ளிவிவரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, **&quot;இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேற தற்போதைய கட்டமைப்பு போதுமானதா? அல்லது இது வெறும் விளம்பர முழக்கமா?&quot;** என்ற விவாதத்தையும், சமூக ஆர்வலர்களிடையே பெரும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;3 லட்சம் பெண்களுக்கு 6 பேர் மட்டுமே! - விந்தையான கணக்கீடு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சமீபத்திய மக்கள் தொகை மற்றும் வாக்காளர் புள்ளிவிவரங்களின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பெண் மக்கள் தொகையினர் வசித்து வருகின்றனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள், தினசரி சந்தை மற்றும் பொது இடங்களுக்கு வரும் பெண் தொழிலாளர்கள் எனப் பெரும் பகுதியினர் அடங்குவர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆனால், இவ்வளவு பெரிய பரப்பளவும் மக்கள் தொகையும் கொண்ட இந்த மாவட்டத்திற்கு, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த காவல்துறையினரின் எண்ணிக்கை வெறும் 6 பேர் மட்டுமே (2 பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 4 பெண் காவலர்கள்).&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஷிப்டுக்கு 3 பேர்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 24 மணி நேரமும் கண்காணிப்பை உறுதி செய்ய &amp;lsquo;சுழற்சி முறை&amp;rsquo; (Rotation Basis) பின்பற்றப்படுகிறது. இதன் அடிப்படையில், இந்த 6 பேரும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அதாவது, ஒரு ஷிப்ட்டிற்கு ஒரு உதவி ஆய்வாளர் (SI) மற்றும் இரண்டு பெண் காவலர்கள் (PC) என மொத்தம் 3 பேர் மட்டுமே களத்தில் இருப்பார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டம் என்பது மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், குத்தாலம் எனப் பல முக்கியப் பகுதிகளை உள்ளடக்கிய, சுமார் 1,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய மாவட்டமாகும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சிந்தித்துப் பார்க்க வேண்டிய கேள்வி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரே ஒரு அதிநவீன ரோந்து வாகனத்தை வைத்துக்கொண்டு, ஒரு ஷிப்ட்டில் இருக்கும் 3 பெண் காவலர்கள், ஒட்டுமொத்த மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் ஒரே நேரத்தில் எப்படிக் கண்காணிக்க முடியும்?&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நீண்ட தூரப் பயணமும், 'மின்னல் வேக' நடவடிக்கையின் சாத்தியமும்!&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காவல்துறை தரப்பில், &quot;அவசரக் கால உபகரணங்கள் கொண்ட வாகனம் வழங்கப்பட்டுள்ளது, எந்தவொரு அவசர அழைப்பிற்கும் இவர்கள் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வார்கள்&quot; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆனால், மயிலாடுதுறையின் ஒரு எல்லையான கொள்ளிடத்திலோ அல்லது குத்தாலத்தின் கிராமப்புறப் பகுதியிலோ ஒரு பெண்ணிற்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்று வைப்போம். அந்த நேரத்தில் இந்த சிங்கப்பெண் படை மாவட்டத் தலைமையகத்திலோ அல்லது சீர்காழியிலோ ரோந்துப் பணியில் இருந்தால், அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சேரக் குறைந்தது 45 நிமிடங்களாவது ஆகும். போக்குவரத்து நெரிசல்களையும் கடந்தே அவர்கள் செல்ல வேண்டும். இத்தகைய சூழலில், **&quot;மின்னல் வேக நடவடிக்கை&quot; என்பது தற்போதைய 3 பேர் கொண்ட ஒரு ஷிப்ட் அமைப்பில் எப்படிச் சாத்தியமாகும்** என்பது சமூக ஆர்வலர்களின் நியாயமான கேள்வியாக உள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முக்கியப் பொறுப்புகளும், பற்றாக்குறையான மனிதவளமும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த அதிரடிப்படைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலக்குகள் மிக அதிகம். மாவட்ட எஸ்பி G. &lt;a title=&quot;ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;ஸ்டாலின்&lt;/a&gt; அவர்களின் அறிவுறுத்தலின்படி, இவர்கள் கண்காணிக்க வேண்டிய இடங்கள்:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;1. மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;2. மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கியச் சந்திப்புகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;3. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;4. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் திருவிழா நடக்கும் பகுதிகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;5. இதுதவிர, பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்களையும் இவர்களே நடத்த வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரு மாவட்டத்தின் நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்களையும், பேருந்து நிலையங்களையும் வெறும் 3 பேர் கொண்ட ஒரு குழு தினசரி எப்படிக் கண்காணித்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க முடியும்? இது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று எனப் பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தீர்வு என்ன? - சமூக ஆர்வலர்களின் கோரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முதலமைச்சரின் இந்த &amp;lsquo;சிங்கப்பெண் படை&amp;rsquo; என்ற தொலைநோக்குத் திட்டம் மிகச் சிறப்பானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பெண்களிடத்தில் இது பாதுகாப்பைப் பற்றிய ஒரு நம்பிக்கையை விதைத்துள்ளது. ஆனால், இந்தத் திட்டம் வெறும் காகித அளவிலும், பெயரளவிலும் சுருங்கிவிடக் கூடாது என்றால், அரசு உடனடியாகக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தாலுகா வாரியான பிரிவுகள்:&lt;/strong&gt; மாவட்டத்திற்கு 6 பேர் என்பதை மாற்றி, மயிலாடுதுறை மாவட்டத்தின் ஒவ்வொரு தாலுகாவிற்கும் (மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம்) தலா ஒரு சிங்கப்பெண் படைப் பிரிவு அமைக்கப்பட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மனிதவளத்தை அதிகரித்தல்:&lt;/strong&gt; ஒரு ஷிப்ட்டிற்கு குறைந்தபட்சம் 10 முதல் 15 பெண் காவலர்களாவது சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இருசக்கர வாகன ரோந்து:&lt;/strong&gt; குறுகலான தெருக்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளுக்கு விரைந்து செல்ல, நான்கு சக்கர வாகனத்துடன் சேர்த்து, பெண் காவலர்களுக்குத் துரித இருசக்கர வாகனங்களும் (Two-wheelers) வழங்கப்பட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக, பெண்களின் 100 சதவீத பாதுகாப்பை உறுதி செய்யக் கொண்டுவரப்பட்ட &amp;lsquo;சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை&amp;rsquo;, மயிலாடுதுறை மாவட்டத்தின் 3 லட்சம் பெண்களுக்கும் உண்மையான அரணாக விளங்க வேண்டுமே தவிர, வெறும் கண்துடைப்பாக இருக்கக் கூடாது. அரசு உடனடியாக இந்த மனிதவளப் பற்றாக்குறையைக் கவனித்து, கூடுதல் காவலர்களை நியமித்தால் மட்டுமே, இந்தச் சிங்கப்பெண்கள் உண்மையான &amp;lsquo;அதிரடிப்படையாக&amp;rsquo; உருவெடுக்க முடியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/74e4e21c7569842dceace1b465987e1b1781173762895186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மயிலாடுதுறையில் பரபரப்பு: நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ.40 லஞ்சம் வாங்கியதை நியாயப்படுத்தினாரா உணவுத்துறை அமைச்சர்? விவசாயிகள் கடும் கொந்தளிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-tvk-minister-venkatramanan-paddy-bag-collected-40-rupees-issue-tnn-263466</link><comments>https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-tvk-minister-venkatramanan-paddy-bag-collected-40-rupees-issue-tnn-263466#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 10:09:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ விவசாயம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-tvk-minister-venkatramanan-paddy-bag-collected-40-rupees-issue-tnn-263466</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) அரசின் உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் வாங்கப்பட்டது உண்மைதான் எனப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டதோடு, அதற்கான காரணத்தைக் கூறி நியாயப்படுத்தும் வகையில் பேசியிருப்பது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அமைச்சரின் திடீர் கள ஆய்வு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, த.வெ.க தலைவர் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், துறை வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுத் தீவிரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருப்புங்கூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நெல் சேமிப்பு கிடங்கு மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு (DPC) உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் நேற்று நேரில் வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளைப் பார்வையிட்ட அமைச்சர், நெல்லின் ஈரப்பதம் மற்றும் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகள், நெல் பாதுகாப்பு முறைகள் மற்றும் கள நிலவரங்கள் குறித்து விவசாயிகளிடமும், பணியாளர்களிடமும் கலந்துரையாடினார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ரூபாய் 40 லஞ்சம்: உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வெங்கடரமணனிடம், &quot;தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைக்கு தலா 40 ரூபாய் கட்டாய வசூலாகப் பெறப்பட்டு வருகிறது என்ற தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே, இதன் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?&quot; என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதற்குப் பதிலளித்த அமைச்சர், யாரும் எதிர்பாராத விதமாகப் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்தார். அவர் பேசுகையில், &quot;அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தங்குமிடம், முறையான கழிவறை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. அப்படிப்பட்ட சவாலான சூழலில், தங்களின் அன்றாடத் தேவைகளுக்காக விவசாயிகளிடம் மூட்டைக்கு 40 ரூபாய் வாங்கி அதனை நிறைவேற்றியுள்ளனர். ஆனால், இனிவரும் காலங்களில் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் இந்த அரசு போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்கும். அதனை தொடர்ந்து விவசாயிகளிடம் அரசு இருந்து ஒரு ரூபாய் கூட வாங்காதவாறு நடவடிக்கைகள் மூலம் தடுத்து நிறுத்தப்படும்&quot; என்று தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயிகள் கேள்வி - இது ஊழலை நியாயப்படுத்துவதா?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயிகளிடம் லஞ்சம் பெறப்பட்டதை அமைச்சர் ஒப்புக்கொண்ட விதம், அங்கு கூடியிருந்த விவசாய அமைப்புகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திமுக ஆட்சியின் போதே இந்த 40 ரூபாய் கட்டாய வசூல் பெரும் புகாராக வெடித்தது. தற்போது த.வெ.க ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், நெல் மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் கூடுதலாக பெற்றதை நியாயப்படுத்தி, ஊழலுக்கு ஆதரவாக பேசுயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 40 பெற்றது உண்மையென்றால் அதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைச்சர் ஊழலை நியப்படுத்தும் செயல் ஏற்புடையது அல்ல என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அமைச்சர் தட்டிக் கேட்காமல், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற காரணத்தைக் கூறி லஞ்சத்தை நியாயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இது குறித்துப் பேசிய உள்ளூர் விவசாயி ஒருவர், &quot;அடிப்படை வசதிகள் இல்லை என்றால் அதற்காக அரசிடம் தான் ஊழியர்கள் கோரிக்கை வைக்க வேண்டும். அதை விடுத்து, வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு நெல் விளைவித்து வரும் ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடித்து மூட்டைக்கு 40 ரூபாய் வாங்குவது அப்பட்டமான ஊழல் மற்றும் பகல் கொள்ளை ஆகும். தவறு செய்த ஊழியர்கள் மீது தீர்க்கமான விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவுத்துறை அமைச்சரே, அதற்கு வக்காலத்து வாங்கிப் பேசுவது சட்டத்தின் ஆட்சியா அல்லது ஊழலுக்கான அங்கீகாரமா?&quot; என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மழைக்காலப் பாதுகாப்புக்கு புதிய அறிவிப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பரபரப்பான சூழலுக்கு மத்தியில், மழைக்காலங்களில் நெல் வீணாவதைத் தடுக்க அரசு புதிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். &quot;மழைக்காலங்களில் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை விற்பனை செய்யக் கொண்டு வரும் விவசாயிகளுக்கு, தனித்தனியாகப் பிரத்யேகத் தார்பாய்கள் (Tarpaulins) வழங்கி, அவர்களின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகாமல் முழுமையாகப் பாதுகாக்க இந்த அரசு தகுந்த ஏற்பாடுகளைச் செய்யும்&quot; என்றும் அமைச்சர் வெங்கடரமணன் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார். இருப்பினும், நெல் கொள்முதல் நிலைய ஊழலை அமைச்சர் கையாண்ட விதம் தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்திலும், டெல்டா மாவட்ட விவசாயிகளிடையேயும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/0dce704c3bb8a60b761f2d23fd36778c1781152767288186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மயிலாடுதுறையில் களம் இறங்கிய 'சிங்கப்பெண் படை'.. இனி பெண்களுக்கு ஃபுல் பாதுகாப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-singappen-special-force-started-tnn-263425</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-singappen-special-force-started-tnn-263425#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 20:36:40 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-singappen-special-force-started-tnn-263425</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;பெண்களின் பாதுகாப்பிற்கு மிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் ஒரு புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் அதிரடி உத்தரவின்படி, பெண்களின் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களில் &amp;lsquo;சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை&amp;rsquo; (Singappen Special Force) உருவாக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த சிறப்பு அதிரடிப்படை இன்று (10.06.2026) முதல் தங்களின் அதிரடிப் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளது. இத்திட்டம் மாவட்டத்தில் உள்ள பெண் பொதுமக்களிடையேயும், சமூக ஆர்வலர்களிடையேயும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட சிறப்புப் படை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முழுமையாகத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த &amp;lsquo;சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை&amp;rsquo;யில் பணியமர்த்தப்பட்டுள்ள காவல்துறையினருக்கு, சவாலான சூழல்களைக் கையாளுவது குறித்து ஒரு வார காலம் தீவிர சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று (09.06.2026) தமிழ்நாடு முதலமைச்சரால் இந்தச் சிறப்புப் படை முறைப்படி துவங்கி வைக்கப்பட்டது. முதலமைச்சரின் தொடக்க விழாவைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று முதல் இந்த அதிரடிப்படை முழு வீச்சில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/811f589f4eb969b3492663dfe35537d41781103947491186_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சுழற்சி முறையிலான பணி மற்றும் நவீன வசதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்பொழுது துவக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு அதிரடிப்படையில் தகுதிவாய்ந்த இரண்டு பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் (SI) மற்றும் நான்கு பெண் காவலர்கள் (PC) நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு எந்நேரமும் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், இவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சுழற்சி முறைப் பணி:&lt;/strong&gt; 24 மணி நேரமும் கண்காணிப்பை உறுதி செய்யும் வகையில், சுழற்சி முறையில் (Rotation Basis) ஒரு குழுவில் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு பெண் காவலர்கள் என எப்போதும் களத்தில் பணியில் ஈடுபடுவார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அதிநவீன ரோந்து வாகனம்: &lt;/strong&gt;இந்த அதிரடிப்படையினரின் விரைவான செயல்பாட்டிற்காக, அதிநவீன காவல்துறை தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் அவசர கால உபகரணங்கள் பொருத்தப்பட்ட பிரத்யேக நான்கு சக்கர வாகனம் (Patrol Vehicle) அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்தவொரு அவசர அழைப்பிற்கும் இவர்களால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல முடியும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முக்கியப் பணிகள் மற்றும் ரோந்துப் பகுதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர், பெண்கள் மற்றும் மாணவிகள் அதிகம் கூடும் பொது இடங்களை இலக்காகக் கொண்டு தங்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். குறிப்பாக;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;* பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;* பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கியச் சந்திப்புகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;nbsp;* மருத்துவமனைகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;nbsp;* வழிபாட்டுத் தலங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொது இடங்களில் பெண்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தலோ அல்லது அசம்பாவிதங்களோ நேர்ந்தால், அல்லது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஏதேனும் ரகசியத் தகவல்கள் கிடைக்கப் பெற்றால், இந்த அதிரடிப்படையினர் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்வார்கள். குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் இவர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி அறிவுறுத்தல்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) G. &lt;a title=&quot;ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;ஸ்டாலின்&lt;/a&gt;, இந்தச் சிறப்புப் படையில் இணைந்துள்ள பெண் காவல்துறையினரை நேரில் சந்தித்து, அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அப்போது அவர் பேசுகையில்:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக களத்தில் இறங்கும்போது மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள், பெண்களுக்கு எதிராக மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ இழைக்கப்படும் குற்றங்கள் பற்றிய உளவுத் தகவல்களைத் துல்லியமாகச் சேகரிக்கும் வழிமுறைகள் குறித்து மிகத் தெளிவாக விளக்கினார். மேலும், அவசரச் சூழ்நிலைகளை மிகவும் சாதுரியமாகவும் துணிச்சலாகவும் எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்தும், பெண்கள் பாதுகாப்பிற்காகத் தமிழக அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.&quot;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் பெண்கள் தங்களின் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் அவசர உதவி எண்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வகையில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பாதுகாப்பான சமுதாயத்தை நோக்கிய மக்கள் இயக்கம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழக முதலமைச்சரின் தொலைநோக்கு அறிவுறுத்தலின்படி களமிறங்கியுள்ள இந்த 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை', பொது இடங்களில் தங்களின் தொடர் கண்காணிப்பு மற்றும் சுற்றுக்காவல் (Patrol) பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ளவுள்ளது. இதன் மூலம், குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகள் (Hotspots) முன்கூட்டியே கண்டறியப்பட்டு, அங்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொது இடங்களில் காவல்துறையின் இருப்பு (Police Presence) எப்போதும் இருப்பதை உறுதி செய்வதன் மூலம், சமூக விரோதிகளுக்கு அச்சத்தையும், அதே வேளையில் பெண்கள் மற்றும் குழந்தைகளிடத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு உணர்வையும், நம்பிக்கையையும் இப்படை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றிலுமாகத் தடுப்பதோடு மட்டுமின்றி, சமுதாயத்தில் உள்ள அனைத்து பொறுப்பு அமைப்புகளையும், பொதுமக்களையும் ஒருங்கிணைத்து ஒரு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க இப்படை பாடுபடும். வெறும் காவல் பணியாக இல்லாமல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உகந்த, பயமில்லாத ஒரு நல்சமூகத்தை உருவாக்கும் நோக்கில், இது ஒரு &amp;lsquo;மக்கள் இயக்கமாக&amp;rsquo; செயல்படும் என்று மாவட்ட காவல்துறை வட்டாரங்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/e0e4db788bb4a7637599051d0d00bedc1781103901079186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வின் போது நேர்ந்த அவலங்கள்: GH-ல் அரங்கேறிய கூத்து!]]></title><link>https://tamil.abplive.com/crime/mayiladuthurai-tvk-minister-venkatraman-government-hospital-inspection-tnn-263407</link><comments>https://tamil.abplive.com/crime/mayiladuthurai-tvk-minister-venkatraman-government-hospital-inspection-tnn-263407#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 17:01:28 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/mayiladuthurai-tvk-minister-venkatraman-government-hospital-inspection-tnn-263407</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் இன்று உணவுத்துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சரான வெங்கட்ரமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் தரம் மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வந்த இந்த நிகழ்வு, துரதிர்ஷ்டவசமாக நோயாளிகளுக்குப் பெரும் அவதியையும், மருத்துவமனையின் நிர்வாகச் சீர்கேட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் நிகழ்வாக மாறிப்போனது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அவசர சிகிச்சை பிரிவில் புகுந்த கூட்டம்: வீல் சேர் நோயாளிகள் தவிப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அமைச்சர் வெங்கட்ரமணன் மருத்துவமனைக்கு வருகை தந்தபோது, அவருடன் அரசியல் கட்சியினர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த தொண்டர்கள் பெருந்திரளாக வந்திருந்தனர். அமைச்சர் அவசர சிகிச்சை பிரிவு (Casualty) பகுதியை நோக்கிச் சென்றபோது, அவருடன் வந்த &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt;வினர் மற்றும் ஆதரவாளர்கள் பெரும் கூட்டமாக அவசர சிகிச்சை பிரிவுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் இப்பகுதிக்குள், அரசியல் கட்சியினர் முண்டியடித்துக் கொண்டு சென்றதால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில், அவசர சிகிச்சைக்காக வீல் சேரில் (Wheel Chair) கொண்டு வரப்பட்ட நோயாளி ஒருவரை உள்ளே அழைத்துச் செல்ல முடியாமல் மருத்துவமனை ஊழியர்களும், அவரது உறவினர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கட்சியினரின் கூட்ட நெரிசலால் நோயாளிக்கு உரிய நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது அங்கு நின்றிருந்த பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பாம்பு கடி நோயாளிக்கு வழிவிடாத அவலம்: ஆம்புலன்ஸை சூழ்ந்த தொண்டர்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியிலேயே, மற்றொரு அதிர்ச்சியூட்டும் சம்பவமும் அரங்கேறியது. பாம்பு கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த நபர் ஒருவர், 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். உயிருக்குப் போராடும் நோயாளிக்கு வழிவிட வேண்டும் என்ற குறைந்தபட்ச மனிதநேயம் கூட இல்லாமல், அமைச்சருடன் வந்த கட்சியினர் ஆம்புலன்ஸ் வாசலை மறைத்துக்கொண்டு நின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆம்புலன்ஸிலிருந்து நோயாளியை இறக்க முயன்றபோது, கூட்டத்தினர் வழிவிடாமல் சூழ்ந்து கொண்டதால், மருத்துவமனை வளாகமே போர்க்களம் போல காட்சியளித்தது. ஊழியர்கள் சத்தமிட்டு வழி கேட்டும், அரசியல் தொண்டர்கள் நகராமல் தங்களது தலைவர்களைப் பார்ப்பதிலேயே குறியாக இருந்தனர். இதனால் அந்த நோயாளிக்குச் சிகிச்சை அளிப்பதில் கணிசமான நேரம் வீணடிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;படுக்கை பற்றாக்குறை: மாடிப்படிக்கு கீழே கொடூர சிகிச்சை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை அரசு மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மற்றும் படுக்கை வசதிகள் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு இன்று மருத்துவமனையில் கண்ட காட்சி ஒரு சான்றாக அமைந்தது. விஷம் அருந்திய நிலையில் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் கொண்டு வரப்பட்ட இளைஞர் ஒருவருக்கு, மருத்துவமனையில் படுக்கைகள் ஏதும் காலியாக இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் காரணமாக, அந்த வாலிபரை மாடிப்படிக்கு கீழே உள்ள ஒரு இடத்தில் படுக்கை போட்டு சிகிச்சை அளித்தது மட்டும் இன்றி கொடுமையின் உச்சமாக, அவருக்கு செலுத்தப்பட வேண்டிய குளுக்கோஸ் மற்றும் மருந்து பாட்டில்களை மாட்டுவதற்கான 'ஸ்டாண்ட்' (Stand) கூட அங்கு இல்லை. இதனால், அந்த இளைஞரின் உறவினர் ஒருவர் மருந்து பாட்டிலை நீண்ட நேரமாகத் தனது கைகளாலேயே மேலே தூக்கிப் பிடித்தபடி நின்றிருந்தார். இத்தகைய அவசர கால சிகிச்சைக்குத் தேவையான அடிப்படை உபகரணங்கள் கூட மருத்துவமனையில் முறையாக இல்லை என்பதை அங்கிருந்த ஊழியர்களே வேதனையுடன் ஒப்புக்கொண்டனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கட்டுப் போடாமல் அலட்சியம்: ஊழியர்களுடன் வாக்குவாதம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதற்கிடையே, மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த வார்டில் பெரும் பரபரப்பு நிலவியது. காலில் பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளி ஒருவருக்கு, கடந்த இரண்டு நாட்களாகப் பழைய கட்டைப் பிரித்துவிட்டு, புண்ணைச் சுத்தம் செய்து புதிய கட்டுப் போடாமல் மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால் கடுமையான வலியினாலும், தொற்றுக் கிருமிகள் பரவும் அச்சத்தினாலும் பாதிக்கப்பட்ட நோயாளியின் மகன், அங்கிருந்த மருத்துவப் பணியாளர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். &quot;அமைச்சர் வரும்போது மட்டும்தான் சுத்தம் செய்வீர்களா? இரண்டு நாட்களாக என் தந்தை வலியால் துடிக்கிறார்&quot; என்று அவர் ஆவேசமாகக் கத்தினார். இதைப் பார்த்த அமைச்சர் வெங்கட்ரமணன், உடனே தலையிட்டு பாதிக்கப்பட்ட நோயாளியின் உறவினரைச் சமாதானப்படுத்த முயன்றார். மேலும், அந்த நோயாளிக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மக்களைப் பற்றி கவலையின்றி 'ரீல்ஸ்' எடுத்த காங்கிரஸ் MLA!&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மருத்துவமனை முழுவதும் இத்தனை அவலங்களும், நோயாளிகளின் அழுகுரல்களும் கேட்டுக் கொண்டிருந்த வேளையில், அங்கு வந்திருந்த மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் (MLA) முகமது ஜமால் யூனுஸின் செயல்பாடு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அவர் தற்போதைய சமூக வலைதள மோகத்திற்கு அடிமையாகி, ஒரு தனியார் புகைப்படக் கலைஞரை (Videographer) தனியாகத் தன்னோடு கூட்டி வந்திருந்தார். மருத்துவமனையில் மக்கள் படும் துயரங்களைத் தீர்க்க முற்படாமல், தான் ஆய்வில் ஈடுபடுவது போலவும், மக்களுக்கு உதவுவது போலவும் 'ரீல்ஸ்' (Reels) வீடியோக்கள் எடுப்பதிலேயே அவர் முழுக்கவனம் செலுத்தினார். இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி, தனது அரசியல் விளம்பரத்தைத் தேடிக் கொள்வதிலேயே அவர் குறியாக இருந்தது அங்கிருந்த மக்களிடையே பலத்த கண்டனத்திற்கு உள்ளானது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;அரசு மருத்துவமனைக்கு ஏழை, எளிய மக்கள் தங்களின் உயிரைக் காக்க வருகிறார்கள். அமைச்சர்களின் ஆய்வுகள் மருத்துவமனையை மேம்படுத்த வேண்டுமே தவிர, அரசியல் கட்சியினரின் விளம்பர மேடையாகவோ அல்லது நோயாளிகளுக்கு இடையூறு விளைவிக்கும் கூட்டமாகவோ மாறக்கூடாது&quot; என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறை வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/a6dc0a43d3731b0745bd6d86fa7fbf781781091023196186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கருவாட்டுக் குழம்பு, முருங்கைக்கீரை, அவித்த முட்டை..! வீதி முழுவதும் தலைவாழை இலை படையல்! மயிலாடுதுறையில் நடந்த வினோத வழிபாடு!]]></title><link>https://tamil.abplive.com/spiritual/mayiladuthurai-mannampandal-ponniyamman-temple-ellai-ottam-festival-tnn-263351</link><comments>https://tamil.abplive.com/spiritual/mayiladuthurai-mannampandal-ponniyamman-temple-ellai-ottam-festival-tnn-263351#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 09:31:08 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/mayiladuthurai-mannampandal-ponniyamman-temple-ellai-ottam-festival-tnn-263351</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் கிராமத்தில் புகழ்பெற்ற பொன்னியம்மன் மற்றும் பிடாரி அம்மன் ஆலயத்தின் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, மிகவும் பிரசித்தி பெற்ற &quot;எல்லை ஓட்டத் திருவிழா&quot; மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் வீதிகள்தோறும் தலைவாழை இலையிட்டு வினோத படையலிட்டு வழிபட்ட அரிய ஆன்மீக நிகழ்வு பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மன்னம்பந்தல் கிராமத்தின் காவல் தெய்வங்களாக விளங்கும் அருள்மிகு பொன்னியம்மன், பிடாரி அம்மன் ஆலயத்தின் வைகாசி திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு முறைப்படி காப்புக்கட்டுதலுடன் விமரிசையாகத் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெற்று வந்தன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வயல்வெளிகளில் பாய்ந்து சென்ற &amp;lsquo;எல்லை ஓட்டம்&amp;rsquo;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வைகாசி உற்சவத்தின் சிகர நிகழ்ச்சியாக, கிராமத்தைக் காக்கும் எல்லை காவல் தெய்வங்களின் &quot;எல்லை ஓட்டம்&quot; என்னும் பிரசித்தி பெற்ற வைபவம் நடைபெற்றது. கிராமத்தின் எல்லையைக் கடந்து தீய சக்திகள் உள்ளே வராமல் தடுக்கவும், ஊரின் செழிப்புக்காகவும் இந்த எல்லை ஓட்டம் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விழாவை முன்னிட்டு அதிகாலையில் பொன்னியம்மன், பிடாரி அம்மன் ஆகிய இரு தெய்வங்களின் சிலைகளையும் தாரை தப்பட்டை, உடுக்கை, பம்பை உள்ளிட்ட கிராமிய வாத்தியங்கள் அதிர, பக்தர்கள் தங்களது தோள்களில் சுமந்து கொண்டனர். ஊரின் எல்லைகளை நோக்கி ஓடத் தொடங்கிய பக்தர்கள், காடு, மேடு, கரடுமுரடான பாதைகள் மற்றும் பரந்து விரிந்த வயல்வெளிகள் எனப் பாராமல், அம்மனைத் தோளில் சுமந்தபடி ஆவேசமாக ஓடினர். சேறும் சகதியுமான வயல்வெளிகளில் பாய்ந்து, ஊரின் ஒட்டுமொத்த எல்லையையும் சுற்றி வலம் வந்த இந்த எல்லை ஓட்டக் காட்சி, காண்போரை வியப்பிலும் பக்திப் பரவசத்திலும் ஆழ்த்தியது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வீதி முழுவதும் தலைவாழை இலை: வினோத படையல் வழிபாடு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எல்லை ஓட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கிராமத்திற்குள் நுழைந்த அம்மன் திருவுருவச் சிலைகளை பக்தர்கள் தோள்களில் சுமந்தவாறு, மன்னம்பந்தல் அம்பேத்கர் காலனி பகுதிக்கு எடுத்து வந்தனர். கிராமத்தைக் காக்க ஓடி வந்த அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றக் கோரியும் அப்பகுதி மக்கள் திரளாகக் கூடினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அப்போது, அந்தத் தெரு முழுவதும், தங்களின் வீட்டு வாசல்களில் வரிசையாகத் தலைவாழை இலைகளைப் போட்டுப் பிரம்மாண்டமான வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அம்மனுக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படும் பாரம்பரிய முறைப்படி, புது மண்பானைகளில் சமைக்கப்பட்ட மணமணக்கும் கருவாட்டுக் குழம்பு, அவித்த முட்டைகள், சத்து நிறைந்த முருங்கைக்கீரை, கொழுக்கட்டை மற்றும் மாவிளக்கு மாவு ஆகியவை அந்தத் தலைவாழை இலைகளில் வரிசையாகப் படைக்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களின் கைகளால் இடித்த பச்சரிசி மாவில் நெய் ஊற்றி, மாவிளக்கு ஏற்றி, சீர்வரிசை தட்டுகளை வைத்து அம்மனை வரவேற்றனர். கிராமப்புற வழிபாட்டு முறையின் தொன்மையை பறைசாற்றும் விதமாக அமைந்த இந்த வினோத கூட்டுப் படையல் வழிபாடு, அப்பகுதி முழுவதும் பெரும் ஆன்மீக அதிர்வை ஏற்படுத்தியது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பெண்களுக்கு வந்த அருள்வாக்கு: பரவசத்தில் மூழ்கிய பக்தர்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அம்மன் சிலைகள் வீதி உலா வந்தபோது, பம்பை மற்றும் உடுக்கை ஒலிகளின் வேகம் அதிகரிக்க, வழிபாட்டில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான பெண்களில் பலருக்கு திடீரென அருள் வந்து ஆவேசமாக ஆடினர். சாமி வந்து ஆடிய பெண்கள், கிராம மக்களுக்கு அருள்வாக்குக் கூறினர். இந்த நெகிழ்ச்சியான மற்றும் ஆன்மீகச் சிலிர்ப்பை ஏற்படுத்திய நிகழ்வு, அங்கிருந்த திரளான பக்தர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது. கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் பக்தி கோஷங்களை எழுப்பி, அம்மனைத் தொழுது நின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திரண்ட பக்தர்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமன்றி, சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த எல்லை ஓட்டத்தையும், வினோத மாவிளக்கு வழிபாட்டையும் காண மன்னம்பந்தலில் திரண்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு, மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல், விழா மிக அமைதியாகவும் நேர்த்தியாகவும் நடைபெறுவதை போலீஸார் கண்காணித்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆலய வைகாசி பெருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான இந்த எல்லை ஓட்டம் மற்றும் வினோத படையல் வழிபாடு, மன்னம்பந்தல் கிராம மக்களின் ஒற்றுமையையும், கிராமிய வழிபாட்டு முறையின் மாறாதப் பாரம்பரியத்தையும் மீண்டும் ஒருமுறை மெய்ப்பிப்பதாக அமைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளைத் திருப்பணி குழுவினரும், கிராம பொதுமக்களும் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/25e7f26aa1837c97705da3fc43baf57c1781064028263186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சிலம்பம் முதல் டிஜிட்டல் ஜர்னலிசம் வரை: நுழைவுத் தேர்வு இல்லாமல் மத்திய பல்கலைக்கழகத்தில் பயில அரிய வாய்ப்பு..!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/thiruvarur-central-university-of-tamilnadu-course-without-entrance-exam-tnn-263348</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/thiruvarur-central-university-of-tamilnadu-course-without-entrance-exam-tnn-263348#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 08:57:09 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/thiruvarur-central-university-of-tamilnadu-course-without-entrance-exam-tnn-263348</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;திருவாரூர்:&lt;/strong&gt; தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் (CUTN) திறன் மேம்பாட்டு மையம் (Centre for Skill Development) நடப்பு 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான பல்வேறு இளங்கலை தொழிற்கல்வி (B.Voc), டிப்ளமோ மற்றும் முதுகலை தொழிற்கல்வி (M.Voc) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்கால வேலைவாய்ப்புச் சந்தைக்குத் தேவையான நடைமுறைத் திறன்களை மாணவர்களிடம் வளர்க்கும் நோக்கில், வளாகப் படிப்புகள் (On-Campus) மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்த வளாகத்திற்கு வெளியேயான படிப்புகள் (Off-Campus) என இரு பிரிவுகளாக இந்தத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வளாகப் படிப்புகள் (On-Campus Programmes)&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே நேரடியாகப் பயிற்றுவிக்கப்படும் இந்தப் படிப்புகள், மாணவர்களுக்குச் சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் பேராசிரியர்களின் நேரடி வழிகாட்டுதலை வழங்கும் வகையில் அமைந்துள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* &lt;strong&gt;மூன்று ஆண்டு இளங்கலை தொழிற்கல்விப் படிப்புகள் (B.Voc - 3 Years) டிஜிட்டல் இதழியல் மற்றும் மல்டிமீடியா பயன்பாடுகள் (B.Voc in Digital Journalism and Multimedia Applications):&lt;/strong&gt; தற்போதைய டிஜிட்டல் ஊடக யுகத்திற்கு ஏற்ப, ஊடகத் துறை, காணொளித் தொகுப்பு, சமூக ஊடக மேலாண்மை மற்றும் உள்ளடக்க உருவாக்கம் (Content Creation) ஆகியவற்றில் மாணவர்களை நிபுணர்களாக்க இந்தப் படிப்பு உதவுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* &lt;strong&gt;சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை (B.Voc in Tourism and Hospitality Management):&lt;/strong&gt; உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத் துறை மற்றும் ஹோட்டல் மேலாண்மைத் துறைகளில் உள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச வேலைவாய்ப்புகளைப் பெறும் வகையில் இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* &lt;strong&gt;பி.காம் தொழிற்கல்வி (B.Com - Vocational):&lt;/strong&gt; பாரம்பரிய வணிகவியல் படிப்போடு கணக்கியல் மென்பொருள்கள், ஜிஎஸ்டி நடைமுறைகள் மற்றும் நிறுவன மேலாண்மை போன்ற நடைமுறைத் திறன்களையும் சேர்த்து இப்பயிற்சி வழங்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஓராண்டு டிப்ளமோ படிப்புகள்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;* (Diploma - 1 Year): கல்வெட்டியல் மற்றும் பாரம்பரிய மேலாண்மை டிப்ளமோ (Diploma in Epigraphy and Heritage Management):&lt;/strong&gt; இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகள், சுவடிகளைப் படித்தல் மற்றும் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்தல் போன்ற துறைகளில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கான பிரத்யேக படிப்பு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;* சிலம்பாட்ட டிப்ளமோ (Diploma in Silambattam):&lt;/strong&gt; தமிழர்களின் பாரம்பரிய வீரக்கலையான சிலம்பத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் வகையிலும், விளையாட்டுத் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் பல்கலைக்கழக அளவில் இந்த டிப்ளமோ படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முன்னணி நிறுவனங்களுடன் இணைந்த வெளிவளாகப் படிப்புகள் (Off-Campus Programmes)&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொழில்துறையினரின் நேரடித் தேவைக்கேற்ப மாணவர்களை உருவாக்குவதற்காக, இந்தியாவின் புகழ்பெற்ற தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து &quot;பயிலும் போதே வாழ்வாதாரம்&quot; என்ற நோக்கில் இந்தப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பி.வொக் - உற்பத்தித் தொழில் நுட்பம் (B.Voc in Manufacturing Technology - 3 Years):&lt;/strong&gt; கோவை, ELGI - EVTS** நிறுவனத்துடன் இணைந்து இந்த மூன்று ஆண்டு படிப்பு வழங்கப்படுகிறது. நவீன உற்பத்தி முறைகள் மற்றும் தொழிற்சாலைப் பணிகளில் நேரடிப் பயிற்சி அளிக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;டி.வொக் - மெகாட்ரானிக்ஸ் (D.Voc in Mechatronics - 3 Years):&lt;/strong&gt; சென்னையின் முன்னணி நிறுவனமான ஜான்சன் எலக்ட்ரிக் (Johnson Electric Private Limited) நிறுவனத்துடன் இணைந்து இந்த 3 ஆண்டு டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகிறது. மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளின் கூட்டுத் தொழில்நுட்பமான மெகாட்ரானிக்ஸ் துறையில் சிறந்த வேலைவாய்ப்பை உறுதி செய்ய இது உதவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;எம்.வொக் - மனித மேம்பாட்டிற்கான யோகா (M.Voc in Yoga for Human Excellence - 2 Years):&lt;/strong&gt; ஆழியார் உலக சமுதாய சேவா சங்கம் (WCSC - SKY) உடன் இணைந்து இந்த இரண்டு ஆண்டு முதுகலைத் தொழிற்கல்விப் படிப்பு நடத்தப்படுகிறது. மன அமைதி, உடல் ஆரோக்கியம் மற்றும் யோகக் கலைப் பேராசிரியர்களை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய விவரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தப் படிப்புகள் அனைத்திற்கும் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். 2026-2027 கல்வியாண்டிற்கான சேர்க்கை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கூடுதல் விபரங்கள் மற்றும் சேர்க்கை உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சேர்க்கை தொடர்பான பொதுவான சந்தேகங்களுக்கு: &lt;strong&gt;7339643445&lt;/strong&gt; &amp;amp; &lt;strong&gt;&amp;nbsp;9087297088&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வெளிவளாகப் படிப்புகள் மற்றும் நிறுவனத் தொடர்புகளுக்கு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;* 9080805303&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மின்னஞ்சல் முகவரி: &lt;a href=&quot;mailto:com_college@cutn.ac.in&quot;&gt;com_college@cutn.ac.in&amp;nbsp;&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வெறும் ஏட்டுக்கல்வியோடு நின்றுவிடாமல், நேரடியாக வேலைவாய்ப்பை உறுதி செய்யும் தொழிற்கல்விப் படிப்புகளுக்குப் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே தற்காலத்தில் பெரும் வரவேற்பு நிலவி வருகிறது. அந்த வகையில், மத்தியப் பல்கலைக்கழக தரம் மற்றும் குறைந்த கட்டணத்தில் இத்தகைய உயர்தரப் படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் பெருமளவில் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுதியும் ஆர்வமும் உள்ள மாணவ, மாணவிகள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/ba8c878525adb13d06db90c09ef4e2c91781061997492186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Mayiladuthurai Power Shutdown (09.06.2026) :உங்க ஊர் இதுல இருக்கா? இன்று 8 மணி நேரம் கரண்ட் கட் - லிஸ்ட்டை வெளியிட்ட மின் வாரியம்!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-power-shutdown-today-s-09-06-2026-power-cut-outage-areas-affected-details-tnn-263155</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-power-shutdown-today-s-09-06-2026-power-cut-outage-areas-affected-details-tnn-263155#respond</comments><pubDate>Tue, 9 Jun 2026 09:54:15 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-power-shutdown-today-s-09-06-2026-power-cut-outage-areas-affected-details-tnn-263155</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை:&lt;/strong&gt; மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட நீடூர் துணைமின் நிலையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) அன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அன்று ஒரு நாள் மட்டும் நீடூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மயிலாடுதுறை நகர் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவு உதவி செயற் பொறியாளர் பொறியாளர் M. விஜயபாரதி B.E., தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பராமரிப்பு பணியின் நோக்கம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாடு மின் வாரியத்தின் விதிகளின்படி, மின் நுகர்வோருக்கு தடையற்ற மற்றும் சீரான மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மாதந்தோறும் துணைமின் நிலையங்களில் உயர் அழுத்த மின் பாதைகள், மின் மாற்றிகள் (Transformers) மற்றும் மின் கம்பிகளில் உள்ள பழுதுகளை நீக்கும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள முக்கிய துணைமின் நிலையங்களில் ஒன்றான நீடூர் துணைமின் நிலையத்தில் இன்றைய தினம் 09.06.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று அவசியமான மாதாந்திர பராமரிப்பு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் (காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை) இந்த பராமரிப்பு பணிகள் தடையின்றி மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புடன் நடைபெறுவதற்காக, இத்துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறக்கூடிய பின்வரும் முக்கிய ஊர்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து கிராமப் பகுதிகளிலும் அன்றைய தினம் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மின் பாதிப்புக்குள்ளாகும் முக்கிய பகுதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* நீடூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* மல்லியக்கொல்லை&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* வில்லியநல்லூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* கொண்டல்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* பாலாக்குடி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* தாழஞ்சேரி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* கொற்கை&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* அருண்மொழிதேவன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* கங்கணம்புத்தூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* மேலாநல்லூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* நடராஜபுரம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* கீழமருதாந்தநல்லூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* மேலமருதாந்தநல்லூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* பொன்மாசநல்லூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* மாப்படுகை&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* ஆனந்தக்குடி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* சோழப்பேட்டை&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* மணலூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளைச் சுற்றியுள்ள அனைத்து கிராமப்புறப் பகுதிகளுக்கும் இன்றை தினம் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மின் வாரியத்தின் வேண்டுகோள் மற்றும் முன்னெச்சரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மின்சார வாரிய ஊழியர்கள் இப்பராமரிப்பு பணிகளைச் செவ்வனே செய்து முடிக்க ஏதுவாக, குறிப்பிட்ட நேரத்தில் மின்வாரியத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்கள் கவனத்திற்கு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அன்றைய தினம் மின்சாரம் தடைபட உள்ளதால், இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு குறு தொழிலகங்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளை (நீர் சேமிப்பு, மின் சாதனங்களை சார்ஜ் செய்தல் போன்றவை) முன்கூட்டியே திட்டமிட்டுத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பணிகள் நிறைவு: பராமரிப்பு பணிகள் திட்டமிட்டபடி மாலை 5:00 மணிக்குள் முடிக்கப்பட்டு, அதன்பின் உடனடியாக மின் விநியோகம் வழக்கம்போல் சீராக வழங்கப்படும் என்றும், பணிகள் முன்கூட்டியே நிறைவடைந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மின் விநியோகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாறுதலுக்கு உட்பட்டது&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/08/31e6fcffe14ee8e7a2b9837a7b3ee0351780913946254186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[150 ஆண்டுகாலக் காத்திருப்பு... 120% நெரிசலில் தவிக்கும் ரயில் பாதை! விடிவு காலம் எப்போது?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/when-will-the-thanjavur-villupuram-double-railway-line-project-happen-passengersassociation-makes-an-urgent-appeal-to-the-central-and-state-governments-263161</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/when-will-the-thanjavur-villupuram-double-railway-line-project-happen-passengersassociation-makes-an-urgent-appeal-to-the-central-and-state-governments-263161#respond</comments><pubDate>Mon, 8 Jun 2026 16:01:27 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/when-will-the-thanjavur-villupuram-double-railway-line-project-happen-passengersassociation-makes-an-urgent-appeal-to-the-central-and-state-governments-263161</guid><description><![CDATA[&lt;p&gt;கடலூர் :&amp;nbsp; தென்னக ரயில்வேயின் மிக முக்கிய மற்றும் லாபகரமான வழித்தடங்களில் ஒன்றான தஞ்சாவூர் - விழுப்புரம் பிரதான வழித்தடத்தை (Main Line) உடனடியாக இரட்டை ரயில் பாதையாக மாற்ற மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்டா மாவட்ட மக்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;150 ஆண்டுகாலப் பாரம்பரியமிக்க பிரதான வழித்தடம்&lt;/h2&gt;
&lt;p&gt;விழுப்புரம் - மயிலாடுதுறை - கும்பகோணம் - தஞ்சாவூர் வழித்தடமானது, தமிழகத்தின் மிகப்பழமையான ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பெருமை வாய்ந்த வழித்தடமாகும். சிதம்பரம் நடராஜர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், கும்பகோணம் பகுதி நவக்கிரக ஸ்தலங்கள் மற்றும் தஞ்சை பெரிய கோவில் எனப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களை இணைக்கும் முக்கியப் பாதையாக இது திகழ்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;திருச்சி ரயில்வே கோட்டத்தின் ஒட்டுமொத்த வருவாயில் சுமார் 30 சதவீதத்திற்கும் மேல் இந்த ஒரு வழித்தடத்தின் மூலமாகவே கிடைக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அதிக வருவாய் ஈட்டித் தரும் இந்த வழித்தடம், இன்னமும் ஒற்றை ரயில் பாதையாகவே (Single Line) இருப்பது இப்பகுதி மக்களின் நீண்ட காலக் குறையாக உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;120% கடந்த போக்குவரத்து நெரிசல்&lt;/h2&gt;
&lt;p&gt;தற்போது இந்த ஒற்றை ரயில் பாதையில் இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை, அதன் ஒட்டுமொத்தக் கொள்ளளவை விட 120 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துவிட்டது. சென்னை எழும்பூரில் இருந்து காரைக்கால், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தினசரி ரயில்கள், வாராந்திர சிறப்பு ரயில்கள் மட்டுமன்றி, காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கனரக சரக்கு ரயில்களும் இந்த ஒரே பாதையையே பயன்படுத்துகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால், எதிரெதிரே வரும் ரயில்களைக் கடக்க விடுவதற்காக (Crossing) ஆங்காங்கே உள்ள சிறிய ரயில் நிலையங்களில் ரயில்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக ரயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;2028 கும்பகோணம் மகாமகம்: நெருங்கி வரும் சவால்&lt;/h2&gt;
&lt;p&gt;வரும் 2028-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் உலகப் புகழ்பெற்ற மகாமகப் பெருவிழா நடைபெற உள்ளது. இதற்காகக் கும்பகோணம் ரயில் நிலையம் தற்போதே 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;மகாமகத் திருவிழாவின் போது தமிழகம் மட்டுமன்றி, இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தச் சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காகப் பல நூறு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டியிருக்கும். தற்போதிருக்கும் ஒற்றை ரயில் பாதையை வைத்துக் கொண்டு கூடுதல் ரயில்களை இயக்குவது ரயில்வே துறைக்குச் சாத்தியமற்ற ஒன்று. எனவே, 2028-க்குள் இந்த இரட்டைப் பாதை திட்டத்தை முடிப்பது கட்டாயமாகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;பொதுமக்கள் மற்றும் பயணிகள் சங்கங்களின் முக்கியக் கோரிக்கைகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;முதற்கட்டப் பணிகள் தொடக்கம்: தஞ்சாவூர் முதல் விழுப்புரம் வரையிலான 193 கிலோ மீட்டர் தூர இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கான ஆரம்பகட்ட ஆய்வுகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டே அங்கீகரிக்கப்பட்டது. எனவே, முதற்கட்டமாக அதிக நெரிசல் மிகுந்த தஞ்சாவூர் - மயிலாடுதுறை இடையேயான பகுதியை உடனடியாக இரட்டைப் பாதையாக மாற்றும் பணியைத் தொடங்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;நிதி ஒதுக்கீடு:&lt;/strong&gt; தெற்கு ரயில்வே தலைமையகம் இதற்கான விளக்கமான திட்ட அறிக்கையை (DPR) விரைந்து தயாரித்து, ரயில்வே வாரியம் மற்றும் நிதி ஆயோக்கின் ஒப்புதலுக்கு அனுப்பி, வரும் பட்ஜெட்டில் தேவையான நிதியை ஒதுக்கச் செய்ய வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைப்பு: திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மரங்களை அகற்றுதல் போன்ற பணிகளில் தமிழக அரசும், திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய ரயில்வே அமைச்சகமும் இணைந்து ஒரு கூட்டுக்குழுவை அமைத்துச் செயல்பட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;காரைக்கால் துறைமுகத்தின் சரக்குப் போக்குவரத்து வளர்ச்சி, டெல்டா மாவட்டங்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் 2028 மகாமகத் திருவிழா ஆகியவற்றை கருத்தில் கொண்டு, முடங்கிக்கிடக்கும் இந்த இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/10/2b3df3cae8121b39921868116b19e6841728561915694211_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[Mayiladuthurai Power Shutdown (09.06.2026) :உங்க ஊர் இதுல இருக்கா? ஜூன் 9-ல் 8 மணி நேரம் கரண்ட் கட் - லிஸ்ட்டை வெளியிட்ட மின் வாரியம்!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-power-shutdown-tomorrow-09-06-2026-power-cut-outage-areas-affected-details-tnn-263153</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-power-shutdown-tomorrow-09-06-2026-power-cut-outage-areas-affected-details-tnn-263153#respond</comments><pubDate>Mon, 8 Jun 2026 15:35:07 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-power-shutdown-tomorrow-09-06-2026-power-cut-outage-areas-affected-details-tnn-263153</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை:&lt;/strong&gt; மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட நீடூர் துணைமின் நிலையத்தில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) அன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அன்று ஒரு நாள் மட்டும் நீடூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மயிலாடுதுறை நகர் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவு உதவி செயற் பொறியாளர் பொறியாளர் M. விஜயபாரதி B.E., தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பராமரிப்பு பணியின் நோக்கம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாடு மின் வாரியத்தின் விதிகளின்படி, மின் நுகர்வோருக்கு தடையற்ற மற்றும் சீரான மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மாதந்தோறும் துணைமின் நிலையங்களில் உயர் அழுத்த மின் பாதைகள், மின் மாற்றிகள் (Transformers) மற்றும் மின் கம்பிகளில் உள்ள பழுதுகளை நீக்கும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள முக்கிய துணைமின் நிலையங்களில் ஒன்றான நீடூர் துணைமின் நிலையத்தில் நாளைய தினம் 09.06.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று அவசியமான மாதாந்திர பராமரிப்பு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் (காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை) இந்த பராமரிப்பு பணிகள் தடையின்றி மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புடன் நடைபெறுவதற்காக, இத்துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறக்கூடிய பின்வரும் முக்கிய ஊர்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து கிராமப் பகுதிகளிலும் அன்றைய தினம் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மின் பாதிப்புக்குள்ளாகும் முக்கிய பகுதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* நீடூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* மல்லியக்கொல்லை&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* வில்லியநல்லூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* கொண்டல்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* பாலாக்குடி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* தாழஞ்சேரி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* கொற்கை&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* அருண்மொழிதேவன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* கங்கணம்புத்தூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* மேலாநல்லூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* நடராஜபுரம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* கீழமருதாந்தநல்லூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* மேலமருதாந்தநல்லூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* பொன்மாசநல்லூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* மாப்படுகை&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* ஆனந்தக்குடி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* சோழப்பேட்டை&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* மணலூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளைச் சுற்றியுள்ள அனைத்து கிராமப்புறப் பகுதிகளுக்கும் அன்றைய தினம் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மின் வாரியத்தின் வேண்டுகோள் மற்றும் முன்னெச்சரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மின்சார வாரிய ஊழியர்கள் இப்பராமரிப்பு பணிகளைச் செவ்வனே செய்து முடிக்க ஏதுவாக, குறிப்பிட்ட நேரத்தில் மின்வாரியத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்கள் கவனத்திற்கு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அன்றைய தினம் மின்சாரம் தடைபட உள்ளதால், இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு குறு தொழிலகங்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளை (நீர் சேமிப்பு, மின் சாதனங்களை சார்ஜ் செய்தல் போன்றவை) முன்கூட்டியே திட்டமிட்டுத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பணிகள் நிறைவு: பராமரிப்பு பணிகள் திட்டமிட்டபடி மாலை 5:00 மணிக்குள் முடிக்கப்பட்டு, அதன்பின் உடனடியாக மின் விநியோகம் வழக்கம்போல் சீராக வழங்கப்படும் என்றும், பணிகள் முன்கூட்டியே நிறைவடைந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மின் விநியோகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாறுதலுக்கு உட்பட்டது&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/08/7d8a46c00abc7f5f71951895b1b6d4df1780913061377186_original.jpg" width="220"/></item></channel></rss>