<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>mayiladuthurai</title><atom:link href="https://tamil.abplive.com/mayiladuthurai/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 17 Sep 2026 11:21:31 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[கைநிறைய சம்பளத்தில் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை: உடனே விண்ணப்பியுங்கள்!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-collector-office-government-job-district-resource-trainer-magalir-thittam-tnn-274748</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-collector-office-government-job-district-resource-trainer-magalir-thittam-tnn-274748#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 22:02:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-collector-office-government-job-district-resource-trainer-magalir-thittam-tnn-274748</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ், பல்வேறு திறன் மேம்பாட்டுப் பணிகள் மிகச் சிறப்பாக மேற்கோள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு கிராமப்புற வளர்ச்சிப் பணிகளையும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான திறன் பயிற்சி நடவடிக்கைகளையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், காலியாக உள்ள ஒரு 'மாவட்ட வள பயிற்றுநர்' (IB &amp;amp; CB) பணியிடத்தை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி விவரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.06.2026 அன்றைய தேதியின்படி குறைந்தபட்சம் 30 வயது பூர்த்தியடைந்தவராகவும், 50 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். கல்வித் தகுதியை பொறுத்தவரை, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் வழக்கமான முறைப்படி (Regular mode) பயின்று முதுகலைப் பட்டம் (Post Graduate Degree) பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். மேலும், விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மிகச்சிறப்பாக எழுதவும் பேசவும் கூடிய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முந்தைய பணி அனுபவம் மற்றும் பிற திறன்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பதாரர்கள் கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து மட்டத்திலான கூட்டமைப்புகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அரசுத் துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் பயிற்றுநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக, பல்வேறு நிலைகளில் உள்ள முக்கிய பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சிகள் அளித்ததில் குறைந்தது 4 ஆண்டுகள் தீவிர பணி அனுபவம் பெற்றிருப்பது கட்டாயமாகும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுதவிர, சிறந்த தகவல் தொடர்புத் திறன், அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லும் ஆளுமைத்திறன் மற்றும் பிறருடன் இணக்கமாகப் பழகும் நற்பண்புகள் பெற்றிருக்க வேண்டும். இக்காலகட்டத்திற்கு ஏற்ப கணினி பயன்பாட்டுத் திறன் மற்றும் ஆண்ட்ராய்டு கைபேசி செயலிகளைத் தடங்கலின்றி கையாளும் நடைமுறைச் சாத்தியமான தொழில்முறைத் திறன்களையும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் தங்களது விண்ணப்பங்களை வரும் 18.09.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை &quot;இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, நான்காம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை&quot; என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். குறிப்பிடப்பட்ட கடைசி நாளான 18.09.2026-க்குப் பிறகு வரப்பெறும் விண்ணப்பங்கள் எந்தவொரு காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்வு செய்யப்படும் முறை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பணியிடத்திற்கான தகுதியான நபர்கள் முற்றிலும் வெளிப்படையான முறையில் மாவட்ட தேர்வுக்குழு வாயிலாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக விண்ணப்பதாரர்களுக்கு மொத்தம் 100 மதிப்பெண்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படும். இதில் 50 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வும், எஞ்சிய 50 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வும் அடங்கும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தகுதியான நபர் தேர்வு செய்யப்படுவார். எனவே, தகுதியுடைய நபர்கள் நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு குறித்த காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/2801c149995e72746e3564a44c3413671789576304502186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மக்களே உஷார்! 2026-ம் ஆண்டு பருவமழை பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-monsoon-2026-collector-precautionary-alert-helpline-numbers-announcement-tnn-274743</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-monsoon-2026-collector-precautionary-alert-helpline-numbers-announcement-tnn-274743#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 21:06:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-monsoon-2026-collector-precautionary-alert-helpline-numbers-announcement-tnn-274743</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை மாவட்டத்தில் வரவிருக்கும் 2026-ஆம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், மின்சாரத்துறை சார்பிலும் பல்வேறு கட்டுப்பாட்டு எண்கள் அறிவிக்கப்பட்டு அவசர வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மழைக் காலங்களில் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வச் செய்திக் குறிப்பின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மின்சார அபாயங்களும் கால்நடைகள் பாதுகாப்பும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பருவமழை நேரத்தில் வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக மின்கம்பங்கள் சரிந்து விழுதல், மின்கம்பிகள் அறுந்து தொங்குதல் போன்ற மின் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் மழைக்காலங்களில் மின்சார கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின்சார விநியோகப் பெட்டிகள் அருகே நிற்கவோ அல்லது ஒதுங்கவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை மின்சார கம்பங்கள் மற்றும் வீட்டின் வெளிப்புற மின் இணைப்புகள் அருகில் செல்லாதவாறு பாதுகாப்பான கொட்டகைகளில் கட்டி வைத்துப் பராமரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சேதங்கள் மற்றும் புகார்களுக்கான உதவி எண்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்கள் வாழும் பகுதிகளில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பங்கள் ஏதேனும் தென்பட்டாலோ அல்லது கடுமையான மழைப்பொழிவால் வீடுகளையும் குடியிருப்புகளையும் மழைநீர் சூழும் சூழ்நிலை ஏற்பட்டாலோ உடனடியாக மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்புகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மழைக்காலத்தில் ஏற்படும் சாலைப் போக்குவரத்து பாதிப்புகள், பலத்த காற்றினால் வீதிகளில் சாயும் மரங்கள் மற்றும் ஆபத்தான கட்டடச் சேதங்கள் தொடர்பான புகார்களையும் தகவல்களையும் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் கட்டுப்பாட்டு அறையை அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்சாரத்துறை தொடர்பு எண்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்காகவும் புகார்களைப் பதிவு செய்வதற்காகவும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அவசரக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க 04364-222588 என்ற தொலைபேசி எண்ணையும், 04364-1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தவிர, மின்சாரத்துறை சார்ந்த உடனடிப் புகார்களுக்காக மண்டல வாரியாகத் தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்தவர்கள் 9445854030 என்ற எண்ணிற்கும், சீர்காழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 9445853990 என்ற எண்ணிற்கும் தொடர்புகொண்டு மின்தடை மற்றும் மின் விபத்து குறித்த தகவல்களைத் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆட்சியரின் பாதுகாப்பு வேண்டுகோள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்ட நிர்வாகம் அனைத்துவிதமான அவசர நிலைகளையும் சந்திக்கத் தயார் நிலையில் இருப்பதாகவும், மீட்புக் குழுக்கள் மற்றும் துறைசார் அலுவலர்கள் முழு வீச்சில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி, மழைக் காலங்களில் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்த்து, பாதுகாப்பாக இருக்குமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தனது செய்திக்குறிப்பில் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/9d1df7ae2790ef9c373fc15c1eced5a81789572981775186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-district-tamilnadu-bc-mbc-students-central-institutes-education-scholarship-tnn-274737</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-district-tamilnadu-bc-mbc-students-central-institutes-education-scholarship-tnn-274737#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 20:22:18 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-district-tamilnadu-bc-mbc-students-central-institutes-education-scholarship-tnn-274737</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு 2026-2027ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களையும் விண்ணப்பிக்கும் நடைமுறைகளையும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், முக்கிய செய்திக் குறிப்பாக வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திட்டத்தின் முக்கிய நோக்கம் மற்றும் தகுதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நிதி நெருக்கடியின்றி நாட்டின் புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும் என்ற உயரிய நோக்கில் இக்கல்வி உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இயங்கி வரும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பு (UG) மற்றும் முதுகலை பட்டப்படிப்பு (PG) பயிலும் மாணவ, மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது முதன்மைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வழங்கப்படும் உதவித்தொகை விபரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்திட்டத்திற்குத் தகுதியான மாணவர்களுக்கு அவர்களின் படிப்பிற்கான கற்பிப்பு கட்டணம் (Tuition Fee), தேர்வு கட்டணம் (Exam Fee) மற்றும் கல்வி நிறுவனங்களால் வசூலிக்கப்படும் இதர கட்டாயக் கட்டணங்கள் ஆகியவை கல்வி உதவித்தொகையாக திரும்ப வழங்கப்படும். அல்லது ஆண்டிற்கு அதிகபட்சமாக ரூபாய் 2.00 இலட்சம் வரை நிதியுதவியாக மாணவர்களுக்குக் கிடைக்கும். அதேவேளையில், மத்திய அல்லது மாநில அரசின் பிற கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் மற்றும் நிதியுதவிகளைப் பெற்று வரும் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறத் தகுதியற்றவர்கள் ஆவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பப் படிவங்கள் பெறும் வழிமுறைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பப் படிவங்களைச் நேரடியாகவோ அல்லது இணையதளம் வாயிலாகவோ பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களைச் சென்னை-05 இல் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம் அல்லது அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று பெற்றுக் கொள்ளலாம்.&amp;zwnj; மேலும், மாணவர்கள் தங்களின் வசதிக்காக &lt;a href=&quot;http://www.bcewd.tn.gov.in&quot;&gt;www.bcewd.tn.gov.in &lt;/a&gt;என்ற அதிகாரப்பூர்வ அரசு இணையதளப் பக்கத்திற்குச் சென்றும் விண்ணப்பங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முறை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பதிவிறக்கம் செய்யப்பட்ட அல்லது பெறப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மாணவர்கள் முறையான சான்றிதழ்களுடன் முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை அந்தந்த கல்வி நிறுவனங்கள் உடனடியாகப் பரிசீலித்து, உரிய பரிந்துரையுடன் சம்பந்தப்பட்ட நலத்துறை அலுவலகங்களுக்கு விரைந்து அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;2026-2027ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்குக் குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே உதவித்தொகை பெற்று வரும் மாணவர்களுக்கான புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்கள் 31.10.2026-க்குள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். முதன்முறையாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான புதிய (Fresh) விண்ணப்பங்கள் 30.11.2026-க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். மேலும், இரட்டைப் பருவ முறையில் பயிலும் மாணவர்களுக்கான Even Semester கட்டண இரசீதுகள் 15.01.2027-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். தகுதியுடைய தமிழக மாணவர்கள் அனைவரும் இச்சலுகையைப் பயன்படுத்தி உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/e4e1ce03e37d279f3740a6086403c96d1789570234173186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மயிலாடுதுறை மாவட்ட மக்களே கவனத்திற்கு: காரைமேடு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் வேலைவாய்ப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-karaimedu-adi-dravidar-welfare-school-jobs-recruitment-tnn-274728</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-karaimedu-adi-dravidar-welfare-school-jobs-recruitment-tnn-274728#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 17:54:33 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-karaimedu-adi-dravidar-welfare-school-jobs-recruitment-tnn-274728</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காரைமேடு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை:&amp;zwnj; &lt;/strong&gt;மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு காரைமேடு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், அங்கு காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளை சீராகப் பராமரிக்கும் நோக்கில், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியாற்றுவதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காலியிடங்கள் மற்றும் தற்காலிக நியமன விவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, காரைமேடு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள காவலர் மற்றும் சுகாதாரப் பணியாளர் ஆகிய இரண்டு முக்கிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில், வெளிமுகமை (External Agency) மூலமாக தற்காலிகமாக மட்டுமே நிரப்பப்பட இருக்கின்றன. தேர்வு செய்யப்படும் நபர்கள் பள்ளியின் அன்றாட பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டியிருக்கும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தேவையான ஆவணங்கள் மற்றும் சமர்ப்பிக்கும் முறை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களது எழுத்துப்பூர்வமான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது அடையாளச் சான்றாக ஆதார், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான சமீபத்திய புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைப்பது கட்டாயமாகும். மேற்கண்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் மூன்று பிரதிகளாகத் தயாரித்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட மக்கள் கற்றல் மையம் (மகமை) அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், செம்பனார்கோயில், மயிலாடுதுறை &amp;ndash; 609309. அஞ்சல் வழியில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் தாமதமின்றி குறிப்பிட்ட அலுவலக முகவரிக்கு வந்து சேருமாறு தபால் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கடைசி நாள் மற்றும் ஆட்சியரின் அழைப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நிர்ணயிக்கப்பட்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் செப்டம்பர் 18, 2026 அன்று மாலை 05.45 மணிக்குள் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு வந்து சேர வேண்டும். அதற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவொரு காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தகுதியுடைய நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தனது செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பணியிடங்கள் குறித்த மேலதிக மற்றும் முக்கிய விவரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;காவலர் (Watchman):&lt;/strong&gt; பள்ளி வளாகம், கட்டிடங்கள் மற்றும் அரசுச் சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்தல். பள்ளி இயங்கும் நேரம் மற்றும் இரவு நேரங்களில் வளாகத்தை கண்காணித்தல்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சுகாதாரப் பணியாளர் (Sanitation Worker):&lt;/strong&gt; பள்ளி வகுப்பறைகள், வளாகம், குடிநீர் பகுதிகள் மற்றும் கழிப்பறைகளை நாள்தோறும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரித்தல்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஊதியம் மற்றும் பணித் தன்மை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஒப்பந்த அடிப்படை (Outsourcing):&lt;/strong&gt; இவை நிரந்தர அரசுப் பணியிடங்கள் அல்ல. மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக வெளிமுகமை (External Agency) தேர்வின் கீழ் தொகுப்பூதிய அடிப்படையில் வழங்கப்படும் தற்காலிகப் பணியிடங்களாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஊதிய விவரம்:&lt;/strong&gt; அரசால் வெளிமுகமைப் பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர தொகுப்பூதியம் வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது கவனிக்க வேண்டியவை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நகல்களின் எண்ணிக்கை&lt;/strong&gt;: கோரப்பட்டுள்ள 4 சான்றுகளின் நகல்களையும் (ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், புகைப்படங்கள்) 3 பிரதிகளாக (3 Sets) தனித்தனியாக இணைக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சமர்ப்பிக்கும் இடம்:&lt;/strong&gt; விண்ணப்பங்களை மயிலாடுதுறை அல்லது காரைமேடு பள்ளியில் தரக் கூடாது; செம்பனார்கோயிலில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள 'மாவட்ட மக்கள் கற்றல் மையம் (மகமை)' அலுவலகத்திலேயே நேரடியாகவோ அல்லது தபாலிலோ வழங்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கடைசி நேரம்:&lt;/strong&gt; 18.09.2026 அன்று மாலை 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டா.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் தெளிவுரைகளுக்கு செம்பனார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தையோ அல்லது மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தையோ நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/b4cdb1aa38b514e60c9e74aab51e93431789561449505186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கடைமடையில் காவிரி! கொண்டாட்டம் ஒரு பக்கம்... பெரும் கவலை மறுபக்கம்!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-poombuhar-melaiyur-dam-cauvery-water-farmers-demand-tnn-274726</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-poombuhar-melaiyur-dam-cauvery-water-farmers-demand-tnn-274726#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 17:18:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-poombuhar-melaiyur-dam-cauvery-water-farmers-demand-tnn-274726</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை:&lt;/strong&gt; டெல்டா காவிரி பாசன பகுதியின் வாழ்வாதாரமாக விளங்கும் மேட்டூர் அணை, நடப்பு சம்பா சாகுபடி பருவத்திற்காக கடந்த ஒன்றாம் தேதி காலதாமதமாக தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரானது படிப்படியாகப் பயணித்து, கல்லணையை அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆறாம் தேதி கல்லணையிலிருந்தும் காவிரி பாசனக் கால்வாய்களுக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காவிரி ஆற்றின் பல்வேறு கிளைகள் மற்றும் வாய்க்கால்கள் வழியாகப் பயணித்த இந்த நதிநீர், பத்து நாட்கள் தொடர் பயணத்திற்குப் பிறகு காவிரி கடலோடு கலக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பூம்புகார் பகுதிக்கு முன்னதாக அமைந்துள்ள மேலையூர் கதவணைப் பகுதிக்கு வந்து சேர்ந்தது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கடைசி கதவணையில் காவிரிக்குச் சிறப்பு வரவேற்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிக முக்கிய மற்றும் கடைசி கதவணை மேலையூர் கதவணையாகும். கடந்த 13ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட எல்லைக்கு வந்தடைந்த காவிரி நீரானது, வினாடிக்கு 803 கன அடி வீதம் ஆற்றின் வழியே பாய்ந்து, பல கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து இந்த இறுதி கதவணை நிலையை எட்டியுள்ளது. காவிரி அன்னையின் வரவைக் கொண்டாடும் விதமாக, கதவணைப் பகுதியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். பாயந்து வந்த காவிரி நீருக்கு மலர்களைத் தூவி, தீபாராதனை காட்டி விவசாயிகள் மிகுந்த உவகையுடனும் மரியாதையுடனும் வழிபாடு செய்து காவிரி நீரை முறைப்படி வரவேற்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தண்ணீர் வரத்து குறைவு: சாகுபடிக்குச் சவாலான சூழல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மகிழ்ச்சியோடு வரவேற்பு அளிக்கப்பட்ட போதிலும், கதவணைக்கு வந்து சேர்ந்துள்ள தண்ணீரின் அளவு மிகவும் குறைவாக இருப்பது அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலையூர் கதவணையில் அதிகபட்சமாக 7.5 அடி உயரம் வரை தண்ணீரைத் தேக்கி வைத்துப் பாசனத்திற்குப் பயன்படுத்த முடியும் என்ற நிலையில், தற்போது வெறும் இரண்டடி நீர் மட்டுமே வந்து சேர்ந்துள்ளது. இதனால் இந்த கத அணையை நம்பி இருக்கும் சுமார் 3,016 ஏக்கர் பாசனப் பரப்புப் பகுதிகளுக்குப் பயிர்களுக்குத் தேவையான போதிய தண்ணீர் தங்கு தடையின்றி கிடைப்பதில் பெரும் சிரமம் உருவாகியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சம்பா சாகுபடியைச் சீராக மேற்கொண்டு அறுவடை நிலையை அடைய வேண்டுமானால், குறைந்தபட்சம் 100 நாட்களுக்காவது எவ்விதத் தடங்கலும் இன்றி தொடர்ந்து தண்ணீர் வரத்து இருப்பது அவசியமாகும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அரசுக்கு விவசாயிகள் முன்வைக்கும் அவசரக் கோரிக்கைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது வந்துள்ள குறைந்த அளவிலான நீரைக் கொண்டு சம்பா பயிர்களைப் பாதுகாப்பது கடினம் என்பதால், பாசனப் பகுதி விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை கணிசமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தடையின்றி காவிரி நீர் கடைமடை வரை வந்து சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய சட்டப்படியான நதிநீரைப் பெறுவதற்கு கர்நாடக அரசுடன் பேசி, உரிய காவிரி நீரை விரைந்து கேட்டுப் பெற தமிழக அரசு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பெரிய ஏரிகளுக்கு நீர் வழங்குவதில் நீடிக்கும் சிக்கல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காவிரியில் தண்ணீர் வரத்து மிகக் குறைந்த அளவில் இருப்பதால், மயிலாடுதுறை மாவட்டத்தின் மிக முக்கியப் பாசன ஆதாரங்களாகவும் பெரிய ஏரிகளாகவும் விளங்கும் திருவாலி ஏரி மற்றும் பெருந்தோட்டம் ஏரி ஆகியவற்றிற்குத் தண்ணீர் கொண்டு செல்வதில் தற்போது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த இரு பெரிய ஏரிகளும் நிரம்பினால் மட்டுமே சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நில நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், நேரடிப் பாசனத்திற்கும் நீர் உறுதியாகும். ஆனால், ஆற்றில் பாய்ந்து வரும் தற்போதைய குறைந்த அளவு நீரைக் கொண்டு ஏரிகளை நிரப்புவது சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது. எனவே, சம்பா பயிர்கள் வாடாமல் காக்கவும், மாவட்டத்தின் முக்கிய நீர்நிலைகளான திருவாலி, பெருந்தோட்டம் ஏரிகளை முழுமையாக நிரப்பவும் அரசு கூடுதல் தண்ணீரை உடனடியாகக் காவிரியில் திறந்து விட வேண்டும் என்பதே பாசன பகுதி மக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/56b555109bbd9f5380859ebd5669b93e1789559290782186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கடலிலும் காவிரியிலும் கரைந்த கணபதி! விண்ணைப் பிளந்த 'கணபதி பாப்பா மோரியா' கோஷம்! ]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/vinayagar-chaturthi-visarjan-mayiladuthurai-cauvery-thula-ghat-tharangambadi-sirkazhi-tnn-274677</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/vinayagar-chaturthi-visarjan-mayiladuthurai-cauvery-thula-ghat-tharangambadi-sirkazhi-tnn-274677#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 10:30:51 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/vinayagar-chaturthi-visarjan-mayiladuthurai-cauvery-thula-ghat-tharangambadi-sirkazhi-tnn-274677</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை:&lt;/strong&gt; மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா கடந்த சில நாட்களாக மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி துலாக்கட்டம், உப்பனாறு மற்றும் தரங்கம்பாடி கடலில் பக்திச் பரவசத்துடன் கரைக்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சீர்காழி உப்பனாற்றில் விசர்ஜனம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சீர்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் 44 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை பேண்டு வாத்தியங்கள் மற்றும் மேள தாளங்கள் முழங்க விநாயகர் சிலைகளின் ஊர்வலம் கோலாகலமாகத் தொடங்கியது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சீர்காழி நகரில் அமைக்கப்பட்டிருந்த கோமளவல்லி விநாயகர், கணநாதர், செல்வவிநாயகர், மங்களவிநாயகர், சொர்ணாகர்ஷணவிநாயகர், சித்திவிநாயகர், உதயபானுவிநாயகர், மங்கையர்கரசிவிநாயகர், ஈசானியதெருவிநாயகர், பிடாரிவடக்குவீதி விநாயகர், ரயிலடி விநாயகர்,பாலவிநாயகர், கற்பகவிநாயகர், சாலைக்கரைவிநாயகர் உள்ளிட்ட அனைத்து விநாயகர் சிலைகளும் விதவிதமான அலங்காரங்களுடனும், வண்ணமயமான மின்னொளி அலங்காரத்துடனும் ஊர்வலமாகப் புறப்பட்டு பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அங்கு ஒரே நேரத்தில் அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பான வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர், ஒவ்வொரு விநாயகர் சிலையாக வரிசையாகப் புறப்பட்டு நகரின் பிரதான வீதிகள் வழியாகச் சென்று உப்பனாற்றை சென்றடைந்தன. அங்கு அனைத்துச் சிலைகளும் முறைப்படி உப்பனாற்றில் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலம் மற்றும் கரைப்பு நிகழ்வின் போது எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்கும் வகையில், சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் சரவணனின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் கமல் ராஜ் உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காவிரி துலாக்கட்டத்தில் சிலைகள் கரைப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் சுமார் 600-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பலவிதமான வடிவங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பொதுமக்கள் மூன்று நாட்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். நேற்று முன்தினம் தரங்கம்பாடி பகுதியில் சிலைகள் கரைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 37-ஆம் ஆண்டு &lt;a title=&quot;விநாயகர் சதுர்த்தி&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vinayagar-chaturthi-2026&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விநாயகர் சதுர்த்தி&lt;/a&gt; திருவிழா விசர்ஜனம் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கோயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளைப் பக்தர்கள் வாகனங்களில் ஏற்றுக்கொண்டு, மேள வாத்தியங்கள் மற்றும் பேண்டு வாத்தியங்கள் முழங்க, இளைஞர்களின் ஆரவார நடனத்துடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாகச் சுமந்து வந்தனர். நகரில் அமைக்கப்பட்டிருந்த 60-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் பேரணியாகக் கொண்டு வரப்பட்டு, காசிக்கு நிகரான புகழ்பெற்ற மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தை வந்தடைந்தன. அங்குச் சிலைகளுக்குச் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு, காவிரி ஆற்றில் முறைப்படி விசர்ஜனம் செய்யப்பட்டன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பச்சைக்காளி ஆட்டத்துடன் அசத்திய பாஜக மற்றும் இந்து அமைப்புகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை காமராஜர் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கண்கொடுத்த விநாயகர் கோயிலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் தனிச்சிறப்புடன் நடைபெற்றது. பாஜக மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் மோடி கண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பம்பை உடுக்கை மேள வாத்தியங்கள் முழங்க, பாரம்பரியமிக்க பச்சைக்காளி ஆட்டத்துடன் விநாயகர் சிலை விமரிசையாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் துறவிகள் பலர் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இவ்விழாவில் பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு, இந்து முன்னணி மாவட்டத் தலைவர் சரண்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் சுவாமிநாதன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹா பிரியா தலைமையில் 150-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தரங்கம்பாடி கடலில் சிலைகள் விசர்ஜனம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதேபோன்று, தரங்கம்பாடி தாலுக்காவிற்கு உட்பட்ட எரவாஞ்சேரி, சங்கரன்பந்தல், இலுப்பூர், உத்திரங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் 3 அடி முதல் 7 அடி வரை பல்வேறு வடிவங்கள் மற்றும் பல வண்ண நிறங்களில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்குப் பொதுமக்கள் திரளாக வந்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, சங்கரன்பந்தல் கடைவீதியில் இருந்து சுமார் ஏராளமான விநாயகர் சிலைகள் மேள வாத்தியங்கள் முழங்க இளைஞர்களின் உற்சாக ஆரவாரத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தரங்கம்பாடி கடலில் கரைக்கப்பட்டன. கடலோரப் பகுதியில் பாதுகாப்பு கருதி நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர், தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் கடலோரக் காவல் நிலையக் காவலர்கள் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/c5dc3d91f0aeaadcae526ff6a6d2eedf1789534755652186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[அக்டோபர் 31-க்குள் வாங்கலைனா கைவிட்டுப் போகும்... 10, 12-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இதுதான் கடைசி சான்ஸ்! ]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-10th-12th-private-candidates-mark-sheet-october-last-date-tnn-274644</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-10th-12th-private-candidates-mark-sheet-october-last-date-tnn-274644#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 22:06:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-10th-12th-private-candidates-mark-sheet-october-last-date-tnn-274644</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2019 முதல் 2023 வரை தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அக். 31-க்குள் பெற அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நாகப்பட்டினம்: &lt;/strong&gt;நாகப்பட்டினம் மாவட்டத்தில் மார்ச் 2019 முதல் ஜூன் 2023 வரையிலான காலக்கட்டத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதிய தனித்தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நாகப்பட்டினம் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் மு.ரவிச்சந்திரன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியீடு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சான்றிதழ்கள் கழிவுத்தாள்களாக மாற்ற நடவடிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த மார்ச் 2019 முதல் ஜூன் 2023 வரையிலான பருவங்களில் மேல்நிலை இரண்டாமாண்டு (பன்னிரண்டாம் வகுப்பு) மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் பல பருவங்களுக்குரிய மதிப்பெண் சான்றிதழ்கள், இதுநாள் வரையிலும் சம்பந்தப்பட்ட நபர்களால் அலுவலகத்தில் நேரில் வந்து பெறப்படாமல் உரிமைக்கோரப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. அவ்வாறு உரிமைக்கோரப்படாத நிலையில் நிலுவையில் உள்ள அசல் மதிப்பெண் சான்றிதழ்களை விதிமுறைகளின்படி கழிவுத்தாள்களாக மாற்றி அழிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்தச் சான்றிதழ்களைக் கழிவுத்தாள்களாக மாற்றுவதற்கு ஒப்புதல் கோரி அரசுக்கு முறையான கருத்துரு விரைவில் அனுப்பப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சான்றிதழ் பெற அக்டோபர் 31 கடைசி நாள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அரசுக்குக் கருத்துரு அனுப்பப்பட்டுச் சான்றிதழ்கள் அழிக்கும் நடைமுறைக்கு உட்படுத்தப்பட உள்ளதால், தனித்தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை மீட்பதற்கு அளிக்கப்படும் இறுதி வாய்ப்பு இதுவேயாகும். எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட தனித்தேர்வர்கள் அனைவரும் வரும் 31-10-2026 ஆம் தேதிக்குள் நாகப்பட்டினத்தில் இயங்கி வரும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து, தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைத் தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இந்த இறுதித் தேதிக்குப் பிறகு உரிமைக்கோரப்படாத சான்றிதழ்கள் மீது எவ்வித மேல்முறையீடும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதால், மாணவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சமீபத்திய பருவத் தேர்வர்களுக்கான அறிவிப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், ஜூன் 2023 பருவத்திற்குப் பிந்தைய காலங்களில் மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை எழுதிய தனித்தேர்வர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களும் தற்போது தயார் நிலையில் உள்ளன. அப்பருவங்களில் தேர்வெழுதிய மாணவர்களும் நாகப்பட்டினம் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி, தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை எவ்வித தாமதமுமின்றி உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் மு.ரவிச்சந்திரன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மதிப்பெண் சான்றிதழின் முக்கியத்துவம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கல்விப் பயணத்தில் பெறப்படும் ஒவ்வொரு மதிப்பெண் சான்றிதழும் ஒரு நபரின் தகுதி, உழைப்பு மற்றும் திறமைக்கான அதிகாரப்பூர்வ ஆவணமாகத் திகழ்கிறது. பள்ளிப் படிப்பை முடிப்பது முதல் பணி ஓய்வு வரை வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் சான்றிதழ்கள் இன்றியமையாத பங்கினை வகிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுத்தேர்வு சான்றிதழ்கள் தொலைந்துபோனாலோ அல்லது சேதமடைந்தாலோ, அவற்றுக்கான மாற்றுச் சான்றிதழ்கள் (Duplicate Mark Sheets) பெறுவது அதிக காலவிரயமும் சிரமமும் நிறைந்த செயல்முறையாகும். எனவே, அரசுத் தேர்வுகள் துறையால் வழங்கப்படும் அசல் சான்றிதழ்களை உரிய காலத்தில் பெற்று, பத்திரமாகப் பாதுகாப்பது ஒவ்வொரு மாணவரின் கடமையாகும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/ae0c23110c069870edfa2bdb4e1243061789490191230186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[உப்பனாற்றங்கரையில் உருவாகும் புதிய ஆன்மீக மையம்: 13 யாக குண்டங்கள் முழங்க பிரம்மாண்டமாகத் தொடங்கிய மெய்ஞான ஈஸ்வரர் கோயில் பணி!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-sirkazhi-meignanaeeswarar-temple-bhumi-pooja-tnn-274639</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-sirkazhi-meignanaeeswarar-temple-bhumi-pooja-tnn-274639#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 21:14:54 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-sirkazhi-meignanaeeswarar-temple-bhumi-pooja-tnn-274639</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சீர்காழி அருகே மெய்ஞான ஈஸ்வரர் புதிய சிவ ஆலயக் கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜையில் ஜப்பான், தைவான், மலேசியாவைச் சேர்ந்த வெளிநாட்டுப் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சீர்காழி: &lt;/strong&gt;மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆன்மீகப் பூமியில் மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, புதிய சிவ ஆலயம் அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. சீர்காழி அருகேயுள்ள பழமைவாய்ந்த சூரைக்காடு பகுதியில், அமைதியாக பாய்ந்தோடும் உப்பனாற்றங்கரையில் சிவபெருமானுக்கு 'மெய்ஞான ஈஸ்வரர்' என்ற தெய்வீகத் திருநாமத்துடன் இப்புதிய திருக்கோயில் அமைக்கப்பட உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நீண்ட நாட்களாக இப்பகுதி மக்களின் ஆன்மீகக் கனவாக இருந்த இக்கோயில் கட்டுமானப் பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையேயும் சிவபக்தர்களிடையேயும் அளப்பரிய மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பிரம்மாண்ட யாக சாலை பூஜைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புதிய ஆலயக் கட்டுமானப் பணிகள் எவ்வித தடங்கலும் இன்றி இனிதே நிறைவேற வேண்டியும், உலக நன்மையை முன்னிறுத்தியும் வேத ஆகம விதிகளின்படி சிறப்பு வழிபாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. இதற்காக ஆலயம் அமைய உள்ள பகுதியில் பிரம்மாண்டமான யாக சாலை அமைக்கப்பட்டு ஸ்தல சுத்தி மற்றும் வாஸ்து சாந்தி ஹோமங்கள் கணபதி பூஜையுடன் தொடங்கின.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;13 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, சிவச்சாரியார்கள் மற்றும் வேத விற்பன்னர்கள் பங்கேற்று வேத மந்திரங்கள் மற்றும் திருமுறைப் பதிகங்களை முழங்க சிறப்புப் பூஜைகளை முன்னின்று நடத்தினர். யாகத்தின் நிறைவில் பூர்ணாஹுதி நிறைவுற்று, புனித நீர் அடங்கிய கலசங்களுக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பூமி பூஜை முறைப்படி இனிதே நிறைவேற்றப்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சர்வதேச பக்தர்களின் ஆன்மீக சங்கமம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த மங்கல நிகழ்வின் மிக முக்கிய அம்சமாக, உள்ளூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஏராளமான பக்தர்களுடன் சர்வதேச பக்தர்களின் பங்கேற்பும் அமைந்தது. குறிப்பாக தைவான், ஜப்பான் மற்றும் மலேசியா ஆகிய ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஆன்மீகப் பிரதிநிதிகள் மற்றும் சிவபக்தர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். தமிழகத்தின் பாரம்பரிய முறையில் வேட்டி, புடவை அணிந்து வந்த வெளிநாட்டுப் பக்தர்கள், ஹோமப் புகைக்கு நடுவே &quot;நமச்சிவாய&quot; மந்திரங்களை உச்சரித்தபடி கை கூப்பி சுவாமி தரிசனம் செய்தது ஆன்மீக எல்லைகளைக் கடந்த ஒரு தெய்வீக அனுபவமாக அங்கு கூடி இருந்தவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மெய்ஞான ஈஸ்வரரின் அருள் ஒளி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உப்பனாற்றங்கரையில் அமையவுள்ள இக்கோவில், வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றி ஆன்மீக மெய்ஞானத்தை புகட்டும் ஒரு முதன்மை மையமாகவும் திகழும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் உருவாகும் இந்த மெய்ஞான ஈஸ்வரர் திருக்கோயில், வருங்காலத்தில் உலகெங்கிலும் உள்ள சிவபக்தர்களை ஈர்க்கும் அமைதிப் பூங்காவாக விளங்கும் என்று கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பூமி பூஜையைத் தொடர்ந்து வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் ஆன்மீக அமைப்புகளின் சார்பில் சிறப்பு மகா பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அருள்மிகு மெய்ஞான ஈஸ்வரரின் திருக்கோயில் கட்டுமானப் பணிகள் விரைவாக முடிவற்று விரைவில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/6c0df72d73d375cc788c1e33cd503e0d1789487041525186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TNPSC தேர்வுக்கு போறப்ப இதையெல்லாம் கொண்டு போகாதீங்க! தேர்வர்களுக்கு முக்கிய அலர்ட்!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-tnpsc-exam-arrangements-rules-collector-announcement-tnn-274621</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-tnpsc-exam-arrangements-rules-collector-announcement-tnn-274621#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 18:44:16 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-tnpsc-exam-arrangements-rules-collector-announcement-tnn-274621</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் எழுதவுள்ள TNPSC தேர்வுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை:&lt;/strong&gt; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வானது எதிர்வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. அரசுத் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இத்தேர்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் எவ்வித சிரமமும் இன்றி அமைதியான முறையில் தேர்வை எதிர் கொள்ளும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்வு மையங்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் விவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும் இத்தேர்விற்காக ஏ.வி.சி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஏ.வி.சி பொறியியல் கல்லூரி ஆகிய இரண்டு முக்கியக் கல்வி நிறுவனங்கள் தேர்வு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 19 சனிக்கிழமை முற்பகலில் நடைபெறும் கொள்குறி வகை எழுத்துத் தேர்வை ஏ.வி.சி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஏ.வி.சி பொறியியல் கல்லூரி ஆகிய இரண்டு தேர்வு மையங்களிலும் சேர்த்து மொத்தம் 1035 தேர்வர்கள் எழுத உள்ளனர். அதனைத் தொடர்ந்து, அன்றைய தினம் பிற்பகலில் நடைபெறும் விரித்துரைக்கும் வகைத் தேர்வானது ஏ.வி.சி பொறியியல் கல்லூரியில் மட்டும் நடைபெறவுள்ளதாகவும், இந்த தேர்வினை ஒரு தேர்வர் எழுத உள்ளார் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் அரசுப் போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் இயக்கம் செய்யப்பட உள்ளன. தேர்வு நடைபெறும் நேரத்தில் எவ்வித தடையுமின்றி மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய மின்சார வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், அனைத்துத் தேர்வுக்கூடங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. அவசர மருத்துவ உதவிகளை எதிர்கொள்ளும் வகையில் தேர்வுக்கூட வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மருத்துவக் குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு மையங்களின் பாதுகாப்பிற்காகப் போதுமான காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்வர்களுக்கான நேரக் கட்டுப்பாடு மற்றும் கட்டுப்பாடுகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்தேர்வில் பங்கேற்கும் தேர்வர்கள் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள நேரக் கட்டுப்பாடுகளை மிகக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். முற்பகல் தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வந்து சேர வேண்டும், காலை 9.00 மணிக்கு மேல் வருகை தரும் தேர்வர்களுக்குத் தேர்வுக்கூடத்திற்குள் நுழைய கண்டிப்பாக அனுமதி வழங்கப்படமாட்டாது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதேபோல் பிற்பகல் தேர்வெழுதும் விண்ணப்பதாரர் பிற்பகல் 1.30 மணிக்குள் மையத்திற்கு வருகை புரிய வேண்டும், பிற்பகல் 2.00 மணிக்கு மேல் வரும் நபர்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் தேர்வுக்கூடத்திற்குள் கைப்பேசி, கால்குலேட்டர், டிஜிட்டல் கடிகாரங்கள் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களையும் எடுத்து வரக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி குறித்த நேரத்திற்குள் வருகை தந்து தேர்வைச் சிறப்பாக எழுதிட வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/12acc0b51c48752442726182ad80ced01789478038278186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[நாகப்பட்டினத்தில் Mega Job Fair 2026: 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-district-private-sector-job-fair-2026-10000-jobs-tnn-274619</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-district-private-sector-job-fair-2026-10000-jobs-tnn-274619#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 18:19:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-district-private-sector-job-fair-2026-10000-jobs-tnn-274619</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நாகப்பட்டினம்:&lt;/strong&gt; நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி நாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் தகுந்த வேலைவாய்ப்பை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உயரிய நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இம்முகாமில், பல்வேறு முன்னணித் தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தேர்வு நடத்தவுள்ளதால் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முகாம் நடைபெறும் இடம் மற்றும் நேரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் செப்டம்பர் 26, 2026 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடத்தப்படவுள்ளது. அன்றைய தினம் காலை 09.00 மணிக்குத் தொடங்கும் இம்முகாம் மதியம் 03.00 மணி வரை இடைவிடாது நடைபெறும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதில் ஆயிரக்கணக்கான வேலைநாடுநர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு மையமும் மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கல்வித் தகுதிகள் மற்றும் தகுதி வரம்புகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இவ்வேலைவாய்ப்பு முகாமில் அனைத்துத் தரப்பு இளைஞர்களும் பயன்பெறும் வகையில் பரவலான கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் வரை இதில் பங்கேற்கலாம். மேலும் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்ற பட்டதாரிகள், ஐ.டி.ஐ, பட்டயப் படிப்பு எனப்படும் டிப்ளமோ, பொறியியல் பட்டம் பெற்றவர்கள், செவிலியர் பயிற்சி முடித்த நர்சிங் பணியாளர்கள் மற்றும் தொழில்முறைத் தையல்கலை பயிற்சி பெற்றவர்கள் எனப் பல்வேறு திறன் சார்ந்த படிப்புகளைப் படித்தவர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கான வேலைவாய்ப்பைப் பெற்றுப் பயன்பெறலாம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நிறுவனங்களின் பங்களிப்பும் காலிப்பணியிடங்களும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இம்மாபெரும் முகாமில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் வருகை தரவுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணித் தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கலந்துகொள்ளவுள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்குத் தகுதியான வேலைநாடுநர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்படவுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நேர்காணலில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைப்பதால், இளைஞர்கள் தங்களின் திறமைக்கேற்ற சிறந்த பணியைத் தேர்வு செய்துகொள்ள இது ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;இணையதளப் பதிவு மற்றும் கூடுதல் விபரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களின் விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதமான &lt;a href=&quot;http://www.tnprivatejobs.tn.gov.in&quot;&gt;www.tnprivatejobs.tn.gov.in &lt;/a&gt;என்ற முகவரியைப் பயன்படுத்தி, தங்களின் கல்வித் தகுதி மற்றும் சுயவிவரங்களைக் கணினியிலோ அல்லது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள QR குறியீடு வழியிலோ முன்னரே பதிவு செய்துகொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முகாம் தொடர்பான கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் மற்றும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்த விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் 04365-252701 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9499055916 என்ற கைபேசி எண்ணிலோ வேலை நேரங்களில் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுவாக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பவர்கள், தனியார்துறை முகாம்களில் பங்கேற்று வேலை பெற்றால் அவர்களின் அரசு வேலைக்கான பதிவு ரத்தாகிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. ஆனால், இவ்வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாகத் தனியார்துறையில் பணி நியமனம் பெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு விவரங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, அரசு வேலைக்குக் காத்திருக்கும் இளைஞர்களும் எவ்விதத் தயக்கமுமின்றி இம்முகாமில் பங்கேற்றுத் தனியார்துறைப் பணிகளைப் பெற்று தங்களின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்ட ஆட்சியரின் அழைப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இம்முகாமில் பங்கேற்க விரும்பும் மனுதாரர்கள் அனைவரும் தங்களின் சமீபத்திய புகைப்படங்கள், அனைத்துக் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு எனப்படும் பயோடேட்டா ஆகியவற்றின் அசல் மற்றும் தேவையான நகல்களுடன் தவறாமல் நேரில் வருகை தர வேண்டும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய படித்த இளைஞர்கள் அனைவரும் இந்த நல்வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்தி, தங்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பைப் பெற்று வாழ்க்கையில் சிறப்படையுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், கேட்டுக்கொண்டுள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/2984ea307b4aaa321163808215d035281789476503169186_original.jpg" width="220"/></item></channel></rss>