<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>mayiladuthurai</title><atom:link href="https://tamil.abplive.com/mayiladuthurai/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 2 Jul 2026 18:42:05 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[மயிலாடுதுறை ஆணவக் கொலை சந்தேகம்: காதலி வீட்டை அடித்து நொறுக்கிய கும்பல்; அலறிய பெண்கள்!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-honor-killing-suspicion-gang-smashes-girlfriend-s-house-women-scream-tnn-265898</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-honor-killing-suspicion-gang-smashes-girlfriend-s-house-women-scream-tnn-265898#respond</comments><pubDate>Thu, 2 Jul 2026 17:38:14 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-honor-killing-suspicion-gang-smashes-girlfriend-s-house-women-scream-tnn-265898</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை அருகே காதலித்த இளம் ஜோடிகள் தூக்கில் பிணமாக மீட்கப்பட்ட விவகாரம் கொலை வழக்காக மாற்றக் கோரி பதற்றம் நீடித்து வரும் நிலையில், சம்பவத்தன்று பெண் வீட்டார் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளை ஒரு கும்பல் கட்டை, கற்களால் அடித்து நொறுக்கும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காதலர்கள் மரணமும் எழுந்த ஆணவக் கொலை புகாரும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (19). இவரும், சாத்தங்குடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களது காதலுக்குப் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு இருந்ததாகச் சொல்லப்படும் நிலையில், கடந்த 29-ஆம் தேதி சாத்தங்குடி பகுதியில் உள்ள ஒரு விவசாயக் கொட்டகையில் பார்த்திபனும், அந்தச் சிறுமியும் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பொறையார் காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், முதற்கட்டமாக &amp;lsquo;இயற்கைக்கு மாறான மரணம்&amp;rsquo; (சந்தேக மரணம்) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, பெண் வீட்டாரே இவர்களைத் திட்டமிட்டு &amp;lsquo;ஆணவப் படுகொலை&amp;rsquo; செய்துவிட்டுத் தூக்கில் தொங்கவிட்டதாகப் பார்த்திபனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டு, இந்த விவகாரத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;உடல்கள் அடக்கம் - தொடரும் பதற்றம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதற்கிடையே, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் உடல், பெண் வீட்டாரால் மயிலாடுதுறையில் தகனம் செய்யப்பட்டது. அதேபோல், காதலன் பார்த்திபனின் உடலும் நேற்று அவரது சொந்த ஊரான தரங்கம்பாடியில் உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் கண்ணீர் அஞ்சலிக்குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட போதிலும், இரு கிராமங்களுக்கும் இடையே நிலவும் சாதி ரீதியிலான பதற்றம் காரணமாகப் போலீசார் தொடர்ந்து அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்: அலறிய குடும்பத்தினர்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தச் சூழ்நிலையில்தான், காதலர்கள் சடலமாக மீட்கப்பட்ட கடந்த 29-ஆம் தேதி அன்றே, காதலன் பார்த்திபனின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து, இறந்த காதலி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளைத் தாக்கிய அதிர்ச்சிகரமான உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோ காட்சிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆக்ரோஷமான நபர்கள் கைகளில் கட்டைகள், இரும்பு கம்பிகள் மற்றும் கற்களை ஏந்தியபடி வீட்டை முற்றுகையிட்டு,&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், கதவுகள் மற்றும் வெளியே நின்றிருந்த வாகனங்களை அடித்து நொறுக்குகின்றனர். ஆண்கள், பெண்கள் எனப் பாராமல் கற்களை வீசித் தாக்கும் போது, வீட்டிற்குள் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிருக்குப் பயந்து அலறும் சத்தம் உள்ளிட்ட பதைபதைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காவல்துறை தீவிர விசாரணை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சம்பவம் நடந்த அன்று காவல்துறையினர் விரைந்து வந்து கூட்டத்தைக் கலைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனினும், தாக்குதல் நடத்தப்பட்ட போது அங்கிருந்தவர்களால் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி, மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாகப் பொறையார் போலீசார், தற்போது வெளியாகியுள்ள வீடியோ பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு, பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல், அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீடியோவில் உள்ள நபர்களின் அடையாளங்களைக் கண்டறிந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காதலர்களின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து அரங்கேறியுள்ள இந்தத் தாக்குதல் வீடியோ விவகாரம், மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேலும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/02/fa5ad6872c7db5e971eb9cbf177f76561782994058893186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மண்ணையும் காத்து, மனிதர்களையும் காக்கும் உயிர்ம வேளாண்மை! கலெக்டர் சொன்ன முக்கிய அட்வைஸ்!]]></title><link>https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-agriculture-exhibition-district-collector-participate-tnn-265869</link><comments>https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-agriculture-exhibition-district-collector-participate-tnn-265869#respond</comments><pubDate>Thu, 2 Jul 2026 15:17:39 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ விவசாயம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-agriculture-exhibition-district-collector-participate-tnn-265869</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் &amp;lsquo;அட்மா&amp;rsquo; (ATMA) திட்டத்தின் கீழ், மாபெரும் உயிர்ம வேளாண்மை (இயற்கை விவசாயம்) விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திரு. ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தலைமை தாங்கினார். சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் இரா.செந்தில் செல்வன் முன்னிலை வகித்து சிறப்பித்தார். இதில் மாவட்டம் முழுவதிலிருந்தும் நூற்றுக்கணக்கான முற்போக்கு விவசாயிகள் மற்றும் வேளாண் வல்லுநர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆரோக்கியமான உணவே முதன்மைத் தேவை: மாவட்ட ஆட்சியர்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விழிப்புணர்வு கண்காட்சியைத் திறந்து வைத்து, கருத்தரங்கிற்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் திரு. ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பேசியதாவது; &quot;தற்போதைய நவீன காலகட்டத்தில், ஆரோக்கியமான உணவு என்பதே மனிதகுலத்தின் மிக முதன்மையான தேவையாக மாறியுள்ளது. சமீபகாலமாகப் பொதுமக்கள் மத்தியில் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவுகளுக்கான தேவையும், விழிப்புணர்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே இதற்குச் சான்றாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உயிர்ம வேளாண்மையைக் கடைப்பிடிப்பதன் மூலம், மனிதர்களுக்கு நஞ்சற்ற தூய்மையான உணவுப் பொருட்கள் கிடைப்பது மட்டுமல்லாமல், இரசாயன உரங்கள், வீரியமிக்க பூச்சிக்கொல்லிகள், பூஞ்சாணக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் பயன்பாடு பெருமளவு குறைகிறது. இதனால் நமது பூமித்தாயின் மண்வளமும், நிலத்தடி நீர் ஆதாரமும் நீண்ட காலத்திற்குப் பாதுகாக்கப்படுகின்றது.&quot;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சந்தை வாய்ப்புகளும் ஏற்றுமதி இலக்குகளும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆட்சியர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில், &quot;நமது மயிலாடுதுறை மாவட்டத்தில் உயிர்ம வேளாண்மை செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக நெல், பயறு வகைகள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் இயற்கை விவசாய முறைகளை எளிதாகப் புகுத்த முடியும். இவ்வாறு விளைவிக்கப்படும் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு உள்நாட்டிலும், உலக அளவிலும் நல்ல சந்தை வாய்ப்புகள் உள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த விளைபொருட்களுக்கான சந்தை இணைப்பு மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், அது தொடர்பான விழிப்புணர்வை விவசாயிகளிடையே பரப்பவும் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, இன்று அட்மா திட்டத்தின் கீழ் இந்த விழிப்புணர்வு கண்காட்சியும், கருத்தரங்கும் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகிறது&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி மற்றும் மானியங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக அரசு வழங்கும் உதவிகள் குறித்துப் பேசிய ஆட்சியர், விவசாயிகள் தங்களின் நிலங்களிலேயே பஞ்சகாவ்யம், மீன் அமிலம், மூலிகை பூச்சி விரட்டிகள் போன்ற இயற்கை இடுபொருட்களைத் தாங்களாகவே உற்பத்தி செய்துகொள்ளத் தேவையான உரிய பயிற்சி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வேளாண்மைத் துறை வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், வேளாண்மைத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு உற்பத்தி மையங்கள் மூலம்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;*&lt;strong&gt;உயிரிக் காரணிகள்:&lt;/strong&gt; சூடோமோனாஸ், டிரைகோடெர்மா விரிடி, மெட்டாரைசியம் போன்ற பயிர்ப் பாதுகாப்பு காரணிகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;உயிர் உரங்கள்:&lt;/strong&gt; அசோபாஸ், ரைசோபியம், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் நிலக்கடலைக்கான பிரத்யேக ரைசோபியம் உயிர் உரங்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆகியவை தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு 50 விழுக்காடு (50%) வரையிலான உயர்தர மானியத்தில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த உயிர் உரங்கள் இயற்கையான முறையில் பயிர்களைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்துவதுடன், மண்ணில் ஏற்கனவே கரைந்துள்ள ஊட்டச்சத்துக்களைப் பயிர்கள் எளிதில் உறிஞ்சிக் கொள்ள வழிவகை செய்கின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாய கூட்டமைப்புகள் மூலம் சந்தைப்படுத்துதல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உயிர்முறை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் சந்திக்கும் முக்கிய சவாலான சந்தைப்படுத்துதல் குறித்துப் பேசிய ஆட்சியர், &quot;உயிர் வேளாண்மை மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இடைத்தரகர்கள் இன்றி, நேரடியாகவும் எளிதாகவும் நுகர்வோரைச் சென்றடைய வேண்டும். அப்போதுதான் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அதிக லாபமும், தகுந்த வருமானமும் கிடைக்கும். இதற்காக மாவட்ட அளவில் 'விவசாய கூட்டமைப்புகளை' (Farmers Farmer Producer Organizations - FPOs) உருவாக்கி, சந்தைப்படுத்துதலை எளிமையாக்க அரசு உரிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே, ஆரோக்கியமான வருங்கால தலைமுறையினரை உருவாக்கிட விவசாயிகள் அனைவரும் உயிர்ம வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்&quot; என வேண்டுகோள் விடுத்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் விநியோகம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இக்கருத்தரங்கின் முக்கிய நிகழ்வாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 34 தகுதியான விவசாயப் பயனாளிகளுக்குப் பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் இயற்கை விவசாய இடுபொருட்களை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் இரா.செந்தில் செல்வன் ஆகியோர் இணைந்து மேடையில் வழங்கினர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பங்கேற்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வின் போது, மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் விஜயராகவன், வேளாண்மை துணை இயக்குநர் சுப்பையன், விதை ஆய்வு துணை இயக்குநர் அ.சித்ரா, வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் குமணன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் திலீப் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைமைக் குரூப் அதிகாரிகள், அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் உடனிருந்து சிறப்பித்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கண்காட்சி அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய நெல் ரகங்கள், இயற்கை உரங்கள் மற்றும் விவசாயிகளின் கைவண்ணத்தில் உருவான இயற்கை விளைபொருட்களைப் பார்வையாளர்கள் மற்றும் விவசாயிகள் திரளாக வந்து பார்வையிட்டு, பயனுள்ள குறிப்புகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/02/62a5893b99bcc88e8c8649baaaee54be1782985635327186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Mayiladuthurai Power Shutdown (04.07.2026):மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்: உங்க ஊர் இருக்கான்னு செக் பண்ணுங்க! ]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-power-shutdown-04-07-2026-day-after-tomorrow-power-cut-outage-areas-affected-details-tnn-265758</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-power-shutdown-04-07-2026-day-after-tomorrow-power-cut-outage-areas-affected-details-tnn-265758#respond</comments><pubDate>Thu, 2 Jul 2026 11:51:38 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-power-shutdown-04-07-2026-day-after-tomorrow-power-cut-outage-areas-affected-details-tnn-265758</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின்சாரக் கம்பிகள், மின்மாற்றிகள் மற்றும் தடவாளப் பொருட்களின் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதன்படி, மயிலாடுதுறை கோட்டத்திற்கு உட்பட்ட மணக்குடி, பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய முக்கிய துணை மின் நிலையங்களில் வரும் 04.07.2026 (சனிக்கிழமை) அன்று அவசர கால மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, அன்றைய தினம் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இந்தத் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் முக்கியப் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று மின் வாரிய உதவி செயற்பொறியாளர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் மற்றும் அது குறித்த விரிவான விவரங்கள் பின்வருமாறு;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;1.மணக்குடி துணை மின் நிலைய மின் நிறுத்தப் பகுதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை நகர் இயக்குதல் மற்றும் பராமரிப்பு உதவி செயற்பொறியாளர் பொறிஞர் M. விஜயபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 33/11 கி.வோ மணக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் காரணமாக, மணக்குடி துணை மின் நிலையத்தைச் சேர்ந்த&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* சேமங்கலம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* வேப்பங்குளம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* மணக்குடி&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* மாப்படுகை&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* ஆலவேலி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* நத்தம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* வேப்பங்குளம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* சாவடி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* உளுத்துக்குப்பை&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* மொழையூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* ஆனதாண்டவபுரம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* கீழிருப்பு&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேற்கண்ட முக்கியப் பகுதிகள் மட்டுமன்றி, இந்த மின்பாதைகளைச் சார்ந்துள்ள சுற்றியுள்ள அனைத்து கிராமப்புறப் பகுதிகளுக்கும் இதே நேரத்தில் மின் விநியோகம் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், இந்த மின் நிறுத்தம் என்பது அவ்வப்போது ஏற்படும் நிர்வாக ரீதியிலான காரணங்களைப் பொறுத்து தேதி மாற்றி அமைக்கப்படலாம் என்றும் நகர்ப்புற உதவி செயற்பொறியாளர் தனது குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;2. பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் துணை மின் நிலைய மின் நிறுத்தப் பகுதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதேபோல், பாலையூர் 110 கி.வோ தொகுப்பு துணை மின் நிலையத்தின் உதவி செயற்பொறியாளர் பொறிஞர் N. அருள்செல்வன், வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய இரு துணை மின் நிலையங்களிலும் வரும் சனிக்கிழமை (04.07.2026) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஒருசேர மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் காரணமாக, பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பின்வரும் கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* பாலையூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* பருத்திக்குடி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* காரனூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* நக்கம்பாடி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* மாந்தை&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* கங்காதாரபுரம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* தேரழந்தூர்&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* கோமல்&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* கள்ளிக்காடு&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* பெரட்டக்குடி&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* கந்தமங்கலம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* வடமட்டம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* காஞ்சிவாய்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* கோனேரிராஜபுரம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* மேக்கிரிமங்கலம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* பழையகூடலூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* கொக்கூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* திருவாலங்காடு&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* திருவாவடுதுறை&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* பேராவூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேற்குறிப்பிடப்பட்டுள்ள கிராமங்கள் மற்றும் இந்தத் துணை மின் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட சுற்றியுள்ள அனைத்து சிறிய கிராமங்களுக்கும், விவசாய மின் இணைப்புகளுக்கும் இந்த 8 மணி நேர மின் நிறுத்த அறிவிப்பு பொருந்தும் என மின் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மின் நுகர்வோர்களுக்கான ஆலோசனைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை கோட்ட மின் வாரிய அதிகாரிகள் தங்களது செய்திக்குறிப்பில், மின் நிறுத்தக் காலங்களில் பொதுமக்கள் மற்றும் சிறு குறு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளை, குறிப்பாகக் குடிநீர் சேமிப்பு மற்றும் மின்சாரம் சார்ந்த பணிகளை முன்னதாகவே திட்டமிட்டுத் தடையின்றி முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;துணை மின் நிலையங்களில் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மிக விரைவாகச் செய்து முடிக்கப்படும் பட்சத்தில், அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே மின் விநியோகம் மீண்டும் சீரமைக்கப்பட வாய்ப்புள்ளது என்றும், அதற்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கனிவுடன் கேட்டுக்கொண்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/02/36480be628ec3080f9ef8f5cc6c0a8301782973235243186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தமிழை உலக அரங்கிற்கு கொண்டு செல்வது எப்படி? மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியின் அசத்தல் பயிலரங்கம்!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-a-3-day-tamil-translation-skills-development-workshop-was-held-at-mannanbandhal-avc-college-tnn-265845</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-a-3-day-tamil-translation-skills-development-workshop-was-held-at-mannanbandhal-avc-college-tnn-265845#respond</comments><pubDate>Thu, 2 Jul 2026 11:31:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-a-3-day-tamil-translation-skills-development-workshop-was-held-at-mannanbandhal-avc-college-tnn-265845</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தலில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஏ.வி.சி. கல்லூரியின் தமிழாய்வுத்துறையும், இந்திய அரசின் மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் (CIIL) இணைந்து நடத்தும் &amp;lsquo;தமிழ் மொழிபெயர்ப்புத் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்&amp;rsquo; கடந்த ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று நாள்கள் (ஜூன் 30, ஜூலை 01, 02) நடைபெறும் இப்பயிலரங்கின் தொடக்கவிழா கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;உலகளாவிய வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு அவசியம்&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பயிலரங்கத் தொடக்கவிழாவிற்கு ஏ.வி.சி. கல்லூரி முதல்வர் முனைவர் இரா.நாகராஜன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில், இன்றைய நவீன காலகட்டத்தில் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தை மிக விரிவாக எடுத்துரைத்தார். அறிவியல் தொழில்நுட்பம், உலகளாவிய கலைகள் மற்றும் உலகப் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றிற்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு ஒரு பாலமாகத் திகழ்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், உலகளாவிய அறிவுப் பகிர்வுக்கு மொழிபெயர்ப்பு இன்றியமையாதத் தேவை என்றும் குறிப்பிட்டார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பயிலரங்க நோக்கம் மற்றும் மாணவர்களின் அர்ப்பணிப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடர்ந்து, தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் சு.தமிழ்வேலு பயிலரங்க நோக்கவுரையாற்றினார். தமிழ் பயிலும் மாணவர்கள், இளம் ஆய்வாளர்கள் மற்றும் மொழிச் செயல்பாட்டாளர்கள் மொழிபெயர்ப்புத் துறையில் கொள்ள வேண்டிய அர்ப்பணிப்பு உணர்வை அவர் வலியுறுத்தினார். மேலும், காலத்திற்கேற்ப புதிய மொழிபெயர்ப்புக் கொள்கைகளை வகுப்பதன் அவசியத்தையும், தமிழ் மொழியின் செறிவை உலகம் முழுதும் கொண்டு சேர்க்க வேண்டிய தற்போதைய தேவைகளையும் பட்டியலிட்டு, இந்த பயிலரங்கின் மூலம் ஆய்வாளர்கள் பெறப்போகும் பயன்களை விளக்கினார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மொழிபெயர்ப்புக் கொள்கைகளில் அறம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடக்கவிழாவின் முக்கிய நிகழ்வாகச் சிதம்பரம் &lt;a title=&quot;அண்ணாமலை&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/annamalai&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;அண்ணாமலை&lt;/a&gt;ப் பல்கலைக்கழக மொழியியல் துறைப் பேராசிரியர் முனைவர் ப.மணிமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். &amp;lsquo;மொழிபெயர்ப்புக் கொள்கைகளில் அறம்&amp;rsquo; என்னும் தலைப்பில் பேசிய அவர்:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மொழிபெயர்ப்பின் அடிப்படைத் கோட்பாடுகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பாளர் கடைப்பிடிக்க வேண்டிய நேர்மை மற்றும் அறம் குறித்து விளக்கினார். அறமற்ற மொழிபெயர்ப்புகளால் சமுதாயத்தில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் மற்றும் தவறான புரிதல்கள் குறித்து எச்சரித்தார். பிற மொழிகளில் உள்ள சிறந்த கருத்தியல் இணைவுகளைத் தமிழுக்கும், தமிழ் மொழியின் தனித்துவமிக்க சிறப்புக் கூறுகளைப் பிற மொழிகளுக்கும் நடுநிலையோடு கொண்டு சேர்க்கும் உழைப்பின் முக்கியத்துவத்தையும் அதன் சமூகப் பயன்களையும் எடுத்துரைத்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கலைச்சொல் மற்றும் இலக்கிய மொழிபெயர்ப்புப் பயிற்சிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடக்கவிழாவைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில் நிபுணர்கள் மாணவர்களுக்கு நேரடிப் பயிற்சிகளை வழங்கினர். தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக மொழிபெயர்ப்பியல் துறைப் பேராசிரியரும் தலைவருமாகிய முனைவர் இரா.சு.முருகன், &amp;lsquo;கலைச்சொல் மொழிபெயர்ப்பு சிக்கல்களின் தன்மையும் சாத்தியமான தீர்வுகளும்&amp;rsquo; என்னும் தலைப்பில் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வில், தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியத் துறைப் பேராசிரியர் முனைவர் எஸ்.கவிதா, &amp;lsquo;இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும்&amp;rsquo; என்ற தலைப்பில் விரிவான பயிற்சிப் பட்டறையை நடத்தினார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நிறைவு மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முன்னதாக, பயிலரங்கத் தொடக்கவிழா நிகழ்விற்கு முனைவர் ந.சரவணன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட இளநிலை ஆய்வு உதவியாளர் முனைவர் ம.மூவேந்தன் நன்றியுரை ஆற்றினார். முனைவர் சு.விமல்ராஜ் ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் சுவாரசியமாகத் தொகுத்து வழங்கினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இவ்விழாவில் மைசூர் தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட இளநிலை ஆய்வு உதவியாளர் முனைவர் எஸ்.சுரேஷ்குமார், ஏ.வி.சி. கல்லூரி உள்தரக்கட்டுப்பாட்டு இயக்குநர் முனைவர் எஸ்.அன்பு சீனிவாசன், தமிழார்வலர் இரெ.மருதசாமி மற்றும் பிறதுறைப் பேராசிரியர்கள், திரளான ஆய்வாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும், ஏ.வி.சி கல்லூரி தமிழாய்வுத்துறையும் இணைந்து செய்திருந்தன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/02/ddd023c2d1841685a033d159b805ac901782972076364186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு]]></title><link>https://tamil.abplive.com/entertainment/director-mohan-g-controversial-statement-on-mayiladurai-lovers-incident-265779</link><comments>https://tamil.abplive.com/entertainment/director-mohan-g-controversial-statement-on-mayiladurai-lovers-incident-265779#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 21:15:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராகேஷ் தாரா ]]></dc:creator><category><![CDATA[ பொழுதுபோக்கு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/entertainment/director-mohan-g-controversial-statement-on-mayiladurai-lovers-incident-265779</guid><description><![CDATA[&lt;p class=&quot;p1&quot;&gt;மயிலாடுதுறை இளம் காதலர்கள் தற்கொலை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மோகன் ஜி பதிவிட்டுள்ளார். கொலை என்பது எந்த வடிவத்தில் நடந்தாலும் தவறு என்று கூறியிருக்கும் அவர் 18 வயதிற்கும் கீழான பெண்களை காதலித்து அவர்களை பெற்றோர்களுக்கு எதிராக பேசவைப்பதையும் கண்டித்து பதிவிட்டுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p class=&quot;p1&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இளம் காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த&lt;span class=&quot;s1&quot;&gt; 19 &lt;/span&gt;வயதான பார்த்திபன் மற்றும் சாத்தங்குடியைச் சேர்ந்த&lt;span class=&quot;s1&quot;&gt; 16 &lt;/span&gt;வயதான திவ்யதர்ஷினி ஆகியோர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;இவர்களின் உறவுக்கு இரு குடும்பங்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;சாத்தங்குடியில் உள்ள ஒரு கொட்டகையில் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்ததாக அதிகாலை தகவல் கிடைத்தது&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;சம்பவ இடத்துக்கு விரைந்த பொறையார் போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;உயிரிழந்த இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;இது தற்கொலையா அல்லது ஆணவக் கொலையா என்ற இரு கோணங்களிலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;இதனிடையே&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;சம்பவத்தைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே பதற்றமான சூழல் நிலவியதாகவும்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;சில இடங்களில் வாகனங்கள் மற்றும் வீடுகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;மயிலாடுதுறையில் சம்பவம் குறித்து மோகன் ஜி&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் இப்படி பதிவிட்டுள்ளார் &quot; கொலை எந்த வடிவத்தில் நடந்தாலும் அது கொடியது.. ஆணவ கொலையாக இருந்தாலும் சரி, போதையால் நடந்தாலும் சரி, பகையால் நடந்தாலும் சரி.. மிகவும் கண்டிக்கத்தக்கது..அதே நேரத்தில், காதல் என்ற பெயரில் 13 வயது சிறுமியை காதலிக்க தொடங்கி, 16 வயதிலேயே சாதியை காரணம் காட்டி , பெற்றோர்களை எதிர்க்க வைத்து, பெற்ற மகளை 18 வயது வரையாவது தன் கட்டுப்பாட்டில், பாதுகாப்புபாக, படிக்க வைத்து வளர்க்க நினைப்பதையே குற்றமாக மாற்ற நினைப்பது நம் தமிழ் சமூகத்தில் மட்டும் தான் நடக்கும்.. திருமண வயது 18 என்பது, 18 வயது முடிந்த மறுநாளே பிள்ளை பெற்று கொள்ள தயாராகத்தான் என்பதல்ல.. 18 முடிந்த பிறகு தான் தன் வாழ்க்கை பற்றிய சுயமுடிவு எடுக்கும் பக்குவம் வருவது என்பதாகும்.. எதிர்ப்பதாக இருந்தால் சிறுமி வயதில் காதலிப்பதையும் சேர்த்து எதிர்த்து நில்லுங்கள்.. வெறுமனே உங்க சுயசாதி பக்கம் நிற்பது அறமல்ல.. மீண்டும் சொல்கிறேன், கொலை எந்த வடிவத்தில் நடந்தாலும் கண்டிக்கத்தக்கது...&quot; என மோகன் ஜி பதிவிட்டுள்ளார்&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/is-it-good-or-bad-to-walk-after-eating-food-265743&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/2d07324cdcc2a37ad64575b738eb647617829207012731270_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மயிலாடுதுறை விவசாயிகளே அலர்ட்! 1 லட்சம் கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி – எப்போது, எங்கே நடக்கிறது?]]></title><link>https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-collector-animal-husbandry-vaccination-camp-tnn-265772</link><comments>https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-collector-animal-husbandry-vaccination-camp-tnn-265772#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 20:41:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ விவசாயம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-collector-animal-husbandry-vaccination-camp-tnn-265772</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை மாவட்டம், மூவலூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் (NADCP) 9-வது சுற்று கால் மற்றும் வாய்நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி முகாம் இன்று (01.07.2026) தொடங்கியது. இம்முகாமினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், நேரில் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி முறைப்படி தொடங்கி வைத்தார். மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களிலும் உள்ள கால்நடைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த மாபெரும் தடுப்பூசி இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் மாபெரும் முகாம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ், இந்த 9-வது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி (FMD) முகாம்கள் இன்று முதல் தொடங்கி, வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி (10.08.2026) வரை மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்றைய தொடக்க முகாமில் மட்டும், மூவலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்குக் கோமாரி நோய் தடுப்பூசிகள் வெற்றிகரமாகப் போடப்பட்டன. மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள விவசாயியும் பயன்பெறும் வகையில், அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் இதற்கான சிறப்பு முகாம்கள் சுழற்சி முறையில் நடத்தப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;6 மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி கட்டாயம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முகாமினைத் தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், இந்த நோயின் வீரியம் மற்றும் தடுப்பூசியின் அவசியம் குறித்துப் விளக்கினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;கால் மற்றும் வாய்நோய் (கோமாரி நோய்) என்பது பசுக்கள், எருமைகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் பன்றிகளைத் தாக்கும் ஒரு மிகக்கொடிய வைரஸ் நோயாகும். இந்நோய் பாதித்த கால்நடைகளுக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்படுவதுடன், அவற்றின் குளம்புகள் மற்றும் வாய் பகுதிகளில் கடுமையான புண்கள் தோன்றும். இதனால் கால்நடைகள் தீவனம் உட்கொள்ள முடியாமல் தவித்து, பால் உற்பத்தி பெருமளவில் குறைந்துவிடும். சில நேரங்களில் மாடு மற்றும் எருமைகளில் திடீர் இறப்புகளும் நேரிடலாம்.&quot;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், &quot;இந்நோய் காற்றின் மூலம் மிக வேகமாகப் பரவக்கூடிய தன்மை கொண்டது என்பதால், இதிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க 6 மாதங்களுக்கு ஒருமுறை தப்பாமல் தடுப்பூசி போட்டுக் கொள்வதே ஒரே சிறந்த வழிமுறை&quot; என்றும் அவர் அறிவுறுத்தினார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரு லட்சம் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயிகளின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் இந்தச் சுற்றின் கீழ் சுமார் 1 இலட்சம் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டு, அதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கெனத் தேவையான தரமான மருந்துப் பொருட்கள் அனைத்தும் போதுமான அளவில் தடையின்றிக் கிடைக்கப் பெறும்படி கால்நடை மருந்துவமனைகளிலும், கிடங்குகளிலும் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அனைத்து கிராமப்புறப் பகுதிகளுக்கும் கால்நடை மருத்துவக் குழுவினர் நேரடியாகச் சென்று, விடுபடாமல் அனைத்துக் கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கால்நடை வளர்ப்போருக்கான முக்கிய வழிமுறைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கால்நடை வளர்ப்போர் இந்த முகாமிற்குத் தங்கள் கால்நடைகளை அழைத்து வரும்போது சில முக்கிய நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆவணங்கள்:&lt;/strong&gt; முகாமிற்கு வரும்போது தங்களின் அடையாள அட்டை மற்றும் அலைபேசியைக் (Mobile Phone) கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பதிவு முறை மற்றும் OTP:&lt;/strong&gt; தடுப்பூசிப் பணிகளை உடனுக்குடன் ஆன்லைனில் (Online Portal) பதிவு செய்ய ஏதுவாக, கால்நடை வளர்ப்போரின் அலைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்திட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;காது வில்லைகள் (Ear Tagging):&lt;/strong&gt; தடுப்பூசி போடப்படும் அனைத்துக் கால்நடைகளுக்கும் அடையாளக் காது வில்லைகள் பொருத்தப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கால்நடை வளர்ப்போரும் தங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளுக்கு இந்த முகாமிலேயே தடுப்பூசி போட்டு, நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தாது உப்புக்கலவை விநியோகம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடக்க விழாவைத் தொடர்ந்து, முகாமில் கலந்து கொண்டு தங்கள் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்திய விவசாயிகளுக்கு, கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் தாது உப்புக்கலவைகளை (Mineral Mixture) மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இலவசமாக வழங்கினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த முக்கிய நிகழ்வின் போது, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சுகுமார், உதவி இயக்குநர் அன்பரசன், உள்ளூர் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், களப்பணியாளர்கள், ஊராட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் அரசுப் துறை அலுவலர்கள் பலர் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/6b5786e6770e63f76f9f78260e6b66b11782918668491186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[நரகமாக மாறிய சீர்காழி குடியிருப்பு பகுதிகள்! குப்பை கிடங்கு தீயால் மூச்சுத்திணறும் மக்கள் - வேடிக்கை பார்க்கும் நகராட்சி?]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-sirkazhi-municipality-garbage-dump-fire-toxic-smoke-people-protest-tnn-265763</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-sirkazhi-municipality-garbage-dump-fire-toxic-smoke-people-protest-tnn-265763#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 19:34:36 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-sirkazhi-municipality-garbage-dump-fire-toxic-smoke-people-protest-tnn-265763</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சீர்காழி: &lt;/strong&gt;மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குச் சொந்தமான குப்பை கிடங்கில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து எரிந்து வரும் தீ மற்றும் அதனால் பரவி வரும் நச்சுப் புகையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மலைபோல் குவிந்த குப்பை - நரகமான குடியிருப்பு பகுதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சீர்காழி நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் டன் கணக்கிலான மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் அனைத்தும் நகராட்சிக்குச் சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. முறையாகத் தரம் பிரித்து அழிக்கப்படாததால், இந்தக் குப்பைகள் பல அடி உயரத்திற்கு மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதி நீண்ட நாட்களாகவே கடுமையான துர்நாற்றத்துடனும், சுகாதாரச் சீர்கேட்டுடனும் காணப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இந்த குப்பை கிடங்கில் எதிர்பாராத விதமாகத் தீ விபத்து ஏற்பட்டது. கோடை காலத்தின் தாக்கம் மற்றும் காற்றில் பரவிய வெப்பம் காரணமாகத் தீ கடகடவென குப்பை மேடு முழுவதும் பரவியது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தத் தீ விபத்தினால் குப்பை கிடங்கைச் சுற்றியுள்ள;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* ஈசானிய தெரு&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* கோவிந்தராஜ் நகர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* பிச்சைக்காரன் விடுதி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* சர்க்கார் தெரு&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உள்ளிட்ட பல மக்கள் அடர்த்தி மிகுந்த குடியிருப்பு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நச்சுப் புகையால் மூச்சுத்திணறல்: மக்கள் அவதி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த மூன்று நாட்களாகக் குப்பைகள் தொடர்ந்து எரிந்து வருவதால், அதிலிருந்து வெளியேறும் அடர்ந்த நச்சுப் புகை ஒட்டுமொத்தப் பகுதியையும் சூழ்ந்துள்ளது. கண் எரிச்சல், இருமல் மற்றும் கடுமையான மூச்சுத்திணறல் காரணமாகப் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். வீடுகளுக்குள் புகுந்துள்ள புகையினால் மக்கள் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;மூன்று நாட்களாகப் புகை மூட்டத்திற்கு நடுவேதான் வாழ்ந்து வருகிறோம். வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் உடனடியாகத் தீயை அணைக்க எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை&quot; என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அதிகாரிகளுடன் வாக்குவாதம் - திடீர் சாலை மறியல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடர்ந்து எரியும் தீயை அணைக்கத் தவறிய நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் மார்கோனி தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திரளாகக் குப்பை கிடங்கு வளாகத்திற்குள் திரண்டனர். அங்கிருந்த நகராட்சி அதிகாரிகளிடம் அவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையர் சசிகுமார் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தீயை அணைப்பதில் நகராட்சி தரப்பில் சுணக்கம் காட்டுவதாகக் கூறி பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். அதிகாரிகளின் பதிலில் திருப்தியடையாத பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர், திடீரென சீர்காழி - புளிச்சக்காடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;போக்குவரத்து பாதிப்பு மற்றும் கோரிக்கைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சாலையின் குறுக்கே அமர்ந்து முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், குப்பை கிடங்கு தீயை அணைக்கத் தவறிய நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர். மேலும், நச்சுப் புகையால் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்களுக்கு உடனடியாக சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து, தகுந்த மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தப் போராட்டத்தின் காரணமாகச் சீர்காழி - புளிச்சக்காடு சாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காவல்துறை பேச்சுவார்த்தை - தற்காலிக அமைதி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சாலை மறியல் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சீர்காழி காவல் ஆய்வாளர் கமல்ராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக நிர்வாகி மார்கோனி மற்றும் பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்ற அதிகாரிகள், &quot;தீயை முழுமையாக அணைக்கக் கூடுதலாகத் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தனியார் தண்ணீர் லாரிகள் உடனடியாக வரவழைக்கப்படும். நச்சுப் புகையைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்&quot; என்று உறுதியளித்தனர். அதிகாரிகளின் இந்த உறுதியான வாக்குறுதியை அடுத்து, பொதுமக்கள் தங்கள் சாலை மறியல் போராட்டத்தைக் தற்காலிகமாகக் கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பின்னரே அப்பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நிரந்தர தீர்வு கிடைக்குமா?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மூன்று நாட்களாகத் தீ எரிந்து ஒட்டுமொத்தப் பகுதியும் நரகமாக மாறிய பிறகும், உரிய முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே இந்த அவதிக்குக் காரணம் என்று பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும், இந்த குப்பை கிடங்கை மக்கள் குடியிருப்பு இல்லாத வேறு பகுதிக்கு மாற்றவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிகமாகத் தீயை அணைப்பதோடு நிறுத்தாமல், இந்த அவதிக்கு அதிகாரிகள் ஒரு நிரந்தரத் தீர்வு காண்பார்களா? என்பதே ஒட்டுமொத்த சீர்காழி மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/10ba4122f39bd816c00b22580229b8791782914626039186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Mayiladuthurai Power Shutdown (04.07.2026):மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜூலை 4-ல் மின்தடை: உங்க ஊர் இருக்கான்னு செக் பண்ணுங்க! ]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-power-shutdown-04-07-2026-power-cut-outage-areas-affected-details-tnn-265754</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-power-shutdown-04-07-2026-power-cut-outage-areas-affected-details-tnn-265754#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 18:17:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-power-shutdown-04-07-2026-power-cut-outage-areas-affected-details-tnn-265754</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின்சாரக் கம்பிகள், மின்மாற்றிகள் மற்றும் தடவாளப் பொருட்களின் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதன்படி, மயிலாடுதுறை கோட்டத்திற்கு உட்பட்ட மணக்குடி, பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய முக்கிய துணை மின் நிலையங்களில் வரும் 04.07.2026 (சனிக்கிழமை) அன்று அவசர கால மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, அன்றைய தினம் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இந்தத் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் முக்கியப் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று மின் வாரிய உதவி செயற்பொறியாளர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் மற்றும் அது குறித்த விரிவான விவரங்கள் பின்வருமாறு;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;1.மணக்குடி துணை மின் நிலைய மின் நிறுத்தப் பகுதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை நகர் இயக்குதல் மற்றும் பராமரிப்பு உதவி செயற்பொறியாளர் பொறிஞர் M. விஜயபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 33/11 கி.வோ மணக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் காரணமாக, மணக்குடி துணை மின் நிலையத்தைச் சேர்ந்த&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* சேமங்கலம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* வேப்பங்குளம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* மணக்குடி&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* மாப்படுகை&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* ஆலவேலி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* நத்தம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* வேப்பங்குளம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* சாவடி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* உளுத்துக்குப்பை&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* மொழையூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* ஆனதாண்டவபுரம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* கீழிருப்பு&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேற்கண்ட முக்கியப் பகுதிகள் மட்டுமன்றி, இந்த மின்பாதைகளைச் சார்ந்துள்ள சுற்றியுள்ள அனைத்து கிராமப்புறப் பகுதிகளுக்கும் இதே நேரத்தில் மின் விநியோகம் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், இந்த மின் நிறுத்தம் என்பது அவ்வப்போது ஏற்படும் நிர்வாக ரீதியிலான காரணங்களைப் பொறுத்து தேதி மாற்றி அமைக்கப்படலாம் என்றும் நகர்ப்புற உதவி செயற்பொறியாளர் தனது குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;2. பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் துணை மின் நிலைய மின் நிறுத்தப் பகுதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதேபோல், பாலையூர் 110 கி.வோ தொகுப்பு துணை மின் நிலையத்தின் உதவி செயற்பொறியாளர் பொறிஞர் N. அருள்செல்வன், வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய இரு துணை மின் நிலையங்களிலும் வரும் சனிக்கிழமை (04.07.2026) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஒருசேர மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் காரணமாக, பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பின்வரும் கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* பாலையூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* பருத்திக்குடி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* காரனூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* நக்கம்பாடி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* மாந்தை&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* கங்காதாரபுரம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* தேரழந்தூர்&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* கோமல்&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* கள்ளிக்காடு&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* பெரட்டக்குடி&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* கந்தமங்கலம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* வடமட்டம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* காஞ்சிவாய்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* கோனேரிராஜபுரம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* மேக்கிரிமங்கலம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* பழையகூடலூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* கொக்கூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* திருவாலங்காடு&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* திருவாவடுதுறை&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* பேராவூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேற்குறிப்பிடப்பட்டுள்ள கிராமங்கள் மற்றும் இந்தத் துணை மின் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட சுற்றியுள்ள அனைத்து சிறிய கிராமங்களுக்கும், விவசாய மின் இணைப்புகளுக்கும் இந்த 8 மணி நேர மின் நிறுத்த அறிவிப்பு பொருந்தும் என மின் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மின் நுகர்வோர்களுக்கான ஆலோசனைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை கோட்ட மின் வாரிய அதிகாரிகள் தங்களது செய்திக்குறிப்பில், மின் நிறுத்தக் காலங்களில் பொதுமக்கள் மற்றும் சிறு குறு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளை, குறிப்பாகக் குடிநீர் சேமிப்பு மற்றும் மின்சாரம் சார்ந்த பணிகளை முன்னதாகவே திட்டமிட்டுத் தடையின்றி முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;துணை மின் நிலையங்களில் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மிக விரைவாகச் செய்து முடிக்கப்படும் பட்சத்தில், அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே மின் விநியோகம் மீண்டும் சீரமைக்கப்பட வாய்ப்புள்ளது என்றும், அதற்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கனிவுடன் கேட்டுக்கொண்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/ae54be081b49f3a9e299893d64d50afc1782909974902186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மாற்றுத்திறனாளிகளா நீங்கள்? நாகை மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-district-collector-differently-abled-special-camp-tnn-265749</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-district-collector-differently-abled-special-camp-tnn-265749#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 17:37:53 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-district-collector-differently-abled-special-camp-tnn-265749</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நாகப்பட்டினம்: &lt;/strong&gt;நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28.07.2026 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள முதன்மை கூட்ட அரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு. கே.ஜே. பிரவீன் குமார், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சிறப்பு முகாம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் பொருட்டு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதன்படி, வரும் 28.07.2026 அன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள முதன்மை கூட்ட அரங்கில் இந்த உயர்மட்டக் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் தகுதியான மனுக்களுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகளை வழங்க விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வருவாய் கோட்டாட்சியர் அளவிலான மாதாந்திர சிறப்பு முகாம்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்ட அளவிலான முகாம்கள் மட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகள் தங்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே மனுக்களை அளித்து எளிதாகப் பயன்பெறும் வகையில், ஜீலை-2026 முதல் மாதாந்திர சிறப்பு குறைதீர்வு நாள் கூட்டங்களும் தொடர்ந்து நடத்தப்படவுள்ளன. வருவாய் கோட்டாட்சியர் (RDO) தலைமையிலான இக்கூட்டங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நாகப்பட்டினம் வருவாய் கோட்டம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாகப்பட்டினம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு நாள் கூட்டமானது, பிரதி மாதம் முதல் செவ்வாய் கிழமை அன்று நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வேதாரண்யம் வருவாய் கோட்டம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேதாரண்யம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு நாள் கூட்டமானது, பிரதி மாதம் இரண்டாம் செவ்வாய் கிழமை அன்று வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;முக்கிய குறிப்பு:&lt;/strong&gt; இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் நாட்கள் ஏதேனும் அரசு பொது விடுமுறை தினங்களாக இருந்தால், அதற்கு மாற்றாக முகாம் நடைபெறும் மாற்றுத் தேதி குறித்த விவரங்கள் முன்னதாகவே பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாகப் பொதுமக்கள் அறியும் வண்ணம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சமர்ப்பிக்க வேண்டிய முக்கிய ஆவணங்களின் விவரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தச் சிறப்பு குறைதீர்வு முகாம்களில் கலந்துகொண்டு தங்களது தேவைகள், உபகரணங்கள் மற்றும் இதர அரசு நலத்திட்ட உதவிகளுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள், தங்களின் மனுக்களுடன் பின்வரும் தேவையான ஆவணங்களின் நகல்களைத் தவறாமல் இணைத்துச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;1.மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை(UDID Card)&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;nbsp;2. ஆதார் அட்டை நகல்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;nbsp;3. குடும்ப அட்டை (Ration Card) நகல்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;nbsp;4. வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) நகல்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;nbsp;5. முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை நகல்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;nbsp;6. தற்போதைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (இரண்டு)&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேற்கண்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, மூன்று சக்கர வண்டிகள், காதொலிக் கருவிகள், சுயதொழில் தொடங்க வங்கிக் கடனுதவிகள் மற்றும் இதர நல வாரிய உதவிகள் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளின் நலனைப் பாதுகாப்பதிலும், அவர்களுக்குரிய அரசு சலுகைகள் எவ்விதத் தொய்வுமின்றிச் சென்றடைவதிலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. எனவே, நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் வருவாய் கோட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களுக்குரிய பகுதிகளில் நடைபெறும் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தங்களது உரிய ஆவணங்களுடன் முகாம்களில் கலந்துகொண்டு, கோரிக்கை மனுக்களை வழங்கிப் பயனடையுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், தனது செய்திக்குறிப்பில் திரளாகக் கேட்டுக்கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் இம்முகாமிற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்து, மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/d65ad0df1ac61d7833846403a0d89f5e1782907637034186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: யார் யாருக்குக் கிடைக்கும்? முழு விவரம் உள்ளே!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-chief-minister-thayumanavar-scheme-elders-disabled-ration-delivery-tnn-265727</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-chief-minister-thayumanavar-scheme-elders-disabled-ration-delivery-tnn-265727#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 15:47:23 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-chief-minister-thayumanavar-scheme-elders-disabled-ration-delivery-tnn-265727</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நாகப்பட்டினம்: &lt;/strong&gt;நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை அவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று வழங்கும் உன்னதமான &amp;lsquo;முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் ஜூலை மாததிற்கான வினியோகம் வரும் நாட்களில் நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் தங்களது இல்லங்களிலிருந்தபடியே எவ்வித சிரமமுமின்றிப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழக அரசு விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ரேஷன் கடைகளுக்கு நேரில் வர இயலாத சூழலில் உள்ள மக்களுக்கு உதவவும் பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மிகவும் நலிவடைந்த பிரிவினருக்குத் துணையாக நிற்கும் நோக்கில் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதுதான் &amp;lsquo;முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்&amp;rsquo; ஆகும். இத்திட்டத்தின் மூலம், தகுதியான பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒன்றாகும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;எந்தெந்த தேதிகளில் விநியோகம்?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாகப்பட்டினம் மாவட்டத்தில் இத்திட்டத்தினைச் சீரிய முறையில் செயல்பட அனைத்துப் பூர்வாங்கப் பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன்படி, இந்த மாதத்திற்கான ஒதுக்கீடு பொருட்கள் வரும் 2026 ஜூலை மாதம் 04-ஆம் தேதி (சனிக்கிழமை) மற்றும் ஜூலை மாதம் 06-ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆகிய இரண்டு தினங்களில் இந்தச் சிறப்பு இல்லம் தேடி விநியோகப் பணி நடைபெறவுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ரேஷன் கடைகளில் வழக்கமாகப் பொருட்கள் விநியோகிக்கப்படும் நாட்களைத் தவிர்த்து, இந்த இரண்டு குறிப்பிட்ட நாட்களிலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக விநியோகப் பணிகள் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொய்வின்றி நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பயனாளிகள் யார் யார்? தகுதிகள் என்ன?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் இல்லம் தேடி ரேஷன் பொருட்களைப் பெறுவதற்குப் பின்வரும் நபர் அடங்கிய குடும்ப அட்டைதாரர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள்:&lt;/strong&gt; வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ரேஷன் கடைகளுக்கு நீண்ட தூரம் நடந்து வர இயலாத, அல்லது நீண்ட வரிசையில் காத்திருக்க முடியாத 65 வயதைக் கடந்த முதியவர்களைக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மாற்றுத்திறனாளிகள்:&lt;/strong&gt; உடல் ரீதியான சவால்களால் அன்றாடப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் உள்ள மாற்றுத்திறனாளி உறுப்பினர்களைக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேற்கண்ட தகுதிகளின் அடிப்படையில் கண்டறியப்பட்ட பயனாளிகளின் பட்டியலின்படி, ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை பணியாளர்கள் நேரடியாக அவர்களின் இல்லங்களுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்களைப் பாதுகாப்பாக ஒப்படைக்க உள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முறைகேடுகளைத் தவிர்க்கத் தீவிர ஏற்பாடுகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வீடு தேடிச் சென்று பொருட்கள் விநியோகம் செய்யும் இந்த உன்னதத் திட்டத்தில் எவ்வித முறைகேடுகளும் தங்குதடையின்றி நடப்பதைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொருட்களை இல்லங்களுக்கு எடுத்துச் செல்லும்போது பயோ-மெட்ரிக் (Bio-metric) கருவிகள் அல்லது மாற்று அங்கீகார முறைகள் பயன்படுத்தப்பட்டு, உரிய பயனாளிகளிடமே பொருட்கள் சென்றடைவது 100% உறுதி செய்யப்படும். மேலும், தங்களுக்குரிய ரேஷன் பொருட்களின் அளவு மற்றும் தரம் சரியாக இருக்கிறதா என்பதைப் பயனாளிகள் தங்கள் வீடுகளிலேயே சரிபார்த்துக் கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்ட ஆட்சியரின் முக்கிய வேண்டுகோள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; &quot;முதலமைச்சரின் தாயுமானவர் திட்டமானது ஏழை, எளிய மற்றும் நலிவடைந்த மக்களின் பசியினைப் போக்கவும், அவர்களின் அலைச்சலைக் குறைக்கவும் கொண்டு வரப்பட்ட உன்னதமான திட்டமாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும், வரும் ஜூலை 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தங்கள் இல்ல தேடி வரும் இந்தச் சேவையினைச் சரியாகப் பயன்படுத்திப் பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.&quot;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஏதேனும் புகார்கள் அல்லது குறைபாடுகள் இருந்தால், பொதுமக்கள் உடனடியாக மாவட்ட வழங்கல் அலுவலகத்தையோ அல்லது கூட்டுறவுத்துறை அதிகாரிகளையோ தொடர்பு கொண்டு தங்களது புகார்களைப் பதிவு செய்யலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடி மற்றும் கனிவான நடவடிக்கை, கடலோர மாவட்ட மக்களின், குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மத்தியில் ஒரு தாயைப் போன்ற அரவணைப்பைத் தந்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/33ebd074cdf6084ba02ee0334747b44f1782900985764186_original.jpg" width="220"/></item></channel></rss>